சென்ற இதழ் தொடர்ச்சி...
பன்னிரு பாவகாதிபதிகளும் ராகு- கேது அச்சிற்கு வெளியே நிற்பதால் ஏற்படும் பலன்களைக் காணலாம்.
லக்னம்
லக்னம் என்பது ஜாதகரைப் பற்றிக் கூறுமிடம். ராகு- கேது அச்சிலிருந்து லக்னம் மட்டும் விலகி வெளியே நின்றால் ஜாதகர் நிலையற்ற தன்மையுடையவராக இருப்பார். சுய முடிவெடுக்கத் தெரியாது. தன் சொந்த உழைப்பால் முன்னுக்கு வரமுடியாது. சரியான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்காமல் கஷ்டப்படுவார்கள்.
இவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கிடைக்கக் கூடிய வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி னால் மட்டுமே உன்னத நிலையை அடைய முடியும். குடும்ப உறுப்பினர்களின் குணத்திலிருந்து மாறுபட்டவர்களாக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்களால் ஒதுக்கப்படுவார்கள் அல்லது அவமானப்படுத்தப்படுவார்கள்.
அந்த கிரக காரகத்துவம் சார்ந்த விஷயங்களால் பயனற்றவர்களாக இருப்பார்கள்.
பரிகாரம்: அமாவாசைத் திதியில் சிவ வழிபாடு செய்யவேண்டும்.
இரண்டாமதிபதி
இரண்டாமிடம் என்பது தனம், வாக்கு, குடும்பம் பற்றிக் கூறுமிடமென்பதால் இரண் டாமதிபதி ராகு- கேது அச்சிற்கு வெளியே இருந்தால் குடும்ப உறவுகளுடன் ஒட்டமாட் டார்கள். நிறைவேற்றமுடியாத வாக்கைக் கொடுத்துவிட்டு வருந்துவார்கள். அத்துடன் அவர்களுக்கு நிலையான வருமானம் கிடைக் காது. சுய தொழில் செய்பவர்களுக்கு நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். குடும்ப உறவுகளால் பணப் பிரச்சினை எப்போதும் இருக்கும். குடும்பத் தேவையை நிறைவுசெய்ய அடிக்கடி வேலை மாறுவார்கள் அல்லது கடன் பெறுவார் கள். கண் பாதிப்பு ஏற்படும். சிலருக்கு நிலை யான திருமண வாழ்க்கை அமையாது. சிலர் ஊருக்காக ஒரு குடும்பம், தன் சுய இன்பத்திற்கு ஒரு குடும்பமென்று வாழ்வார்கள். பிறரின் விஷயத்தில் தலையிடாமலிருப்பது பாதிப்பைக் குறைக்கும்.
பரிகாரம்: அடிக்கடி தொழிலில் இழப்பு களை சந்திப்பவர்கள் பௌர்ணமி திதியில் சிவ வழிபாடு செய்யவேண்டும்.
மூன்றாமதிபதி
மூன்றாமிடம் என்பது முயற்சி ஸ்தானம், சகாய ஸ்தானம், இளைய சகோதரம் பற்றிக் கூறுமிடம். மூன்றாமதிபதி ராகு- கேது அச்சை விட்டு விலகிநின்றால் ஒரே இடத்தில் இருக்க முடியாமல் அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்து கொண்டே இருப்பார்கள். அடிக்கடி பயணம் ஏற்பட்டு உடல்நிலையில் பாதிப்பேற்படும். முறையான திட்டமிடுதல் இருக்காது. அண்டை, அயலாருடன் கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருக்கும். சொத்துகள் தொடர் பான ஆவணங்களான பட்டா, சிட்டா ஆகிய வற்றில் பிழை இருக்கும். சிலரின் இளைய சகோதரம் வெளிநாட்டில் வாழ்வார்கள். சிலருக்கு இளைய உடன்பிறப்புகளால் அதிக பிரச்சினைகள் ஏற்படும். அவர்களுக்காக கடன் பட வேண்டிய சூழல் ஏற்படும். இவர்கள் யாரிட மும் கடன் வாங்கவும் கூடாது; கடன் கொடுக்க வும் கூடாது. இவர்கள் கடன் வாங்கினால் கடனைத் திரும்ப செலுத்துவது கடினம். குறிப்பாக ஜாமின் போடக்கூடாது. கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் முன்னேற்றம் தடைப்படும்.
பரிகாரம்: மூன்றாம் பிறையன்று சந்திர தரிசனம் செய்துவர சகாயங்கள் உண்டாகும்.
