னிதர்களின் வாழ்வியல் பயணத்தில் அன்றைய காலம் தொட்டு, நவீன காலம் வரை, மனித குலத்தின் வளர்ச்சிக்கும், செழுமைக்கும், பல்வேறு கலைகள் உலகில் தோன்றி மனிதர்களால் கையாளப்படுகின்றது.

அதில் ஜோதிடம் என்னும் கலை பல விருட்சங்களாக பரிமாணம் அடைந்து, கிளை பரப்பியும், பிரகாசித்தும் கொண்டிருக்கிறது.

இதில் பல நிலைகளும், முறைகளும், கையாளப்படுகின்றது. மேலும் பல வகையான மாறுபட்ட கருத்துக்களும், பலன்களும், ஜோதிட துறையில் பயணிக்கும்பொழுது சந்திக்கும் மைல் கற்களாக உள்ளது.

ஆதிகால பயன்படான ஓலைச்சுவடியும், எழுத்தாணியும், இன்றைய பேப்பர், பேனா வாக, மாறி அதன் பயன்பாடு விண்ணை தொடும் அளவிற்கு வளர்ந்துவிட்டதுபோல், மனிதனின் முரண்பட்ட ஆராய்ச்சிக்கு பதில் காணும் விதமாக ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாவிற்கு விடை தேடியபொழுது கிடைத்த பொக்கிஷம்தான் எண்ணியல் என்று அழைக்கப்படும் நியூமராலஜி ஆகும்.

Advertisment

நம் வாழும் இந்த பூமியானது, சூரிய குடும்பத்தில் ஒன்று. இந்த குடும்பத்தின் முதல் சுற்றில் புதனும், இரண்டாம் சுற்றில் சுக்கிரனும், மூன்றாவது சுற்றில் பூமியும், நான்காவது சுற்றில் செவ்வாயும், ஐந்தாம் சுற்றில் குருவும், ஆறாம் சுற்றில் சனியும், சூரியனை மையமாக வைத்து சுற்றிக்கொண்டு இருக்கும் வேலையில், சூரியனின் காந்தக் களத்தில் மற்ற கிரகங்கள் இயங்கும்பொழுது, சூரியனை நெருங்கும்பொழுது வேகமாகவும், சற்று தள்ளிய நீர்வட்ட பாதையில் நகரும்பொழுது சற்று குறைந்த வேகத்தோடும் சுற்றுகின்றது. இதை கேப்லரின் விதி என்று வானியல் அறிஞர்கள் அழைக்கிறார்கள்.

இவ்வாறு கிரகங்களில் இருந்துவரும் காந்த அலைகள் மனிதனின் ஜீவகாந்த சக்தியோடு ஒன்றுசேர்ந்து பஞ்சபூதங்களினால் ஆக்கப்பட்ட மனிதனின் வாழ்வில் பல நிகழ்வுகளை நிகழ்த்துகின்றது.

இந்த நிகழ்வின் தாக்கம் சில சமயங்களில் நேர்மறையாகவும், பல சமயங்களில் எதிர்மறையாகவும் விளைந்துவிடுகின்றது.

Advertisment

இதன்காரணமாக எண்கள் மற்றும் எழுத்துக்கள், சார்ந்த பயணத்தின் மூலம் வாழ்வினை வளமாக்கிகொள்ளும் கலையே எண்ணியல் எனப்படும் நியுமராலஜி ஆகும். நியூட்டன் அணுவைப் பிளக்க முடியாது என்றார்.

ஆனால் பின்னர் வந்த ஐன்ஸ்டீன் அணுவைப் பிளக்க முடியும் என்பதனை நிரூபித்துக் காட்டினார், விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். ஆனால் என்றென்றும் மாறாத தத்துவம் எண்களின் தத்துவமாகும்.

ஏனெனில் எண்கள் ஒவ்வொரு பொருளிலிருந்து வெளிப்படும் ஆற்றலின் அளவை நிர்ணயிக்கும் சக்திவாய்ந்தவை.

