பல ஜாதகங்களில் கஜகேசரியோகம், அதியோகம், மற்றும் பஞ்ச மகா புருஷ யோகம் ஆகியவை பொதுவாக அடிக்கடி ஏற்படக்கூடிய முக்கிய ராஜ யோகங்களா கும். அத்தி பூத்ததுபோல் ஏற்படும் ராஜயோகங்களில் லட்சுமி யோகமும் ஒன்றா கும். ஜாதகரின் வாழ்க்கை முழுவதும் திரண்ட செல்வத்தை அள்ளித்தரும் இந்த யோகம் உள்ளவர்கள் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள். இது அதிக ஜாதகங்களில் பொதுவாக காணப்படுவதில்லை. ஜாதகத் தில் 1, 2, 5, 9 மற்றும் 11-ஆம் வீடுகளில் தொடர்பு, இந்த சிறப்பான யோகம் ஏற்படுவதற்கு காரணமாகிறது. அதே நேரம் ஜோதிட ஆசிரியர்களால் கண்டு கொள்ளப்படாத முக்கிய தலைப்பு ராஜயோக பங்கம்- என்பதாகும்.
ராஜயோகம் மற்றும்
ராஜயோக பங்கத்திற்குமான வேறுபாடுகள் ஒரு கிரகத்தின் தசாபுக்தி காலங்களில் உருவெடுப்பது ராஜ யோகமாகும்.
ஆனால், சாதகர் பிறந்த நாள் முதல் எந்த நேரத்திலும் உருவெடுக்க வல்லது ராஜயோக பங்கம், ஆகும். யோகங்களை ஏற்படுத்துவதில் நிழல் கிரகங்களான ராகு- கேதுக்களுக்கு எந்த பங்கும் இல்லை யென்றாலும், ராஜயோகத்தை பங்கம் ஆக்குவதில் அவைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. ராஜயோக பங்க யோகத்தால் பாதிக்கப்படும் வரை, ராஜயோகம் தரும் நன்மைகள்- பலன்கள் ஒரு குறுகிய காலத்திற்குள் முடிந்துவிடுகிறது. மேலும், ராஜயோக பங்க யோகம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று, எப்படியெனில், அது தொடக்கத்திலோ, நடுவிலோ அல்லது முடிவில் எந்த நேரத்திலும் ராஜயோகத்தால் ஏற்படும் நற்பலன்கள் முழுவதும் ஒன்றும் இல்லாமல் ஆக்கும் வல்லமை மிக்கதாகும்.
வக்கிர கிரகங்கள் மற்றும் நீச கிரகங்கள்
ஒருபோதும் ராஜ யோகத்தை ஏற்படுத்த- தரமுடியாது. ஆனால், ராஜயோக பங்கத்தை அவற்றால் நிச்சயம் உருவாக்க முடியும். இதில் ஒரு விதிவிலக்கு உண்டு. அது என்னவென்றால், 4 அல்லது 5 கிரகங்கள் நீச நிலையில் இருக்கும்போது ராஜயோகத்தை ஏற்படுத்த முடியும் என்பதேயாகும். ஆனால், இந்தவகை யோகம் உடையவர்கள் பொதுவாக கொடுங்கோலர்களாக, கொள்ளை கூட்ட தலைவர்கள் மற்றும் திருடர்களாக உருவெடுப்பார்.
ராஜ யோக பங்கம் ஏற்படுவதற்கான பொதுவான விதிகள்
1. நீச கிரகங்கள்- நீச பங்கம் ஆகாத, நீச கிரகங்கள் பொதுவாக பலமற்றதாக கருதப்படுகிறது.
2. கிரக யுத்தத்தில் தோல்வி அடைந்த கிரகங்கள்- ஒரு பாகையில் இரு கிரகங்கள் இணையும்போது கிரக யுத்தம் ஏற்படுகிறது.
(அதுவும் முக்கியமாக செவ்வாயுடன் இணையும்போது). இந்த விதி தாரா கிரகங்களுக்கு இடையே மட்டுமே ஏற்படுகிறது. குறைந்த பாகையில் உள்ள கிரகம் வெற்றிபெற்ற கிரகமாக கருதப்படுகிறது. மிகுந்த தீர்க்க ரேகை பாகையில் உள்ள கிரகம் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.