நான்காமதிபதி
நான்காமிடம் சுகஸ்தானம். தாயார், வீடு, வாகன யோகம், கல்வி, கால்நடைகள் பற்றிக் கூறுமிடம். 4-ஆமதிபதி ராகு- கேது அச்சை விட்டு வெளியே இருந்தால் தாய் மற்றும், தாய்வழி உறவுகளின் ஆதரவு குறைவுபடும். தாய்வழி பூர்வீக சொத்துகளில் வில்லங்கம் ஏற்பட இவரே காரணமாக இருப்பார். தாய்க்கு அடிக்கடி ஆரோக்கியக் குறைபாடிருக்கும். படிப்பில் ஆர்வம் குறையும். உரிய வயதில் கவனமாகப் படிக்காமல் பிற்காலத்தில் வருந்து வார்கள். வீடு, வாகன யோகம் தாமதமாக அமையும் அல்லது பராமரிப்பு செலவு அதிகரிக்கும். இவர்களுக்கு வாகனம், சொத்து, படிப்பு சார்ந்த விஷயங்களுக்காக கடன் பெற்றால் திரும்ப அடைப்பதில் சிரமம் ஏற்படுமென்பதால், திரும்பச் செலுத்தும் திறனறிந்து கடன் பெறவேண்டும். இவர்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு, ரியல் எஸ்டேட் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
இதயம், நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. சரியான உணவு, உறக்கமில்லாமல் சுகம் கெடும்.
பரிகாரம்: சங்கடஹர சதுர்த்தியில் விரதமிருந்து விநாயகரை வழிபட வீடு, வாகனம், கடன் தொடர்பான இன்னல் தீரும். அனைத்து விதமான சுகங்களும் தேடிவரும்.
ஐந்தாமதிபதி
5-ஆமிடம் குலதெய்வம், பூர்வீகச் சொத்து, அதிர்ஷ்டம் மற்றும் குழந்தைகள் பற்றிக் கூறுமிடம். ஐந்தாமதிபதி ராகு- கேது அச்சை விட்டு வெளியே இருந்தால் குலதெய்வ அனுக் கிரகம் இருக்காது. ஆன்மபலம் குறையும்.
அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்காது. கிடைத்த அதிர்ஷ்டத்தைத் தக்கவைக்கத் தெரியாமல் தவறவிட்டு வருந்துவார்கள். பூர்வீக சொத்திற் காக மிகவும் சிரமப்பட நேரும். சொத்து கிடைக் காது அல்லது கிடைத்தாலும் பயன்படாது. புத்திரப் பிராப்தம் குறைவு. இவர்களுக்கு குழந்தைப் பிராப்தம் இல்லாமல் போய்விடும் அல்லது மிகவும் தாமதப்படுத்தும். இவர்களுக்கு குழந்தைகள்மூலம் தர்மசங்கடங்களும் பிரச்சினைகளும் ஏற்படும். குழந்தைகள் சார்ந்த விஷயங்களில் இவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். தவறான காதலர்களைத் தேர்வுசெய்து வாழ்வைத் தொலைப்பதில் முன்னணியில் நிற்பவர்கள். ஷேர் மார்க்கெட், பங்கு வர்த்தகத்தில், ரேஸ், லாட்டரி போன்றவற்றில் பணம் விரயமாகும் என்பதால் அவற் றைத் தவிர்க்கவேண்டும்.
பரிகாரம்: வளர்பிறை பஞ்சமி திதியில் சிவசக்தி வழிபாடு செய்துவர பூர்வபுண்ணிய ஸ்தானம் பலம்பெற்று சுபப் பலன்கள் நடைபெறும்.
ஆறாமதிபதி
6-ஆமிடம் உத்தியோகம். நோய், எதிரி, கடன் பற்றிக் கூறுமிடம். ஆறாமதிபதி ராகு- கேது அச்சிலிருந்து விலகியிருந்தால் நிலையான தொழில், உத்தியோகம் அமையாது. தொழில், உத்தியோகம் என மாறிமாறி காலத்தைக் கடத்துவார்கள். உத்தியோகத்தில் முன்னேற்றமும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் அவ்வளவு சீக்கிரமாக வராது. இவர்கள் கிடைக்கும் உத்தியோகத்தைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும்.
