திருமணத்திற்காக பார்க்கப் படும் தசவிதப் பொருத்தங்களில் மிக இன்றியமையாதது ராசிப் பொருத்தமாகும். ராசிப் பொருத்தம் என்பது பெண்ணின் ஜாதகத்தில் அமைந்த சந்திர ராசியிலிருந்து ஆணின் ஜாதகத்தில் அமைந்த சந்திர ராசிவரை எண்ணி, வந்த எண்ணிக்கைக்கு ஒப்பாக ஜோதிட சாஸ்திர நூல்கள் ராசிப் பொருத்தம் உள்ளது எனவோ, இல்லை என்பதனையோ தீர்மானம் செய்கிறது. ஜாதக தேச நூல் கீழ்வருமாறு கூறுகின்றது.
பெண்ணின் ராசியிலிருந்து 7, 10, 11, 12, 9, 8-ஆவது ராசியாக ஆண் ராசி அமைவது, அதுபோன்று ஆண்- பெண் இருவரும் ஒரு நட்சத்திரமாக அல்லாமல் ஒரு ராசியாக இருப்பது- ராசிப் பொருத்தம் சிறப்பாக அமைகின்றது என்பதாகும்.
மேலும் ஐந்து, மூன்று, இரண்டு ராசிகளாக அமைய, பொருத்தமில்லை எனவும், நான்காவது ராசியாக அமைந்தால் மத்திமமாக பொருத்தம் அமைந்துள்ளது எனவும், எட்டாவது ராசியாக பெண் ராசியிலிருந்து ஆண் ராசி அமைவது மத்தியப் பொருத்தமே எனவும் சொல்லப்பட்டுள்ளது.
இப்போது பகுத்தறிவுவாதிகள் எவரேனும் ஒரு கேள்வியை எழுப்பினால்? அதாவது இப்படி பொருத்தமற்ற இரு ஜாதகங்களை இணைப்பதன்மூலமாக என்ன நிகழுமென்று எவரேனும் கேள்வி கேட்டார் என்றால், அதற்கு பதில்சொல்லும் விதமாக பிரசன்ன மார்க்க நூலில், பலவித நூல்களிலிருந்து தொகுக்கப்பட்ட பாடல்களின் கருத்துகளுக்கு இணங்க கூறப்பட்டுள்ளதை நாம் ஆய்வுசெய்தால், பெண்ணின் ராசியிலிருந்து ஆணின் ராசியானது இரண்டாவது ராசியாக வருவது செல்வத்திற்கு அழிவைத் தரும் எனவும்,
அதுவும் கடகம், விருச்சிகம், மீன ராசிகள் ஆண் அல்லது பெண்ணின் ராசியாக அமைந்து, பெண் ராசியிலிருந்து ஆண் ராசி இரண்டாவது ராசியாக அமைந்தால், பலவிதமான பண இழப்புகளும், செல்வமற்ற நிலையும், தரித்திரம் உருவாகும் என்றும் பிரசன்ன மார்க்க நூல் சொல்கிறது,
மேலும் ஆண் ராசி மூன்றாவது ராசியாக அமைந்தால் வாழ்வில் துக்கமும், நான்காவது ராசியாக அமைய பரஸ்பரம் விரோதம் ஏற்படும் எனவும், ஐந்தாவது ராசியாக பெண் ராசி அமைந்தால் குழந்தை யின்மை ஏற்படும் எனவும், அதுவும் ஆண்- பெண்பால் நட்சத்திரத்திலும், பெண்- ஆண்பால் நட்சத்திரத்திலும் பிறந்து, இருவரில் ஒருவரின் ராசி அல்ப புத்திர ராசி என கூறப்படும் ரிஷபம், சிம்மம், கன்னி, விருச்சிக ராசியில் ஒன்றாக அமைந்து, ஆணின் ராசி ஐந்தாவது ராசியாக அமைந்தால், நிச்சயமாக இவர்களுக்கு குழந்தைச் செல்வம் இல்லையென பிரசன்ன மார்க்க நூல் சொல்கின்றது.
