ஆரோக்கியமான வாழ்விற்கு சரியான உடலமைப்பு அவசியம். இன்றைய நவீன யுகத்தில் அவசரப் போக்கான வாழ்க்கைக்காக மனிதன் ஓட வேண்டியுள்ளது. யாரும் உடல் ஆரோக்கியத்தை காக்க போதிய அளவு நேரம் செலவிடுவதும் இல்லை. இத்தகைய சூழலில் வாழ்வின் தேவைக்கான ஓட்டங்களோடு ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் உடல் பருமன் சமூக வியாதி யாக மாறியுள்ளது. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு சிலிம்மான உடல் வாகைப் பெறவேண்டும் என்ற ஆவல் அதிகம். உடல் மெலிந்தவர்களுக்கு சதைப் பிடிப்பான உடல் அமைப்பைப் பெறவேண்டும் என்ற ஆசை உள்ளது.
ஒருவர் நினைத்தவுடன் உடல் எடையை அதிகரிப்பதும் குறைப்பதும் சாத்தியமா? அதற்கும் நவகிரகங்களுக்கும் உள்ள சம்பந்தத்தை காணலாம்.
உடல் பருமன்
கட்டுக்குமீறிய வகையில் உடல் பெரிதாக சதைபோடுவதை உடற் பருமன் (ர்க்ஷங்ள்ண்ற்ஹ்) அல்லது உடல் கொழுப்பு எனலாம். உடல் கொழுப்பு சேகரித்து வைப்பது உடல் இயக்கத்தின் சாதாரண ஓர் இயல்புதான், ஆனால் அதீதமாக கொழுப்பு சேருவது உடல்நலத்துக்கு ஆபத்தானது. உடல் பெருக்கத்திற்கு மூன்று விதமான காரணங்களை பிரதானப்படுத்தலாம்.
1. அதிகமாக உணவு உண்ணல்
நேரத்துக்கு நல்லா சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை கடைபிடிக்கவேண்டும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. பசித்தாலும் பசிக்காவிட்டாலும் மூன்று வேளையும் சாப்பிட்டால் மட்டுமே உடதுக்கு தேவையான சக்தி கிடைக்கும் என்பது தவறான கருத்து. ஆரோக்கிய வாழ்வுக்கு முதல்படியே பசித்த பிறகு உண்பதுதான். பசியோடு சாப்பிடாமல் இருப்பது உடலுக்குத் தீங்கானது. அதுபோலவே, பசி இல்லாத வேளைகளில் சாப்பிடுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு எதிரானது.
மனித மூளை உடலுக்கு உணவு வேண்டுமென்றால் பசிமூலமும் தண்ணீர் வேண்டுமென்றால் தாகம்மூலமும் உணர்த்துகிறது. பசிக்காத போது உண்ணும் உணவு தேவையில்லாத எனர்ஜி யாக உடம்பில் சேர்ந்து உடல் பருமனா கும். அல்லது நோய் தாக்கம் ஏற்படும். அதனால்தான் நமது முன்னோர்கள் "பசித்துப் புசி' என்று கூறி வைத்தார்கள். சிலர் எப்பொழுதும் வாயில் எதையாவது போட்டு சுவைத்துக்கொண்டே இருப்பார்கள் அல்லது பார்க்கும் உணவை எல்லாம் சாப்பிடவேண்டும் என்ற உந்துதல் இருக்கும். ஜோதிடரீதியாக உபய ராசி அல்லது உபய லக்னத்தினர் உணவு கட்டுபாடு இல்லாமல் சதா எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு 2-ஆமிடம் சர ராசியாக வரும்.
2. உடல் உழைப்பு இன்மை
நவீனயுகத்தில் கடின உடல் உழைப்பு என்பதே கிடையாது. உடலை வருத்தி வேலைசெய்வது என்ற பேச்சிற்கே இடமில்லை. சுவிட்டை தட்டியும், ரிமோட்டை இயக்கியும் அனைத்து பணிகளையும் முடிக்கும் கலாச்சாரம் மிகுதியாகிவிட்டது. கடினமான உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் சாப்பிடும் உணவு எளிமையாக ஜீரணமாகும். உடல் உழைப்பு குறைந்தவர்கள் உடலின் இயக்க சக்திக்கு மீறிய உணவை உட்கொண்டல் அதிகப்படியான சக்தியாக உடல் எடை அதிகமாகும். இதில் விந்தை என்னவென்றால் கடினமான உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. உழைக்காதவர்களுக்கு உடல் பெருக்கும் ஏற்படும் வகையில் அதிகப்படியான உணவு கிடைக்கிறது. ஜோதிடரீதியாக 2, 5, 9-ஆம் பாவகம் தொடர்பு பெறுபவர்களுக்கு உடலில் கொழுப்பு சேரும் வகையான உணவு சாப்பிடுவார்கள். 2, 6, 8-ஆம் பாவகம் சம்பந்தம் பெறுபவர்கள் பசிக்கு சாப்பிடும் வகையான எளிமையான உணவு கிடைக்கும்.
