மனிதர்களின் வாழ்வில் பல்வேறு விதமான இன்னல்களை வழங்கு பவர்கள் சர்ப்ப கிரகங்களான ராகு- கேதுக்கள்.
ஒருவருக்கு வாழ்க்கையில் எந்தப் பிரச்சினை வந்தாலும் அதில் ராகு- கேதுக் களின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். இதை சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம் என இரண்டாக வகைப்படுத்தலாம். சர்ப்ப தோஷத்திற்கும், கால சர்ப்ப தோஷத்திற்கும் நிறைய வித்தியாசமுண்டு. ஒருவருடைய ஜாதகத்தில் 1, 2, 7, 8-ஆம் இடங்களில் ராகு- கேதுக்கள் நின்றால் அது சர்ப்ப தோஷமாகும். ஒரு ஜாதகத்தில் லக்னம் உட்பட அனைத்து கிரகங்களும் ராகு- கேதுவின் பிடியில் அடைபட்டுக் கிடந்தால் அது காலசர்ப்ப தோஷம். இந்த தோஷம் 35 வயதுவரை துன்பமும், அதன்பிறகு இன்பமும் தரக்கூடியது. ராகுவில் தொடங்கி கேதுவில் முடியும் நிலைக்கு சவ்ய காலசர்ப்ப தோஷமென்றும், கேதுவில் தொடங்கி ராகுவில் முடியும் நிலைக்கு அபசவ்ய காலசர்ப்ப தோஷமென்றும் பெயர். ராகு, சனியின் பலன்களையும், கேது, செவ்வாயின் பலன்களையும் கொண்டது. காலசர்ப்ப தோஷம் அனைவருக்கும் துன்பம் தராது. ராகு- கேதுவுக்கிடையில் கிரகங்கள் இருந்தாலே உடனே காலசர்ப்ப தோஷம் கஷ்டப்படுத்து மென்று கூறிவிடமுடியாது. ராகு- கேதுவுடன் சேர்ந்த கிரகங்களின் தன்மைக்கேற்ப தோஷம் விலகலாம்.
ஒருசில ஜாதகங்களில் ராகு- கேதுவின் அச்சிலிருந்து விடுபட்டு லக்னம் அல்லது ஓரிரு கிரகம் வெளியில் நிற்கும். இதை விடுபட்ட கால சர்ப்ப தோஷமென்று கூறலாம். ராகு- கேதுவின் அச்சைவிட்டு விலகிய கிரகம், சர்ப்ப, காலசர்ப்ப தோஷத்தைவிட மிகுதியான துன்பத்தை காரகத் துவ, ஆதிபத்தியரீதியாக ஜாதகரை அனுபவிக்கச் செய்கிறது. ராகு- கேதுவின் அச்சிற்கு வெளியே ஒதுங்கிய கிரகங்களால் ஏற்ப டும் பலன்களைப் பார்க்கலாம்.
சூரியன்
சூரியன் ஆன்ம பலத்தை யும், தந்தையையும் பற்றிக் கூறும் கிரகம். ராகு- கேதுவின் அச்சை விட்டு சூரியன் விலகிநின்றால் ஜாதகருக்கு ஆன்மபலம் குறையும். உடல் எனும் சந்திரனுடன் ஒன்றுபடமுடியாத ஆன்மா வால் முழுமையாக தனித்து செயல்பட முடியாது. "ஏன் பிறந்தோம் பூமியில்' என்று கடனுக்காக வாழ்வார்கள். தந்தை மற்றும் தந்தைவழி உறவுகளின் ஆதரவு குறையும். எதையும் சிந்தித்துப் பகுத் தாய்ந்து நிதானமாக செயல்படத் தெரியாது. கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவற விடுவார்கள். தனது வாழ்க்கை பற்றி மிகைப்படுத்தலான பகல் கனவு களைக் காண்பார்கள். சொல்லாலும் செயலாலும் ஒன்றுபடமுடியாது. கோப உணர்வு மிகுதியால் அடங்கிப்போவதில் சிரமம் மிகும். நிர்வாகத் திறமை இருக்காது.
கண்நோய், தலை, உஷ்ணநோய் சார்ந்த பாதிப்பிருக்கும். கர்மாரீதியாக இதை உற்றுநோக்கினால் தந்தைவழி முன்னோர் கள் சிவன் கோவில் சொத்தை அபரிகரித்த குற்றம், அரசியலில் ஊழல்செய்த குற்றம், குடும்ப உறுப்பினர்களை முறையாக நிர்வகிக்காத, தந்தையை அவமதித்த குற்றத்தின் பதிவிருக்கும்.
