னித உடலானது எண்ணற்ற ஆச்சரியங் களை உள்ளடக்கியது. அதன் இயங்கும் சக்தி நம்மால் கற்பனைசெய்து பார்க்கவே முடியாத அளவிற்கு இருக்கிறது.

ஒரு ஆன்மா தனது வாழ்க்கைப் பயணத்தை இந்தப் பிறவியில் அடைந்துள்ள உடல்மூலம் நடத்துகிறது. உடலை, மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்களே இயக்குகிறது.

ஒரு மனிதன் வாழ்வில் நடைபெறும் அனைத்து சுப- அசுபங்களையும் உடலிலுள்ள ஏழு சக்கரங்களே நிர்ணயிக்கின்றன. கிரகங் கள் நேரடியாக மனித உடலை இயக்காது. கிரகங்களின் கதிர்வீச்சுகள் மனித உடலிலுள்ள ஏழு சக்கரங்களை சென்றடையும். அது அவர்கள் உடலையும் ஆன்மாவையும் இயக்கும். மனித உயிரை ஏழு சக்கரங்கள்தான் தாங்கிப் பிடிக்கின்றன.

சக்கரம் என்றால் வட்டம் என்று பொருள் தரக்கூடியது. இது சமஸ்கிருத மொழியில் இருந்து தோன்றிய வார்த்தையாகும். இது உடலுக்குத் தேவையான ஆற்றல் என்று பொருள்படுகிறது. இந்த ஏழு சக்கரங்கள் நமது உடலுக்குத் தேவையான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய மையமாகத் திகழ்கின் றது. இது நமது உணர்வுகளைக் கட்டுப்படுத் தக் கூடியதாகவும் இயங்குகிறது.

Advertisment

மனோதத்துவப் பயிற்சியை மேற் கொள்வது, யோகா, தியானங்களில் ஈடுபடுவதன்மூலமும், இந்த சக்கரங்களின் பீஜ மந்திரங்களை குறிப்பிட்ட எண்ணிக்கை யில் உச்சரிக்கும்போது இந்த சக்கரங்களைக் கண்காணிக்க முடியும்.

ஒவ்வொரு சக்கரத்திற்கும் சில உடல் பாகங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக் கிறது. அந்த உடல் பாகங்களின் இயங்கியல் மற்றும் ஆரோக்கியத்திற்கு இந்த சக்கரங்களின் சுழற்சி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். நாம் தொடர்ந்து மனோதத்துவப் பயிற்சியை மேற்கொள்ளும்போது உடல், மனம் மற்றும் வாழ்க்கை வளர்ச்சியில் நல்ல முன்னேற் றம் ஏற்படும். தியானம்மூலம் கீழிருந்து ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்துவிட்டால், மறுபிறப்பு இல்லை. மகான்கள் ஜீவசமாதி அடைவது இவ்வாறே. தியானத்தின்மூலம் ஒருவன் சப்த சக்கரத்தினைத் தனது மனோ வலிமையால் கட்டுப்படுத்திவிட்டால் அவனை கிரகங்களால் பாதிக்கமுடியாது.

நம் உடலை இயக்குகிற ஏழு சக்கரங்கள் என்னென்ன? அவை ஒவ்வொன்றும் என்ன செய்யும் என்பதைப் பார்க்கலாம்.

Advertisment

மூலாதார சக்கரம்

மூலாதாரத்தின் கிரகம் சனி. நமது உடலில் முதுகெலும்பின் அடிப்பாகத்தில், ஆசனவாயின் அருகே அமைந்துள்ள இந்த சக்கரம் தான் உடல் சக்தியின் இருப்பிடம். நான்கு இதழ் தாமரைபோல் சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த சக்கரம்தான் மனித உடலையும் மனதை யும் உயிரையும் இந்த பூமியுடன் இணைக்கக்கூடிய சக்தியைப் பெற்றிருக்கிறது. உடல், உயிர் இயக்கத்துக்கு இது மூலகாரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது. பூமியிலிருந்து ஆற்றலைப் பெற்று உடலுக்கு அனுப்பகூடியதாக இந்த சக்கரம் பயன்படுகிறது. உயிர் வாழ்வதற்கான மகத்தான பணியினை இது செய்வதனால் தான் தியானத்தில் இது முக்கியமான பங்கு வகிக்கிறது.

உயிர்வாழவேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இதில்தான் உற்பத்தியாகும். சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, முதுகுக்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக் கிறது. இந்த சக்கரம் தொழில், பணம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

பரிகாரம்: சனிக்கிழமை உண்ணாவிரதம், மௌனவிரதம் இருந்தால் மனதில், உடலில் ஆன்மாவிலுள்ள கழிவுகள் நீங்கும்.

"லம்' என்ற பீஜ மந்திரத்தைக் கூறவேண்டும்.

dd

சுண்டைக்காய் சாதம் சாப்பிடலாம்

ஸ்வாதிஷ்டானம் இரண்டாவது சக்கரம். இதன் கிரகம் குரு. இந்த சக்கரமானது பிறப்புறுப்புக்கு சற்று மேலே, தொப்புளுக்கு சற்று கீழே அமைந் துள்ளது. நாபி என்றும் இதற்கு மற்றொரு பெயருண்டு.

