சூரியன்

சூரியன் கோட்சார ராசிக்கு 1, 2, 5, 7, 8 ஆகிய இடங் களில் நிற்க விபரீதமான கெடுதிகள் சேரும். வியாதியோடு கலகமுண்டாகும். கண்நோய் காணும். அபவாதமான பழிநேர்ந்து வீட்டைவிட்டு ஓட்டும். தேசாந்திரப் போக்கு உண்டாமென்றறியவும்.

இது அநுபோக ஜாதக ரகசியம். இதற்கு சுலபமான பரிகாரம் என்னவென்று ஆய்வு செய்வோம்.

1-ல் சூரியன்: லக்னத்தில் சூரியன், 7-ஆமிடம் சுத்தம் என அறிந்தால், பருவத்தே திருமணம் செய்தல்வேண்டும். ஐந்து ஞாயிற்றுக்கிழமைகள் ஒருபொழுது உபவாசம் நன்று. கோதுமை, இனிப்பு கலந்த பண்டங்கள் தானம் செய்யலாம். கடத்தல் வியாபாரம் செய்தல் கூடாது.

Advertisment

2-ல் சூரியன்: பொதுமக்களுக்கு இலவசமாக தண்ணீர் தருதல் நன்று. அரிசி, பால், வெள்ளி உலோகம் இலவசமாகப் பெறுவது கூடாது. ஆலயத்திற்குத் தேங்காய் எண்ணெய், பாதாம் பருப்பு தருதல் நன்று.

5-ல் சூரியன்: பொய் சாட்சி கூறுவது கூடாது. சொன்ன சொல் காப்பாற்றப்பட வேண்டும். பழமையான குலதர்மத்தைக் கடைப் பிடிக்கவேண்டும். சிவப்புநிற முகமுள்ள அனுமனை வணங்கவேண்டும்.

7-ல் சூரியன்: வீட்டுவாசலில் சமச்சதுர செப்புத் தகடு புதைத்துவைப்பது நன்று. கொம்பில்லாத கருமை நிறப் பசுவுக்கு புல், கீரை தருதல் நன்று. வீட்டு சமையல்கூடத்தில் பால் பொங்கி வழியவிடல் கூடாது.

Advertisment

8-ல் சூரியன்: தலைவாசல் தென்திசை நோக்கி இருத்தல்கூடாது. வெள்ளைப் பசு வளர்த்தல் நன்று. திருமணமானோர் மாமனார் வீட்டில் தஞ்சம் கூடாது. மூத்த சகோதரர்களுக்கு இயன்ற உதவிபுரிதல்வேண்டும். 800 கிராம் கோதுமை, 800 கிராம் இனிப்பை, எட்டு ஞாயிற்றுக்கிழமைகள் ஆலயத் திற்குக் கொடுப்பது நல்ல பரிகாரம். கெடுதல் போகும்.

பொதுப் பரிகாரம்: ஞாயிற் றுக்கிழமை ராகு காலத்தில் ருத்ராபிஷேகம், வடைமாலை சாற்றி வழிபடல் நன்று. திருமணத்தடை போகும். சூரியனின் பிரான தேவதை சொர்ணாகர்ஷண பைரவர் காயத்திரி மந்திரம் கூறலாம்.

"ஓம் பைரவாய வித்மஹே

ஹரி ஹர ப்ரம்ஹாத்மகாய தீமஹி

தந்நோ ஸ்வர்ணாகர்ஷண பைரவ

ப்ரசோதயாத்.'

சந்திரன்

சந்திரன் 2, 4, 5, 8 ஆகிய இடங்களில் நின்றால் பலன் மாறும். கைப்பொருள் விரயமாகும். வாய்ப்பேச்சு செல்லாது; பந்தனமாகும். மன வியாகூலம் உண்டாகும். செய்தொழில் சபலமாகும். நினைத்த காரியம் முடியாது என்பதாகும்.

2-ல் சந்திரன்: திருமணப் பெண் புகுந்தவீடு போகும்போது மடியில் பச்சரிசி, சிறு வெள்ளி உலோகக் கிண்ணம், வெண்முத்து ஆகியவை கொண்டு செல்லவேண்டும். 2-ல் சந்திரன், கேது 12-ல் இருந்தால் குழந்தைகள் கல்வியில் தடைவரும். சரஸ்வதியை வணங்கவேண்டும்.

