யில்யம் என்பது இந்திய வானியலிலும், ராசி சக்கரத்திலும், ஜோதிடத்திலும் பேசப்படும் 27 நட்சத்திரங்களில் ஒன்பதாவது நட்சத்திரமாக அறியப்படுகிறது.

இது பாற்கடலாகக் கருதப்படும் கடகத்தில் தனது நான்கு பாதங்களையும் பதியவைத்துள் ளது. இது ஒரு முழு நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தின் தோற்றம் சர்ப்பம்போன்று வானில் காட்சியளிக்கும். இதனை அம்மி வடிவமாகவும் கூறுவார்கள்.

ஆயில்யத்தின் சமஸ்கிருதப் பெயர் ஆஷ்லேஷா என்பார்கள். ஆஷ்லேஷா என்றால் ஒன்றுடன் ஒன்று பிணைதல் என்று பொருள். இதனையே கோவில்களில் இணையும் பாம்புச் சிலைகளாக வடிவமைத்துள்ளார்கள்.

இது முதுகுத்தண்டின் அடிப் பகுதியிலுள்ள குண்டலினி சக்தியைக் குறிப்பதாகவும் கூறுவர். ஜோதிடத்தில் ஆயில்யத்தை புதன் ஆள்கிறது.

Advertisment

இந்திய பஞ்சாங்க முறையில், சந்திரன் புவியைச் சுற்றிவரும்பொழுது ஆயில்ய நட்சத்திர கோணப் பிரிவு களுக்குள் இருக்கும் காலம் ஆயில்ய நட்சத்திரத்திற்குரிய காலமாகும். இந்தக் காலப்பகுதியில் பிறக்கும் ஒருவரு டைய பிறந்த நட்சத்திரம் அல்லது ஜென்ம நட்சத்திரம் ஆயில்யமாகும். இது ஒரு ராட்சஸ கண நட்சத்திரமாகும்.

இந்த ஆயில்யம் ஆதிசேஷனைக் குறிக்கும். மேலும், கண்டிப்புக்கும் தியாகத்திற்கும் பெயர்பெற்ற ஸ்ரீராமனின் சகோதரன் லட்சுமணனும், பஞ்சபாண்டவர்களில் மூத்த வரான தர்மரும் பிறந்த நட்சத்திரமாக அறியப்படுகிறது.

கிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் மூன்று நட்சத்திரங்கள் வீதம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. அதில் முதல் சுற்றென்பது அஸ்வினியில் தொடங்கி ஆயில்யத்தில் முடியும்.

Advertisment

இதில் கேது முதல் புதன் வரையிலான ஒன்பது கிரகங்களின் நட்சத்திரங்களும் அடங்கும்.

மறு சுற்று மகம் தொடங்கி கேட்டையில் முடியும்.

இறுதிச் சுற்று மூலத்தில் தொடங்கி ரேவதியில் முடியும்.

அந்த வகையில் முதல் சுற்றின் கடைசி நட்சத்திரமாக வரும் இது, மாலை தொடுத்தாற்போல் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்து கலப்பை வடிவத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் சுற்றின் இறுதி நட்சத்திரமாக அமைவதால் இதனை கண்டாந்த நட்சத்திரம் என்றும் கூறுவர். இதற்கு அரவு நாள், கவ்வை, பாம்பு என்ற தூய தமிழ்ப் பெயர்களும் உண்டு.

ஆயில்ய நட்சத்திரத்தின் ராசிநாதனாக சந்திரனும், நட்சத்திர நாதனாக புதனும், நவாம்ச நாதர்களாக ஆயில்யம் ஒன்றாம் பாதமென்றால் குருவும், இரண்டு மற்றும் மூன்றாம் பாதங்களுக்கு சனியும், நான்காம் பாதத்திற்கு குருவும் பொறுப்பேற்கிறார்கள்.

இந்த நட்சத்திரத்தின் அதிபதியான புதனுக்கு தாயன்பு கிடையாதென்பது அவரின் பிறப்பின்மூலம் அறியும் விஷயமாக இருந் தாலும், தாய்மை உணர்வுடைய கடகத்தில் அமைந்ததாலோ என்னவோ தாயின்மீதும் தந்தையின்மீதும் அதீத பாசமுடையவர்களாக இவர்கள் இருப்பார்கள்.