3. அமர்ந்தியங்கும் வாழ்வுமுறை
சற்றேறக் குறைய 2-ஆம் நிலையில் கூறியது அனைத்தும் இதற்கு பொருந்தும். கடுமையான உடற்பயிற்சி தரும் செயற்பாடுகள் அல்லாத வாழ்முறையைக் குறிக்கின்றது. இந்த வாழ்வுமுறைக்கு உட்பட்டவர்கள் பெரும்பாலும் ஒரே இடத்தில் உட்கார்ந்தவாறு தொழில்புரிவது, பொழுது போக்கு வது மற்றும் வாழ்வின் பிற கடமை களைச் செய்கின்றார்கள். கணினி, தொலைக்காட்சி, தொலைதொடர்பு போன்ற புதிய தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தும் வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்டவர்கள்.
அதாவது கொரோனாவிற்கு பிறகு பலர் ரர்ழ்ந் ச்ழ்ர்ம் ட்ர்ம்ங் கலாச்சாரத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு முரணான வாழ்க்கை கலாச்சாரத்திற்கு அடிமையானவர்கள். இவ்வாழ்க்கை முறை மிகவும் அதிகமாக பரவிவருகின்றது. இவ்வாழ்வு முறையில் இருப்போர் உணவிற்கு தரும் முக்கியத்துவத்தை உடற்பயிற்சிக்கு தருவதில்லை.
அவர்களுக்கு பணிச்சுமை காரணமாக மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.மனிதர்கள் கால்நடையாக இடம்விட்டு இடம் பெயரும் வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரண மாகியது. உடல்பெருக் கும் என்ற பாதிப்பே இல்லை. ஆனால் வாகன வசதி பெருகிய இந்த காலத்தில் விதவிதமான உணவை உண்டுவிட்டு தொழில், உத்தியோகத்திற்கு நடைப்பயிற்சி இல்லாமல் வாகனங்களில் பயணிப்பதாலும் உடல் பெருக்கம் அதிகமாகிவிட்டது.
நவகிரகங்களும் உடல் பருமனும்
ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனே உடல்காரகன். மனோகாரகன். உடல்காரகன் சந்திரனுக்கு சூரியன் சம்பந்தம் இருப்பவர்கள் உடல் பொலிவாக, வனப்பாக தேஸஸாக இருப்பார்கள். உடல் அளவான சதைப்பிடிப்புடன் இருப்பார்கள். சந்திரன் சுய சாரம் பெற்றவர்கள் சந்திரனுக்கு எந்த கிரக சம்பந்தமும் இல்லாமல் இருப்பவர்கள் உடல் சற்று தளர்வாக இருக்கும். சந்திரன் வளர்ந்து தேயும் கிரகம் என்பதால் அடிக்கடி உடல் எடை கூடும். திடீரென எடை குறையும். சந்திரனுக்கு செவ்வாய் சம்பந்தம் உள்ளவர்களின் உடல் கட்டுமஸ்தாக இருக்கும். உடல் பெருக்கம் ஏற்படாமல் உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடலை கவனமாக பராமரிப்பார்கள். சந்திரனுக்கு புதன் சம்பந்தம் இருந்தால் உடல் எவ்வளவு சாப்பிட்டாலும் சதை ஏறா மல் இளமைப்பொழிவுடன் இருப்பார்கள். சந்திரனுக்கு சுக்கிரன் தொடர்பு இருந்தால் வஞ்சனை இல்லாமல் நன்றாக சாப்பிடுவார்கள். அதிக குண்டாக இருக்கமாட்டார்கள். ஆனால் உடல் பருமனாக வெளியில் தெரியாதபடி ஆடை அணிவார்கள். சந்திரன் சனி சம்பந்தம் எந்த உணவு சாப்பிட்டாலும் உடல் தேறாது.