3. பகை வீடுகள் - திக் பலம் பெற்ற கிரகங்கள் பகை வீடுகளில் இருக்க சாதகர் இன்னல்களை அனுபவிப்பார். ஆனால், அதுவே, அந்த கிரகத்துக்கு இடம் கொடுத்த வன் பலம் பெறும் போது இந்த நிலை ரத்தாகிறது.
4. பாவ சந்தி அல்லது ராசி சந்தி- பாவ சந்தி அல்லது ராசி சந்தியில் உள்ள கிரகங்கள் பலமற்றவைகளாக கருதப்படுகின்றன.
5. வக்கிர நிலை- வக்கிர நிலையில் உள்ள அசுப கிரகங்கள், ராஜ யோகத்தை பாதிக்கின்
பல ஜாதகங்களில் கஜகேசரியோகம், அதியோகம், மற்றும் பஞ்ச மகா புருஷ யோகம் ஆகியவை பொதுவாக அடிக்கடி ஏற்படக்கூடிய முக்கிய ராஜ யோகங்களா கும். அத்தி பூத்ததுபோல் ஏற்படும் ராஜயோகங்களில் லட்சுமி யோகமும் ஒன்றா கும். ஜாதகரின் வாழ்க்கை முழுவதும் திரண்ட செல்வத்தை அள்ளித்தரும் இந்த யோகம் உள்ளவர்கள் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள். இது அதிக ஜாதகங்களில் பொதுவாக காணப்படுவதில்லை. ஜாதகத் தில் 1, 2, 5, 9 மற்றும் 11-ஆம் வீடுகளில் தொடர்பு, இந்த சிறப்பான யோகம் ஏற்படுவதற்கு காரணமாகிறது. அதே நேரம் ஜோதிட ஆசிரியர்களால் கண்டு கொள்ளப்படாத முக்கிய தலைப்பு ராஜயோக பங்கம்- என்பதாகும்.
ராஜயோகம் மற்றும்
ராஜயோக பங்கத்திற்குமான வேறுபாடுகள் ஒரு கிரகத்தின் தசாபுக்தி காலங்களில் உருவெடுப்பது ராஜ யோகமாகும்.
ஆனால், சாதகர் பிறந்த நாள் முதல் எந்த நேரத்திலும் உருவெடுக்க வல்லது ராஜயோக பங்கம், ஆகும். யோகங்களை ஏற்படுத்துவதில் நிழல் கிரகங்களான ராகு- கேதுக்களுக்கு எந்த பங்கும் இல்லை யென்றாலும், ராஜயோகத்தை பங்கம் ஆக்குவதில் அவைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. ராஜயோக பங்க யோகத்தால் பாதிக்கப்படும் வரை, ராஜயோகம் தரும் நன்மைகள்- பலன்கள் ஒரு குறுகிய காலத்திற்குள் முடிந்துவிடுகிறது. மேலும், ராஜயோக பங்க யோகம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று, எப்படியெனில், அது தொடக்கத்திலோ, நடுவிலோ அல்லது முடிவில் எந்த நேரத்திலும் ராஜயோகத்தால் ஏற்படும் நற்பலன்கள் முழுவதும் ஒன்றும் இல்லாமல் ஆக்கும் வல்லமை மிக்கதாகும்.
வக்கிர கிரகங்கள் மற்றும் நீச கிரகங்கள்
ஒருபோதும் ராஜ யோகத்தை ஏற்படுத்த- தரமுடியாது. ஆனால், ராஜயோக பங்கத்தை அவற்றால் நிச்சயம் உருவாக்க முடியும். இதில் ஒரு விதிவிலக்கு உண்டு. அது என்னவென்றால், 4 அல்லது 5 கிரகங்கள் நீச நிலையில் இருக்கும்போது ராஜயோகத்தை ஏற்படுத்த முடியும் என்பதேயாகும். ஆனால், இந்தவகை யோகம் உடையவர்கள் பொதுவாக கொடுங்கோலர்களாக, கொள்ளை கூட்ட தலைவர்கள் மற்றும் திருடர்களாக உருவெடுப்பார்.
ராஜ யோக பங்கம் ஏற்படுவதற்கான பொதுவான விதிகள்
1. நீச கிரகங்கள்- நீச பங்கம் ஆகாத, நீச கிரகங்கள் பொதுவாக பலமற்றதாக கருதப்படுகிறது.