இந்த நட்சத்திரக்காரர்கள் சற்று தன்னலம் மிக்கவர்கள். சுயநலம் மட்டுமென்று எடுத்துக்கொள்ளக் கூடாது. தன்னலம் என்பது, தான் மட்டுமல்லாமல் தன்னைச் சார்ந்த அனைவரையும் குறிப்பது. தன் வீடு, தன் உற்றார்- உறவினர், தன் மனைவி என்று தன்னைச் சார்ந்தவர்களைக் குறிப்பது.

இந்த நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திர மாகக் கொண்டவர்கள் வேகமாக நடக்கக் கூடியவர்களாகவும், பெண்களிடம் ஆழ்ந்த நட்புகொண்டவர்களாகவும், திடமுடன் பேசும் வல்லமை உள்ளவர்களாகவும் இருப்பார்கள் என்று நட்சத்திர சிந்தாமணி எடுத்துரைக்கிறது. இது சூரியனின் கர்மப்பதிவை சுமந்த நட்சத்திரமாக அறியப்படுகின்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அவர்களின் வம்சாவளியில் அரசு, அரசியல், தந்தையுடனான உறவு, மாமனார்வழி சொத்து போன்றவற்றில் சிறு இடர்ப்பாடுகள் கொண்டவர்களாக இருப்பார்கள்.

aa

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் திருமணத்திற்காக அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ளப்படு வதில்லை. ஏனென்றால் "ஆயில்ய மாமியார் ஆசந்தியிலே' என்ற பழைய வழக்கு மொழியினால் ஏற்பட்டது. "ஆஸந்தி' என்பது பிணத்தை ஏற்றிச்செல்லும் வாகனமென்று பொருள். இதற்கான தரவு எந்த பழைய நூல்களிலும் இல்லை. இது பிற்கால இடைச்செருகலாக இருக்கலாம் என்பது இன்றைய பல ஜோதிடர்களின் கருத்தாக உள்ளது.

மேலும் இந்த ஆயில்ய நட்சத்திரத்தின் முதல் தசை புதன் தசையாகவும், இரண்டாவது கேது தசையாகவும், மூன்றா வது சுக்கிர தசையாகவும் அமையப்பெறும். இந்த சுக்கிர தசை வரும் காலமே சரியான திருமணக் காலமாக இவர்களுக்கு அமையும். இந்த காலகட்டத்தில் ஆயில்ய நட்சத் திரப் பெண்களை மணக்கும் ஆண்கள் இவர்களின்மீது அதீத அன்பு மற்றும் கவர்ச்சி யினை எதிர்கொள்வார்கள். இது அந்த வீட்டின் மாமியாருக்கு இடைஞ்சலாகவும் நெருடலாகவும் அமையும். இதன் காரண மாகத்தான் இந்த ஆயில்ய நட்சத்திரப் பெண்களை நிராகரிக்கிறார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முதல் தசை புதன் தசையாக வருவதனால் அறிவு மற்றும் புத்திக்கூர்மைக்குக் குறைவே இருக்காது. மேலும் சந்திரனுக்கும், புதனுக்கும் அறிவிலும், ஆற்றலிலும், நுட்பமான செயல்பாட்டிலும் பெரிய போட்டியே நிகழும்.

புதன், குரு, சந்திரன் ஆகியவற்றின் இணைவு பெரிய அளவில் ஆய்வுகள் செய்ய முற்படும். எவருமறிந்திடாத- எவராலும் அறியப்பட முடியாத சூட்சுமங்களையும் ரகசியங்களையும் இந்த ஆயில்யம் அணு அணுவாக ஆராய்ச்சி செய்யும்.

சந்திரன் மற்றும் புதன் சேர்க்கை வில்லங்கம் என்பார்கள். அதாவது குதர்க்கமான புத்திசாலித்தனம் உடையவர்கள் என்று பொருள். குழந்தைத்தனம், குறும்புத் தனம் போன்றவை இயல்பிலேயே இருக்கும். இவர்களுக்கு இளமையில் திருமணம் நிகழும்போது பெரும்பாலும் இருதார அமைப்பாக அமைகின்றது. புதன் இவர்களுக்கு சுகத்தையும் பாதகத்தையும் ஒருங்கே தரும் அமைப்பு கொண்டதாக அமைகிறது. சற்று மன சஞ்சலம் கொண்ட நட்சத்திரம். குழப்பமான மனநிலை, ஒரு விஷயத்தைத் தேர்ந்தெடுக்கும்பொழுது முன்னுக்குப்பின் முரண்பாடான நிலையை அடையும் நட்சத்திரம்.

