பாலமுருகன் பதில்கள்!

/idhalgal/balajothidam/murugan-answers

கேள்வி: என் மகளின் வாழ்க்கை கணவருடன் போராட்டமாக உள்ளது. அது எப்போது தீரும்? எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -சுப்ரமணியன், கோவை.

பதில்: அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு சுக்கிரன் 7-ல் ஆட்சிபெற்று, பெண்களுக்கு களத்திரகாரக னான செவ்வாய் 6-ல் அமைந் தாலும் குருபார்வையோடு இருப்பது சிறப்பான அமைப் பாகும். உங்கள் மகளுக்கு தற்போது 8-ல் அமையப்பெற்ற சனி தசையில் சுய புக்தி 17-7-2024 முடிய நடக்கிறது. குறிப்பாக 8-ல் பாவகிரகம் இருந்து தசை, புக்தி நடைபெற்றால் கணவரிடம் மனஸ்தாபம், கணவர்வழி உறவினர்களும் ஒற்றுமை குறைவு ஏற்படும். சனி தசையில் சுயபுக்தி முடிகின்றபொழுது அடுத்த புதன் புக்தி தொடங்கும்போது கணவர் மூலமாக இருக்கக்கூடிய பிரச்சினைகள் குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சுயபுக்திக்கு பிறகு குடும்பவாழ்வில் முன்னேற்றங் கள் உண்டு. பிரச்சினைகள் குறைந்து நிம்மதி ஏற்படும், கவலைப்பட வேண்டாம். தற்போது முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பொறுமை யுடன் இருப்பது நல்லது.

aa

கேள்வி: எனக்கு சொந்த வீடு மற்றும் பணவசதி எதிர்காலத்தில் அமைய வாய்ப்பு இருக்கிறதா என்று கூறுங்கள்? -அருணாச்சலம், வடலூர்.

பதில்: உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 4-ஆம் அதிபதி செவ்வாய் 6-ல் மறைந்து உள்ளார். உங்களுக்கு தற்போது சந்திர தசை 11-1-2030 முடிய நடக்கிறது. சந்திரன்- கேது சேர்க்கை பெற்று இருப்பதும், அமாவாசைக்கு முன்னாளில் கடுமையான தேய்பிறையில் பிறந்து உள்ளீர்கள். சந்திரன் பலவீனமாக இருக்கக்கூடிய நிலையில

கேள்வி: என் மகளின் வாழ்க்கை கணவருடன் போராட்டமாக உள்ளது. அது எப்போது தீரும்? எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -சுப்ரமணியன், கோவை.

பதில்: அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு சுக்கிரன் 7-ல் ஆட்சிபெற்று, பெண்களுக்கு களத்திரகாரக னான செவ்வாய் 6-ல் அமைந் தாலும் குருபார்வையோடு இருப்பது சிறப்பான அமைப் பாகும். உங்கள் மகளுக்கு தற்போது 8-ல் அமையப்பெற்ற சனி தசையில் சுய புக்தி 17-7-2024 முடிய நடக்கிறது. குறிப்பாக 8-ல் பாவகிரகம் இருந்து தசை, புக்தி நடைபெற்றால் கணவரிடம் மனஸ்தாபம், கணவர்வழி உறவினர்களும் ஒற்றுமை குறைவு ஏற்படும். சனி தசையில் சுயபுக்தி முடிகின்றபொழுது அடுத்த புதன் புக்தி தொடங்கும்போது கணவர் மூலமாக இருக்கக்கூடிய பிரச்சினைகள் குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சுயபுக்திக்கு பிறகு குடும்பவாழ்வில் முன்னேற்றங் கள் உண்டு. பிரச்சினைகள் குறைந்து நிம்மதி ஏற்படும், கவலைப்பட வேண்டாம். தற்போது முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பொறுமை யுடன் இருப்பது நல்லது.

aa

கேள்வி: எனக்கு சொந்த வீடு மற்றும் பணவசதி எதிர்காலத்தில் அமைய வாய்ப்பு இருக்கிறதா என்று கூறுங்கள்? -அருணாச்சலம், வடலூர்.

