முன்பிறவியில் மனைவிக்கும், மகளுக்கும் செய்த பாவத்தை மறுபிறவியெழுத்து தீர்த்தவன்! சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/one-who-solved-sin-committed-against-his-wife-and-daughter-his-previous-birth

சுமார் 42 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், நாடி படிக்க வந்திருந்தார். அவரை அமரவைத்து, "என்ன விஷயமாக பலன்கேட்க வந்துள்ளீர்கள்?' என்றேன்.

ஐயா, "எனக்கு இதுவரை திருமணம் தடையாகிக்கொண்டே வருகின்றனது.

எனது 36 வயதுவரை, திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணமோ, ஆசையோ வரவில்லை. என்னைப் பெற்றவர்களும், மற்ற உறவு களும் திருமணம் செய்துகொள்ள, எவ்வளவோ வற்புறுத்திக் கூறியும், திருமணம் செய்துகொள்ள மறுத்துவந்தேன்.

ff

கடந்த மூன்று வருடத்திற்குமுன்பு, ஒரு பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டது. அவள் ஆசைப்பட்டது, தேவையானது எல்லாவற்றையும் செய்து கொடுத்தேன். நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று அவளிடம் கூறியபோது, என்னை திருமணம் செய்துகொள்ள மறுத்து, பிரிந்து சென்றுவிட்டாள்.

என் வயது உடையவர்களுக்கெல்லாம், திருமணம் முடிந்து, வயதுக்குவந்த பிள்ளைகள் இருக்கின்றார்கள். எனக்கு ஏன்? திருமணம் தடையாகிக்கொண்டே வருகின்றது. எனக்கு இப்பிறவியில் திருமணம் நடக்குமா? நடக்காதா? எனக்கு மனைவியாக வரக்கூடியவள் யார்? அவளைப் பற்

சுமார் 42 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், நாடி படிக்க வந்திருந்தார். அவரை அமரவைத்து, "என்ன விஷயமாக பலன்கேட்க வந்துள்ளீர்கள்?' என்றேன்.

ஐயா, "எனக்கு இதுவரை திருமணம் தடையாகிக்கொண்டே வருகின்றனது.

எனது 36 வயதுவரை, திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணமோ, ஆசையோ வரவில்லை. என்னைப் பெற்றவர்களும், மற்ற உறவு களும் திருமணம் செய்துகொள்ள, எவ்வளவோ வற்புறுத்திக் கூறியும், திருமணம் செய்துகொள்ள மறுத்துவந்தேன்.

ff

கடந்த மூன்று வருடத்திற்குமுன்பு, ஒரு பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டது. அவள் ஆசைப்பட்டது, தேவையானது எல்லாவற்றையும் செய்து கொடுத்தேன். நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று அவளிடம் கூறியபோது, என்னை திருமணம் செய்துகொள்ள மறுத்து, பிரிந்து சென்றுவிட்டாள்.

என் வயது உடையவர்களுக்கெல்லாம், திருமணம் முடிந்து, வயதுக்குவந்த பிள்ளைகள் இருக்கின்றார்கள். எனக்கு ஏன்? திருமணம் தடையாகிக்கொண்டே வருகின்றது. எனக்கு இப்பிறவியில் திருமணம் நடக்குமா? நடக்காதா? எனக்கு மனைவியாக வரக்கூடியவள் யார்? அவளைப் பற்றிய விளக்கம், திருமணம் தடையாவதற்கு காரணம் இவற்றை அகத்தியரிடம் கேட்டு அறிந்துகொள்ளத்தான் வந்தேன்'' என்றார்.

ஜீவநாடி ஓலையை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்து வடிவாகத் தோன்றி, பலன்கூறத் தொடங்கினார்.

இந்த பிறவியில், இவன் திருமணத் தடைக்கு காரணத்தையும், இவன் மணமுடித்து, மனைவியாக வாழப்போகின்றவள் நிலை பற்றியும் கூறுகின்றேன். தெரிந்துகொள்ளச் சொல்.

முற்பிறவியில், தன் மனைவி, ஒரு மகளுடன் குடும்பமாக வாழ்ந்தான். அப்போது இவனுக்கு வேறு ஒருவன் மனைவியுடன் நட்பு, பழக்கம் உண்டானது.

தன் மனைவி, குழந்தையை தவிக்க விட்டு, மாற்றான் மனைவியை அழைத்துக் கொண்டு ஓடிச்சென்று வேறு ஒரு ஊரில் அவளுடன் வசித்தான்.

இவன் மனைவி தன் மகளை அழைத்துக்கொண்டு, தான் பிறந்த வீட்டிற்கே வந்து, பெற்றவர்கள் ஆதரவில் வாழ்ந்து மடிந்தாள். தான் கட்டிய மனைவியையும், பெற்ற மகளையும் தவிக்கவிட்டு, மாற்றான் தாரத்துடன் ஓடிய பாவி இவன். அந்தப் பாவம்தான், இப்பிறவியில் ஒரு மனைவி, குடும்பம் என அடையவிடாமல் தடுத்துவருகின்றது.

