சொந்த வீடு எப்பொழுது அமையும்? திருமணம் எப்பொழுது நடைபெறும் என்று கூறுங்கள்? -பாஸ்கரன், திண்டுக்கல்.

உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சூரியன் 7-ல் பலமாக இருந்தாலும், சுக்கிரன் 6-ல் மறைந்து இருப்பதும், 2-ல் சனி, கேது, 8-ல் ராகு இருப்பதும் திருமண விஷயத்தில் ஒரு சில தடைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். தற்போது ராகு தசை நடப்பதால் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். ராகு தசையில் புதன் புக்தி தற்போது நடப்பதால் திருமண முயற்சிகள் மேற்கொண்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு.

கும்ப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 4-ஆம் அதிபதி சுக்கிரன் 6-ல் மறைந் திருப்பதும் செவ்வாய் 6-ல் நீசம்பெற்று இருப்பதும் சொந்த வீடு அமைய தாமதம் ஏற்படும். 4-ஆம் வீட்டைவிட 7-ஆம் அதிபதி சூரியன் பலமாக இருப்பதால் யாருடையாவது கூட்டாக முயற்சித்தால் நல்லது நடக்க வாய்ப்புண்டு. 2028 ஏப்ரலுக்கு பிறகு 4-ஆம் அதிபதி சுக்கிர புக்தி நடக்கின்றபொழுது சொந்த வீட்டுக்கான முயற்சிகள் மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.

s

திருமணம் எப்பொழுது நடைபெறும்? என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்று கூறுங்கள்? -பிரவின் பாலாஜி, வத்தலக்குண்டு.

அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்கனத்தில் ராகு, செவ்வாய், 7-ல் சனி, கேது இருப்பது சற்று சாதகமற்ற அமைப்பு ஆகும். 7-ஆம் அதிபதி குரு 5-ல் அமையப்பெற்று 5-ஆம் அதிபதி சனி 7-ல் அமையப்பெற்று 5, 7 பரிவர்த்தனை பெற்றிருப்பதால் திருமண விஷயத்தில் ஒரு தடைக்குப் பிறகு அனுகூலங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்களுக்கு தற்போது குரு தசையில் சுக்கிர புக்தி 16-7-2027 முடிய நடப்பது சிறப் பான அமைப்பு. கும்ப ராசியில் பிறந்தவர் களுக்கு வரும் 14-5-2025 முதல் குரு 5-ல் சஞ்சரிப்பதால் குரு மாற்றத்துக்கு பிறகு திருமணம் கைகூடக்கூடிய அதிர்ஷ்டங் கள் உண்டு. 7-ல் சனி, கேது இருப்பதால் விநாயகர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நற்பலனை தரும்.

Advertisment

இந்த ஜாதகரின் கல்வி யோகம் எப்படியிருக் கும் என்று கூறுங்கள்? -பாலகிருஷ்ணன், சுரண்டை.

பூர நட்சத்திரம், சிம்ம ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 4-ல் கேது இருப்பதும் 4-ஆம் அதிபதி குரு நீசம்பெற்று வக்ரகதியில் இருப்பதும் படிப்பு விஷயத்தில் இடையூறுகளை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் புதன் ஆட்சி பெற்று 10-ல் இருப்பதால் ஒரு சில தடைக்குப் பிறகு படிப்பில் சாதிக்கக்கூடிய யோகங்கள் உண்டு. இந்த ஜாதகருக்கு 4-ல் கேது இருப்பதால் வரும் நாட்களில் கேது தசை நடக்காமல் இருப்பது சாதகமான அமைப்பாகும். சின்ன, சின்ன இடையூறுகள் இருந்தாலும் ஒரு நல்ல நிலையினை அடையக்கூடிய வாய்ப்புகள் ஜாதகருக்கு உண்டு. படிப்பு விஷயத்தில் பிடிவாதம் சற்று அதிகப்படியாக இருக்கும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் படிப்பில் சாதிக்க முடியும்.

எனது ஜாதகரீதியாக என் தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படுமா? என் திருமணம் எப்பொழுது நடைபெறும்? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கூறுங்கள்? -உதயகுமார், சென்னை.

Advertisment

பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி புதன் 3-ல் சுக்கிரன், ராகு, சூரியன், சந்திரன் சேர்க்கைப் பெற்றிருக்கிறது. நீங்கள் கிரகணத்துக்கு மறுநாள் பிறந்து உள்ளீர்கள். இதன் காரணமாக திருமண சம்பந்தப்பட்ட விஷயத்தில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும், உங்களுக்கு தற்போது புதன் தசையில் சந்திர புத்தி 26-1-2026 முடிய நடக்கிறது. வரும் 13-5-2025 முதல் குரு 5-ல் சஞ்சரிக்க கூடிய தருணத்தில் திருமண விஷயத்தில் முயற்சித் தால் சொந்தமில்லாமல் அந்நியத்தில் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. உங்கள் ஜாதகரீதியாக சூரியன்- ராகு சேர்க்கை பெற்ற நேரத்தில் பிறந்திருப்பது தந்தைக்கு சாதகமற்ற அமைப்பாகும். அது மட்டுமில்லாமல் உங்கள் ஜாதகத்தில் 9-ல் கேது இருப்பதும் அவ்வளவு விசேஷம் எனக் கூற முடியாது. தந்தையின் ஜாதகத்தை பார்க்கின்றபொழுது தான் ஒரு தெளிவான விளக்கத்தை அளிக்க முடியும். பொதுவாக ஏழரை சனி நடக்கின்ற பொழுது பெற்றோருடைய ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். வரும் 29-3-2025 முதல் ஜென்மச் சனி விலகுவதால் அதாவது ஜனன கால சூரியனை விட்டு சனி விலகுவதால் தந்தையின் ஆரோக் கியத்தில் உங்கள் ஜாதகரீதியாக சற்று முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

என் மகளுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது அவள் யாரிடமும் பேசாமல் தனிமையில் மன உளைச்சலுடன் இருக்கிறாள், அவளின் இந்த நிலை எப்பொழுது மாறும்? -கே. பிரபாவதி, மயிலாடுதுறை.

பூராட நட்சத்திரம், தனுசு ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு பிறக்கின்றபொழுதே சந்திரன்- சனி சேர்க்கை பெற்று களத்திரகாரகன் செவ்வாய்- கேது சேர்க்கை பெற்று, கேது நட்சத்திரத்தில் செவ்வாய் இருப்பது அவ்வளவு சிறப்பல்ல. பொதுவாக சனி- சந்திரன் சேர்க்கை பெற்றாலே குழப்பவாதியாக இருப்பார்கள். தற்போது செவ்வாய் தசையில் நீச சுக்கிர புக்தி 6-11-2025 முடிய நடக்கிறது. செவ்வாய், கேது சேர்க்கப்பெற்று செவ்வாய் தசை நடப்பதால் கணவனிடம், நெருங்கிய வரிடம் தேவையற்ற மனஸ்தாபங் கள் ஏற்படலாம். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலமாக வாழ்வில் முன்னேற் றங்கள் உண்டாகும். செவ்வாய் தசை நடப்பதால் தொடர்ந்து முருக வழிபாடு மேற்கொள்ளவும் ஒரு சில நல்ல மாற்றங் கள் ஏற்படும்.