12 ராசிகளுக்கும், 27 நட்சத்திரங்களுக்கும், ஒன்பது கிரகங்களுக்கும் என்ன தொடர்பு என்பதை நாம் உணரவேண்டும். மானிடர்கள் ஏன் ராசிகற்களை அணிதல் வேண்டும்? வானில் உலாவரும் கிரகங்களுக்கும் இவற்றுக்கும் என்ன தொடர்பு என்பதனையும் மனதில் நிலைநிறுத்தவேண்டும்.
கற்களிலுள்ள ரசாயண சேர்க்கைகள்- மானிட உடலில் படும்படி அணிவதால் என்ன பயன்- எந்த நோய்க்கு எந்த நவரத்தினம் பொருத்தமானது- எதைத் தேர்ந்தெடுத்தால் அதிர்ஷ்டம் நம்மை நாடிவரும்- எந்த ராசியினர் எதை அணியக்கூடாது- வெள்ளி, தங்கம், செம்போடு எதை இணைத்து அணியவேண்டும்- இப்படியாக பல வினாக்களை உள்ளடக்கியது என்றாலும், சுருக்கமாக தெரியவேண்டியவற்றைப் பார்ப்போம்.
கிரகங்களின் அதிதேவதை, நவரத்தினம்
சூரியன்- சிவன்- மாணிக்கம்.
சந்திரன்- பார்வதி- முத்து.
செவ்வாய்- சுப்பிரமணியன்- பவளம்.
புதன்- விஷ்ணு- பச்சை.
குரு- பிரம்மா, தட்சிணாமூர்த்தி- புஷ்பராகம்.
சுக்கிரன்- லட்சுமி, (இந்திரன்)- வைரம்.
சனி- எமன், சாஸ்தா- நீலம்.
ராகு- காளி, துர்க்கை- கோமேதகம்.
கேது- விநாயகர், சண்டிகேஸ்வரர்- வைடூரியம்.
இனி 12 ராசியினரும் எந்த ராசிக்கல் அணியலாம்- எதை அணிதல் கூடாது என்பதைப் பார்க்கலாம்.
மேஷம்
சுக்கிரன் 2, 7-க்குரியவர். அவர் 2, 7, 12-ல் இருந்தால் மட்டும் சுக்கிர மகாதசையில் வைரம் அணியலாம். மேஷம் செவ்வாயின் சொந்தவீடு. ஜனன மரணத்தைத் தெரிவிப்பது. சனி 10, 11-க்குரியவர். புதன் 3, 6-க்குரியவர். எது மிக ராசியானது என்றால், 1, 5, 9-ஆமிடங்கள் பலம்பெற ரூபி (மாணிக்கம்) அணியலாம். ஆரோக்கியம், கல்வி, குழந்தைகள் நலம், வருங்கால அதிர்ஷ்டங்களைப் பெற்றுத்தரும். சூரிய மகாதசையில் அணிவது மிக உத்தமம். அடுத்து முத்து- 4-ஆம் வீட்டுக்குரிய சந்திரனின் ரத்தினம். இதை அணிந்தால் பெற்ற தாயின் அருள் கிடைக்கப்பெறும். அசையா சொத்து வரும். சந்திர தசையில் அணிவது மிக நன்று. செவ்வாயின் அருளைப்பெற பவளம் (செம்பவளம்)
12 ராசிகளுக்கும், 27 நட்சத்திரங்களுக்கும், ஒன்பது கிரகங்களுக்கும் என்ன தொடர்பு என்பதை நாம் உணரவேண்டும். மானிடர்கள் ஏன் ராசிகற்களை அணிதல் வேண்டும்? வானில் உலாவரும் கிரகங்களுக்கும் இவற்றுக்கும் என்ன தொடர்பு என்பதனையும் மனதில் நிலைநிறுத்தவேண்டும்.