எனவேதான் அந்த நூலில் மற்றொரு பாடலில் அந்நூல் ஆசிரியர் எச்சரிப்பது என்னவென்றால், பெண் ராசியிலிருந்து ஆண் ராசி இரண்டாவது ராசியாக வருவதும், ஐந்தாவது ராசியாக வருவதும் பொருத்தங்களில் மிகவும் தீமை தருகின்ற அமைப்பென்று கூறுகிறார். அவ்வாறு பெண் ராசியிலிருந்து ஆண் ராசி ஆறாவது ராசியாக அமைய, விபத்து, நோய், பகை, பிரிவும் ஏற்படலாம் எனவும் அந்நூல் கூறுகிறது.
இருவரின் ராசி அதிபதிகள் ஒன்றாக இருப்பதும், தம்பதிகளின் ராசி அதிபதிகள் நட்புக்கோளாக அமைவதும் இவற்றிற்கு விதிவிலக்காக இருந்தாலும்கூட, இத்தகைய அமைப்பு இங்கே கூறப்படும் வண்ணம் ராசிப் பொருத்தம் இல்லாமல் அமைந்தால் அவற்றிற்காக கூறப்படுகின்ற தீய பலன்கள் அனுபவத்தில் நடந்தேறுவதையும் காணமுடிகிறது.
இதற்குப் பரிகாரம் ஏதேனும் சொல்லப் பட்டுள்ளதா என்று நூல்களில் தேடியபோது, சசாங்க சாரதியம் என்ற நூலில் இதற்கான பரிகாரம் காணப்படுகின்றது. அதாவது ராசிப் பொருத்தம் இல்லாது திருமணம் செய்து கொண்டதால் ஏற்படும் தீமைகள் விலக, தம்பதிகளின் வயதிற்கொப்பாக பார்வதி- பரமேஸ்வர பிரதிமை தங்கத் தால் செய்து, ஸம்ஸ்கார கர்மம், அதோடு பிராண பிரதிஷ்டை என்னும் சடங்குகளை வேத விற்பன்னர்கள்மூலமாகச் செய்து, அந்த பிரதிமையை தானம் செய்வதன் மூலமாக ராசிப் பொருத்தம் இல்லாமை என்னும் தீமை விலகிவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது. இங்கு சொல்லியவண்ணம் பரிகாரங்களைச் செய்வது சிரமமானதாகும். எனவே நமது வசதிக்கேற்ப பார்வதி- பரமேஸ்வர பிரதிமைக்கு தங்க முலாம் பூசி, அதனை மேற் கண்டவிதமாக பரிகாரங்களைச் செய்து தானம்செய்வது சிறப் பென்று தெரிகிறது.
இருந்தாலும் எல்லாராலும் இந்த பரிகாரங்களை செய்து விட முடியாது என்பதால், பொருத்தங்கள் அமையாது, அதனால் ஏற்படுகின்ற தீமைகள் மாறுவதற்கு பொதுவாக ஜோதிட பண்டிதர்கள் சொல்லுகின்ற பரிகாரம்- தம்பதிகளாக சேது ஸ்நானம் செய்வது. அதாவது தம்பதிகளாக இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியில் காணப்படும் புண்ணிய தீர்த்தங்களில் முறைப்படியான நீராடுதலை நடத்துவது. இதனால் அனைத்துவிதமான பொருத்தங்கள் இல்லாத தீமையையும் விலகிவிடுவதாக ஜோதிடப் பண்டிதர்கள் கூறுகிறார்கள். எனவே ராசிப் பொருத்தமில்லை என்று அச்சம்கொள்ள வேண்டாம். செல்வோம் இராமேஸ்வரம்; தம்பதியராக புண்ணிய நீராடுவோம்.
செல்: 97913 67954