பதில்: உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 4-ஆம் அதிபதி செவ்வாய் 6-ல் மறைந்து உள்ளார். உங்களுக்கு தற்போது சந்திர தசை 11-1-2030 முடிய நடக்கிறது. சந்திரன்- கேது சேர்க்கை பெற்று இருப்பதும், அமாவாசைக்கு முன்னாளில் கடுமையான தேய்பிறையில் பிறந்து உள்ளீர்கள். சந்திரன் பலவீனமாக இருக்கக்கூடிய நிலையில் மகர லக்னத்திற்கு 7-ஆம் அதிபதி சந்திர தசை நடப்பதால் உங்களது ஆரோக்கியத்தில் தற்போது அக்கறை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. உங்களுக்கு ஏழரைச்சனி நடப்பதாலும், சந்திர தசை நடப்பதாலும் தேவையற்ற மனஉளைச்சல்கள், உங்கள் முயற்சிகளுக்கு இடையூறுகள் ஏற்படக்கூடிய ஒரு நேரமாகும். பொருளாதாரநிலை ஏற்ற- இறக்க மாகதான் இருக்குமே தவிர மிக தாராளமாக இருக்காது. 4-ல் சுக்கிரன் இருப்பது அசையா சொத்து யோகத்தை தரக்கூடிய அமைப்பு என்றாலும் எதிலும் தனித்து செயல்படாமல் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து சொத்து வாங்கும் முயற்சி மேற்கொண்டால் ஒருசில ஆதாயங்களை அடைய முடியும். பெருமாள் வழிபாடு மேற்கொள்ளவும்; நல்லது நடக்கட்டும்.

கேள்வி: என் மகனின் திருமணம் எப்போது நடைபெறும்? தோஷம் ஏதாவது இருந்தால் என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்று கூறுங்கள்? -வைத்தியநாதன், கடலூர்.

பதில்: பூச நட்சத்திரம், கடக ராசி, மேஷ லக்னத் தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ல் சுக்கிரன் அமையப்பெற்று ஆட்சி பெற்றிருப்பது நல்ல அமைப்பாகும். லக்னத் திற்கு 7-ல் ஐந்து கிரகங்கள் இருப்பதால் மேலோட்டமாக ஜாதகம் பார்ப்பவர்கள் ஜாதகத்தில் தோஷங்கள் இருக்கிறது என கூறி விடுவார்கள். கிரகங்கள் அதிகப்படியாக இருந்தாலே தோஷம் என்று எடுத்துக் கொள்ளமுடியாது. சூரியன்- சுக்கிரன் மிக அருகில் இணைந்திருப்பது சுக்கிரன் அஸ்தங்க அமைப்பாகும். இதன்காரணமாக ஒருசில தடைகள் உண்டாகிறது. தற்போது ராகு புக்தி 12-7-2024 முடிய நடப்பதால் அடுத்துவரும் குரு புக்தியில் சம வயது உள்ள பெண்ணை திருமணத்துக்காக முயற்சித்தால் நல்லது நடக்கவாய்ப்பு உண்டு. சுக்கிரன் அஸ்தங்கம் பெற்று சந்திரன் வலுவாக இருப்பதால் வயது குறைவான பெண்ணை பார்ப்பதைவிட சம வயது உள்ள பெண்ணை வரனாக பார்ப்பது மிகவும் நல்லது. சூரியன் நீச வீட்டில் இருப்பதால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும். இறையருளால் நல்லது நடக்கட்டும்.

கேள்வி: நான் கடந்த 2 வருடங்களாக வயிற்று புண் பிரச்சினைக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகின்றேன். நடப்பு சூரிய தசை எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -வள்ளியம்மை, கும்பகோணம்.

பதில்: அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 5-ல் சந்திரன் நீசம்பெற்று இருப்பதும், 5-ல் குருவக்ரம் பெற்றிருப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். குரு சூரி யனுக்கு 7-ல் வக்ரம் பெற்றிருப்ப தால் வயிற்றுப் பகுதியை பலவீனப் படுத் தக்கூடிய அமைப்பாகும். குடல் சம்பந்தப் பட்ட பிரச்சினை, செரிமான பிரச்சினை ஏற்படுத்தும் அமைப்பாகும். 5-ல் சந்திரனும் பலவீனமாக இருப்பது வயிறு தொடர்பாக உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு நிலையாகும். சூரிய தசையில் கடந்த ஆண்டு குரு புக்தி நடந்த காலத்தில் உடல் உபாதைகள் சற்று அதிகப்படியாக இருந்திருக்கும். தற்போது சனி புக்தி நடப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவும். 1-12-2023 முதல் சூரிய தசையில் புதன் புக்தி தொடங்குகின்றபொழுது ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குருவக்ரகதியில் இருப்பதால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, இயற்கை உணவுகளை உட்கொள்வது நன்மையை தரும்.