மனித உணர்வுகளைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இது பாலியல் உணர்வு களைத் தூண்டும் சக்கரம். ஆறு இதழ் தாமரைபோல் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. "ஈகோ'வுக்கும் இந்த சக்கரம்தான் காரணமாக இருக்கிறது.

மற்றவர்களின் உணர்வுகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத் துக்கு உண்டு. ஐம்புலன்களை அடக்கி அறிகின்ற சக்தியும் இதற்குண்டு. உற்பத்தி உறுப்புகள், கால்கள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. ஸ்வாதிஷ்டானத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தால் இன்பங்கள் பின் தொடரும். இதில் குறைபாடு இருந்தால் துன்பங்கள் தொடரும். அதனால்தான் "மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கத் தேவையில்லை' என்று கூறுகிறார்கள் பரிகாரம்: ஜென்ம நட்சத்திர வழிபாடு மிகவும் அவசியம். புனித நதிகளில் உடலும், உள்ளமும் குளிரும் வகையில் நீராடவேண்டும்.

"வம்' என்ற பீஜ மந்திரத்தைக் கூறவேண்டும்.

மணிப் பூரகம்

இது உடலின் மூன்றாவது சக்கரம். இதன் கிரகம் செவ்வாய். இதன் கிரகம் குரு என்றும் ஒரு மாற்றுக்கருத்து உள்ளது. இதன் நிறம் மஞ்சள். இதன் ஆற்றல் நெருப்பு. தொப்புளுக்கு சற்று மேலே பத்து இதழ் தாமரை அமைப்பில் மஞ்சள் நிறத்தில் அமைந் துள்ளது. உடலின் மையமாக இதனைக் கருதலாம். இந்தப் பகுதியில் இருந்துதான் இயக்க சக்தி உடலெங்கும் செல்கிறது. கட்டுக் கடங்காத உணர்ச்சியும் இங்குதான் உற்பத்தி யாகிறது. அதனால்தான் அதிர்ச்சியோ பய உணர்ச்சியோ ஏற்படுகின்றபோது இந்தப் பகுதியிலுள்ள தசைகள் இருக்கமடைந்து விடுகின்றன. கணையம் என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்படு கிறது. மண்ணீரல், இரைப்பை, கல்லீரல், பித்தப்பை ஆகியவை இதன் கட்டுப்பாட்டில் தான் செயல்படுகின்றன. நமது சுய ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் வெற்றியினை ஊக்குவிக்கக்கூடிய சக்கரமாக இயங்குகிறது. இந்த சக்கரத்தை சமநிலைப்படுத்தினால் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை மாதுளைச் சாறு அருந்தவேண்டும்.

கருங்காலியால் செய்யபட்ட வேல் வைத்து வழிபாடு செய்யலாம்.

"ரம்' என்ற பீஜ மந்திரத்தைக் கூறவேண்டும்.

அனாஹதம்

இது உடலின் நான்காவது சக்கரம். இதன் கிரகம் சுக்கிரன். இதற்கு இதயச் சக்கரம் என்ற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில் இதயம் உள்ள பகுதியில் பன்னிரண்டு இதழ் தாமரை அமைப்பில் பச்சை நிறத்தில் இருக்கிறது. அன்பு, பாசம், இரக்கம், சகோதரத்துவம், விசுவாசம், பக்தி ஆகிய அனைத்து நல்லியல் புகளின் இருப்பிடமாகத் திகழ்கிறது. தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இதயம், நுரையீரல், ரத்த ஓட்டம் ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன. மனதிற்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. திருமணத்தடை, காதல் பிரச்சினை, கணவன்- மனைவி ஒற்றுமைக் குறைவு, சுகபோக வாழ்க்கை கிடைக்காமல் போவது போன்றவற்றிற்கு இந்த சக்கரமே காரணம். இதை அளவிற்கு அதிகமாகத் தூண்டவும் கூடாது. நுண்ணுணர்வை நமக்குத் தரும் ஆற்றலை இந்த சக்கரம் பெற்றிருக்கிறது. சரியான விகிதத் தில் இயக்கினால் வாழ்க்கை வளமாகும்.

பரிகாரம்: நெல்லிக்காய் சாறு, பன்னீர் குழைத்து நெற்றியில் திலகமிடவேண்டும்.

உணவில் தினமும் நெல்லிக்காய் சேர்ப்பது நல்லது.

"யம்' என்ற பீஜ மந்திரத்தைக் கூறவேண்டும்.

​விசுக்தி

​மனித உடலிலுள்ள ஐந்தாவது சக்கரம் விசுக்தி. இதன் கிரகம் புதன். இது பதினாறு இதழ்கள் கொண்ட தாமரையாக நீலநிறத்தில் இருக்கிறது. மனிதனின் தொண்டைப் பகுதியில் அமைந்திருக்கிறது. இதற்கு குரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத் துக்கு உட்பட்டவை. நம்முடைய புலன்களுக்கு அப்பால் அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான் அறிகிறோம்.