4-ல் சந்திரன்: பால் வியாபாரம் கூடாது. பால் கோவா தயாரித்து விற்பனை லாபம் தராது. புது வேலைகள் ஆரம்பிக்கும்போது பாலைப் பொங்கவைத்து பூஜை செய்தே ஆரம்பிக்க வேண்டும். வீட்டு வாசலில் சதுர வெள்ளித் துண்டைப் புதைப்பது நன்று.

sat

5-ல் சந்திரன்: அதிக தொல்லைகள் வந்தால் பிறரின் ஆலோசனைகளைப் பெறவேண்டும். பொதுமக்களுக்கு உதவிபுரிதல் வேண்டும். ஊட்டி- கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களுக்கு செல்லுதல்வேண்டும்.

8-ல் சந்திரன்: கிணறுகளை மூடி அதன்மேல் வீடு கட்டுதல் கூடாது. வயதில் மூத்த மாதரை வணங்கி ஆசிபெறவேண்டும். பிற பெண்களை நேசிப்பது கூடாது. பிறரை ஏமாற்றுவது கெடுபலனைத் தரும். வெண்மைநிற நான்கு கால் பிராணிக்கு உணவு தருதல் வேண்டும்.

பொதுப் பரிகாரம்: திங்கட்கிழமை வில்வார்ச்சனை செய்தால் சிவனருள் பெறலாம். திங்கள் அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம், சந்தனக் காப்பு செய்து, புனுகு பூசி நந்தியாவட்டை மலர் அணி வித்து வழிபட்டால் கவலைகள் மறையும்.

செவ்வாய்

செவ்வாய் 1, 2, 4, 8, 10 ஆகிய இடங்களில் நிற்கில் வாழ்க்கை அவகேடாகும். மனதில் துயரமுண்டாகிச் சஞ்சலப்படுவான். உடலில் வியாதிகாணும். போஜன சௌக் கியமில்லாமல் அலைச்சல்பட்டு திரிவான்.

1-ல் செவ்வாய்: துணி வியாபாரம் செய்யலாம்; தானம் செய்யலாம். 28 வயதிற்குள் திருமணம் செய்தல் நன்று. வெள்ளி உலோக டம்ளரில் பால், தண்ணீர் பருகவேண்டும். 24 வயதிற்குள்ளாக சொந்த சம்பாத்தியத்தில் அவர்கள் பெயரில் வீடு கட்டுவது கூடாது.

2-ல் செவ்வாய்: சம்பாதித்தவை திருட்டுப் போகலாம். சிவப்புநிற கைக் குட்டை வைத்துக்கொள்ளல் நன்று. ஒரு சிறு மண்குடுவையில் தேனை நிரப்பி, அதன்மேல் குங்குமம் தூவி, மேற்குநோக்கி நின்று திருஷ்டி சுற்றி ஓடும் நீரில் போடுவது நன்று.

4-ல் செவ்வாய்: இனிப்புப் பண்டங்கள், தேன் போன்ற வியாபாரம் கூடாது. ஆலமரவேரில் பாலும் நீரும் கலந்து ஊற்றவேண்டும். ஒரு சமச் சதுர வெள்ளித்துண்டு கைவசம் இருப்பது குருவருளைப் பெறவைக்கும். ஒற்றைக் கண் பார்வையுடையோர் எதிரில் பயணம் புறப்படுதல் கூடாது.

8-ல் செவ்வாய்: கணவனை இழந்த மாதர்கட்கு உதவி நன்று. நாய்கட்கு உணவூட்டவேண்டும். சகோதரிகள் வீட்டிற்கு வந்தால் இனிப்பு கொடுத்து உபசரிக்க வேண்டும். ஐந்து செவ்வாய்க்கிழமை சமையல் கூடத்தில் உட்கார்ந்து உணவுண்ண வேண்டும். செவ்வாய்க்கிழமை காய்ச்சல், உடல் அசதி வந்தால், கருநொச்சி இலையைத் தண்ணீரில் ஊற வைத்துக் குளிப்பது நல்ல பரிகாரம்.

10-ல் செவ்வாய்: மான்குட்டி வளர்க்க லாம். மானுக்கு உணவூட்டலாம். அண்ணன்- தம்பிக்கு பொருள் உதவி செய்தல் நன்று. செந்நிற முகமுடைய ஆஞ்சனேயரை வணங்கு வது நன்று.