2. கிரக யுத்தத்தில் தோல்வி அடைந்த கிரகங்கள்- ஒரு பாகையில் இரு கிரகங்கள் இணையும்போது கிரக யுத்தம் ஏற்படுகிறது.
(அதுவும் முக்கியமாக செவ்வாயுடன் இணையும்போது). இந்த விதி தாரா கிரகங்களுக்கு இடையே மட்டுமே ஏற்படுகிறது. குறைந்த பாகையில் உள்ள கிரகம் வெற்றிபெற்ற கிரகமாக கருதப்படுகிறது. மிகுந்த தீர்க்க ரேகை பாகையில் உள்ள கிரகம் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.
3. பகை வீடுகள் - திக் பலம் பெற்ற கிரகங்கள் பகை வீடுகளில் இருக்க சாதகர் இன்னல்களை அனுபவிப்பார். ஆனால், அதுவே, அந்த கிரகத்துக்கு இடம் கொடுத்த வன் பலம் பெறும் போது இந்த நிலை ரத்தாகிறது.
4. பாவ சந்தி அல்லது ராசி சந்தி- பாவ சந்தி அல்லது ராசி சந்தியில் உள்ள கிரகங்கள் பலமற்றவைகளாக கருதப்படுகின்றன.
5. வக்கிர நிலை- வக்கிர நிலையில் உள்ள அசுப கிரகங்கள், ராஜ யோகத்தை பாதிக்கின்றன.
6. அஸ்தமனம்- சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் அஸ்தமனம் அடைகிறது. புதன் 8 பாகைக்குள் வர அத்தமனம் அடைகிறது.
7. ராகுவுடன் இணைவு- கிரகங்கள் ராகுவுடன் இணையும்போது அல்லது 12 பாகைக்குள் வரும்போது.
8. விபலா- ஷட்பலம் கணிதத் தில் கிரகங்கள் தனக்கு குறிப்பிடப் பட்டுள்ள பலத்துக்கு குறைவான பலத்தில் இருக்கும் போது அது விபலா என்று அழைக்கப்படுகிறது. குறைந்தபட்ச கிரக பலம்- சூரியன்- 390, சந்திரன்- 360, செவ்வாய்- 300, புதன்- 420, குரு- 390, சுக்கிரன்- 330 மற்றும் சனி- 300 ஆகும்.
9. துர் ஸ்தான அதிபதிகள்- 6, 8, 12-ஆம் அதிபதிகள் அசுபர் ஆகும்போது. இதில் 6-ஆம் அதிபதி குற்றச்சாட்டையும், 8-ஆம் அதிபதி குற்றச்சாட்டின் தன்மை மற்றும் அளவையும், 12-ஆம் அதிபதி அதன் முடிவுகளையும் நிர்ணயிக்கின்றன.
10. கேந்திராதிபதிகள்- குரு மற்றும் புதன் போன்ற இயற்கை சுபர்கள் கேந்திரத்தில் அமர்ந்து கேந்திராதிபத்திய தோஷம் பெறும் போதும், ராஜயோக பங்க யோகம் ஏற்படு கிறது.
மகாதேவர் எழுதிய ஜாதக தத்துவத்தில், கீழ்கண்ட நிலைகளில் ராஜ யோகங்கள் செயலற்றதாகிறது என குறிப்பிடப் பட்டுள்ளது.
1. 9, 10 மற்றும் 11-ஆம் பாவாதிபதிகள் பாதிப்பு அடையும்போது.
2. பத்ர திதியும், வியதிபாத யோகம் ஒரு நாளில் ஏற்பட்டால் அல்லது பகல் இரவு சமமான நாள் அன்று பிறந்த ஜாதகருக்கும்
3. சந்திரன் அதன் அதி நீச புள்ளியில் இருக்கும் போதும்.
4. உச்ச கிரகம், நவாம்சத்தில் நீச ராசியில் இருக்கும் போதும்.
5. உச்ச சூரியன் நவாம்சத்தில் நீசம் பெறும் போது, அரசனும் ஆண்டியாவான்.
6. சூரியன் நீச நிலையில் உள்ள போதும்.
7. சுக்கிரன் நீசமாகி, சிம்ம நவாம்ச மோ அல்லது அதன் சுய வீட்டில் இருந்தாலும்.
