நையாண்டிச் சித்தர் க. காந்திமுருகேஷ்வர்

சொந்தம் பந்தம்ன்னு

நாமதான் உருகிட்டு இருக்கோம்..

Advertisment

ஆனால்

உதட்டளவில் தேவைக்கு பேசுகிற

தேவையற்ற மனிதர்களாய்

Advertisment

உறவுகள் மாறிவருகிறார்கள்..

நான்காமிடம் உறவினர்களை

குறிக்கும் வீடாகும்..

நான்காமிடம்

தாயாரையும் சொல்கிறது..

அந்தத் தாய் சொல்வதையே

குழந்தைகள் கேட்கிறது..

உறவுகளை உதாசினப்படுத்தும்

தாயே ஊதாரியாய்

அலைகிறாள்..

நான்காமிடம் கெட்டால்..

தாய் தானும் கெட்டு

தலைமுறையும் கெடுத்து விடுகிறாள்..

கொடுங்கல்லூர் பகவதி

அம்மனை

பார்த்துவர

கொடுமையான தாயாரையும்

திருத்திவிடுவார்...

தப்பு செய்வதில்

ஆணென்ன பெண்ணென்ன

எல்லாம் ஓரினமாகி போச்சு..

எல்லா பெண்களும்

நல்லவர்கள் என

ஏமாற்றிய காலமும் போச்சு..

ஆணாதிக்கம் செய்யும்

அளவுக்கு

ஆளுமை இல்லா

ஆண்களே அதிகமாயிட்டானுக..

சொல்லி பலனில்லைன்னு

சொந்தக்காரனும் சோர்ந்து போனான்

எக்கேடோ கெட்டுப் போங்கன்னு..

குடும்பத்திற்குள்

ஏமாற்றிப் பிழைப்பவனே

சொந்தம்ன்னு சொச்சம் பேர்

சுற்றித் திரியுறானுக...

நாலாமிடம் நச்சுன்னு

அமைஞ்சவனுக்கு

நாலா பக்கமும் நல்லதே நடக்கும்..

சுகமா வாழ்ந்தாதான்

சுற்றத்தாரும் வீட்டுக்கு வந்து பார்ப்பான்..

நம்மால காரியம்

ஆகணும்ன்னாதான்

நாலு பேரு நம்மைத் தேடி வருவான்..

நாதாரியா நீ அலைஞ்சா

எந்தப் பயலும் நம்ம பக்கம்

வர மாட்டான்...

வர்க்கலை

நாராயண குருவை

கும்பிட்டு வா..

நம்மைத் தேடி சொந்தம் வரும்...

ஐந்தாமிடத்திற்கு

விரய ஸ்தானம் நாலாமிடம்..

பெத்த பிள்ளைகளுக்கு

எப்போதும் சொந்தக்காரன் விரயம்தான...?

ஒருத்தனுக்கு பூர்வீக சொத்துல

பிரச்சினை வந்துருச்சா..

நாலாமிடம் கெட்டுப் போய்

அவன் சொந்தக்காரன்

நடெங்கும் சிதறிக்கிடப்பான்டா...

கண்டியூர்

ஸ்ரீமகா தேவர் கோவில் சென்று

மனதார வேண்டு...

கண்டம் விட்டு கண்டம்

போன சொந்தமும்

கரெக்ட் டைம்க்கு வந்து நிக்கும்...

இளமையில் சுதந்திரமாய்

சுற்றித்திரிய..

தான் செய்யும் தவறை

கண்டிக்கக் கூடாதுன்னு

உறவுகளை எதிரியாக்கும்

பிள்ளைகள் செய்யும்

பாலிடிக்ஸ்தான்

இன்னைக்கு

பாசத்தையே குழி தோண்டி

புதைச்சிருச்சு..

பிள்ளைகள் கெட்டுப் போக

காரணமே..

சொல்லுறதுக்கெல்லாம் தலையாட்டும்

பெற்றோர்களும்

கெட்டுப் போயிட்டானுகடா..

நாலாமிடம் கெட்டுப்போனா

சொந்தம் மட்டும் விட்டுப் போகாது..

உன் உயர்கல்வியும் உருப்படாமப் போகும்..

பரிகாரம்

சொன்னாலும் கேட்க மாட்டீங்க..

சொந்தத்தோட

ஒத்துப் போனவன்தான்டா

சுகம் மொத்தமும் சொகுசா

அனுபவிப்பான்..

மீன் குளத்தி பகவதிக்கு சென்று வந்தா..

மீளாத் துயரம் தந்தவனே

மீட்டுத் தருவான்

மீதமுள்ள சுகத்தையெல்லாம்...

""தனக்குக் கிடைக்காத சொந்தம்

எவனுக்கும் கிடைக்கக் கூடாது''ன்னு

நினைக்கிற..

""சொந்தமே கெடுதல்தான் செய்யும்''ன்னு

தத்துவம் சொல்லுற..

நாலாமிடம் கெட்டுப் போன

அனாதபய அச வாக்க நம்பாத..

எவனெவனோ போடுற

தத்துவ மெசேஜ் பாத்துட்டு

சொந்தத்தை குறை சொல்ல

உனக்கென்ன தகுதி இருக்கு?!..

சொந்தத்த குறை சொல்லுற நீ

சொந்தக்காரனுக்கு என்ன செஞ்சிருக்க?!..

நான் மட்டும்

யோக்கியன்னு பேசுறவனுக்கு

நாலாமிடம் மறைஞ்சு போச்சுன்னா

நாய் படாதபாடே பட்டாகணும்..

நல்லவனுக்கு நல்லது

நடக்கும்ன்னு

எவன்டா சொன்னான்?..

நாலாமிடம் நல்லா இருக்கும்

கெட்டவனாலதான்

நாட்டையே ஆளமுடியும்..

ஆற்றில் ஒரு கால்

சேற்றில் ஒரு கால் எப்போதும்

வைக்காதே..

ஆற்றுக்கால் பகவதி

அம்மனுக்கு

போனால்..

போன சொத்தும்

போன சொந்தமும் திரும்பி வரும்..

போக்கிடமில்லாதவனுக்கும்

போயஸ்கார்டனில்

இடம் கிடைக்கும்...

பொம்பள அதிகமா சிந்திச்சா

அவுசாரியாதான்

போக முடியும்ன்னு

அவதாரமே சொல்லியிருக்கு..

நாலாமிடம் கெட்டுப் போய்

ஆறு, எட்டு தசை நடக்கும்

சில பெண்கள்..

தன் சுதந்திரத்திற்காக

தன்னை சுற்றியிருப்பவர்களையும்

குற்றவாளியாய் ஆக்கி

விடுகிறார்கள்..

வெள்ளையாணி பத்ரகாளிக்கு

வெண்பட்டு சார்த்த

வெள்ளை மணம்

பிள்ளை மணம் வெளியே வந்து

வெற்றியைத் தரும்...

பாசம்ன்னா

என்னன்னு தெரியாதவர்களுக்கு..

புரியவைப்பது

நமது வேலையில்லை நண்பா..

தெரிஞ்சே பிரிய

நினைக்கிறவன்

பட்டே திருந்தி வரட்டும்..

பட்டதே போதும்ன்னு

நிற்கதியா நிற்கிறாயா?!..

பாசத்தைத் தரும்

பந்தத்தைத் தரும்

பவுர் புல்லான

சக்குளத்துகாவு பகவதி

அம்மனை

சரணடைய..

சகலமும் சக்சஸ் ஆகும்...