நம் மானிட வாழ்வின் தன்மையே நம்பிக்கையின் அடிப்படையில்தான் வலுவாக உள்ளது. இதற்குப் பல்வேறு சாஸ்திரங்கள் உறுதுணை புரிகின்றன. அவற்றை நம்புகிறவர்களுக்கு முழுப்பலனைத் தருகிறது.
ஜோதிடம் நேற்றைய கண்டுபிடிப்பல்ல. பல வித்தகர்கள் தங்கள் வாழ்வோடு இணைத்து நற்பலன் பெற்று நமக்கு வழிகாட்டியுள்ளனர். நமது இந்து சாஸ்திரத்தில் பரிகாரம் நிச்சயம் பலன் தருமென உணர்த்தப்படுகிறது. நாம் பிறந்த நேரம், மாதம், வருடம், நாட்களுக்கு ஏற்பவே கிரக நாதர்கள் ஜாதகத்தை அழகு செய்கிறார்கள். அவர்கள் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் அற்புதப் பலனை அள்ளி அள்ளித் தருவார்கள். அதில் மாறுபட்டால் கடவுளர்களையும் கிரக நாதர்களையும் முறையோடு வணங்கவேண்டும்.
ஆலயங்களுக்குச் சென்று பரிகாரம், பூஜை போன்றவற்றை நிறைவேற்ற இயலாத சூழ்நிலையில், அவர்களுக்குரிய சுலபப் பரிகாரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன. உங்கள் ஜாதகத் தைப் பார்த்து, கிரகங்கள் அமர்ந்திருக்கும் நிலைக்கேற்ப பரிகரங்களைச் செய்யலாம்.
சூரியன்
ஞாயிற்றுக்கிழமை ஒருபொழுது உபவாசம் நன்று. கோதுமை, இனிப்பு, செம்பு உலோகம் தானம் சிறப்பு தரும். நன்னடத்தை கடைப்பிடிப்பது நன்று. ரூபி ராசிக்கல் (மாணிக்கம்) அணிதல் நன்று. நான்கு செம்பு வளையம் (நாணயம்) திருஷ்டி சுற்றி ஓடும் நீரில் போடவேண்டும். கள்ளக்கடத்தல் வியாபாரம் கூடாது. அரசு கடைநிலை ஊழியர்களுக்கு இயன்ற உதவிபுரிதல் நன்று. காலையில் சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும். தந்தையை மனம் வருந்தச் செய்தல் கூடாது.
உங்கள் ஜாதகத்தில் சூரியன் 6-ல் இருந்தால், பொதுநலம் கருதி தண்ணீர் கொடுப்பது நன்று. ஐந்து வாட்டர் கேன் மருத்துவமனைக்கு தானம் தருதல் நன்று. சூரியன் 7-ல் இருந்தால் 24 வயதில் திருமணம் கூடாது. பால் வியாபாரம் கூடாது. பாலை கருகச் செய்தல் கூடாது. பால்கோவா செய்தல் வேண்டாம்.
சூரியன் 10-ல் இருந்தால் நீலம், கருப்பு நிற ஆடைகளைத் தவிர்க்கவும். ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்தல் கூடாது. எட்டு ஓட்டைக்காலணா அல்லது செம்பு வாஷர் திருஷ்டி சுற்றி நீரில் போடவும்.
சந்திரன்
திங்கள் ஒருபொழுது உபவாசம் நன்று. சிவாலயம் சென்று வணங்கவேண்டும். அரிசி, வெள்ளி உலோகம் தானம் நன்று. பெற்றதாய், பாட்டி ஆசிர்வாதம் அதிகப் பலன்தரும். கங்கை நீர்க் கலந்த நீர் குளியல் நன்று. வீட்டில் வாட்டர் டாங்க். (தண்ணீர்த் தொட்டி) இருந்தால் மூன்று அ
நம் மானிட வாழ்வின் தன்மையே நம்பிக்கையின் அடிப்படையில்தான் வலுவாக உள்ளது. இதற்குப் பல்வேறு சாஸ்திரங்கள் உறுதுணை புரிகின்றன. அவற்றை நம்புகிறவர்களுக்கு முழுப்பலனைத் தருகிறது.