உலக மொழிகள் அனைத்திலும் இந்த எண்ணியலை பயன்படுத்தலாம். ஆனால் ஆங்கில எழுத்துக்கள் குறைவாக இருப்பதனால் ஆராய்ச்சிக்கு எளிது என்பதனால் இவற்றை கையாண்டுள்ளனர். இந்த ஆ முதல் ழ வரையிலான ஆங்கில எழுத்து ஒவ்வொன் றிற்கும் எண்களின் மதிப்பு தந்து ஆராய்ந்து வந்துள்ளனர். மேலைநாட்டு விஞ்ஞானி ஹீரோ என்பவர் கடந்த நூற்றாண்டில் கொடுக்கப்பட்ட எண்களின் தொகுப்பே உலகம் முழுவதுமுள்ள எண் கணித ஆராய்ச்சி யாளர்களுக்கு இக்கலையை ஆராய உதவிகரமாக இருந்து வந்துள்ளது.

இந்த எண்ணியலின் அதி அற்புத சக்தியை பறைசாற்றும் சில உதாரணங்களை பார்க்கலாம்.

18 இந்த எண்ணின் ஆளுமையை கணிக்கும் பொழுது இது போர் மற்றும் குருதியை குறிக்கின்றது.

ஒன்பது என்பது விபத்து, போர், சண்டை, சச்சரவு, ரத்தம் ஆகியவற்றைக் குறிக்கும் செவ்வாயின் எண்ணாகும்.

எவ்வாறு என்றால்

SRILANKA= 18

KASHMIR= 18

குருசேத்திரப் போர்= 18 நாட்கள்

படைகளின் எண்ணிக்கை= 18

போர் நடைபெற்ற நாட்கள்= 18 என்று இந்த எண்ணின் அதிபயங்கரத்தை ஆராய முடிகின்றது.

எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் என்ற மொழிக் கிணங்க, எண்களும், எழுத்துகளுமே, மனித வாழ்வில் சில பிரளயங்களையும், அதன் அசாத்தியமான சூழலில் ஆளுமையும் தந்து வெற்றியடைய வழிவகுத்துள்ளது.

ஒருவர் பிறந்த தேதி, மாதம், வருடம், ஆகியவற்றின் கூட்டுத்தொகையை விதி எண் என்றும், பிறந்த தேதியை மட்டும் கூறுவது பிறப்பு எண் என்றும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

முதலாவதாக 1 எண்கள் குறிப்பிடும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்.

அதேபோல் ஆ, ஒ, ஓ, ண, வ ஆகிய எழுத்து களுக்கு ஒன்று என்கின்ற மதிப்பு கொடுத்து இதையும் சூரியனின் ஆதிக்கத்தில் வரும் எண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாதங்களிலும் வரும் 1, 10, 19, 28, போன்ற தேதிகளில் பிறந்த வர்கள் சூரிய ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள்.

மேற்கண்ட தேதியில் பிறந்து விதி எண் அல்லது வாழ்க்கை எண் என்று அழைக் கப்படும் தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டிவரும் எண் ஆதிக்கம் வேறுபடும் பொழுது, அவர்களின் குணாதிசயங்கள் மாறுபட்டு காணப்படும். அவர்களின் தனிப் பட்ட குணாதிசயங்கள் பற்றி பார்க்கலாம்.

பிறப்பு எண் 1 விதி எண் 1-ல் பிறந்தவர்கள்

பூரண சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த வர்கள் ஆவார்கள். இவர்கள் நேர்மைக்கு கட்டுப்பட்டவர்கள். தனது வாழ்க்கையில் லட்சியத்துடனும், முன்னேற்றுவதற்கான, திட்டத்துடனும், புதுப்புது வடிவங்கள் தீட்டிக்கொண்டே இருப்பார்கள்.

சிந்தனை வளமைமிக்கவர்கள். தனது வாழ்க்கையை மிகவும் கண்ணியமாக வாழ்வார்கள். சமுதாயத்தை சீர்படுத்தி செப்பனிடும் ஆற்றல் படைத்தவர்கள்.