கற்களிலுள்ள ரசாயண சேர்க்கைகள்- மானிட உடலில் படும்படி அணிவதால் என்ன பயன்- எந்த நோய்க்கு எந்த நவரத்தினம் பொருத்தமானது- எதைத் தேர்ந்தெடுத்தால் அதிர்ஷ்டம் நம்மை நாடிவரும்- எந்த ராசியினர் எதை அணியக்கூடாது- வெள்ளி, தங்கம், செம்போடு எதை இணைத்து அணியவேண்டும்- இப்படியாக பல வினாக்களை உள்ளடக்கியது என்றாலும், சுருக்கமாக தெரியவேண்டியவற்றைப் பார்ப்போம்.
கிரகங்களின் அதிதேவதை, நவரத்தினம்
சூரியன்- சிவன்- மாணிக்கம்.
சந்திரன்- பார்வதி- முத்து.
செவ்வாய்- சுப்பிரமணியன்- பவளம்.
புதன்- விஷ்ணு- பச்சை.
குரு- பிரம்மா, தட்சிணாமூர்த்தி- புஷ்பராகம்.
சுக்கிரன்- லட்சுமி, (இந்திரன்)- வைரம்.
சனி- எமன், சாஸ்தா- நீலம்.
ராகு- காளி, துர்க்கை- கோமேதகம்.
கேது- விநாயகர், சண்டிகேஸ்வரர்- வைடூரியம்.
இனி 12 ராசியினரும் எந்த ராசிக்கல் அணியலாம்- எதை அணிதல் கூடாது என்பதைப் பார்க்கலாம்.
மேஷம்
சுக்கிரன் 2, 7-க்குரியவர். அவர் 2, 7, 12-ல் இருந்தால் மட்டும் சுக்கிர மகாதசையில் வைரம் அணியலாம். மேஷம் செவ்வாயின் சொந்தவீடு. ஜனன மரணத்தைத் தெரிவிப்பது. சனி 10, 11-க்குரியவர். புதன் 3, 6-க்குரியவர். எது மிக ராசியானது என்றால், 1, 5, 9-ஆமிடங்கள் பலம்பெற ரூபி (மாணிக்கம்) அணியலாம். ஆரோக்கியம், கல்வி, குழந்தைகள் நலம், வருங்கால அதிர்ஷ்டங்களைப் பெற்றுத்தரும். சூரிய மகாதசையில் அணிவது மிக உத்தமம். அடுத்து முத்து- 4-ஆம் வீட்டுக்குரிய சந்திரனின் ரத்தினம். இதை அணிந்தால் பெற்ற தாயின் அருள் கிடைக்கப்பெறும். அசையா சொத்து வரும். சந்திர தசையில் அணிவது மிக நன்று. செவ்வாயின் அருளைப்பெற பவளம் (செம்பவளம்) அணியலாம். செவ்வாய் தசையில் அணிவது நன்று. புஷ்பராகம் (எல்லோ சபையர்) 9, 12-ஆமிடக் குறைகளை சீர்செய்ய வல்லது. குரு தசையில் அணியலாம். அணியக்கூடாதவை: வைரம் வேண்டாம். இரண்டு, ஏழாமிடத்தை செயல்படவிடாமல் தடுக்கும். சுக்கிர தசையில் அணிவது கூடாது. கருவுற்ற மாதர்கள் அணிவதைத் தவிர்க்கவேண்டும். எமரால்ட், மரகதப் பச்சை, ஜேட், புளூசபையர் (நீலக்கல்) இவற்றையும் நிராகரிப்பது நன்று. மேஷ லக்னத்தாருக்கும் இது பொருந்தும்.