ஜோதிடம் நேற்றைய கண்டுபிடிப்பல்ல. பல வித்தகர்கள் தங்கள் வாழ்வோடு இணைத்து நற்பலன் பெற்று நமக்கு வழிகாட்டியுள்ளனர். நமது இந்து சாஸ்திரத்தில் பரிகாரம் நிச்சயம் பலன் தருமென உணர்த்தப்படுகிறது. நாம் பிறந்த நேரம், மாதம், வருடம், நாட்களுக்கு ஏற்பவே கிரக நாதர்கள் ஜாதகத்தை அழகு செய்கிறார்கள். அவர்கள் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் அற்புதப் பலனை அள்ளி அள்ளித் தருவார்கள். அதில் மாறுபட்டால் கடவுளர்களையும் கிரக நாதர்களையும் முறையோடு வணங்கவேண்டும்.
ஆலயங்களுக்குச் சென்று பரிகாரம், பூஜை போன்றவற்றை நிறைவேற்ற இயலாத சூழ்நிலையில், அவர்களுக்குரிய சுலபப் பரிகாரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன. உங்கள் ஜாதகத் தைப் பார்த்து, கிரகங்கள் அமர்ந்திருக்கும் நிலைக்கேற்ப பரிகரங்களைச் செய்யலாம்.
சூரியன்
ஞாயிற்றுக்கிழமை ஒருபொழுது உபவாசம் நன்று. கோதுமை, இனிப்பு, செம்பு உலோகம் தானம் சிறப்பு தரும். நன்னடத்தை கடைப்பிடிப்பது நன்று. ரூபி ராசிக்கல் (மாணிக்கம்) அணிதல் நன்று. நான்கு செம்பு வளையம் (நாணயம்) திருஷ்டி சுற்றி ஓடும் நீரில் போடவேண்டும். கள்ளக்கடத்தல் வியாபாரம் கூடாது. அரசு கடைநிலை ஊழியர்களுக்கு இயன்ற உதவிபுரிதல் நன்று. காலையில் சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும். தந்தையை மனம் வருந்தச் செய்தல் கூடாது.
உங்கள் ஜாதகத்தில் சூரியன் 6-ல் இருந்தால், பொதுநலம் கருதி தண்ணீர் கொடுப்பது நன்று. ஐந்து வாட்டர் கேன் மருத்துவமனைக்கு தானம் தருதல் நன்று. சூரியன் 7-ல் இருந்தால் 24 வயதில் திருமணம் கூடாது. பால் வியாபாரம் கூடாது. பாலை கருகச் செய்தல் கூடாது. பால்கோவா செய்தல் வேண்டாம்.
சூரியன் 10-ல் இருந்தால் நீலம், கருப்பு நிற ஆடைகளைத் தவிர்க்கவும். ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்தல் கூடாது. எட்டு ஓட்டைக்காலணா அல்லது செம்பு வாஷர் திருஷ்டி சுற்றி நீரில் போடவும்.
சந்திரன்
திங்கள் ஒருபொழுது உபவாசம் நன்று. சிவாலயம் சென்று வணங்கவேண்டும். அரிசி, வெள்ளி உலோகம் தானம் நன்று. பெற்றதாய், பாட்டி ஆசிர்வாதம் அதிகப் பலன்தரும். கங்கை நீர்க் கலந்த நீர் குளியல் நன்று. வீட்டில் வாட்டர் டாங்க். (தண்ணீர்த் தொட்டி) இருந்தால் மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்யவேண்டும். வீட்டினுள் கிணறு அல்லது கை அடி பம்ப் இருப்பது கூடாது. வளர்பிறைச் சந்திரன் 3, 6, 9, 12-ஆம் நாட்களில் பார்வதியை வணங்கவும்.
