குடியிருக்கும்
வீட்டிற்கும் ஆத்மா உண்டு..
நாம் பேசும் வார்த்தைகள்
நம் எண்ணங்களை
கவனித்துக்கொண்டே இருக்கும்..
முடிந்தவரை நமக்கான
நல்லவற்றை கொடுக்க
முயற்சி செய்யும்..
நாம் எந்த அளவு வீட்டை
நேசிக்கிறோமோ...
கவனித்துக் கொள்கிறோமோ
அந்த அளவிற்கு வீடு
உங்களுக்குத் தேவையானதை கொடுக்கும்..
வாடகை வீடுதானே என
கண்டுகொள்ளாமல் விட்டால்
குடியிருக்கும் வீட்டால்
நன்மை ஏற்படாது..
இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து
நன்மையாகவே
நடக்கிறது என்றால்
வீட்டின் ஆத்மா
சந்தோஷமாக இருக்கிறது
என்று அர்த்தம்...
வீட்டில் காம்பவுண்டு சுவர் உடைந்திருந்தால்
வீட்டின் சந்தோஷ சுவர் உடைந்துவிடும்...
புதிய வீட்டுக்கு வந்ததிலிருந்து
தீமைகள் நடைபெற்றால்
அந்த வீட்டில் வாஸ்து தோஷம் இருக்கிறது..
வீட்டில் எங்கு தூங்கி
குடியிருக்கும்
வீட்டிற்கும் ஆத்மா உண்டு..
நாம் பேசும் வார்த்தைகள்
நம் எண்ணங்களை
கவனித்துக்கொண்டே இருக்கும்..
முடிந்தவரை நமக்கான
நல்லவற்றை கொடுக்க
முயற்சி செய்யும்..
நாம் எந்த அளவு வீட்டை
நேசிக்கிறோமோ...
கவனித்துக் கொள்கிறோமோ
அந்த அளவிற்கு வீடு
உங்களுக்குத் தேவையானதை கொடுக்கும்..
வாடகை வீடுதானே என
கண்டுகொள்ளாமல் விட்டால்
குடியிருக்கும் வீட்டால்
நன்மை ஏற்படாது..
இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து
நன்மையாகவே
நடக்கிறது என்றால்
வீட்டின் ஆத்மா
சந்தோஷமாக இருக்கிறது
என்று அர்த்தம்...
வீட்டில் காம்பவுண்டு சுவர் உடைந்திருந்தால்
வீட்டின் சந்தோஷ சுவர் உடைந்துவிடும்...
புதிய வீட்டுக்கு வந்ததிலிருந்து
தீமைகள் நடைபெற்றால்
அந்த வீட்டில் வாஸ்து தோஷம் இருக்கிறது..
வீட்டில் எங்கு தூங்கினாலும்
தூக்கம் இன்றி புரண்டு
புரண்டு படுத்தால்
எதிர்மறை சக்தி இருக்கிறது என்று அர்த்தம்..
நூலாம் படை
வீட்டில் கட்டினால்
வீட்டிற்கு நோவு வந்துவிட்டது
வரப் போகிறது என்றே அர்த்தம்...
கரையான் வீட்டிற்குள் புகுந்துவிட்டால்
கணவன்- மனைவி பிரிந்துவிடுவர்...
கொஞ்ச நாளாக கௌலி
கத்தவில்லை என்றால்
கௌரவம் பாதிக்கப்படப் போகிறது...
வருடம் ஒருமுறை வெள்ளை அடித்தால்
வாழ்வே வெளிச்சமாகும்...
கன்னிமூலை
கெட்டுப் போனால்
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆபத்து..
அவமானம், அசிங்கம், கேவலம்..
சில நேரம்
மறுமணத்திலும்
மரபு மீற நேரும்..
தென் மேற்கு கன்னிமூலையில்
தண்ணீரை சேமித்து வைத்தால்
பெண்கள் வாழ்க்கையே
கண்ணீராய் கரைந்துவிடும்..
ஈசானிய மூலை
கெட்டுப்போனால்
வீட்டில் இருக்கும் ஆண்களுக்கு ஆபத்து..