8. அரசாங்கத்தை அந்தஸதை அளிக்கக் கூடிய கிரகம் கிரகணமாகியோ அல்லது பகை வீட்டில் இடம் பெற்று பாதிப்பு அடைந்திருந்தாலும்.
9. கிரகண காலம், பூமி அதிர்ச்சி போன்ற அழிவுகள் ஏற்பட்ட காலத்தில் ஜாதகம் பிறப்பு எடுத்தாலும்.
10. நீச கிரகம் 10-ஆம் வீட்டில் இடம் பெற்றாலும்.
11. 4 கிரகங்கள் பகை வீட்டில் இருக்க அல்லது பாதிக்கப் படவும்.
12. சந்திரனோ அல்லது லக்னமோ வேறு பார்வை பெறாது இருக்கவும்.
13. சூரியன் ஓர் அசுப கிரகத்துடன் இணைந்து சிம்ம நவாம்சத்தில் இருக்கவும், தேய்பிறை சந்திரன், அசுபர் பார்வை பெறாதிருக்கவும்.
14. அதிநீச நிலையில் சுக்கிரன் அல்லது குரு இருக்கவும்.
15. அசுப கிரகங்கள் அனைத்தும் பலம் இழந்து கேந்திரங்களில் இருக்கவும், சுபகிரகங்கள் 6, 8, 12-ல் இருக்கவும்.
16. சுபகிரகங்கள் கிரகணமடைந்து, கேந்திர வீடுகளைத் தவிர மற்ற வீடுகளில் அமர்ந்து, லக்னத்தில் ராகு இருந்து, சந்திரன் பார்க்கவும், அசுப கிரகங்கள் 3, 6, 11 ஆகிய வீடுகளில் இருக்கவும் ராஜயோகங்கள் செயலற்றதாகிவிடுகிறது.
லஞ்ச, ஊழல் மற்றும் மோசடிக்கான யோகங்கள்
ராஜபங்க யோகம், லஞ்ச ஊழல் மற்றும் சிறை செல்லும் யோகம் உள்ள ஜாதக ஆய்வுகள் கீழே 1. அனுகூலமற்ற, அல்லது அசுப கிரகம் 2 அல்லது 11-ல் இருக்க அல்லது பார்க்கவும்.
2. ராசி அல்லது நவாம்சத்தில் 2-ஆம் பாவாதிபதி அல்லது 11 ஆம் பாவாதிபதி அசுப கிரகங்களுடன் இணையவும்.
3. மேற்சொன்ன அதிபதிகள் ராகு- கேதுக்களின் தாக்கத்தில் இருக்கவும்.
4. 3, 6, 8, அல்லது 12-ஆம் பாவ அதிபதி களின் நட்சத்திரங்களில் 2 மற்றும் 11-ஆம் அதிபதிகள் நிற்கவும்.
5. 2 அல்லது 11-ஆம் அதிபதிகள் வக்ர நிலை அல்லது நீச நிலையில் இருக்கவும்.
6. 2 அல்லது 11-ஆம் வீட்டில் வக்கிர அல்லது நீச கிரகம் நிற்கவும்.
7. சனி, சந்திரன் இணைவு அல்லது பார்வை, ராசி அல்லது நவாம்சத்தில் ஏற்பட சாதகர் ஊழல் செய்யும் மனோ நிலைக்கு தள்ளப்பட்டு, மோசடி செய்து மாட்டிக் கொள்வார்.
8. ராசியிலும், நவாம் சத்திலும் ஒரே ராசிகளில் நிழல் கிரகங்கள் இடம்பெறவும்.
சிறை செல்லும் யோகம் தரும் முக்கிய கிரகங்கள்
ஜாதகத்தில் சாதகருக்கு சிறை செல்லும் யோகம் தரும் முக்கிய கிரகங்கள் எது என்பதை பார்ப்போம். இந்த யோகத்திற்கு உரிய கிரகங்கள் ராகு, சனி மற்றும் செவ்வாய் ஆகியவை ஆகும்.
1. ஜாதகத்தில், ராகு சிறை செல்லும் யோகத்திற்கு முக்கிய காரகர் ஆவார். இதன் தாக்கம் ஜாதகரை ஆட்சியாளருக்கு எதிராக கலகம் செய்ய வைக்கிறது அல்லது அவர்கள் மேல் வீண்பழி அல்லது குற்றம் சுமத்தப் படுகிறது.