பிறப்பு எண் 1 விதி எண் 2-ல் பிறந்தவர்கள்

பாதி நாட்கள் குழப்பத்துடனேயும், பாதி நாட்கள் தெளிவுடன் செயல்படுவார்கள். எடுத்த காரியத்தை செவ்வனே செய்து முடிப்பார்கள். திறமைசாலிகள். அடிமைத் தனத்தை அறவே வெறுப்பார்கள். காரியத் தில் இரு மனதுடன் செயல்பட்டு குழம்பி, பின்னர் அந்த காரியத்தை முடிக்க முடியாமல் திணறுவார்கள்.

தான் ஏமாந்த விஷயத்தை மற்றவர்களிடம் காட்டிக்கொள்ளமாட்டார்கள். தெய்வ நம்பிக்கை அதிகமிருக்கும். எந்தச் செயலையும் தானே முன்நின்று செய்துமுடித்தால் திருப்தி அடைவார்கள். பிறருடைய கருத்தை ஏற்கமாட்டார்கள். வளமான வாழ்க்கை வாழ்வார்கள். அதிர்ஷ்ட குறிப்புகளை முறையாக கையாண்டு வந்தால் அதிர்ஷ்டமான வாழ்க்கை நிச்சயம் சித்திக்கும்.

dd

பிறப்பு எண் 1 விதி எண் 3

சூரியன் மற்றும் குருவின் ஆதிக்கத் தில் பிறந்த இவர்கள், உலக அறிவு நிரம்பியவர்கள். இளமையிலேயே சிலருக்கு வழுக்கை விழுந்துவிடும். நீண்ட புருவம் உடையவர்கள். சட்டம், கணிதம், சங்கீதம், இசை போன்ற துறையில் சிறப்படைவார்கள். இவர்கள் ரகசியத்தை மற்றவர்கள் யாரும் அறியமாட்டார்கள். இவர்களை புரிந்துகொள்வது மிக கடினம். மற்றவர்கள் இவர்களைப் பற்றி புத்திசாலிகள் என்று பாராட்டுவார்கள். பல கலைகளில் தேர்ச்சிபெறுவார்கள். தனிப்பட்ட செயல் களால் பொருட் செல்வத்தை குவிப்பார்கள். பலரை நிர்வகிக்கும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. அரசியல், மக்கள் செல்வாக்கு அதிகம் உண்டாகும்.

பிறப்பு எண் 1 விதி எண் 4

நேர்மையைக் கடைப்பிடிக்கும் இவர்கள் போலிகளை வெறுப்பார்கள்.இதனால் இவர்களுடைய நண்பர்கள் இவர்களை விட்டு பிரியமாட்டார்கள். உலக அறிவு நிரம்பிய வர்கள். அலங்கார பிரியர்கள். வயதுக்கு மீறிய அங்க வளர்ச்சி இருக்கும். விதவிதமான கண்ணாடி அணிவதில் விருப்பம் இருக்கும். சென்ற இடமெல்லாம் சிறப்பு இருக்கும். எப்பேர்ப்பட்ட பிரச்சினைகளையும் சமாதானம் செய்து வைத்துவிடுவார்கள். நல்ல பேச்சுத்திறன் படைத்த இவர்கள் செயல் திறனும் மிக்கவர்கள். நலிந்தோர்க்கு தாராளமாக உதவிகள் செய்வார்கள். பொது வாழ்க்கையில் பிரகாசிப்பார்கள். இவர் களுடைய தலைமையை விரும்பி பலர் காத்திருப்பார்கள். வாகனப் பிரியர்கள்.

அரசியல் ஞானம் உண்டு. எதுவுமே வருமுன் யூகிக்கும் ஆற்றல் இவர்களுக்கு பிறவியிலேயே இருக்கும். சில சமயங்களில் தற்புகழ்ச்சிக்கு மயங்கி எல்லா விதமான உதவிகளையும் செய்வார்கள் .