ஈசானிய அறை வாசல் மேற்கு என்றால்
ஆண் வீட்டில் தங்க மாட்டான்..
சில நேரம் மாற்றான் மல்லிகை
தேடிச் செல்வான்..
கன்னி மூலை.. வீட்டின் கருவறை
கஜானா வைக்கும் களஞ்சியம்..
கன்னி மூலையில்
ஜன்னல் இன்றி இருந்தால்
வீட்டின் கன்னி கண்ணியமாய் வாழ்வார்..
கஜலட்சுமி கவசம் தருவாள்...
தெற்கு வாசல்காரன்
நுழைந்ததும் சமையலறை
அக்னி மூலையில் வேண்டாம் என வட மேற்கு மூலையில்
சமையல் செய்வான்..
விருந்து வந்தபடி இருக்கும்
விரும்பமில்லாதவர்களும் வந்து போவர்..
நம் சௌகரியத்திற்கு
வீட்டின் முறையை மாற்றினால்
குடும்பத்திலும்
முறை தவறிய பலனே வருமப்பா..
வாஸ்து பகவானை பழித்தவன்
தன் வாழ்க்கையைப் பழிக்கும் நிலை வரும்..
பிடிக்காமல் வசிக்கிறேன் என
இருக்கும் வீட்டைப் பழிப்பவனுக்கு
இன்னும் இரண்டு துன்பமே வந்துசேரும்...
வலப்பார்வையாக
கன்னி மூலையும்
ஈசானிய மூலையும்
பார்த்துக் கொண்டால்
கணவன்- மனைவி சந்தோஷமாய் வாழ்வர்..
சகல தோஷங்களுமின்றி
கோடீஸ்வர வாழ்க்கை
தலைமுறை தலைமுறையாய் நீடிக்கும்..
வாரிசு இல்லாதவர்களுக்கு
ஆண் வாரிசு கொடுக்கும்..
கன்னியும் ஈசானியமும்
வீட்டின் இரு கண்கள்..
வாய்வும் அக்னியும்
வாழ்வின் ஆதாரங்கள்..
நான்கு மூலையும்
லட்சணமாக அமைந்தால்
லட்ச லட்சமாய் பணம் சேரும்..
வாழ்க்கையில் உயர
தன் வீட்டை சுத்தமாக
வைத்துக்கொள்ள வேண்டும்..
தன் வீட்டை தன்னைப்போல்
நேசிக்க வேண்டும்..
வெண் கடுகு வாசனை
வாஸ்து பகவானுக்கு பிடிக்கும்..
அதிதேவதை களுக்கு
குங்கிலியம் வாசனை பிடிக்கும்..
சுத்தமாக வைத்தால்
மகாலட்சுமிக்கு பிடிக்கும்..
குப்பைகளின்றி இருந்தால்
குபேரனுக்குப் பிடிக்கும்..
வேண்டாத பொருட்களை
வெளியேற்றி வைத்தால்
பராசக்திக்கு பிடிக்கும்..
கார்த்திகை தீபம் ஏற்ற
கலைவாணிக்கு பிடிக்கும்..
வார வாரம் வீட்டைக் கழுவி
வெள்ளிக்கிழமை பூஜை செய்தால்
அஷ்ட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்...
தன் வீட்டை நேசிப்பவனுக்கு
எக்காலமும் வீழ்ச்சி இல்லை..
சோகம் உன்னைத் தாக்க
வருகிறது என்றால்..
வீட்டின் வாசனையே மாறும்..
நறுமணம் கொண்ட வீடு
நினைத்ததெல்லாம் கொட்டிக் கொடுக்கும்..
துர்மணம் வராமல் நீ பார்த்துக்கொண்டால்
துன்பம் என்பதே உன் வாழ்வில் இல்லையப்பா
வீட்டை நேசித்து பார்
உன்னையே நீ நேசிப்பாய்..
உன் வாழ்க்கை உன் கையில்
உன் வீடு முடிவு செய்யும்
உன் எதிர்காலம் ஏற்றம்பெற..
நலம் பெறுவாய் நல்லவனே
நல்ல நிலையில்
நாலாம் இடம் இருந்தால்
நிம்மதியான வாழ்க்கை உண்டு...
செல்: 96003 53748