மனிதர்கள் தங்கள் வாழ்வில் கஷ்டங்கள், காரியத்தடைகள், வீடு, மனை, பணம், பொருள் இழப்பு, கடன், நோய், எதிரி என இதுபோன்று இன்னும் ஏராளமான சிரமங்களை ஏதாவதொரு வகையில் அனுபவித்து, மகிழ்ச்சியின்றி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் கள். இதுபோன்ற துன்பங்கள், கிரகங் களாலும் முற்பிறவி பாவங்களாலும் உண்டாகி அனுபவிக்கச் செய்கிறது என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப் படுகிறது.
பரிகாரங்கள் செய்தால் சிரமங் கள் நீங்கிவிடும் என்று, புண்ணிய தலங்கள், புண்ணிய தீர்த்தங்களுக்குச் செல்லுதல், கிரக சாந்தி, யாகங்கள் செய்தல், உயிரினங்களை பலி கொடுத்தல், ரட்சை, நவரத்தினங் களை அணிதல் என ஏராளமான பரிகாரங்களைச் செய்து வாழ்வில் உண்டாகும் இன்னல்களைத் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறோம்.
சப்தரிஷி நாடியில், சிவபெரு மானின் வாகனமான நந்தியை வழி பட்டு நலம்பெறும் பரிகாரமுறையை ரிஷிகள் கூறியுள்ளனர். சிவ பெருமானின் மகிமையைப் பற்றிப் பேசும்போதும், வழிபடும் போதும் நந்தியைத் தவிர்க்கமுடியாது; நந்தியெம்பெருமானின் சக்தி யையும் செயலையும் அளிவிட முடியாது என்று புராணங்களில் பெருமையாகக் கூறப்பட்டுள்ளது.
சிவபெருமான் உறையும்
உலகத்தை கயிலை, சிவலோகம் என்று கூறுகின்றனர். அங்கு சிவனுடன் வாழ்பவர்களை சிவகணங்கள், ருத்திரகணங்கள் என்கின்றனர். இந்த சிவகணங்களுக்கெல்லாம் தலைமையானவராகவும், சிவலோகத்தின் பாதுகாவலராகவும், சிவபெருமானின் கட்டளைகளை நிவேற்றும் தளபதியாகவும், அவரின் வாகனமாக வும், எந்த நேரத்திலும் அவரைவிட்டுப் பிரியாது இருப்பவரும், மத்தளம் கொட்டி மகேசுவரனை மகிழ்விப்ப வராகவும் இருப்பவர் நந்தி. சிவனுக்கு அடுத்த நிலையில் சக்தி பெற்றவர். சிவனுக்கு ஈடாக அருள்புரிந்து மக்களின் குறைகளைத தீர்ப்பவர் என்றும் சிவனைப் பற்றிய புராணங்களில் நந்தியைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
நந்திதேவரைப்பற்றி, இவ்வளவு பெருமையாகக் கூறப் படுவதற்கு நடைமுறையில் உண்மையான காரணமும் உண்டு.
இந்த பூமியில் வாழும் மனிதனின் ஒவ்வொரு செயலிலும், காளை, பசுமாடு ஆகியவற்றின் பங்கிருக்கும். காளைமாடு விவசாயம், பயிர்த்தொழில், சுமை வண்டி இழுத்தல், நீர் இறைத்தல் என அனைத்திலும் மனிதர்களுடன் சேர்ந்து உழைத்து செயல்படும். பசு தன் பாலைத் தந்து, தன்னை வளர்ப்பவரின் உயிரையும் உடல்நலத்தையும் காப்பாற்றும்.
மனிதர்கள் தங்கள் வாழ்வில் உண்டாகும் சிரமங்கள், தடைகள் என அனைத்தும் விலகிட, நந்தியை தொழுது வழிபாடு செய்ய நன்மைகள் உண்டாகும். மனிதர்கள் தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் ஒவ்வொரு பிரச்சினை தீர ஒரு குறிப்பிட்ட நாளில் நந்தியை வழிபடவேண்டும் என்று ரிஷிகள் கூறுகின்றார்கள்.