உங்களைப்பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவும் வகையிலான பயன்பாட்டை இந்த சக்கரம் செய்கிறது. அதாவது உங்களது பேச்சுத்திறனைக் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. தைராய்டு சுரப்பி இதன் கட்டுப் பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

பரிகாரம்: திருவாதிரை நட்சத்திர நாட்களில் நடராஜர் வழிபாடு செய்வது சிறப்பு.

இசைக்கருவிகள் வைத்து வழிபடுவது மிகச்சிறப்பு.

"ஹம்' என்ற பீஜ மந்திரத்தைக் கூறவேண்டும்.

ஆக்ஞா

மனித உடலின் ஆறாவது சக்கரம் ஆக்ஞா. இதன் கிரகம் சூரியன், சந்திரன். இதன் நிறம் கருநீலம். முப்பத்திரண்டு இதழ் தாமரை சின்னத்தில் அமைந்திருக்கிறது. இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக அமைந்திருக்கிறது. உள்ளுணர்வை உணர்த்தும் சக்கரம்.

தொலைவுணர்தல் (டெலிபதி), தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன்மூலமாகத் தான் கிடைக்கின்றன. அறிவு, சங்கல்பம், மனவலிமை ஆகியவற்றின் இருப்பிடம் இது. இதன்மூலம்தான் விஷயங்களை உருவகப்படுத்திப் பார்க்கமுடிகிறது. இந்தக் கண் திறக்கின்றபோது ஆன்மிகக் கண் திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள். பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்ப்பகுதி, கண்கள், மூக்கு, காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை. உங்களைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் அறிந்துகொள்வதற்கு இந்த சக்கரம் பயன்படுகிறது.

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

வளர்பிறைக் காலங்களில் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும்.

"ஓம்' என்ற பீஜ மந்திரத்தைக் கூறவேண்டும்.

​சகஸ்ரஹாரம்

ஏழாவது சக்கரமான இது இருப்பதிலேயே மிக வலிமையான சக்கரமாகும். இதன் கிரகம் ராகு- கேது. உடலில் சூட்சும வடிவில் இயங்கக்கூடியது. இது உச்சந்தலைப் பகுதியில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் அமைந்திருக்கிறது. இந்தச் சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப் பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும், நமக்குமுள்ள தொடர்பினைத் தெளிவுபடுத்துகின்ற சக்கரம் இது. என்ன நடக்கப்போகிறது என அல்லது எதைச்செய்ய வேண்டுமென்று முன்கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான் கிடைக்கிறது. பீனியல் சுரப்பி இதன்கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல்பகுதி இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது. இது சூட்சும சக்தி கொண்டதால் சாதாரண மனிதர்களால் கட்டுப்படுத்தக் கூடியதாக இந்த சக்கரம் இருப்பதில்லை. உடலுக்குத் தேவையான ஆற்றலை பிரபஞ்சத்திடம் பெற்றுத்தரக் கூடியதாகவும் இருக்கிறது.

பரிகாரம்: ஆழ்நிலை தியானம், மூச்சுப் பயிற்சியால் மட்டுமே இதை வசப்படுத்த முடியும்.

"அஉம்' என்ற பீஜ மந்திரத்தைக் கூறவேண்டும்.

சமஸ்கிருதத்தில் "பீஜா' என்றால் "விதை.' மந்திரம் என்பது நம் மனதைப் பிணைக்கும் கருவியாகும். யோகாவிலுள்ள பல வகையான மந்திரங்களில், பீஜ மந்திரம் அனைத்து மந்திரங்களின் சாராம்சமாகும். இது அவர்களுக்கு சிறப்பு சக்தியை வழங்குகிறது. இது "விதை மந்திரங்கள்' என்றும் அழைக்கப் படுகின்றன.

மந்திரங்களை உச்சரிப்பது உங்கள் சக்கரத்தின் ஆற்றல்களை சமநிலைப் படுத்தவும், ஆரோக்கியமான மனம், உடல் மற்றும் ஆன்மாவை மேம்படுத்தவும் உதவும். குறிப்பிட்ட சக்கர மந்திரங்களை உச்சரிக்கும்போது, ​​அவற்றின் அதிர்வுகள் அந்த குறிப்பிட்ட சக்கரத்துடன் கலந்து கிரகங்களின் தாக்கத்திலிருந்து விடுவிக்கின்றன. ஒவ்வொரு பீஜ மந்திரமும் சக்திவாய்ந்த மற்றும் தீவிரமான அதிர்வுகளைக் கொண்டுள்ளது. அவற்றின் பின்னால் ஒரு தனித்துவமான அர்த்தம் உள்ளது. அவற்றைத் தனியாக அல்லது நீண்ட மந்திரத்துடன் இணைத்து உச்சரிக்கும்போது உயர்வான நிலையை அடையமுடியும்.

செல்: 98652 20406