குரு தசை குரு புக்தியில் திருமணம் செய்யலாமா?

பதில்: திருவோண நட்சத்திரம், மகர ராசி, மகர லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 7-ல் இருக்கக்கூடிய ராகு தசை 23-11-2026 முடிய நடக்கிறது. அதன்பின்பு 4-ல் உள்ள குரு தசை தொடங்குகிறது. குரு கேது சாரம் பெற்று இருப்பதால் சொந்தமில்லாமல் அந்நியத்தில் குரு தசை சுயபுக்தியில் திருமணம் செய்யலாம். 7-ல் ராகு இருப்ப தால் ராகு தசை முடிந்து அடுத்து வரக்கூடிய குரு தசை தொடங்கு கின்றபோது திருமணம் செய் வது நற்பலனைத் தரும். அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சுக்கிர தசை எப்படியிருக்கும்? நான் தற்போது விவசாயம் செய்கின்றேன். விவசாயம் செழிக்குமா என்று கூறுங்கள்? -ராமானுஜம், சென்னை.

பதில்: திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி 11-5-2027 முடிய நடக்கிறது. உபய லக்னத் திற்கு 7, 11-க்கு அதிபதிகள் மாரகாதிபதி ஆகும். உபய லக்னமான தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் 11-ஆம் அதிபதி என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் சொந்த வீட்டில் இருந்தாலும் வக்ரகதியில் இருப்பதால் தேவையில்லாத வீண்செலவுகள், பெண்கள் மூல மாக தேவையற்ற நிம்மதி குறைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தனுசு லக்னத் திற்கு சுக்கிர தசை என்பதால் குறிப்பாக ஆரோக்கியத் தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. விவசாயம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு பொருளாதார மேன்மைகளை தந்து சற்று ஆறுதல் தரக்கூடியதாக இருக்கும்.

Advertisment

எனது மகளுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்கவில்லை. இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்கிறதா என்று கூறுங்கள்?

பதில்: உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த (ஆணுக்கு) ஜாதகருக்கு 5-ஆம் அதிபதி சூரியன் 7-ல் நீசம்பெற்றாலும் நவாம்சத்தில் உச்சம்பெற்று நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டிருப் பது நல்ல அமைப்பாகும். குரு 6-ல் இருந்தாலும் சந்திர நட்சத்திரத்தில் இருப்பது அனுகூலமான அமைப்புதான். பெண்ணின் ஜாதகத்தில் 5-ஆம் வீட்டில் சனி இருப்பதால் குழந்தை பாக்கி யம் தாமதம் ஆகிறது. 5-ஆம் அதிபதி செவ் வாய் 6-ல் இருந்து 6-ஆம் அதிபதி சுக்கிரன் 5-ல் இருந்து, 5, 6 பரிவர்த்தனை பெற்ற காரணத் தாலும் பெண் ஜாதகத்தில் 3-ல் இருக்கக்கூடிய குரு தனது நட்சத்திரமான பூரட்டாதியில் இருப்பதாலும் ஒருசில தடைக்குப்பிறகு நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. விரைவில் ஒரு நல்ல செய்தி கிடைக் கும்; குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்.

என் மகளுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? தோஷம் ஏதாவது இருந்தால் என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்று கூறுங்கள்? -இளமுருகன், தேவூர்.

Advertisment

பதில்: சதய நட்சத்திரம், கும்ப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 7-ஆம் அதிபதியும் களத்திர காரகமான செவ்வாய் கேந்திர ஸ்தானமான 4-ல் சுக்கிர நட்சத்திரத்தில் அமையப்பெற்று குருபார்வை பெறுவது நல்ல அமைப்பாகும். 7-ல், 2, 5-க்கு அதிபதியான புதன் இருப்பதும் அனுகூலமான அமைப்புதான். ஜாதகிக்கு குரு தசையில் செவ்வாய் புக்தி 27-3-2025 முதல் நடக்க இருக்கிறது. செவ்வாய் புக்தி காலத்தில் திரு மணம் முயற்சி செய்தால் நல்லது நடக்கும். சிம்மத்தில் ராகு அமையப் பெற்று சூரியன் நீச வீட்டில் ராகு நட்சத் திரத்தில் இருப்பதால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நற்பலனைத் தரும்.

(ஆண்) நிம்மதியில்லாமல் இருக்கின்றேன். தொழில் மற்றும் என் எதிர்காலம் பற்றி கூறவும்? -வினோத்.

பதில்: ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 2, 11-க்கு அதிபதியான குரு 12-ல் நீசம்பெற்று குரு தசை நடக்கிறது. குருவிற்கு நீசபங்க ராஜயோகம் இருந்தாலும் குரு நீச பெற்றிருப்பதால் பொருளாதார ரீதியாக எதிர்நீச்சல் போடவேண்டிய அமைப்புகள், வரவுக்கு மீறிய வீண் செலவுகள் உண்டாகும். குருவுக்கு நீசபங்க ராஜயோகம் இருப்பதால் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் நிதானமாக செயல்பட்டால் வளமான பலன்களை அடையமுடியும். குரு தசையில் தற்போது சுக்கிர புக்தி நடக்கிறது. சுக்கிரன் கேது சாரம் பெற்றிருப்ப தாலும், ரிஷப ராசிக்கு கோட்சாரத்தில் 10-ல் சனி, ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்ப தாலும் தேவை யற்ற மன உளைச்சல் நிம்மதி குறைவு ஏற்படுகிறது. வரும் 29-3-2025 முதல் சனி 11-ல் சஞ்சரிக்க இருப்பதும், 14-5-2025 முதல் குரு 2-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதும் உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை தரும், அடுத்து 14-5-2026 முதல் குரு தசையில் சூரிய புக்தி தொடங்குகின்ற பொழுது சுக்கிர புக்தியைவிட சூரிய புக்தியில் தொழில், வியாபாரத்தில் ஒரு நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடிய அனுகூலங்கள் உண்டாகும். தற்போது தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நற்பனைத் தரும்.