2. வேத ஜோதிடத்தில் சனி நீதிபதி என்றும் கர்ம காரகன் என்று குறிப்பிடப்படுகிறார்.
சாதகர்தான் முன் செய்த வினைகளுக்கு ஏற்ப தசா, புத்தி காலங்கள், ஏழரைச் சனி காலங்களில் தீய பலன்களை அனுபவிக்கிறார்.
முற்பிறவியில் நற்பலன்கள் செய்திருந்தால், இப்பிறவியில் அவரின் ஆசைகள், அபிலாசை கள் அனைத்தும் நிறைவேறும். வரம்பு மீறிய பெரும் பிழைகள் செய்தவர்கள் ஜாதகத்தில் சிறை செல்லும் யோகம் இருக்கும்.
3. செவ்வாய்- செங்கிரகமான போர் கிரகம் செவ்வாய், இயற்கையில் முரட்டுத்தனமான குணமுடையது. இதன் தாக்கம் ஜாதகரை கோபம் உடையவராகவும், முரட்டுத் தனம் மிக்கவராகவும் ஆக்கிவிடுகிறது. இதன் காரணமாக சிறை செல்லும் யோகத் திற்கு செவ்வாய் வழி வகுக்கிறது. எவ்விதமாக வேனும் இந்த மூன்று கிரகங்களும் தொடர்பு நிச்சயமாக சாதகருக்கு கைகளில் விலங்கு ஏறும் நிலை ஏற்படுகிறது.
சிறை படுதலுக்கான கிரக இணைவுகள்
ஒரு ஜாதகத்தில் சிறை படுதலுக்கான சில முக்கிய இணைவுகள் உள்ளன.
1. கேந்திரத்திலோ அல்லது கோணத்தில் சனி, லக்னாதிபதி அல்லது 6 ஆம் அதிபதி ஆகியோர் ராகு அல்லது கேதுவுடன் இணைவு பெற சிறை யோகம் ஏற்படுகிறது. இந்த மூன்று கிரகங்களின் இணைவு சிறை செல்லும் யோகத்தை குறிகாட்டுகிறது. எனினும், சனியே லக்னாதிபதி ஆக இருந்தால், சிறை செல்லும் யோகத்தால் ஏற்படும் இன்னல்கள் குறைய வாய்ப்புண்டு.
2. இதே இணைவுகள் 2, 12- 3, 11- 4, 10- 5, 9 மற்றும் 6, 12 ஆகிய வீடுகளில் இடம்பெற்றா லும் சாதகருக்கு சிறை செல்லும் யோகம் ஏற்படுகிறது.
3. 2, 5 மற்றும் 12-ஆம் வீடுகளில் அமரும் கிரகங்கள் பந்தன் யோகத்தை குறி காட்டுகிறது. இந்த வீடுகள் மற்றும் அதன் அதிபதிகளுக்கு ஏற்படும் பாதிப்பு சிறை செல்லும் பயத்தை உண்டு பண்ணுகிறது.
4. சாதகர் ஜனித்த நாளன்று லக்னாதிபதி மற்றும் 6-ஆம் அதிபதி மற்றும் சனி ஆகியோர் இணைந்து, கேந்திர, கோணங்களில் இருப்பது பந்தன் யோகம் என்னும் சிறை செல்லும் யோகம் ஏற்படுகிறது.
5. பாதிக்கப்பட்ட லக்னாதிபதி, 6 அல்லது 12-ஆம் அதிபதியால் பார்க்கப்பட்டால் பந்தன் யோகம் ஏற்படுகிறது.
6. ஒரு ஜாதகத்தில் பாதிப்படைந்த லக்னாதிபதி சனி அல்லது செவ்வாய் ஆகி, 9 அல்லது 12-ஆம் வீட்டு அதிபதிகளோடு இணைவுபெற்று, லக்னாதிபதி, கோட்சாரத் தில் 1, 6, அல்லது 12-ஆம் அதிபதிகள்மீது பயணிக்கும் காலங்களில் சிறை யோகம் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
பந்தன யோகத்தின் வகைகள்
சிறை செல்லும் யோகத்தில் பல்வேறு வகைகள் உண்டு. அதற்கான காரணங்கள் வெவ்வேறு வகையானவை. அவற்றை கீழ்காணும் பத்தியில் விவரமாக காணலாம்.