ஞாயிறு
ஞாயிற்றுக்கிழமை நந்தியெம்பெருமானை வழிபட்டால் பணம், பொருள், விரயம், பணத்தட்டுப்பாடு, கடன் தொல்லை, கொடுத்த கடன் திரும்பவராத நிலை, உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காத நிலை, பொருளாதாரக்குறை, தடைகள் தீரும். உழைத்து வாழவேண்டும்; உழைத்துப் பொருள் சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் உருவாகும். சோம்பேறித் தன்மை நீங்கும். சுய உழைப்பால் வாழ்வில் உயர்வுண்டாகும். சேமிக்கும் சக்தியும், தனலாபமும் உண்டாகும்.
திங்கள்
திங்கட்கிழமை நந்தியை வழிபட்டால் உடைகள் தரித்திரம், பருத்தி, பட்டு, செயற்கை நூல், வியாபாரத் தடை, நஷ்டம், தையல் தொழில் முடக்கம், நூல் சம்பந்தமான மூலப்பொருட்கள் பிரச்சினை, பருத்தி நெசவுத்தொழில், ஆடை உற்பத்தி ஸ்தாபனங் களில் பிரச்சினை, விலை குறைவு, தடைகள் விலகும்; தொழிலில் உயர்வுண்டாகும். ஆடைகள், மெத்தைகள், கொசுவலை மற்றும் பருத்தி, பாலியஸ்டர் நூல் சம்பந்தமான தொழில் மேன்மையடையும்.
செவ்வாய்
செவ்வாய்க்கிழமையில் நந்தி பகவானை வழிபட, நிலம், தோட்டம் என அனைத்து விதமான விவசாய நஷ்டம், உணவுப்பொருள், தானியப் பொருட்கள் வியாபார நஷ்டம், உணவு விடுதி, சமையல் தொழில் போன்றவற்றில் உண்டாகும் நஷ்டம், தடைகள் விலகி நன்மையுண்டாகும்.
புதன்
புதன்கிழமையன்று நந்தி தேவரை வழிபட, அனைத்து வகையான வியாபாரம், தரகு, கமிஷன், மண்டித் தொழில், ஷேர்மார்க்கெட், கணக்கர் தொழில், ஆடிட்டர், ஆலோசகர், வட்டித்தொழில், வங்கி உத்தியோகம் போன்ற பணம் சம்பந்தமான தொழில்கள், புத்தியைப் பயன்படுத்தி செய்யும் அனைத்து தொழிகளிலும் உண்டாகும் நஷ்டம், இழப்பு, தடைகள், முடக்கம் நீங்கி, நன்மைகள் உண்டாகும். இத்தொழில்களில் வளர்ச்சியும் பணவருவாயும் வளமும் உண்டாகும்.
வியாழன்
வியாழக்கிழமையன்று நந்தியெம் பெருமானை வழிபாடு செய்தால், தொழில், வியாபாரத்தடை, திருமணத்தடை, புத்திர பாக்கியத்தடை, உத்தியோக உயர்வில் தடை, கடன், நோய், உணவு, உடை, வீடு. வாகனக் குறை, எதிரிகள் தொல்லை, பகை, சூழ்ச்சி, தீயசக்திகள் தாக்கம் என இதுபோன்று இன்னும் வாழ்வில் அனுபவிக்கும் அனைத்துத் துன்பங்களும் நீங்கும். நன்மையும், வெற்றியுடன்கூடிய வளமான வாழ்வும் அமையும்.
வெள்ளி
வெள்ளிக்கிழமையன்று நந்திதேவரை வணங்கினால் திருமணத்தடை, கணவன்- மனைவி கருத்து வேறுபாடு, பிரிவு, இழப்பு, தங்கம், வெள்ளி, ஆபரணங்கள் குறை, அவை தங்காமல் போவது, வறுமை நிலை, செல்வநிலையில் உண்டாகும் தடைகள், பணம், பொருள், சொத்து விரயங்கள் நீங்கி, தன் உழைப்பின் உறுதியால் செல்வம், செல்வாக்குடன் அரசனைப் போன்று வாழ்வார்.