லக்னத்திற்கு 6-ல் சந்திரன் இருந்தால் இரவில் பால் சாப்பிடக்கூடாது. தந்தைக்குப் பால் தருதல் நன்று. பொதுமக்களுக்கு பால் தானமாக்கலாம். 8-ல் சந்திரன் இருந்தால் நகைக்கடை கூடாது. கிணற்றை மூடி வீடு கட்டக் கூடாது. கூடாநட்பு, ஏமாற்றுவது கூடாது. ஆலயத்திற்குப் பருப்பு தருதல் நல்லது.
லக்னத்திற்கு 10-ல் சந்திரன் இருந்தால் 16 -ட்டர் மழைநீரை வீட்டில் இருக்கச் செய்தல் நன்று. அண்ணன்- தம்பியிடமிருந்து பழைய பாத்திரங்களைப் பெறுவது கூடாது.
லக்னத்திற்கு 11-ல் சந்திரன் இருந்தால் கட்டடம் கட்டப் பொருள் வாங்க சனிக்கிழமை நல்லது. இனிப்பை திருஷ்டி சுற்றி நீரில் போடவும்.
லக்னத்திற்கு 12-ல் சந்திரன் இருந்தால் காதில் தங்கத்தில் வளையம் அணியலாம். முத்து மோதிரம் வெள்ளியில் அணிதல் நன்று.
செவ்வாய்
செவ்வாய்க்கிழமை ஒருபொழுது விரதமிருந்து சிவனை வணங்கவும். பால், பச்சரிசி, வெள்ளி உலோகம் தானம் தரலாம். அம்மா, பாட்டி, அப்பாவின் தங்கை, இவர்களை நாடி ஆசிர்வாதம் பெறுவது நன்று. சிவப்பு முக அனுமனை வணங்கவும். அண்ணன்- தம்பிக்கு ஆதரவு தருதல், வெள்ளிப் பாத்திரத்தில் தண்ணீர், பால் அருந்தல் வேண்டும். திருச்செந்தூர் முருகனுக்கு சங்கல்பம் நல்லது.
அறுபடை வீடுகளுக்குப் போதல் வேண்டும்.
உங்கள் ஜாதகத்தில் 4-ல் செவ்வாய் இருந்தால் பாதாம் பருப்புப் பொடியை வைத்துப் பல் துலக்கலாம். ஆலமர வேரில் பால், சர்க்கரை கலந்து ஊற்றி, வேர் மண்ணைக் கிளறி திலகம் வைக்கலாம். சின்ன சமச்சதுர தங்க மோதிரம் அணியலாம். 8-ல் செவ்வாய் இருந்தால் தம்பிக்கு ஆகாது. (பகையுணர்வு வரும்) வீட்டின் கடைசி பாகத்தில் இருட்டறை இருப்பது நல்லது. விதவைகளுக்கு இயன்ற உதவிபுரியலாம். சமைக்குமிடத்தில் செவ்வாய்க்கிழமை உணவருந்தல் நன்று.
புதன்
புதன்கிழமை ஒருபொழுது உபவாசம் நன்று. புதன்கிழமை பச்சைநிறப் பொருளை திருஷ்டி சுற்றி நீரில் போடலாம். ஓட்டை காலணாவை திருஷ்டி சுற்றி ஓடும் நீரில் போடவும். ஆண்கள் பெல்ட் அணியவேண்டும். பச்சை நிற ஆடை தானம் நல்ல பரிகாரம். பெற்ற மகள், அம்மாவின் தங்கை, அப்பாவின் தங்கை, மனைவியின் தங்கைக்கு சன்மானம், பொருளுதவி செய்தல் நல்லது. கையில் எமரால்ட் மோதிரம் (மரகதப் பச்சை) அணிதல் நன்று.