பிறப்பு எண் 1 விதி எண் 5

ஓரிடத்தில் நிற்காமல் சுற்றி அலைந்து தொழில் செய்வார்கள்.பெரியவர்களிடமும் சான்றோர்களிடமும் மரியாதையுடன் நடந்துகொள்வார்கள், நன்றி உணர்ச்சி மிக்கவர்கள். புன்னகை தோய்ந்த முகத்துடன் காட்சியளிப்பார்கள். மின்னல் வேகத்தில் இவர்களின் செயல்பாடுகள் இருக்கும்.

நிரந்தரமான வருமானத்தை தேடிக்கொள் வார்கள். தனக்கு கெடுதல் செய்த எதிரியை எப்படி சிதறுண்டு போக செய்ய வேண்டும் என்ற நுட்பமான ஆற்றல் இவர்களிடம் இருக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். தன்னிச்சையாக செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். கணவன்- மனைவிக் குள் பாசம் இருக்கும்; பிரியம் இருக்கும். சில நேரங்களில் மூர்க்கத்தனமாக செயல் படுவார்கள். தேசபக்தி நிறைந்திருக்கும். பிறருடைய துயரத்தை போக்குவார்கள். வரலாற்றுச் சிறப்புகள்மீதும், அறிய பொக்கிஷங்கள்மீதும் ஆராய்ச்சி மனப் பான்மையுடைய நபர்கள்.

பிறப்பு எண் 1 விதி எண் 6

உலக இன்பங்கள் அனைத்தையும் அனு பவிக்கவே பிறந்தவர்கள். கலைகளில் ஆர்வம் மிக்கவர்கள். லாப நோக்கத்திலேயே காரியத் தையும் செய்வார்கள். எல்லா சுகபோகங்களும் அனுபவிக்க பிறந்த இவர்கள் இயல், இசை, நாடகம் என்று அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். புத்தகத்தின்மீது அளவு கடந்த பிரியம் இருக்கும். தூய்மையை விரும்புபவர்கள். வாசனை திரவியம், மலர்கள்மீது அலாதியான பிரியம் இருக்கும். புதுப்புது வீடுகள் வாங்கி கவர்ச்சிகரமாக மாற்றிவிடுவார்கள். தன்னைபோலவே பிறரும் இருக்க வேண்டுமென்ற ஆசைப்படுவார்கள். வெளி தேசம் பயணம், உல்லாச பயணம், அழகான வீடு, வாகனம் என்று வசதியான வாழ்க்கை வாழ்ந்து சுகபோகத்தை அனுபவிப்பார்கள். சுவையான உணவு விரும்பி உண்பார்கள். தனக்கு வருமானம் தராத எந்தத் தொழிலையும் அல்லது காரியத்திலும் ஈடுபடமாட்டார்கள். தான, தர்மங்கள் நிறைய செய்வார்கள். வீணான ஆடம்பரச் செலவும் செய்வார்கள், ஆண்- பெண் நட்புகள் இருக்கும். அழகான புருவம், வசீகரமான கண்கள் பெற்றிருப்பார்கள். உயர்ந்த சிந்தனை மற்றும் லட்சியங்கள் இவர்களுக்கு இருக்கும்.

பிறப்பு எண் 1 விதி எண் 7

நல்ல நாணமும், சிந்தனையும், செய்யும் சக்திமிக்கவர்கள். கலைகளை சிறப்பான முறையில் கற்றுத் தேர்ச்சி அடைவார்கள். கதை, கட்டுரை, காவியம், சொல்வதிலும், எழுதுவதிலும், வல்லவர்கள். எப்பொழுதும் தூய்மையான ஆடைகளை அணிவார்கள். கலகலப்பாக பேசும் இவர்கள், துன்பம் வந்தால் அளவுக்கு மீறி அழுதுவிடுவார்கள். இயற்கையை ரசிப்பவர்களாக இருப்பார்கள். தனது எழுத்து மற்றும் பேச்சுக்கு இசைந்த நண்பர்களை மட்டுமே தனக்கு நண்பர் களாக ஆக்கிக்கொள்வார்கள். தியானம் செய்வார்கள். உலகிற்கு அப்பாற்பட்ட அதீத சிந்தனையிலேயே மூழ்கி கிடப்பார்கள். தவறு செய்தால் தண்டிக்கவும், மன்னிக்கவும் என்று இரண்டு விதமாக செயல்படுவார்கள். இரண்டு பேரை மூட்டிவிட்டு தன்னை பற்றியும், தன்னுடைய செயல்கள், நடவடிக்கைகள் பற்றியும், யாரும் கண்டுகொள்ளாத வண்ணம் மற்றவர்களின் கவனத்தை திசை திருப்பி பிழைப்பு நடத்துபவர்கள். இந்த எண்ணில் உள்ளவர்கள் அதிகமாக காணப்படுகின்றார்கள்.