பரிகாரம்: சிவ வழிபாடு செய்வது சூரியனை சுப வலுப்பெறச் செய்யும். சிவன் கோவில் மூலஸ்தானத்தில் எரியும் விளக்கிற்கு எண்ணெய் வாங்கித் தரவேண்டும்.
சந்திரன்
சந்திரன் உடலையும் மனதையும் குறிக்கும் காரக கிரகம். ராகு- கேது அச்சிற்கு வெளியே சந்திரன் நின்றால் ஜாதகர் தனித்து விடப்பட்டவர். உறவு களின் அன்பும் ஆதரவும் கிடைக்காது. அன்பிற்காக ஏங்குவார்கள். தந்தையைக் குறிக்கும் சூரியனும், தாயைக் குறிக்கும் சந்திரனும் ராகு- கேது அச்சினால் பிரிக்கப் படுவதால் சிலருக்கு தாயின் ஆதரவிருக் காது. சிலருக்கு தாய்- தந்தை இருவரின் ஆதரவும் இருக்காது. சிலரின் தாய்- தந்தை கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்வார்கள். சில பெற்றோர்கள் ஒரே வீட்டில் இருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர்போல் ஒட்டாமல் ஒப்புக்காக, ஊருக்காக வாழ்வார் கள். சூரியன் என்ற ஆன்மாவுடன் இணையமுடியாத மனமாகி சந்திரன் ஒரு நிலையில் நிற்காது. இங்குமங்கும் அலைந்துகொண்டே இருக்கும். நடக்காததை நடப்பதாக கற்பனை செய்வார்கள். சிலர் மன நோயாளியாக வாழ்வார் கள். பிறரின் வெறுப்பை எளிதில் சம்பாதிப்பார்கள். கர்மாரீதியாக இதை உற்று நோக்கினால் தாய்வழியில் 21 தலைமுறையாக, வாழாத பெண்கள் இருப்பார்கள். தினமும் கண்ணீர்விட்டு அழுத பெண் சாபம், தண்ணீரில் மூழ்கி தற்கொலை செய்த பெண் சாபம், வயதான தாயை முறையாகப் பராமரிக்காத குற்றம், ஒரு பெண்ணைப் பைத்தியமாக்குமளவுக்கு மன உளைச்சல் கொடுத்த குற்றப் பதிவிருக்கும்.
பரிகாரம்: பச்சரிசிமாவில் மாவிளக்கு செய்து பிரதோஷ வேளையில் நந்திக்கு நெய்தீபம் ஏற்றவேண்டும்.
செவ்வாய்
செவ்வாய் சொத்து, உடன்பிறந்த சகோதரம் மற்றும் பெண்கள் ஜாதகத்தில் கணவரைப் பற்றிக் கூறும் கிரகமாகும். செவ்வாய் ராகு- கேது அச்சிற்கு வெளியே நின்றால் திட்டமிட்டு செயல்படத் தெரியாது. செயல்திறன் இருக்காது. முன்யோசனையற்ற முரட்டுத்தனமான, மூர்க்கமான செயல்களால் தனக்குத்தானே பிரச்சினையை அதிகரிப்பார்கள். வீடு, வாகனம், சொத்து தொடர்பான சர்ச்சைகள், மன உளைச்சல் உண்டு. உடன்பிறந்த சகோதரர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்காது. ரத்தம், பல் தொடர்பான பாதிப்பிருக்கும். சிலருக்கு விபத்து, அங்கஹீனம் ஏற்படும். பெண்களுக்கு திருமண வாழ்வில் மகிழ்ச்சியைத் தருவ தில்லை. அல்லது திருமணம் நடப்பதில்லை. திருமணத்திற்குமுன்பு திருமணத் தடையை யும், பின்பு "ஈகோ'வால் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதில் பிரச்சினையையும் ஏற்படுத்துகிறது. செவ்வாய் முரட்டுத்தனமான கிரகம். எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியம் இருக்கும். செவ்வாய் முழுக்க முழுக்க தாய், தந்தைவழி கர்மாவை மிகுதியாகப் பிரதிபலிக்கும் கிரகமாகும். செவ்வாயால் ஏற்படும் பிரச்சினை கள் காசு, காமம், சொத்து என்ற மூன்று வினையின் விளைவுகளாகவே இருக்கின்றன.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமையும் பிரதோஷமும் இணைந்தநாளில் சிவனை வழிபடவேண்டும்.