அரி பந்தன் யோகம்
இந்த யோகத்திற்கு குறிகாட்டி சனி ஆவார். இது முன் ஜென்ம எதிர்மறை கர்ம வினைகள் ப்ராப்த கர்மாவால் ஏற்படக் கூடியது. இந்த ஜென்மத்தில் தொடரும் முன் ஜென்ம சாபமே, நமது இந்த பிறவியில் மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களுக்கும், மன அமைதி இன்மைக்கு காரணமாகிறது. இந்த சாபத்தின் காரணமாக ஜாதகத்தில் சிறை செல்லும் யோகத்திற்கான நிலை ஏற்பட்டு, சாதகர் வெகு சுலபமாக எதிரிகளால் தோல்வியை தழுவுகிறார். மேலும், சாதகர் ஏதேனும் நோயால் அவதிப்படுவார் அல்லது உடலால் பாதிப்பு அடைவார். சாதகர் சிறைக்கு செல்லும் யோகம் எப்போதும் அவர் தீயோருடன் கொள்ளும் நட்பால் உருவாகும். இப்படிப்பட்ட சாதகர்கள் பொதுவாக போதைப் பொருள் கடத்தல், மாஃபியா, கொள்ளை அடித்தல், மது மயக் கம், கள்ள உறவு மற்றும் இது போன்ற பாவங் களை செய்து, நண்பர்களுடன் சேர்ந்து மாட்டிக்கொள்வார். அதன் காரணமாக பந்தன் யோகம் பெறுவர்.
வீர் பந்தன் யோகம்
ஜாதகத்தில் வீர் பந்தன் யோகத்திற்கு, செவ்வாய் குறிகாட்டி ஆகிறார். அது போரில் எதிரிகளை வென்று சிறைப்பிடிக்கும் நிலையை உருவாக்கும். போரில் சண்டையிடும் சாதகர்களின் ஜாதகங்களில் இந்த இணைவு தென்படும். சிவில் வார் புரிவோர், தெருச் சண்டை போடுபவர்கள், தீவிரவாதிகள், நக்ஸல் மற்றும் காவல்துறையை எதிர்த்து சண்டை போடும் கலகக்காரர்கள் கூட்டம் ஆகியோர் ஜாதகத்தில் இவ்விணைவுகள் இருக்கும். இந்த சிவப்பு கிரகம் ஜோதிடத் தில் சிறை செல்லும் யோகம் அளிக்கிறது. இவை தவிர, கொலை குற்றவாளிகள், பா-யல் குற்றம் புரிந்தவர்கள், (ஓயிட் காலர்) குற்றங்கள் செய்வோர், சைபர் கிரைம், ஏமாற்றுக் காரர்கள், ரியல் எஸ்டேட் ஏமாற்றுக்காரர்கள், ஆகியோரின் ஜாதகங்களிலும் பந்தன் யோக நிலை ஏற்படுகிறது. இந்த சாதகர்கள் சட்டத் தின் முன் பொதுவாக தைரியசா-யாக நடித்து, பின்னர் பிடிபட்டு, தண்டனை அடைவர்.
நாக பந்தன யோகம்
ஜாதகத்தில் நாக பந்தன யோகத்திற்கு ராகு குறிகாட்டி ஆகிறார். இது முன் ஜென்ம கர்ம வினைகளுக்கு தொடர்பு உடையதாகும். பிறர் மீது பில்-, சூனியம், செய்வினை ஆகியவற்றை போன பிறவியில் ஏவியவர்கள், அதற்கான எதிர்வினை பயன்களை அனுபவிப்பர்.
இந்த நாக பந்தன யோகம் காரணமாக சாதகர் பிறருக்கு நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமா கவோ தொல்லை தருவார். சாதிவெறி, மதவெறி கொண்ட வர்களாக இருப்பர். மாஃபியா ஆவர். போதை மருந்துகள் திருட்டுத் தனமாக விற்பர். நகரங்கள்மீது வெடி குண்டு வீசுபவர், அங்கீகாரமில்லாத சுரங்கம் தோண்டுபவர். கணக்கில் வராத கள்ள பணங்களை வைத்திருப்பவர். இப்படி பட்ட நபர்கள் ஆரம்ப காலத்தில், தவறான முறையில் வாழ ஆரம்பித்து, சட்டத்தை எதிர்த்து தவறான முறைகளில் வளர்ந்து, மிகப்பெரிய சக்தி மிக்க நபராக மாறி விடுகின்றனர். கடைசியில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை சிறைச்சாலையில் அல்லது மறைவிடத்தில் (அண்டர் கிரவுண்ட்) கழிக்க நேர்கிறது.