பிறப்பு எண் 1 விதி எண் 8

பொது காரியங்களில் முன்னின்று எப்பேர்பட்ட தியாகத்தையும் செய்ய தயங்க மாட்டார்கள். தோல்விகள் பல தொடர்ந்து வரும்பொழுதும், இவர்கள் தங்கள் தெய்வ நம்பிக்கை இழந்துவிடுவார்கள். மனோபலமும், உடல் பலமும் மிக்கவர்கள். ரகசியமாக எதையும் செய்து வெற்றியடைவார்கள். கற்பனை உலகில் மிதப்பார்கள். வெற்றிபெறும் பொழுது மட்டும் தெய்வ நம்பிக்கை இவர் களுக்கு கூடும், சிக்கனவாதிகள், செலவு செய்வதில் அதிகமான கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வார்கள். ஆன்மிக நாட்டம், கலைகளில் ஆர்வம் இருக்கும், நன்மை- தீமை, ஆராய்ந்து பின்னர் நிதானமாகவே முடிவு எடுப்பார்கள். எதிரிகளை வென்று வீழ்த்துவார்கள். வாதாடும் திறன் வாய்ந்தவர் கள். தோல்விகளுக்கு அஞ்சமாட்டார்கள்.

பண விஷயத்தில் கண்டிப்பாக நடந்து கொள்வார்கள். நேர்மையும், தந்திரசாலித் தனமும் மிக்கவர்கள். எதையும் தாங்கும் மனவலிமை மிக்கவர்கள். உறுதியானவர்கள். ஆதாயம் ஏதும் பார்க்காமல் ஆபத்தில் உதவுவார்கள்.

பிறப்பு எண் 1 விதி எண் 9

தன்னம்பிக்கையும் உடல்பலமும் மிக்கவர்கள், கல்வி, அறிவும், நாணமும் உள்ள மனிதர்கள். தாய்வீடு, சொந்த நாடு, ஊர் மீதான பற்றுதல் இவர்களுக்கு அதிகமாக இருக்கும். சூரிய ஆதிக்கத்தில் மிகவும் தைரிய மான மனிதர்கள் இவர்கள்தான். நாட்டு விஷயங்களை நன்கு அறிவார்கள். ஆண்- பெண் இருபாலரிடமும் நன்மை உண்டாகும்.

நட்பு பல நன்மைகளை செய்யும் முன்கோபி கள். முரட்டுத்தனத்தால் தீமை செய்துவிட்டு பின்னர் வருந்துவார்கள். சுதந்திரப் பிரியர் கள். நல்லது- கெட்டது எதுவென்று ஆராய்ந்து முடிவெடுப்பார்கள். உயர்ந்த உள்ளம் படைத்தவர்கள். இவர்களுக்கு பல தகுதிகள் இருக்கும். கருத்து வளம் மிக்கவர்கள். தேசநலனில் அதிக அக்கறை உடையவர்கள். ரத்த ஓட்டம் சீராகவே இருக்கும் உடலில் உஷ்ணம் இருக்கும். நீடித்த நண்பர்களாக சிலர் நண்பர்கள் இருப்பார்கள். இவர்கள் எந்தத் துறையிலும் அறிமுகமாகி விரைவி லேயே முதலிடத்தை பிடிப்பார்கள்.

சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர் களுக்கான அதிர்ஷ்ட தேதிகள்

1, 10, 19, 28, 6, 15, 24, 9, 18, 27

துரதிஷ்ட தேதிகள்

8, 17, 26, 2, 11, 20, 29, 7, 16, 25

அதிர்ஷ்ட நிறங்கள்

மஞ்சள், வெளுர் நீளம், சந்தனம், செஞ் சிவப்பு, பொன்னிறம்.

துரதிஷ்ட நிறங்கள்

கருப்பு, காபி கலர், பாக்கு நிறம், இருண்ட நிறங்கள், பச்சை.

அதிர்ஷ்ட ரத்தினங்கள்

மாணிக்கம், பவளம், கனக புஷ்பராகம், தங்க புஷ்பராகம், சூரிய காந்தக்கல்.

சூரிய ஆதிக்க அதிர்ஷ்ட பெயர் வைத் துக்கொள்வது சிறப்பினை தரும் 10, 19, 37, 46, 55, 82, 73 போன்ற எண்களின் வரிசையில் பெயர் அமைத்துக்கொள்வது நல்ல சிறப்பினையும், நல்ல விரைவான அதிர்ஷ்டமும், கிடைப்பதற்கு பெரிய வழியை வகுத்து கொடுக்கும். பெயர் அமைக்கும் பொழுது மாதம், தேதி, வருடம் ஆகியவற்றை கவனத்தில் கொள்வது மிகவும் முக்கியம்.

இந்த எண்ணியல் தொடர்பில் கையெழுத்தும், கையெழுத்து இடும் தன்மையும், மிக முக்கியமான பங்கை பெற்றிருக்கின்றது.

கையெழுத்தை எந்த காரணம் கொண்டும் கீழ்நோக்கி குறியிடக்கூடாது. அதிர்ஷ்ட வண்ண பேனாமையால், அதிர்ஷ்ட நிறத்தால் போடப்படும் கையெழுத்து, மூளை நரம்பு வழியே பிரதிபலித்து செயல் வடிவமாகி சாதனைகள் பல படைக்க உதவும். கையெழுத் தின்மேல் குறியிடப்பட்டுள்ள எழுத்துக்களை கோடிட்டு, அடித்தால், வம்பு, வழக்குகளில் சிக்குவார்கள். 9 வகையான எண்களும் நவகிரகத்தில் காந்த அலை வீச்சில் இயங்குகின்றது.

இந்த 9 எண்களும் சித்தர்கள் பயன்படுத் திய நவபாஷாண சிலைகளை ஒத்ததாகும்.

எனவே கையெழுத்து இடும்பொழுது கவனமாக இடுவது சிறப்பு. இந்த சூரியனின் ஆதிக்கமான ஒன்றாம் எண்ணில் பிறந்த வர்களின் கையெழுத்து 19 டிகிரி சாய் கோணத் தில் இடவேண்டும். இரண்டு சென்டி மீட்டருக்குமேல் நீளமுள்ள கையெழுத்தாக அமையவேண்டும். கையெழுத்தின் குறியீடு களை கண்டபடி மாற்றி மாற்றி குறிப்பிட் டால், வீண் மன குழப்பங்களும், தோல்வியும் சம்பவிக்கும்.

கையெழுத்துக்கு இடையே இடைவெளி இல்லாமலும், முற்றுப்புள்ளி வைக்காமலும் பார்த்துக்கொள்வது சிறப்பு.

தொலைபேசி எண்ணை கணக்கிடுதல் ஒருவர் பயன்படுத்தும் தொலைபேசி எண் ணானது, அவருடைய பிறப்பு, விதி மற்றும் பெயரின் சம்பந்தப்பட்ட எண்ணாக அமைய வேண்டும். பிறப்பு மற்றும் விதி எண்கள் எதிர்மறையாக இருப்பின், நட்பு எண்ணிலோ பெயர் எண் வரும் எண்ணிலோ, அதிர்ஷ்ட கூட்டு எண்களுடைய தொலைபேசி எண்ணை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

இந்த ஒன்றாம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் கோதுமை தானம் அளிப்பது சிறப்பிலும் சிறப்பு.

செல்: 80563 79988