சாப்பாட்டு போட்டியில் இவர்களை ஜெயிக்கமுடியாது. எப்பொழும் மெலிவாக இருப்பார்கள். சாப்பிடும் உணவில் எந்த குறையும் வைக்க மாட்டார்கள். ஆனால் கஞ்சியை கண்ணில் பார்த்து ஆறு மாதமானவர்போல் தோற்றம் இருக்கும். அதனால்தான் நமது முன்னோர் கள் உடல் இளைத்தவர்களை எள் சாப்பிடச் சொல்வார்கள். கொழுத்தவனுக்கு கொள்ளு. இளைத்தவனுக்கு எள் என்பது பழமொழி. இதன் ஜோதிடரீதியான விளக்கம். சனியின் ஆதிக்கம் மிகுந்தவர்கள் உடல் மெலிவாகவும் கேதுவின் ஆதிக்கம் மிகுந்தவர்கள் குண்டாகவும் இருப்பார்கள். உடல் பருமனாக இருப்பவர்கள் கேதுவின் தானியமான கொள்ளு சாப்பிட்டால் கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் மெலியும். இளைத்த தேகம் பெற்றவர்கள் சனியின் தானியமான எள்ளை சாப்பிட உடலில் சதைப்பிடிப்பு கூடும்.
சந்திரன் ராகு சேர்க்கை உள்ளவர்கள் சற்று உடல் பருமனாக இருந்தாலும் உயரமாக இருப்பதால் குண்டாக தெரியமாட்டார்கள். சந்திரன் குருச் சேர்க்கை உள்ளவர்கள் நல்ல உடல் பருமனாக இருப்பார்கள்.
உடல் பருமனும் பொருளாதாரமும்
பொதுவாக கோட்சாரத்தில் சுய ஜாதகத் திலுள்ள குரு ராகுவிற்கு சம்பந்தம் உண்டாகும் காலத்தில் உடல் எடை கூடிக்கொண்டே போகும். உடல்காரகன் சந்திரனுக்கு சனி சம்பந்தம் உண்டாகும் காலத்தில் உடல் எடை குறையும்.
அதாவது சுய ஜாதகத்திலுள்ள சந்திரனை கோட்சார குரு தொடர்பு கொள்ளும் போது பணப்புழக்கம் கூடும். சுய ஜாதகத்திலுள்ள குரு, ராகுவை கோட்சார குரு தொடர்பு பெறும்போதும் பணப்புழக்கத்தால் உடலும் உள்ளமும் பூரிப்படையும். கோட்சார சந்திரனை சனிபகவான் சேரும். பார்க்கும் காலத்தில் ஜென்மச் சனி, கண்டகச் சனி பாதிப்பால் தொழில், உத்தியோக பாதிப்பால் பணப்புழக்கம் குறைந்து மன சஞ்சலத்தால் உடல் எடை குறையும். பணத்திற்கும் உடல் பருமனுக்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது. அதே போல் உடல் பருமனாக உள்ளவர்கள் அனைவரும் நோயாளியும் அல்ல.
அதேபோல் தசை, புக்தி, கோட்சாரம் சம்பந்தம் இல்லாமல் உடல் எடையை அதிகரிக்கவும் முடியாது; குறைக்கவும் முடியாது. இன்று ச்ண்ற்ய்ங்ள் ஸ்ரீங்ய்ற்ங்ழ் என்ற பெயரில் உடல் எடையை அதிகரிப்பது, உடல் எடையை குறைப்பதும் ஒரு தொழிலாகி விட்டது. உடல் எடைகூட குருவின் தயவு வேண்டும். உடல் எடை குறைய சனியின் தாக்கம் இருக்க வேண்டும். இது தெரியாத பலர் ஜிம்க்கு சென்று உடல் எடைய பராமரிக்கிறேன் என்ற பெயரில் ஏதாவது ஒரு சத்தை, சக்தியை குறைத்து பெரிய பாதிப்பை சந்திக்கிறார்கள்.
எதையும் பகுத்துணர்ந்து செயல்படும் தன்மை இல்லாததே இதற்கு காரணம். இயல்பான ஆரோக்கியத்துடன் இருப்பவர் கள் உடல் பருமன் பற்றி கவலைப்படத் தேவையில்லை. உடல் மெலிவாக இருப்பவர்கள் அனைவரும் உடல் பலவீனமானவர்கள் அல்ல.
மரபணுவும் உடல்பருமனும்
உடல் பருமனுக்குப் பரம்பரை ஒரு முக்கியக்காரணம். பெற்றோர், தாத்தா, பாட்டி உடல் பருமனாக இருந்தால் மரபுரீதியாக அவர்களின் வாரிசுகளுக்கும், அடுத்த தலைமுறைக்கு இது கடத்தப்படுகிறது. குடும்பத்தின் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையும் உடல் பருமனுக்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்தலாம். உணவு உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. உடலுக்கு ஆற்றல் தேவைப்படும்போது பசிமூலம் உடல் உணர்த்துகிறது.
பசியை உணர்ந்து உணவு உண்ணும்போது ஆரோக்கியம் காக்கப்படும்.
செல்: 98652 20406