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திற்கு 3-ல் புதன் இருந்தால் துர்க்கையை வணங்கலாம். ஆஸ்துமா நோய் உள்ளவருக்கு உதவலாம். பச்சைப் பயறை நீரில் ஊறவைத்து காலையில் பசுவுக்குக் கொடுக்கலாம். 8-ல் புதன் இருந்தால் கருப்புநிற உள்ளாடைகள் புதன்கிழமை அணியலாம். அடிக்கடி பூஜையறை மாற்றம் கூடாது. மகள் செந்நிற ஆடை அணிதல் கூடாது. செம்புக் கிண்ணியில் பச்சைப் பயறு நிரப்பி திருஷ்டி சுற்றி நீரில் போடவும். 9-ல் புதன் இருந்தால் பாதாம் பொடியால் பல் துலக்கல் நல்லது. 12-ல் புதன் இருந்தால் ஒரு மண் குடுவை வாங்கி, மேற்கு நோக்கி நின்று திருஷ்டி சுற்றி நீரில் போடவும். வெள்ளிக்காப்பு இடது கையில் அணிதல் நல்லது.
குரு
வியாழக்கிழமை ஒருபொழுது விரதம் கடைப்பிடிக்கவும். அரச மரத்துக்குத் தண்ணீர் பாய்ச்சவும். டோபாஸ் ராசிக்கல் அணியலாம். வெள்ளிக் கிண்ணத்தில் குங்குமப் பூவை தண்ணீரில் கலந்து திலகம் இடவும். பிராமணர்கள் மற்றும் சாதுக்களுக்கு இயன்ற உதவிபுரியலாம். மஞ்சள் நிறப் பூப்பூக்கும் செடி வளர்க்கலாம். குரு பகவானை ஆலயம் சென்று மஞ்சள் நிறப் பூவால் வணங்கலாம். கோவி-ல் வடகிழக்குப் பகுதியை சுத்தம் செய்யலாம்.
குரு லக்னத்தில் இருந்தால் எவரிடமும் இலவசமாக எதையும் பெறக்கூடாது. குரு இரண்டில்- பானையில் நீர் வடகிழக்கில் வைக்கவும். குரு மூன்றில்- துர்க்கையை வணங்கவும். குரு நான்கில்- உள்ளாடைகளை சிவப்பு வண்ணத்தில் அணியவும். குரு ஐந்தில்- ஆலயத்தில் பிரசாதம் வாங்கக்கூடாது. குரு ஆறில்- சேவலுக்கு தானியம் தரலாம். குரு ஏழில்- துளசி மாலை அணிதல் கூடாது. குரு எட்டில்- தானம் கேட்போருக்கு மறுப்பது கூடாது. குரு ஒன்பதில்- ஆலயங்களுக்கு இயன்ற உதவிசெய்யும். குரு பத்தில்- மூக்கை சுத்தமாக வைத்தல் வேண்டும். குரு பதினொன் றில்- மஞ்சள் நிற கைக்குட்டை வைப்பது நன்று. குரு பன்னிரண்டில்- பொய்சாட்சி கூறக் கூடாது.
குரு 6-ல் இருந்தால் தங்கையின் குழந்தை கள், மகளின் குழந்தைகளுக்குரிய மரியாதை தரவேண்டும். தந்தையோடு வாழ வேண்டும்.
குரு 7-ல் இருந்தால் மனைவியின், சொல்படி நடக்க நேரிடும். வீட்டினுள் கோவில் கூடாது. பெண்கள் துறவிகளை வணங்குவது கூடாது. ஆண்கள் பிற மாதர்மேல் மையல் கொள்ளல் கூடாது.
குரு 10-ல், சந்திரன் 4-ல் இருந்தால் பிறந்தநாளில் பச்சரிசியை ஓடும் நீரில் போடவும்.