பொதுப் பரிகாரம்: செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் மிளகு தீபமேற்றி வழிபட்டால், இழந்த பொருளை திரும்பப் பெறலாம். ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழி பட்டால் உத்தியோக உயர்வு, அரசு சார்ந்த நன்மைகள் பெறலாம்.

புதன்

புதன் 4, 6, 7, 8 ஆகிய இடங்களில் நிற்க, அவருடன் பாவகிரகங்கள் நிற்க துன்பமுண் டாகும். பந்துகளை பகைப்படுத்தும். கல்வி பலிதமிராது.

4-ல் புதன்: புரோகிதர்களுக்கு தானம், மஞ்சள்நிறப் பொருட்கள் தானம், ஏழைப் பெண்களுக்கு தங்க தாலிதானம், பாலும் அரிசியும் கோவிலுக்குத் தருதல் நன்று. பச்சை நிறங்களைத் தவிர்ப்பதும் நல்ல பரிகாரம்.

6-ல் புதன்: நீங்கள் குடியிருக்கும் திசையின் வடக்கு திசையில் தங்கை அல்லது மகளைத் திருமணம் செய்துகொடுப்பது கூடாது. வீட்டைச் சுற்றி வெற்றிடம் இருந் தால் மண்குடுவையில் பாலை ஊற்றி மூடி, தென்மேற்கு மூலை மண்ணில் புதைக்க வேண்டும். வாஸ்து தோஷம் போகும். புஞ்சை பயிர் செய்வோர், பயிர் செழிப்பாக கங்கைநீர் வாங்கி கண்ணாடி புட்டியில் அடைத்து சீல் செய்து, நிலத்தின் வடகிழக்கில் மூடிவைப்பது நல்ல பரிகாரம். வெள்ளி உலோக மோதிரம் இடக்கை விரலில் அணிந்தால் மனைவிக்கு நல்லகாலம் பிறக்கும்.

7-ல் புதன்: கூட்டு வியாபாரம் கூடாது. மனைவியின் தங்கையை வீட்டோடு கூட்டாக இருக்கச்செய்வது கூடாது. பெற்ற பெண் குழந்தையை தாய்க்கு நிகராக பெருமை சேர்க்கவேண்டும். வைரம் அல்லது எமரால்ட் அல்லது ஷேட் மோதிரம் அல்லது டாலர் அணிவது நிரந்தரப் பரிகாரம்.

8-ல் புதன்: கருப்புநிற உள்ளாடைகள் அணியவேண்டும். வீட்டில் பூஜையறையை அவ்வப்போது மாற்றுவது கூடாது. மகள் மூக்கில் வைரக்கல் அணிதல் நன்று. பச்சைநிறப் பயறு வாங்கி செம்புப்பாத்திரத்தில் நிரப்பி, அதனை வடக்குநோக்கி நின்று திருஷ்டி சுற்றி நீரில் போட பணவரவு பெருகும். ஐந்து புதன்கிழமைகள் புலால் மறுப்பது நன்று.

பொதுப்பரிகாரம்: புதன்கிழமை நெய்தீபமேற்றி குபேர வணக்கம் செய்தால் பூமி லாபம் கிடைக்கும். எள்ளுருண்டை சாதத்தை பசுவுக்கு தானம் செய்தால் அல்லது ஆற்றில்விட்டால் தோஷம் நிவர்த்தியாகும். லட்சுமி நரசிம்மருக்கு வெங்கலக் கிண்ணத் தில் நெய் தீபமேற்றுவது நன்று.

குரு

குரு 1, 3, 4, 6, 8, 10, 12 ஆகிய இடங்களில் நிற்கில் உடலில் வியாதி காணும். உருவைக் குலைக்கும். ராமர்- சீதை, புரூரவ சக்கர வர்த்தி, நள சக்கரவர்த்தி- தமயந்தி, பஞ்சபாண்டவர்கள் முற்காலத்தில் பட்ட கதைபோல நிகழுமாம்.

1-ல் குரு: லக்னத்தில் குரு, 5-ல் சனி இருந்தால், சொந்த வருமானத்தில் வீடு கட்டுதல் கூடாது. 9-ல் சனி இருந்தால் இரும்புத் தொழில் லாபத்தைத் தராது. வாங்குவதும் நஷ்டத்தையே பரிசாக்கும். சனி 11 அல்லது 12-ல் இருந்தால் புலால் உணவு சாப்பிடுவது கூடாது. கெடுதல் அதிகரித்தால் நீல உமத்தைச் செடி வேரைக் காயவைத்து, தாயத்தில் வைத்து கருப்புக் கயிற்றில் அணிந்தால் கெடுதல் அகலும். யாருடைய உதவியும் பெறாமல் வாழ்வதே போதுமானது.