இந்த பிறவியில் இவனுக்கு திருமணம் உண்டு. கல்யாணம் ஆகாத கன்னிப்பெண் இவளுக்கு மனைவியாக அமையமாட்டாள். கணவனை இழந்து ஒரு குழந்தையுடன் வாழும், விதவையோ அல்லது கணவனால் கைவிடப்பட்டு, பெற்ற மகளுடன் தனித்து வாழும் ஒரு பெண்தான் மனைவியாக அமைவாள் என்பதுதான் இவன் திருமணவிதி என்பதை தெரிந்துகொள்ளச் சொல்.

அகத்தியர் கூறியதைக்கேட்ட அவர், "நான் ஒரு கன்னிப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முடியாதா? முற்பிறவியில், மனைவிக்கும், பெற்ற மகளுக்கும் செய்த பாவம் தீர்ந்து, நான் ஒரு கன்னிப் பெண்ணை, திருமணம் செய்துகொள்ள, ஏதாவது பரிகாரம் இருந்தால், அகத்தியரிடம் கேட்டு சொல்லுங்கள். அந்தப் பரிகாரத்தை செய்துவிடுகின்றேன்'' என்றார்.

இவன் இதுவரை ஜோதிடர்களிடம், தன் திருமணத் தடைக்கு பலன் பார்த்து, அவர்கள் கூறிய எவ்வளவு பரிகாரங்களை, வழிபாடுகளைச் செய்து இருப்பான்.

ஜோதிடர்கள் கூறிய பரிகார சாந்திகளால் பலன் கிடைத்ததா? இவன் திருமணம் நடந்ததா? முன்ஜென்மங்களில் செய்த பாவத்திற்கு எந்த இறைவழிபாடும், பரிகாரமும் பலன் தராது. எந்த பாவத்தை யாருக்கு? எப்படி செய்தானோ, அதனை அறிந்து, அதற்கு சரியான நிவர்த்தி செய்தால் தான் பாவதாக்கம் குறையும் என்பதே நடைமுறை உண்மை.

கணவன்- மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுக்கும் வரம் அல்ல. அவரவர் பூர்வஜென்ம கர்மவினை, ஊழ்வினைப் பதிவின்படியே திருமணம், புத்திரன், வெற்றி, தோல்வி, செல்வம், வறுமை, தொழில், உயர்வுநிலை என அனைத்தும் அமையும் என்பதை இவன் அறிந்துகொள்ளட்டும்.

இவன் எத்தனை பரிகாரம்செய்து, ஒரு கன்னிப் பெண்ணை இவன் விரும்பிய படி மணம் புரிந்தாலும், அவள் இவனை விட்டு, ஒரு வருடகாலத்தில் பிரிந்து சென்றுவிடுவாள். அதன்பிறகு, இவன் ஒரு பெண் குழந்தை உள்ள ஒரு விதவைப் பெண்ணுடன் உறவு ஏற்பட்டு, அவளுடன் வாழ்ந்து, தன் முற்பிறவி பாவத்தை தீர்த்துதான் மடிவான்.

இப்பிறவியில் இவனுடன் மனைவியாக வாழப் போகின்றவள், இவன் வசிக்கும் ஊருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் தான் வாழ்கின்றாள். அவள் இவனுக்கு தூரத்து உறவுப் பெண்ணும் ஆவாள். இப்போதும் இவனுக்கு சொந்தமான விவசாய வயல் வேலைக்கு கூ-யாளாக வந்து வேலை செய்துவிட்டுப் போகின்றாள்.

இவனுக்கும், அவளுக்கும் ஒருவர்மீது ஒருவர் ஈர்ப்புகொண்டு, திருமணம் செய்துகொள்வார்கள். அந்த விதவைப் பெண்ணையும், அவள் மகளையும், இவன் மகிழ்ச்சியாக வாழவைத்து, முற்பிறவியில் மனைவிக்கும், மகளுக்கும் செய்த பாவத்தை தீர்த்துக்கொள்ளச் சொல்'' என்று கூறிவிட்டு, ஓலையி-ருந்து மறைந்தார்.

அகத்தியர் ஓலையில் கூறிய இன்னும் சில பலன்களைக் கூறி அவரை அனுப்பி வைத்தேன். சுமார் ஆறு மாதம் சென்றபின், அந்த நபர், சுமார் 28 வயதுடைய பெண்ணையும், சுமார் மூன்று வயதுடைய ஒரு சிறுமியையும் அழைத்துக்கொண்டு வந்து, அகத்தியர் கூறியபடியே எங்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணம் புரிந்துகொண்டேன். இவள் ஏற்கெனவே திருமணமாகி, கணவனை இழந்தவள். இந்த சிறுமி அவளின் முதல் கணவனுக்குப் பிறந்தவள். இவளும் என் தூரத்து உறவுப் பெண்தான். அகத்தியர் வாக்குபடி இனி என் மனைவி, மகள் இருவரையும் எந்த குறையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வைத்துக் காப்பாற்றுவேன் என்று கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றார்.

செல்: 99441 13267

bala291223
இதையும் படியுங்கள்
Subscribe