ஜோதிடம் என்பது கடல் போன்றது. அதன் முழுமையை யும் அறிந்தவராக ஒருவரும் இருந்திட வாய்ப்பில்லை.
ஜோதிட சாஸ்திரத்தை எழுதியவர்கள், வரையறுத்தவர்கள் என்று பலர் இருக்கின்றார்கள். அவர்கள் எழுதி வைத்துள்ளவற்றை நாம் கற்றுத் தெரிந்திருக்கிறோம். இந்த இடத்தில், காலமாற்றத் திற்கேற்ப சொல்லும் தகவல்களிலும் மாற்றம் உண்டாகிறது. காரணம், நேற்று இயங்குபவையாக இருந்தவற்றில் இன்று நிறையவே மாற்றம் உண்டாகியுள்ளது. ஸ்திரங்களும் நவீனமயமாகியுள்ளது. காலச்சூழல் பழமையைவிட்டு புதுமைக்கு நம்மைக் கொண்டு சென்றுகொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ஜோதிட சாஸ்திரம் என்பது அனுபவங்களையும் தம்முள் இணைத்துக்கொண்டு நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மையானதாகவே உள்ளது என்பதை எவராலும் மறுத்துவிட முடியாது.
"மனிதராகப் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும்' என்று நாம் பெருமைப்பட்டுக் கொண்டாலும், மனிதப் பிறப்பென்பது ஒவ்வொருவருடைய பூர்வபுண்ணியத்திற்கேற்பவும், கர்மவினைகளை அனுபவிப்பதற்காகவுமே உண்டாகிறது என்பதுதான் உண்மை.
ஒருவர் பிறந்த நேரத்தில் அவருடைய ஜாதகத்தில் பன்னிரண்டு பாவகங்களில் கிரகங்கள் அமர்ந்திருக்கும் ஸ்தான நிலையை வைத்தே பலன்கள் அறியப்படுகின்றன.
இந்த இடத்தில் மிக முக்கியமான ஒரு தகவல், ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் ஏதாகிலும் ஒரு தோஷம் இருக்கும் என்பதுதான். ஜாதகத்தில் மறைந்துள்ள அந்த தோஷங்களை ஜாதகர்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஜோதிடம் என்ற கடலுக்குள் பன்னிரண்டு பாவகங்கள் இருக்கின் றன. ஒன்பது கிரகங்கள் இருக்கின்றன. அந்த கிரகங்கள் ஒவ்வொன் றும் ஒவ்வொரு காரகத்துவம் பெற்றுள்ளது.
அந்த பன்னிரண்டு பாவங்களையும், காரகாதிபதிகளையும் தெரிந்து, அவர்கள் அமர்ந்துள்ள ஸ்தானங்களை வைத்து அவர்கள் வழங்கிடக்கூடிய பலன்களைத் தெரிந்துகொள்ளமுடியும். பாவங்களுக்கும் காரகங்களுக்கும் தொடர்பிருக்கிறது. காரகன் அமர்ந்த இடம் எது- எந்த பாவத்தில் அவர் அமர்ந்திருக்கிறார் என்பதைப் பார்க்கவேண்டிய நிலை இருக்கிறது.
ஒருசிலர் இரண்டாம் பாவகம் பற்றி மிகவும் சிறப்பாகச் சொல்வார்கள். ஒருசிலர் ஏழாம் பாவகம் பற்றி சிறப்பாகச் சொல்வார்கள். சிலர் எட்டாம் பாவகம் பற்றியும், சிலர் பன்னிரண்டாம் பாவகம் பற்றி மிகச் சிறப்பாக சொல்வார்கள்.
மருத்துவர்களில் ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொன்றில் திறன் பெற்றவர்களாக இருப்பதுபோல், ஜோதிடர்களிலும் ஒவ்வொரு பாவங்களின் நிலையைத் தெரிந்து அதற்கேற்ப பலன்களைத் தெரிவித்திடக்கூடிய சிறப்பானவர்கள் இருக்கிறார்கள். அதேநேரத்தில் பன்னிரண்டு பாவங்களின் பலன்களையும், காரகர்களையும் தெரிந்து பலன் கூறிடக்கூடியவர்களும் இருக்கிறார்கள்.