புதன்
புதன் காதல், புத்திசாலித்தனம், கல்வி, தாய்மாமன், காலி நிலங்கள், பத்திரங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் காரக கிரகமாகும். ராகு- கேதுவின் அச்சைவிட்டு விலகிய புதன் நுண்ணறிவு, சமயோசித புத்தியை இழக்கும். புத்தியை ஆக்கலைவிட அழிவுக்கே மிகுதியாகப் பயன்படுத்துவார்கள். உயர்ந்த கல்வியையும், நல்ல பேராற்றலையும் குறைக் கும். கற்ற கல்விக்கு சம்பந்தமில்லாத தொழில் செய்ய நேரும். அண்டை, அயலாருடன் எல்லைத் தகராறு, ஆவணங்கள் தொடர் பான பிரச்சினைகள் இருக்கும். எளிதாக இளம்வயதில் காதல் திருமணத்தை நடத்தும். காதலால் ஏமாற்றத்தையும், அவமானத்தையும் சந்திப்பார்கள். மூன்றாம் உலகப்போரே நடந்த பாதிப்பு வாழ்கையில் இருக்கும். தாய்மாமன்வழி உறவில் பாதிப்பிருக்கும். அல்லது தாய்மாமனுக்குத் திருமணம் நடக்காது. சிலருக்கு வலிப்புநோய், நரம்பு தொடர்பான பாதிப்புகள் இருக்கும். சென்ற பிறவியில் இளம்பெண்ணைக் காதலித்து ஏமாற்றிய குற்றத்தின் பதிவால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
பரிகாரம்: வளர்பிறை ஏகாதசியன்று கிருஷ்ணர் கோவிலில் அவல்பொரி பாயசம் படைத்து நைவேத்தியம் செய்யவேண்டும்.
குரு
குரு என்றால் குழந்தை, பணம், பொருளாதாரம், ஆச்சாரம், மத நம்பிக்கை, தங்கம் போன்றவற்றைக் குறிக்கும் கிரகம். ராகு- கேது அச்சிற்கு வெளியே குரு நின்றால் திருமணத்தில் தடை அல்லது திருமணத்திற்குப்பின் பிரிவினையைத் தருகிறது. குழந்தையில்லாத காரணத்தால் ஏற்படும் பிரிவினைகளுக்கு குரு முக்கிய காரணமாகிறது. குழந்தை நல்ல நிலையில் உருவாகக் காரணமாக குரு இருப்பதால், குழந்தை பிறக்காமல் இருத்தல் அல்லது பிறந்த குழந்தையை வளர்க்க முடியாமை, காலதாமத புத்திர பாக்கியம், குழந்தை பாக்கியமின்மை, குழந்தைகளால் விரயம், பொருளாதார இழப்பு, குழந்தைகளால் மன வேதனைப்படும் நிகழ்வுகள் மிகுதியாகும். சிலருக்கு செயற்கை கருத்தரிப்பு முறையில் வாரிசு உருவாகும். சிலருக்கு அடிக்கடி கரு உருவாகிக் கலையும். நம்பிக்கை, நாணயத்திற்குக் காரக கிரகம் குருவாகும். ஒருவருக்கு மற்றவர்மேல் நம்பிக்கை, நாணயக் குறைவால் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் காரணமாகிறது. குறிப்பாக பணத்தால் ஏமாறுபவர்கள் ஜாதகத்தில் ராகு- கேதுவின் அச்சிற்கு வெளியே குரு இருக்கும். இவர்களுக்கு பொருளாதாரப் பற்றாக்குறை நிலவும். முறையற்ற வழியில் பொருளீட்ட நேரும். கடவுள் நம்பிக்கையற்று வாழ்தல் அல்லது சாமியர் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றிப் பிழைத்தல். கோவில் சொத்தை அபகரித்து வாழும் எண்ணம் மிகும். பிராமண சாபம் ஏற்படும். சுய கௌரவம் பாதிக்கும். சென்ற ஜென்மத்தில் கருக்கலைப்பு செய்தது, பணத்தை ஏமாற்றியது மற்றும் குரு துரோகம், பசுவதை செய்தவர்களுக்கு இதுபோன்ற வினைப் பதிவு இருக்கும்.
பரிகாரம்: குருமார்கள் மற்றும் வயதில் பெரியவர்களுக்கு வஸ்திரம் கொடுத்து ஆசிபெறவேண்டும்.