சனி
சனிக்கிழமையன்று நந்தியை வழிபட்டால், குழந்தையின்மை, புத்திரர்களால் துன்பம், அவமானம், குழந்தைகள் வாழ்வில் உண்டாகும் துன்பம், காரியத்தடை, புத்திரர் இழப்பு, கர்ப்பச் சிதைவு, கர்ப்பப்பை நோய், விந்து குறைபாடு, குழந்தைப் பேறுக்குத் தடை தரும் நோய்கள் போன்ற குழந்தைகள் சம்பந்தமான அனைத்து துன்பங்களும் நீங்கி நன்மக்கட்பேறு உண்டாகும்.
நந்தி வழிபாடு
சப்தரிஷி நாடியில் கூறியுள்ள நாட்களில், சிவாலயத்தில் நந்தி இருக்கும் இடங்களுக்கோ அல்லது தனியாக நந்தி சிலை இருக்கும் இடத்திற்கோ சென்று தங்கள் வேண்டுதலை மனதிற்குள்ளேயே கூறி அமைதியான முறையில் வழிபடவேண்டும். பிரசித்தமானது என்று கூறப்படும் சிவாலயங்களுக்குச் சென்று அங்குள்ள நந்தியை வழிபட வேண்டுமென்னும் அவசியமில்லை. அவரவர் ஊரிலுள்ள அல்லது அருகிலுள்ள ஊரிலிருக்கும் சிவன் கோவில் நந்தியை வழிபட்டாலே நன்மை உண்டாகும்.
நந்தி தேவருக்கு பால், தேன், தயிர், நெய், பழச்சாறு போன்ற திரவப் பொருட்களால் அபிஷேகம் செய்யத் தேவையில்லை. பொங்கல், அரிசி, பசும்புல், கீரைகள், பூ, மாலை, பட்டுத்துணி போன்ற எந்தப் பொருளையும் நிவேதனமாக வைத்து வணங்கத் தேவையில்லை. மந்திரங்களைச் சொல்லி பூஜை செய்யவேண்டியதில்லை. ஒரேயொரு பத்தியைக் கொளுத்தி வைத்து மனதிற்குள் மௌனமாக தங்கள் வேண்டுதலைக்கூறி எளிமையாக, ஆத்மார்த்தமாகப் பிரார்த்தனை செய்யவேண்டும்.
இன்றையநாளில், பிரதோஷ நாளன்று மட்டும் அதிக விமரிசையாக நந்தி வழிபாடு செய்யப்படுகின்றது. தொடர்ந்து பிரதோஷ வழிபாடு செய்து தங்கள் வேண்டுதல் நிறைவேறாதவர்கள் சப்தரிஷிகள் கூறியுள்ளபடி, வாரந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் சென்று நந்திதேவரை வழிபட நிச்சயம் நன்மை கிடைக்கும். குறிப்பிட்ட நாளில் காலை, மதியம், மாலை என்று எந்தக் கால நேரமும் பார்க்க வேண்டியதுமில்லை. உங்களால் முடிந்த நேரத்தில் சென்று வழிபடலாம். கோவிலில் இருக்கும் நந்தியைத்தான் வழிடபவேண்டும் என்றில்லை. கோவிலுக்கு வெளியே, வெட்ட வெளியிலுள்ள நந்தியையும் வழிபடலாம். விரதம் எதுவும் அவசியமில்லை.
காளை, பசு வளர்ப்போர் தங்கள் வேண்டுதல் எதுவோ, அதற்குரிய நாளில் காளை, பசுவைக் குளிப்பாட்டி, பொட்டு வைத்து, வயிறு நிரம்ப உணவிட்டு, சாம்பிராணிப் புகை காட்டி, தங்கள் பிரார்த்தனையைக் கூறி வீட்டிலேயே வணங்கலாம். காளையை வழிபடுவது நந்தி வழிபாடு; பசுவை வணங்குவது கோமாதா வழிபாடாகும்.
சிவன் எப்போதும் தியானத்திலேயே இருப்பார். நந்தி சிவனின் தியான அமைதிக்கு எந்த இடையூறும் வராமல் காவலிருப்பவர். எனவே எந்த சத்தமுமின்றி அமைதியாக வழிபட்டால் மட்டுமே சிவனருளைப் பெறமுடியும்.
செல்: 93847 66742