3-ல் குரு: துர்க்கையை வணங்கலாம். ஒன்பது வயதுக்குட்பட்ட பெண் குழந்தைக்கு உதவிபுரிதல் நன்று. பொய் சொல்வது கூடாது. நலிந்த சொந்தங்களுக்கு இயன்ற உதவி செய்யவேண்டும். நண்பர்களை ஏமாற்றுவது கூடாது. ருத்ராபிஷேகம் செய்யலாம். புரோகிதர்களுக்கு உதவியும் சிறந்தது.

4-ல் குரு: உள்ளாடைகளை சிவப்பு வண்ணத்தில் அணியவேண்டும். பொது இடங்களில் ஆடையின்றி இருப்பது கூடாது. குடும்ப புரோகிதருக்கு உதவி செய்தல், அரச மரத்து வேரில் தண்ணீர் பாய்ச்சுவது நன்று. வயதில் மூத்தோரைப் பேணுதல் நன்று. பஞ்ச வர்ணகிளி, ஆடு வளர்பது கூடாது. பசு மாட்டை வீட்டின் மேற்கு பாகம் வளர்க்கவேண்டும். பாம்புப் புற்றுக்கு பால் வார்த்தல், நாகாரம்மன் கோவில் செல்வது நன்று. (நாகர்கோவில்.)

6-ல் குரு: தங்கை இருந்தால் அவர்கள் சந்ததிக்கு உதவலாம். பேரன்- பேதத்திக்கும் இயன்ற உதவி நற்பலன் தரும். தந்தை விட்டுச்சென்ற பொருட்களை உபயோகிப் பது நன்று. சிறுதுளி தங்கமாவது உடம்பில் இருக்கவேண்டும். ஆலயங்கள் கட்டுவதற்கு பணஉதவி தருதல் நன்று. மகனுடன் இணைந்து வியாபாரம் செய்யலாம். சேவல், கோழிக்கு உணவூட்டலாம். புரோகிதர் களுக்கு ஆடை தானம் நல்ல பரிகாரம்.

8-ல் குரு: நெய், உருளைக்கிழங்கு, தயிர் ஆலயத்திற்குத் தருதல் நன்று. பிச்சை கேட்போருக்கு இயன்ற உதவிபுரிதல் வேண்டும். பார்- அரிசி, தேங்காயை திருஷ்டி சுற்றி நீர்நிலையில் போடவேண்டும். புதன் 12-ல் இருந்தால், கையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் காப்பு அணிதல் நன்று. 11-ல் புதன் இருந்தால் நான்கு செம்பு நாணயம், செந்நிறப்பூ இணைத்து திருஷ்டி சுற்றி கோவில் குளத்தில் போடவேண்டும்.

10-ல் குரு: வியாழனன்று பிறருக்கு உதவுதல் கூடாது. எந்த முயற்சி செய்யும் முன் மூக்கைத் தூய்மை செய்தல் வேண்டும். மஞ்சள் துணியைத் தவிர்க்கவும்.

12-ல் குரு: சாதுக்களுக்கு இயன்ற உதவி புரிதல் வேண்டும். பொய்சாட்சி கூடாது. குழந்தைகள் கல்விக்காக அதிக பணம் செலவிடநேரிடும். கருட புராணம் படிக்கலாம். மஞ்சள்நிறப் பூஞ்செடிக்கு நீர் பாய்ச்சல் நன்று. புஷ்பராக மோதிரம் அணிதல் நன்று. எல்லோ சபையர் மோதிரம் மூன்ற காரட், ஒப்பன் செட்டாக தங்கத்தில் அணிதல் நன்று.

பொதுப் பரிகாரம்: லட்சுமி நரசிம்ம ருக்கு வெங்கலக் கிண்ணத்தில் நெய்தீபமேற்றவும். வியாழக்கிழமைகளில் பைரவரை வழிபடுதல் நன்மை தரும்.

(தொடர்ச்சி அடுத்த இதழில்)

செல்: 93801 73464