ரிஷபம்
சுக்கிரனின் சொந்த வீடு. சூரியனும் சனியும் பேராதரவு தருவார்கள். குரு, சந்திரன் தீங்கு விளைவிப்பார்கள். புதன் நல்லதே செய்வார். சுக்கிரன் 1, 6-க்குரியவர். உடல்நலத்தில் சிற்றின்பத் தாக்கத்தால் பின்னடைவு வரலாம். வியாபாரம், வீடு போன்றவை லாபம் தரும். ரூபி (மாணிக்கம்) அணியலாம் அசையா சொத்து, பூர்வீக சொத்து, தந்தையின் சொத்தையும் தர முயலும். மாணிக்கக் கல்லை மோதிர விரலில் அணியவும். புளூசபையர் (நீலக்கல்) அணியலாம். வியாபாரம் பெருகும். நீலத்துடன் வைரமும் அணிந்தால் அதிகப்பலன். மரகதப் பச்சை அணியலாம் கல்வி மேம்பாடு, மாணவருக்கு கல்வியில் ஈடுபாடு உண்டாகும். தனியார் துறையில் பணிபுரிவோர் அணியலாம். வைரமும் இணைந்து அணிதல் சிறப் பானது. அணியக்கூடாதவை: முத்தைத் தவிர்க்கவும். வைரத்தை தனியே அணிவதும் கூடாது. சுக்கிலம் சார்ந்த, கருச்சிதைவு போன்றவை வரும். 5-ல் சனி. ராகு- கேது இருந்தால் குறைப் பிரசவம் நிகழும். பவளமும் (கோரல்) வேண்டாம். திருமணத் தடை, மணவாழ்வில் வில்லங்கம் வரும். புஷ்பராகம் தவிர்க்கவும். தனவரவை இல்லாமல் செய்யும். பொதுவில் இவர்களுக்கு இளமைப் பருவத்தைவிட மத்திமம், அதற்குப் பிற்காலம் செழிப்பாகும். சிம்ம ராசியினருடன் கூட்டு வியாபாரம் வேண்டாம். இரண்டாம் வீடான மிதுனத்தில் கேது இருந்தால் காளஹஸ்தி சென்று வணங்கவும். ராசிக்கு 2, 4, 7, 8, 11-ல் பாவகிரகம் இருந் தால் திருமணம் காலதாமதமாகும். வளர்பிறை சதுர்த்தி விரதம் கடைப்பிடிக்கவும். 4-ஆம் வீட்டில் சனியோடு ராகு- கேது, செவ்வாய் காணப்பட்டால் திருப்பதி சென்று சங்கல்பம் எடுத்து வணங்கிவருவது நன்று. ஆயுளும் விருத்தியாகும்.
மிதுனம்
செவ்வாய், குரு, சூரியன் பேராதரவு தருவார்கள். ஜாதகத்தில் சனி, குரு இணைந்து காணப் பட்டால் சுலப நன்மை கிடைக்கும். மரகதப் பச்சை அணியலாம். 1, 4-க்குடைய புதன் தன வரவு, சொத்து சுகத்தைத் தருவார். (ஜீவ ரத்தினம்). நாள் முழுவதுவம் அணிதல் நன்று. வைரம் அணியலாம். ஆசைகள் நிறைவேறும். நீலம் அணியலாம். சனி மகாதசை சிறப்பைத் தரும். சுக்கிரன் திரிகோணமாகிய 5-ஆம் வீடு மற்றும் 12-ஆம் வீட்டின் அதிபதி. சுக்கிரன் சுபகிரகம்; புதனுக்கு நண்பன். சுக்கிர மகாதசை யில் அணிந்து குழந்தைப்பேறு அடையலாம். அணியக்கூடாதவை: மாணிக்கம் வேண்டாம். முத்தும் அணிவது விரும்பத் தகுந்ததல்ல. பவளம் (கோரல்), புஷ்பராகம் அணிவதும் கூடாது. பின் விளைவைத் தரும். சந்திரனுக்கு 7-ஆமிட மான தனுசில் செவ்வாய் இருந்தால் திருமணம் தாமதமாகலாம். தடை கள் அகல பழனிக்கு ஒரு அமாவாசையன்று சென்று இரவு தங்கி, அடுத்தநாள் ஐந்து வசதியற்றோருக்கு அன்னதானம் வழங்கிவர தடைகள் அகலும். 7-ஆமிடமான தனுசில் எந்த கிரகநாதர் களும் இல்லையென்றால் வியாழனன்று அரிசி மாவும், மஞ்சளும் கலந்து ஜாதகக்கட்டம் வரைந்து, பிரம்மபாகத்தில் (நடுபாகம்) சிவப்பு வண்ண மலர்களும், கடகத்தில் வெள்ளை மலர்களும், தனுசு, மீனத்தில் மஞ்சள் மலர்களும் வைத்து வணங்கினால். திருமணத் தடைகள் அகலும்.