குரு 10-ல், சனி 2-ல் இருந்தால் பாதாம் பருப்பை ஆலயத்திற்குத் தருதல் வேண்டும். வீட்டில் கோவில் இருந்தால் அதனை வணங்குதல் கூடாது. எந்தப் புது வேலை ஆரம்பிக்கும்முன் மூக்கை சுத்தமாக வைத்தல்வேண்டும். புலால் உணவு தவிர்க்கவேண்டும். பிறர் கேட்காமல் ஆலோசனைகள் கூறக் கூடாது.
சுக்கிரன்
வெள்ளிக்கிழமை ஒருபொழுது நோன்பு இருத்தல் நன்று. நெய், தயிர், கற்பூரம் ஆலயத்திற்குக் கொடுக்கவும். முத்து, அமெரிக்கன் டைமண்ட், வைரம் அணியலாம். வெள்ளிக்கிழமை வாசனை திரவியம் உபயோகிக்கவேண்டும். கிழிந்த, சலவை செய்யாத ஆடை உடுத்து தல் கூடாது. தீயில் கருகிய ஆடை வேண்டாம். வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் பால்கோவா, லஸ்-, தயிர்சாதம் உண்ணவும். நவகிரகத்தில் சுக்கிரனை வெண்மைநிற மலர்களால் வணங்கவும்.
உங்கள் ஜாதகத்தில் 1-ல் சுக்கிரன் இருந்தால் இருபத்தைந்து வயதில் திருமணம் கூடாது. 25 வயதிற்கு முன் நல்லது. சர்க்கரை, இனிப்பைக் குறைக்கவும். பக-ல் உடலுறவு வேண்டாம். தயிர் கலந்த நீரில் குளிக்கவும். கருப்புநிறப் பசுவுக்குப் புல் கொடுக்கவும். 6-ல் சுக்கிரன் இருந்தால் சிறு வெள்ளி உலோக உருண்டை எப்போதும் பாக்கெட்டில் வைக்கவும். 8-ல் சுக்கிரன் இருந்தால் டர்குவிஸ் மோதிரம் அணியவும். 9-ல் சுக்கிரன் இருந்தால் வெள்ளைப் பசுவுக்கு புல் தருதல் வேண்டாம்; கருப்பு, சிவப்பு நிறப் பசுவுக்குக் கொடுக்கவும். தோட்டத்தில் வெள்ளிக் குடுவையில் தேனை நிரப்பி, மேற்கு பாக மண்ணில் மூடிவைக்கவும்.
சனி
சனிக்கிழமை ஒருபொழுது விரதம் நன்று. நாகத்திற்குப் பால் ஊற்றலாம். நல்லெண்ணெய், வாசனைப் பொருள் தானம் நன்று. கருப்புப் பசு, கருப்பு நாய்க்கு கருப்பு நிற உணவு, தானியம் தருதல் நன்று. உளுந்தையும் கருப்பட்டியையும் கலந்து களிசெய்து வாழையிலையில் வைத்துப் பசுவுக்குத் தருதல் நன்று. மண்ணெண்ணெய் ஸ்டவ் இல்லாதவர்க்கு தானமாகத் தரலாம். 1-ல் சனி இருந்தால் அரசமர வேரில் பால், சர்க்கரை கலந்தூற்றி, மண்ணைக் கிளறி திலகம் வைக்கவும். பொய், பொறாமை கூடாது. சாதுக்களுக்கு கருப்புப் பொருள் தானம் செய்யவும். உடம்பில் அதிக ரோமம் இருப்பது வறுமையின் அறிகுறி. 4-ல் சனி இருந்தால் கிணற்றில் பச்சைப் பால் ஊற்றலாம். எருமை, கருப்புப் பசுவை, இல்லாதோருக்கு தானம் செய்யலாம். கருப்பு, பச்சை வண்ண ஆடைகளைத் தவிர்கவும். 5-ல் சனி இருந்தால் 48 வயதிற்குமுன் சொந்த வீடு கட்டுவது கூடாது. பிறந்தநாளில் காரப் பலகாரம் வழங்கவும். சனி 5-ல் இருந்தால் ஒரு துண்டு செம்பு, ஒரு துண்டு தங்கம், ஒரு துண்டு வெள்ளியை முடிச்சிட்டு பூஜையறையில் வைக்கவும். பூர்வீக வீட்டில், கருப்பு உளுந்தில் ஒரு துண்டு இரும்பை வைத்து இருட்டான இடத்தில் வைக்கவும். 6-ல் சனி இருந்தால், நோய்வாய்ப்பட்டால் இரும்புப் பாத்திரத்தில் நல்லெண்ணெய் நிரப்பி முகம் பார்த்து வாஷ்பேசினில் ஊற்றவும். தேங்காயையும் பாதாம் பருப்பையும் திருஷ்டி சுற்றி நீரில் போடவும். வியாபார உத்தியை வளர்பிறை இரவில் செய்யவும். ஷூ தானம் நன்று.