சுக்கிரன்
காதல் மற்றும் காமத்திற்குக் காரக கிரகமான சுக்கிரன் லக்னத்திற்கு வெளியே நின்றால் முறையற்ற காதல், கலப்புத் திருணம் ஏற்படும். ஆண் ஜாதகத்தில் மனைவியைக் குறிக்கும் சுக்கிரன் ராகு- கேதுவின் அச்சிற்கு வெளியே நின்றால் காலதாமதத் திருமணம் அல்லது திருமணம் நடக்காத நிலை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை ஏற்படுத்துகிறது. சில ஆண்களுக்குப் பெண்களால் அவப்பெயர் ஏற்படுகிறது. கணவன்- மனைவி உறவில் விரிசல் ஏற்படும். திருமண வாழ்வில் குழப்பங்கள் அதிகரிக்கும். பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் இருந்துகொண்டே இருக்கும். சிலர் சுக போகத்திற்காக அதிக செலவுசெய்வார்கள். ஆடம்பரத்திற்கும், அதிகப்படியான சந்தோ ஷத்திற்கும் சுக்கிரன் காரக கிரகமாக இருப்ப தால் சிலர் தகுதிக்குமீறி ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு வாழ்நாள் கடனாளியாகி றார்கள். தங்கம், வெள்ளி நகைகள் அடமானத் திற்குப் போகும் அல்லது இழக்கநேரும். பொருளாதார நெருக்கடி மிகும். அத்தை, அக்கா, மூத்த மகள் போன்ற உறவுகளால் பண இழப்பு, மன உளைச்சல் ஏற்படுகிறது. கணவனால் மனைவிக்கு பயனற்ற நிலை அல்லது மனைவியைப் பராமரிக்க முடியாத நிலை அல்லது பிரச்சினைக்குரிய மனைவியை அடைவார்கள். சென்ற பிறவியில் மனைவியை, உடன்பிறந்த சகோதரி களை அலட்சியம் செய்தவர்களுக்கு இது போன்ற வினைப்பதிவு இருக்கும்.
பரிகாரம்: வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலப் பொருட்களான பூ, மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை, பாக்கு கொடுத்து ஆசிபெறவேண்டும்.
சனி
ஒருவரின் வாழ்க்கைத் தரம் வேகமாக உயர்வதற்கும், தாழ்வதற்கும் சனி மிக முக்கிய காரணமாகும். சனி என்றால் கர்ம பந்தம். ராகு- கேது அச்சிற்கு வெளியே உள்ள சனி சுப வலுப்பெற்றால் வெளிநாட்டு வாழ்க்கையை ஏற்படுத்திவிடும். சீரான, சிறப்பான பொருளாதாரம் உண்டாகும். அசுப வலுப்பெற்றால் நடப்பதெல்லாம் நாராயணன் செயல் என எதைப்பற்றியும் கவலையில்லாமல், அடுத்தவர் உழைப்பில் உண்டு மகிழ்வார்கள். பிடிவாதம், அகம் பாவம், சந்தேக புத்தி அதிகரிக்கும். நீசத்தொழில் செய்வதில் ஆர்வம் ஏற்படும் அல்லது வருமானத்திற்கு வழியில்லாது போகும். குறைந்த வருமானத்திற்கு அதிகநேரம் உழைத்தல், இரவுவேலை. தொழில் முடக்கம், தொழில் கூட்டாளிகளால் ஏமாற்றப்படுதல், தொழிலாளர்களால் மன உளைச்சல், வேலை இழப்பு, பங்காளிகளுடன் கருத்து வேறுபாடு, தனிமைப்படுத்தப்படுதல், சிறைப் படுதல், முறையற்ற நட்பு, குலதெய்வக் குற்றம் அல்லது சாபம் ஏற்படும். குலதெய்வக் கோவிலுக்குச் செல்லமுடியாத நிலை அல்லது குலதெய்வ வேண்டுதல் நிறைவேற்றுவதில் தடை, தாமதம் உண்டாகும். முன்னோர்வழி கர்மவினைத் தாக்க நோய் களான சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், நீண்டநாள்- வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடவேண்டிய நோய், முட்டுவலி, மூட்டுத் தேய்மானம், மூட்டு அறுவை சிகிச்சை, உடல்வலி, கை- கால் வலி, உடல் அசதி உருவாகும். ஆயுள் குறைபாட்டை ஏற்படுத்தும். சென்ற பிறவியில் உழைத்த கூலியைக் கொடுக்காதவர்கள், முன்னோர் களை முறையாக வழிபடாதவர்களுக்கு, குலதெய்வ சொத்தை அபகரித்தவர்களுக்கு இந்த வினைப்பதிவு இருக்கும்.
பரிகாரம்: சனிப்பிரதோஷ நாட்களில் கருப்பு உளுந்து தானம் தரவும். பன்னிரு பாவக அதிபதிகளும் ராகு- கேது அச்சிற்கு வெளியே நிற்பதால் ஏற்படும் பலன்களை அடுத்து பார்க்கலாம்.