கடகம்
இவர்களுக்கு சுக்கிரன், புதன் உதவிக்கரம் தரமாட்டர்கள். குரு, சந்திரன் சாதகமாக செயல்படுவார்கள். கடகம் சந்திரனின் சொந்தவீடு. 2-ஆம் வீடு சூரியனுடையது. 7-ஆம் வீடு சனியினுடையது. நல்ல ராசிக் கல்லாக முத்து அணிதல் நல்லது. ஆயுள் முழுவதும் அணியலாம். மாணிக்கம் அணியலாம்; கண் உபாதை வராது காப்பாற் றும். பணவரவு, அரசியல் லாபம், பெரியோர் நட்பை ஏற்படுத்தும். பவளம (செம்பவளம்) அணிதல் நல்லது. குழந்தைகளின் கல்வி, உத்யோக உயர்வு, அரசு நன்மை சுலபமாகும். பவளம், முத்து இணைந்து அணிதல் சிறப்பு. புஷ்பராகம் (எல்லோ சபையர்) சுமார் இரண்டு கேரட்டிலாவது தங்க மோதிரமாக அணியலாம். பணவரவு, மன அமைதி தரும். சுபநிகழ்வுகளை செம்மையாக்கும். அணியக்கூடாதவை: எமரால்ட் (பச்சை) அணிந்தால் பல பின்னடைவு, பொருளாத ரீதியாக வரும். நீலம் அணிவது கூடாது. 7-க்குடையவர் சனி. எனவே இதனை அணிந்தால் திருமணத் தடை, காதல் விவகாரங்கள் தொல்லைக்கு உட்படும். கடகத்துக்கு 4, 11-ஆம் வீட்டுக்கு அதிபதி சுக்கிரன் சந்திரனுக்கு பகைவர். சுக்கிரன் 1, 4, 11 ஆகிய வீடுகளில் இருந்தால் சுக்கிர மகாதசையில் வைரம் அணியலாம். ஆடி மாதத்தில் பிறந்தோருக்கு திருமணம் காலதாமதமாகலாம். பூர்வபுண்ணிய யோகம் குறைவாகக் காணப்பட்டாலும் 34 வயதையும் கடக்க நேரிடும். அபிராமி அந்தாதியை தினமும் சொல்லி அம்பாளை வணங்கலாம். விருச்சிகம், மீன ராசியினரை வாழ்க்கைத் துணையாக்கலாம். கணவன்- மனைவி உறவை சீர்செய்ய "பெரிடாட்' என்ற ராசிக்கல்லை அணியலாம்.
சிம்மம்
சுக்கிரன் 3, 10 ஆகிய வீடுகளின் அதிபதி. 6, 9, 12-ல் சுக்கிரன் இருந்தால் வைரம் அணிந்து தொழில் முடக்கத்தை சீர்செய்யலாம். சுக்கிரன் 10-ல் இருந்தால். சுக்கிர மகாதசையில் வைரம் அணிந்து நற்பலனைப் பெறலாம். மாணிக்கம் அணியலாம். ராசியாதிபதி சூரியன். எனவே வாழ்நாள் முழுக்க அணியலாம். பவளம், புஷ்பராகம் அணியலாம். குரு அருளால் தடைப்பட்ட கல்வி, உத்யோகத்தடை, பணவரவில் முடை இவையாவும் சீர்செய்யும் வலிமை மிக்கது. அணியக்கூடாதவை: மரகதப் பச்சை, ஜேட் போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும். இருப்பினும் புதன் மகாதசையில் அணிய லாம்.