அகி பந்தன் யோகம்
அகி பந்தன் யோகத்திற்கு கேது குறி காட்டி ஆகிறார். இந்த யோகம் உள்ள சாதகர் விநோதமான அல்லது மாறுபட்ட, கற்பனைக்கு எட்டாதவகையில் உள்ள குற்றங்களை செய்பவராகிறார். கேது, தலையில்லாத வாலை மட்டும் உடைய வராதலால், சாதகர் மூளையற்றவராகி, அவர்களின் பேராசை மற்றும் தவறான செயல்பாடுகளால், முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபடுபவர் ஆகிறார். முடிவாக பந்தன் யோகம் காரணமாக காவல்துறையிடம் பிடிபடுகிறார்.
ஆனால், அவர்கள் செய்த குற்றங்கள் பார்ப்பதற்கு சிறியதாக காணப்பட்டா லும், பெரிய குற்றமாகவே இருக்கும்.
உதாரண ஜாதகம்- 1
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர். ஜெயல-தா அவர்களின் ஜாதகம். 1948 பிப்ரவரி 24 ஆம் நாள், காலை 2.30 மணி, மைசூர் பிறந்தவர் ஆவார். அம்மா அவர்களின் ஜாதகத்தில் ஹம்ச யோகம், மாளவிய யோகம், பாக்ய யோகம், புதன்- ஆதித்ய யோகம், சந்திரன் - மங்கள யோகம் போன்ற பல யோகங்கள் இருந்து அவரை தமிழ்நாட்டின் முதல்வராக ஆக்கியது.
உச்ச சுக்கிரன், ஆட்சி பெற்ற குரு ஆகியோர் கேந்திரங்களில் அமர்ந்து உயர்ந்த ராஜயோகத்தை தந்தது. லாபாதிபதி செவ்வாய், சந்திரனுடன் இணைந்து, 11-ல் உள்ள ராகுவை, குரு பார்க்கவும் அவருக்கு ஆட்சி அதிகாரமும், உயர்ந்த செல்வ நிலையையும் வழங்கியது.
ஆனால், அவர்மீது சுமார் 46 மோசடி புகார்கள், நிலக்கரி இறக்குமதி ஊழல் (70 மில்-யன்), டான்சி ஊழல், கலர் டி.வி. ஊழல் என பல குற்றங்களில் மாட்டிக் கொண்டதோடு, அவரது வியாபார மற்றும் வசிப்பிடங்களில் இருந்து ஊழல் தடுப்பு அதிகாரிகளால் பல பொருட்களும் கையகப்படுத்தப்பட்டன.
2 ஆம் வீட்டில் வக்ர சனி, 11-ஆம் வீட்டில் ராகு, 11-ஆம் அதிபதி செவ்வாய் வக்ர நிலையில் இருப்பது ஆகியவை, ஊழல் செய்வதன்மூலம் அளவற்ற செல்வ நிலைக்கு காரணமாகின. 2-ல் வக்ர சனியும், 5-ல் கேதுவும் இருப்பது சிறை செல்லும் யோகம் பந்தன யோகம் தந்தது. பந்தன யோகத்தில் 5-ஆம் எண்ணில் உள்ள விதிப்படி, லக்னாதிபதி மாந்தியால் பாதிப்பு அடைந்து, 6 அல்லது 12-ஆம் அதிபதி யால் பார்க்கப்படுவதால் சிறை செல்லும் யோகம் ஏற்பட்டது. 6-ஆம் அதிபதி செவ்வாய் லக்னாதி பதி புதனை பார்க்கிறார். இயற்கை சுபர் குரு கேந்திரத்தில் இருப்பதால் அசுபராகி, ராஜ யோக பங்கம் ஏற்படுத்துகிறார். மேலும், புதன் அஸ்தங்கம் ஆகியிருப்பதும் ராஜயோகத் திற்கு பங்கம் விளைவிக்கும். அவர் 21 நாட்கள் சிறை சென்று, 2014 அக்டோபர் 18-ஆம் நாள் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னர் 18 வருட சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்ல வேண்டியதாயிற்று.