தனுசு லக்னத்தில்... குருவின் வீட்டில் சந்திர பகவான் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். அவரிடம் ஈர்க்கக்கூடிய சக்தியிருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். ஜாதகர் அழகான தோற்றத்துடன் இருப்பார். உடல்நலம் நன்றாக இருக்கும். எப்போதும் சிந்தனை இருக்கும்.
2-ஆம் பாவத்தில், சனியின் மகர ராசியில் 8-ஆம் பாவத்தின் அதிபதியான சந்திரன் இருந்தால் பணத்தை சம்பாதிப்பதற்காக பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதிருக்கும். குடும்ப சுகத்தில் குறையிருக்கும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. அவர் தன்னைப் பெரிய பணக்காரரைப்போல வெளியே காட்டிக்கொள்வார். திடீர் திடீரென்று அவருக்குப் பணம் வரும். இல்வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
3-ஆம் பாவத்தில் சனிபகவானின் கும்ப ராசியில
தனுசு லக்னத்தில்... குருவின் வீட்டில் சந்திர பகவான் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். அவரிடம் ஈர்க்கக்கூடிய சக்தியிருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். ஜாதகர் அழகான தோற்றத்துடன் இருப்பார். உடல்நலம் நன்றாக இருக்கும். எப்போதும் சிந்தனை இருக்கும்.
2-ஆம் பாவத்தில், சனியின் மகர ராசியில் 8-ஆம் பாவத்தின் அதிபதியான சந்திரன் இருந்தால் பணத்தை சம்பாதிப்பதற்காக பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதிருக்கும். குடும்ப சுகத்தில் குறையிருக்கும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. அவர் தன்னைப் பெரிய பணக்காரரைப்போல வெளியே காட்டிக்கொள்வார். திடீர் திடீரென்று அவருக்குப் பணம் வரும். இல்வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
3-ஆம் பாவத்தில் சனிபகவானின் கும்ப ராசியில் சந்திரன் இருந்தால் உடன்பிறந் தோருடனான உறவு சிக்கல் நிறைந்ததாக இருக்கும். பணத்தையும் புகழையும் சம்பாதிப்பதற்காக கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். அன்றாடச் செயல்களில் பல போட்டிகள் ஏற்படும்.
4-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் சந்திரன் இருந்தால் அன்னையின் உடல்நலத்தில் சில குறைகள் இருக்கும். ஜாதகர் தான் இருக்குமிடத்தைவிட்டு வெளியே சென்று வாழ்வார். அவருக்கு நீண்ட ஆயுள் உண்டு. நன்கு பணம் சம்பாதிப்பார். தன் திறமையால் தன்னை "நல்ல மனிதர்' என்று மற்றவர்களைக் கூறவைப்பார்.
5-ஆம் பாவத்தில், திரிகோணத்தில், செவ்வாயின் மேஷ ராசியில் சந்திர பகவான் இருந்தால் பிள்ளைகளால் சில பிரச்சினைகள் உண்டாகும். படிப்பு விஷயத்தில் சில தடைகள் தோன்றும். மனதில் எப்போதும் சிந்தனை இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். ஜாதகர் கடுமையாக உழைத்துப் பெயர், புகழைப் பெறுவார்.
6-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் சந்திரன் உச்சமடைகிறார்.
ஜாதகர் பகைவர்களை வெல்வார். அன்றாடச் செயல்களில் சில தடைகள் இருக்கும். எனினும் ஜாதகர் சந்தோஷமாக வாழ்வார். பூர்வீக சொத்து கிடைக்கும்.
7-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சந்திர பகவான் இருந்தால் சிலருக்கு மனைவியால் மனக்கஷ்டம் உண்டாகும். வியாபாரத்தில் தடைகளைக் கடந்து வெற்றி கிடைக்கும். முன்னோரின் சொத்து கிடைக்கும். அன்றாடச் செயல்களை ஜாதகர் சந்தோஷமாக செய்வார். அதே சமயம், கடுமையாக உழைக்க வேண்டியதிருக் கும். அதனால் சில நேரங்களில் சோர்வுண் டாகும்.
8-ஆம் பாவத்தில் சந்திர பகவான் தன் சுயவீட்டில் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். ஜாதகரைப் பார்ப்பவர்கள் அவரைப் புகழ்வார்கள். ஆனால் அவரோ மன அமைதியில்லாமல் இருப்பார். குடும்பத்தில் பிரச்சினைகள் இருக்கும். பணக் கஷ்டம் ஏற்படும். அதனால் மனதில் கவலை உண்டாகும்.
9-ஆம் பாவத்தில் மூலத் திரிகோணத்தில் சூரியனின் சிம்ம ராசியில் சந்திரன் இருந்தால் பல சிக்கல்கள் உண்டாகும். புகழ் குறைவாக இருக்கும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. முன்னோர் களின் சொத்து கிடைக்கும். மன பலத்தைக்கொண்டு குறையில்லா வாழ்க்கை வாழ்வார்.
10-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் சந்திர பகவான் இருந்தால் அரசாங்க விஷயத்தில் பல சிக்கல்கள் உண்டாகும். தந்தையால் சில பிரச்சினைகள் ஏற்படும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. பூர்வீகசொத்து வந்துசேரும். ஜாதகர் கடுமையாக உழைப்பார்.
11-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் சந்திரன் இருந் தால் சில சிக்கல்களைக் கடந்து பணவரவு இருக்கும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. முன்னோ ரின் சொத்து கிடைப்பதற்கு வாய்ப் பிருக்கிறது. அன்றாடச் செயல் களை ஜாதகர் சந்தோஷமாக செய்வார். மனதில் அவ்வப்போது கவலை தோன்றும்.
12-ஆம் பாவத்தில் செவ்வா யின் விருச்சிக ராசியில் சந்திர பகவான் நீசமடைகிறார். அவரால் செலவுகள் அதிகம் உண்டாகும். வெளித் தொடர்புகளால் பிரச் சினை ஏற்படும். சில நேரங்களில் நோயின் பாதிப் பிருக்கும். மனதில் சிக்கல்கள் உண்டாகும். அதன்காரண மாக வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது.
செல்: 98401 11534