ராகு
சரஸ்வதியை வணங்கவேண்டும். மின் உபகரணங்கள் இலவசமாகப் பெறக்கூடாது. கன்யாதானத்திற்கு உதவுங்கள். கோமேதக ராசிக்கல் அணியலாம். கூட்டுக் குடும்பத்தில்தான் வாழவேண்டும். வாசனைப் பொருட்கள் உபயோகிக்க வேண்டாம்.
1-ல் ராகு இருந்தால், ஒரு சமச்சதுர வெள்ளி உலோகம் வைத்துக்கொள்ளவும். பச்சைப் பாலைக் கலந்து நீராடவேண் டும். 2-ல் ராகு இருந்தால், பாக்கெட்டில் வெள்ளி உருண்டை வைத்துக்கொள்ளவும். பொது விநியோகப் பொருளை வாங்குவது கூடாது. தாயாரை பகைப்பது கூடாது. வெள்ளிப் பெட்டியில் குங்குமப் பூ வைத்துக்கொள்ளலாம். 7-ல் ராகு இருந்தால், நாய் வளர்க்கக்கூடாது. ஓடும் நீரில் ஒரு தேங்காய் பாதாம் பருப்பை திருஷ்டி சுற்றிப் போடவும். 5-ல் ராகு இருந்தால் இரு திருமணம் கூடாது. திருமண நாளில் இன்னும் ஒரு தா- கட்டலாம். 12-ல் ராகு வீட்டின் கடைசி அறை இருட்டாக இருக்கவேண்டும். சமையல் கூடத்தில் உணவு உண்ணவும். மகளுக்கு வேண்டிய உதவி செய்யவும்.
கேது
சதுர்த்தி விரதம் நன்று. வாழைப்பழம், எலுமிச்சைப் பழம் கோவிலுக்குக் கொடுக்கவேண்டும். கருப்பு, வெள்ளை கலந்த செல்லப் பிராணி வளர்க்கலாம். உணவூட்டலாம். நாணயம் தவறக் கூடாது; நன்னடத்தை வேண்டும். வயதுக்கு வராத- ஒன்பது வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைக்கு உதவி செய்யலாம். கருப்பு- வெள்ளைத் துணி (பெட்ஷீட்) ஏழைகளுக்கு தானமளிப்பது நன்று. 8-ல் கேது இருந்தால் கருப்பு, வெள்ளைநிறப் பசுவுக்குப் புல் தரலாம். நன்னடத்தை வேண்டும். 7-ல் கேது இருந்தால் போ- உத்தரவாதம் கொடுப்பது கூடாது. நான்கு வாழைப்பழத்தை மேற்கு நோக்கி நின்று திருஷ்டி சுற்றி நீர்நிலையில் போடவேண்டும். 11-ல் கேது இருந்தால் விநாயகரை ஐந்து செந்தாமரைப் பூ. சாற்றி வணங்கலாம்.
செல்: 93801 73464