இவர்களுக்குப் பெரும்பாலும் பணிசெய்வதைவிட சுயதொழிலே முன்னேற்றத்தை அளிக்கும். ஏனென்றால் இவர்கள் மற்றவர்களுக்குக்கீழ் கைகட்டி வேலைசெய்வதை விரும்புவதில்லை. தன்மானத்திற்கு இழுக்கென்றால் எவ்வளவு பெரிய விஷயத்தையும் தூக்கியெறியத் துணியமாட்டார்கள்.

கடகத்திற்கு அடுத்த வீடு சிம்மமாக வருவதால், சிம்மத்தின் கிரகமான சூரியனின் குணமும் இவர்களிடம் சற்று தூக்கலாகக் காணப்படும். இதனால்தான் ஆயில்ய நட்சத்திரம் எங்கும் அடிபணிந்து செல்லாது.

ஆயில்யம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களின் சந்திரன் நவாம்சத் தில் குருவின் வீடான தனுசு வீட்டில் அமையப்பெறும். இது கடகத்திற்கு ஆறாம் வீடாக வருவதனால் அறிவினால் கடன், சிந்தனையினால் சிக்கல் போன்றவை அமையும். குரு வீட்டில் அமையப்பெறும் சந்திரன் அங்கு குரு, புதன், சந்திரன் என்ற அதிபுத்திசாலித்தனமான நிகழ்வினை ஏற்படுத்தும். இவர்கள் யார் பேசுவதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். புதனின் காரகத்துவமான தொழில்கள் இவர்களை சிறப்படையச் செய்யும். கலைத்துறை, இசைத்துறை, நாட்டியம் போன்றவையும், கல்வித் தொடர்புடைய- தான் கற்றதை மற்றவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர் சம்பந்தப்பட்ட தொழிலும் இவர்களை மேலும் சிறப்படையச் செய்யும்.

ஆயில்யம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்சத்தில் சனியின் வீடான மகரத்தில் இடம்பெறும். இந்த சனி, சந்திரன் இணைவு புனர்பூ தோஷத்தைக் குறிக்கும். இதனால் இவர்கள் நினைக்கும் நேரத்தில் வேண்டிய பொருள் கிடைப்பது அரிது. எதிர்பார்க்காத நேரத்தில் கிடைக்கவும் செய்யும். மேலும் இந்த புனர்பூ தோஷம் இருதார அமைப்பை சுட்டிக்காட்டும். இவர்களுக்கு தரகு, கமிஷன், விவசாயம், தண்ணீர், கூலியாட்க ளைக் கையாளுதல் போன்ற தொழில்கள் சிறப்பினைச் சேர்க்கும். மேலும் வெளிநாடு சார்ந்த, உடல் உழைப்பை அதிகமாக ஈடுபடுத்தும் தொழில்கள் இவர்களுக்கு அமையும்.

ஆயில்யம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இரண்டாம் பாதத்திற்கு சொல்லப்பட்ட பலன்களே நிகழும்.

ஆயில்யம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்சத்தில் குருவின் வீடான மீனத்தில் நிற்கும். இதனால் கல்வியின்மூலம் உயர்வு, சாஸ்திரம் கற்பது, கற்ற கல்வியைப் பிறருக்குப் பகிரும் ஆசிரியர் தொழில், பல்கலைப் பேராசிரியர்கள் போன்றவைமூலம் சிறப்படைவார்கள்.

இந்த ஆயில்யத்தில் சின்னம் அம்மி மற்றும் ஏர்க்கலப்பை என அறியப்படுகின்றது. இதனால் இந்த நட்சத்திரத்தில் பிறப் பெடுத்தவர்கள் இந்த சின்னங்களைத் தொழில் மற்றும் பணிசெய்யும் இடங்களில் "லக்கி லோகோ'வாகப் பயன்படுத்த தொழிலில் முன்னேற்றத்தைக் காண முடியும்.

வணங்கவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி மற்றும் தத்தாத்ரேயர்.

வணங்கவேண்டிய தலம்: திருப்பதி.

கல்: முத்து.

விருட்சம்: புன்னை மரம்.

(அடுத்த இதழில் மகம்)

செல்: 80563 79988