கேள்வி: தொழில், ஆயுள் பற்றி கூறவும். அடுத்துவரும் புதன் தசை யோகமாக அமையுமா என்று கூறுங்கள்? -மீனாட்சிசுந்தரம், சென்னை.

பதில்: உத்திராட நட்சத்திரம், தனுசு ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 1, 10-க்கு அதிபதியான குரு உச்சம்பெற்று இருப்பதும், சூரியன், புதன், குரு, சனி பலம் பெற்றிருப்பதும் சிறப்பான அமைப்பாகும். தற்போது உச்சம்பெற்ற சனி தசை 12-11-2030 நடப்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் தொழில் அமைப்புகள் அனைத்தும் பொருள்ரீதியாக அனுகூலத்தை தரக்கூடிய அமைப்பாகும். 4 கிரகங்கள் பலம் பெற்றிருப்பதால் நீண்ட ஆயுள் உண்டு. சனி உங்கள் ஜாதகத்தில் 8-ல் இருந்தாலும், பாவகரீதியாக 9-ல் இருப்பதால் நல்ல பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தனுசு ராசியில் பிறந்த உங்களுக்கு ஏழரைச்சனி சென்ற ஜனவரில் முடிந்துவிட்ட தால் தற்போது கோட்சாரத்தில் குரு 5-ல் இருப்பதால், ராகு- கேது பெயர்ச்சி பிறகு (30-10-2023) தொழில்ரீதியாக ஒருசில முன்னேற்றங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சனி தசை முடியும்வரை தொழில் அமைப்பு நன்றாக இருக்கும். அடுத்து உபய லக்னத்தில் பிறந்த உங்களுக்கு புதன் மாரகாதிபதி என்பதால் புதன் தசை காலத்தில் தொழில் போன்றவற்றை குறைத் துக்கொண்டு ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. தற்போது சனி தசை நடப்பதால் விநாயகர் வழிபாடு, பைரவர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் வளமான பலன்களை பெறலாம்.

கேள்வி: என் தங்கையின் ஜாதகப்படி இவருக்கு காதல் திருமணம் நடைபெறுமா அல்லது பெரியவர்கள் பார்த்து முடிக்கும் திருமணம் நடைபெறுமா? திருமண வாழ்க்கை எப்படியிருக்கும் என்று கூறுங்கள்?

பதில்: உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்கள் தங்கைக்கு 7, 9-க்கு அதிபதியான குரு, சனி பரிவர்த்தனை பெற்றிருக் கிறது. 7-ஆம் அதிபதி பரிவர்த் தனை பெற்றாலே முத-ல் பார்க் கக்கூடிய வரனோ அல்லது முதலில் விரும்பக்கூடிய ஒரு நபரையோ திருமணம் செய்ய முடியாத ஒரு நிலை ஏற்பட்டு அல்லது திருமணம் கைகூடக்கூடிய நேரத்தில் ஒரு தடை உண்டாகி அதன்பிறகு நல்லது நடக்கும். அடுத்து குறிப்பாக ஒரு ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனுக்கு 1, 7 அல்லது 2, 8-ல் சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருப்பது அவ்வளவு சிறப்பான அமைப்பு என கூறமுடியாது. உங்கள் தங்கை ஜாதகத்தில் சந்திரன்- ராகு இணைந்து சந்திரனுக்கு 7-ல் சனி, கேது சேர்க்கைப் பெற்றிருப்பது சாதகமற்ற அமைப்பாகும். சந்திரன்- ராகு சேர்க்கைபெற்று தற்போது ராகு தசை நடப்பது பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு அமைப்பாகும். அதிலும் குறிப்பாக ராகு 3-ல் இருந்தாலும் பாவகரீதியாக 2-ல் இருப்பது மிகவும் நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். 7-ஆம் அதிபதி சனி என்ற காரணத்தாலும் நடப்பது, ராகு தசை என்ற காரணத்தாலும் ஜாதகிக்கு உறவில் திருமணம் நடைபெற வாய்ப்பில்லை. அந்நியத்திலோ, வேற்று ஜாதி வரனையோ பெரியோர்கள் ஆசியோடு மணமுடிக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. ஜாதகிக்கு திருமணம் நடைபெற்றாலும் 20-6-2035 வரை ராகு தசை நடப்பதால் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து சென்றால்தான் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். தற்போது சனி புக்தி நடந்தாலும் சனி 7-க்கு அதிபதி என்ற காரணத்தால் 2025 மே மாதத்திற்கு பிறகு மணவாழ்க்கை அமையும் வாய்ப்பு உண்டு. அமையும் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது.

bala061023
இதையும் படியுங்கள்
Subscribe