தன்னுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு வந்து ஜோதிடரிடம் காட்டி, இது சுத்த ஜாதகமா- தோஷ ஜாதகமா என்று கேட்பவர்கள் இப்பொழுது அதிகரித்துள்ளார்கள். இதற்குக் காரணம் விஞ்ஞான வளர்ச்சி என்றே சொல்லவேண்டும். யாரோ ஒருவர் சொல்லும் தகவலை அரைகுறையாகக் கேட்டுக்கொண்டு, அவர்கள் சொல்லும் தகவல்களை வைத்து ஒருசிலர் இதுபோன்ற கேள்விகளைக் கேட்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த இடத்தில் மிக முக்கியமான தகவல், ஜாதகமென்று வரும்போது நிச்சயமாக அது தோஷ ஜாதமாக இருப்பதற்கே நூறு சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது என்பதுதான்.
தோஷமே இல்லாமல் ஒரு ஜாதகம் இருந்தால் அந்த ஜாதகன் இந்த மண்ணில் பிறக்கவேண்டிய அவசியமே இருக்காது. அவன் நிச்சயமாக மோட்சம் அடைந்திருப்பான். இறைவனுடைய திருவடி யில் சங்கமம் ஆகியிருப்பான்.
ஒரு பிறவியென்பது கடந்த பிறவியின் பாவ- புண்ணியங்களின் தொடர்ச்சியென்பதே உண்மை. ஒரு உயிர் இந்த மண்ணில் மனிதனாகப் பிறப்பதற்கு கடந்த பிறவியில் அந்தப்பிறவி பெற்ற சாபங்களும் செய்த பாவங்களுமே காரணம் என்பதே உண்மை.
சாபங்களுக்கு ஆட்படுகிறவர்களே இம்மண்ணில் மனிதராகப் பிறக்கின்றனர். கர்மவினைகளை அனுபவிக்கவே இம்மண்ணில் பிறக்கின்றனர் என்பதற்கு நாம் வழிபடும் இறைவர்களும் ஆதாரமாக இருக்கின்றனர். உதாரணத்திற்கு இராமபிரான். அவருக்குண்டான சாபத்தால் மனிதராகப் பிறப்பெடுத்து, வாழ்ந்து, வனவாச வாழ்க்கை வாழ்ந்ததையும் புராணம் கூறுகிறது.
ஒருவர் இங்கே மனிதராகப் பிறக்கிறார் என்றால் அவர் கடந்த பிறவியில் செய்த பாவங்களுக்குரிய, அவர் பெற்ற சாபங் களுக்குரிய பலனை அனுபவிப்பதற்காகத்தான் என்பதே உண்மை. அதுவே அவரின் விதி. அந்த விதிதான் ஜாதகத் திற்குள் தோஷங்களாக மறைந்துகொண்டிருக்கிறது.
தோஷங்களில் எத்தனையோ தோஷங்கள் இருக்கின்றன. அந்த தோஷங்களின் காரண மாகவே பலருடைய வாழ்க்கை கேள்விக்குறி யாக இருக்கிறது. அவர்களின் பிறப்பே ஒரு கேள்விக்குறி. எதிர்காலம் என்பது கேள்விக்குறி. உறவுகள் என்பது கேள்விக்குறி. வாழ்க்கை என்பது கேள்விக்குறி. கல்வி என்பது கேள்விக்குறி. வேலை என்பது கேள்விக்குறி. திருமணமென்பது கேள்விக் குறி. குழந்தை பாக்கியமென்பது கேள்விக் குறி. கணவன்- மனைவி உறவிலும் பிரச்சினை, பிரிவு, சச்சரவு! ஒருவரைவிட்டு ஒருவர் பிரிதல்! வேறொரு துணையை அடைதல்! பொருளாதார இழப்பு! அவமானம் என்று பல்வேறு சங்கடங்களை ஒவ்வொரு ஜாதகரும் ஏதாவதொரு நிலையை அடையவேண்டியவர்களாகவே இருக்கிறார்கள்.
மனிதராகப் பிறப்பெடுக்கும் அனைவரும் அவர்கள் கடந்த பிறவியில் பெற்ற சாபங்களால் இப்பிறவியில் அதை தோஷங் களாகக்கொண்டு வாழ்பவர்கள்தான்.
தோஷங்கள் என்று வருகிறபோது, கிரகங்களின் ஸ்தான நிலை, சேர்க்கை, பார்வை என்று கண்டுபிடிக்கப்படுகிறது.