கன்னி
தனுசு ராசியினரிடம் நெருக்கமாகப் பழக வேண்டாம். தன்வந்திரி பகவானை வணங்கு தல் சிறப்பு. ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய், ராகு இணைந்து கன்னியில் இருந்தால், மூன்று தாரம் அமையுமாம்; கவனம் தேவை. ஆயுள் முழுக்க மரகதப் பச்சை அணியலாம். பணவசதி, மூளைபலம், உயர்கல்வி கிடைக்கப் பெறும். "ஜேடு' என்ற உபகல்லும் அணியலாம். வைரம் அணியலாம். 2, 9-க்குடைய சுக்கிரன் யோகத்தைத் தருவார். தங்க உலோகத்தில் அணிதல் மிக நன்று. புளூ சபையர் அணிந் தால் 5, 6-க்குடையவரின் பலன் பெறலாம். சனி மகாதசையில் அணிதல் சிறப்பு. பலநாள் தொல்லை தொடர்ந்தால் பெண்கள் "ஓப்பல்' அணியலாம். அணியக்கூடாதவை: மாணிக்கம் வேண்டாம். பொருளாதாரத்தடை, காரிய தேக்கம், வீணான முயற்சிகள் தொடரும். சந்திர மகாதசையில் முத்து அணியலாம். பவளம் தவிர்க்கவும்; அமைதி கெடும். புஷ்பராகம் வேண்டாம். உள்ளங்கையில் குரு மேட்டில், சுட்டு விரனுக்கு நேர்கீழ் கரும் புள்ளி காணப்பட்டால் அணியலாம்.
துலாம்
வைரம் அணியலாம். சுக்கிரனின் சொந்த வீடு என்பதால் ஆயுள் முழுக்க அணியலாம். சுகவாழ்வைப் பெற்றுத் தருவார். புதன் 9, 12-க்குரியவர். எனவே மரகதப் பச்சை அணியலாம். நல்ல வருமானம், பணச்செழிப்பு, வியாபார விருத்தி, பணமுடை இல்லாதிருக்க செயல்படும். லக்னத்திற்கு 5-ல் ராகு அல்லது கேது இருந்தால். ஆண்கள் திருமணத் திற்குப்பின் மரகதப் பச்சையைத் தவிர்க்கவும். சந்தான பாக்கியம் தடைப்படும். நீலக்கல் அணியலாம். சனி 4, 5-க்குடையவர். அசையா சொத்து வீடு, வாகனம், தோட்டம் போன்றவை வரும். பொறியியல், தொழில்புரிவோர் அணிதல் மிக நன்று. அணியக்கூடாதவை: மாணிக்கம் வேண்டாம். பல பின்னடைவுகள் தொடர் நிகழ்வாகும். முத்து, சந்திரகாந்தக்கல் வேண்டாம். உறவுகள் பிரியும். வியாபாரம் கெடும். சந்திரன் 6, 12-ல் இருந்தால் சந்திர தசையில் அணியலாம். எமரால்டுடன் இணைந்து அணியலாம். பவளம் வேண்டாம். அரசு உத்யோகத்தில் திடீர் பின்னடைவு வரும். மரதகப்பச்சை தவிர்க்கவும். 3, 8-க்குரியவர்- ஒத்துவராது. மேஷத்தில் செவ்வாய், துலாத்தில் குரு- இருதார அமைப்பாகிவிடும்.
(தொடர்ச்சி அடுத்த இதழில்)
செல்: 93801 73464