ஜாதகத்திற்குள் பித்ரு தோஷம், பிரம்ம ஹத்தி தோஷம், புனர்ப்பூ தோஷம், கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் என்று ஒவ்வொரு வரின் ஜாதகத்திலும் தோஷங்கள் மறைந் திருக்கின்றன. அவர்கள் கடந்த பிறவியில் செய்த புண்ணியங்களும் ஜாதகத் திற்குள் யோகங்களாக இருக்கின்றன!
ஜாதகத்திலுள்ள தோஷங்கள்பற்றித் தெரிந்துகொண்டு அதற்கேற்ற பரிகாரங்களை அதற்குரிய தலத்திற்குச் சென்று செய்துவரும் போது அதன் தாக்கம் குறைய ஆரம்பிக்கும்.
பரிகாரமென்பது நாம் நம்முடைய வீட்டிற்கு கிரகங்களையோ இறைவனையோ வரவழைத்து அவர்களை வேலை வாங்குவதல்ல! ஜாதகத்தில் நமக்கு என்ன தோஷம் இருக்கிறதோ அந்த தோஷத்திற்குரிய கிரகத் தலம் எங்கே அமைத்திருக்கிறதோ அங்குசென்று விதிமுறைகளின்படி பரிகாரம் செய்துகொள்வதுதான் சரியான பரிகார முறையாகும். இதனை நாம் ஒவ்வொருவரும் உணரவேண்டும்.
பரிகாரத்தின் காரணமாக அந்தப் பிரச் சினையே தீர்ந்துவிடுமா- தோஷம் மறைந்து விடுமா என்றும் கேட்கலாம்.
பரிகாரமென்பது, மழைபெய்து கொண்டிருக்கின்றபோது குடை பிடிப்பது போல, தலைக்கு வருகின்ற ஒரு தீங்கு தலைப்பாகையைத் தூக்கிக்கொண்டு செல்வதுபோல. பரிகாரத்தின் பலன் என்பது இத்தகையதுதான்!
நமக்குரிய தோஷம் எந்த கிரகத்தினால் உண்டாகியுள்ளதோ, என்ன தோஷமோ அந்த கிரகத்தினுடைய தலத்திற்குச் சென்று அதன் காலடியில் நாம் சரணடையும்போது, மனம்விட்டு வேண்டுதல் வைக்கின்றபோது நமக்குண்டான பாதகப் பலன்கள் குறைய ஆரம்பிக்கும். இதுதான் பரிகாரத்தினால் உண்டாகும் நிலை.
பலருடைய வாழ்க்கையில் அவர்களுக் குரிய தோஷங்களைத் தெரிந்து, அதற்குரிய பரிகாரங்களை சரியான முறையில் செய்தபின் அவர்களுடைய வாழ்க்கை மாற்றம் அடைந்திருக்கிறது.
சுத்த ஜாதகமா- தோஷ ஜாதகமா என்ற கேள்வியை எப்போதும் எவரிடமும் கேட்காதீர்கள்! காரணம், ஒருவர் சுத்த ஜாதகம் கொண்டவராக இருந்தால் அவர் இந்த பூமியில் பிறந்திருக்கவே மாட்டார் என்பதே உண்மை. கடந்த பிறவியில் ஏதோ வொரு சூழ்நிலையில் தெரிந்தோ- தெரியா மலோ செய்த தவறின் காரணமாக, யாரோ ஒருவர் அளித்த சாபமே தோஷமாகி மீண்டும் ஒரு பிறவியெடுத்து அந்த தோஷத்திற்கு ரிய சங்கடங்களை அனுபவிக்க வேண்டியவர் களாக இப்பிறவியை அடைந்துள்ளோம்.
கடந்த ஜென்மத்தில் யாரிடமும் எந்த சாபமும் பெறவில்லையென்றால் இங்கே வந்து பிறக்கப்போவதே இல்லை. மனிதப்பிறவி யென்பது சாபங்களால் உண்டான தோஷங்களை அனுபவிப்பதற்காகத்தான் என்பதால் சுத்த ஜாதகம் என்பதற்குரியவர் இங்கே யாருமில்லை, இங்கே பிறக்கவுமில்லை என்பதே உண்மை.
செல்: 94443 93717