அதிக முதலீட்டில் சொந்தத் தொழில் செய் தால் கடன் பிரச்சினை அதிகரிக்கும். இவர்கள் கடன் வாங்கவும் கூடாது; கடன் கொடுக்கவும் கூடாது. எப்போதும் எதையாவது நினைத் துக் கவலைப்பட்டு நோயை வளர்ப்பவர்கள். நோய்க்கு வைத்தியம் செய்து கடன் உருவாகும். மனக் கட்டுப்பாடு இல்லாதவர்கள். மன சஞ்சலம் மிகுதியாக இருக்கும். சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறனும் இருக்காது. கடன் களால் அதிகமான வழக்கு, நடவடிக்கைகளில் சிக்கநேரிடும்.
பரிகாரம்: வளர்பிறை சஷ்டி திதியில் சரபேஸ்வரரை வழிபடவும்.
ஏழாமதிபதி
7-ஆமிடம் வாழ்க்கைத் துணை, நண்பர் கள், தொழில் கூட்டாளிகள் பற்றிக் கூறுமிடம்.
7-ஆமதிபதி ராகு- கேது அச்சிலிருந்து விடுபட் டிருந்தால் திருமணம் காலதாமதமாகும். சிலர் வாழ்க்கைத் துணை பற்றிய மிகைப் படுத்தலான எதிர்பார்ப்பால் நல்ல வரனைத் தவறவிடுவார்கள். உத்தியோகம், தொழில் நிமித்தமாக தம்பதிகள் அதிக காலம் பிரிந்து வாழ்வார்கள். தசாபுக்தி பலவீனப்பட்டால் நிரந்தரமான பிரிவினையும் உண்டு. அல்லது கணவன்- மனைவிக்குள் பிரச்சினைகள் ஏற்பட்டு குடும்ப வாழ்வு சந்தோஷமில்லாமல் இருக்கும். அதேபோல் இவர்கள் கூட்டுத் தொழில் செய்யக்கூடாது. அல்லது அடிக்கடி கூட்டாளிகளை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அத்துடன் சம்பந்திகளிடம் எட்டி நிற்க வேண்டும். ஒட்டி உறவாடக் கூடாது.
பரிகாரம்: சப்தமி திதியில் சிவனுக்கு ரோஜா மாலை அணிவித்து வழிபட தம்பதி களுக்குள் காதல் மலரும்.
எட்டாமதிபதி
8-ஆமிடம் என்பது ஆயுள், ஆரோக்கியம், வம்பு, வழக்கு, தீராத நோய், கடன் பற்றிக் கூறுமிடம். அஷ்டமாதிபதி ராகு- கேது அச் சிற்கு வெளியே நின்றால் ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான பய உணர்வு இருந்துகொண்டே இருக்கும். திடீரென்று விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. இவர்கள்மேல் அடிக்கடி வழக்கு பதிவாகும். தவறே செய்திருந்தால்கூட வழக்கிலிருந்து எளிதாக விடுபடுவார்கள். இவர்களுக்கு பரம்பரை மரபணு தொடர்பான தீராத நோய் இருக்கும். அதேபோல் கடனும் தீராது. ஒரு கடன் வாங்கி மற்றொரு கடனை அடைப்பார்கள். ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ், பி.எப் இவர்களுக்கு உதவாது. சொந்தத் தொழிலில் நிலையற்ற வருமானமே நீடிக்கும். வரும் வருமானத்தை தாமே கெடுத்துக்கொள்வார்கள். இவர்களுக்கு வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். சுய தொழில் சிறப்பல்ல. பரிகாரம்: தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு எலுமிச்சை மாலை சாற்றி வழிபட அவமானம், தீராத நோய், கடன், வம்பு வழக்குகள் அண்டாது.
"ஓம் த்ரயம்பகம் யஜாமஹே
சுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாரு கமிவபந்தனாத்
ம்ருத்தியோர் முஷியமாம்ருதாத்'
என்னும் மகா மிருத்யுஞ்ஜய மந்திரத்தைப் பாராயணம் செய்து வர ஆயுள், ஆரோக்கியம் சிறக்கும்.
ஒன்பதாமதிபதி
9-ஆமிடம் என்பது பாக்கிய ஸ்தானம், தந்தை, தந்தைவழி சொத்துகள், ஆன்மிக நாட்டம், தீர்த்த யாத்திரை, வெளிநாட்டுப் பயணம், உயர்கல்வி பற்றிக் கூறுமிடம். 9-ஆமதி பதி ராகு- கேது அச்சிலிருந்து விலகியிருந்தால் தந்தையின் ஆதரவு குறையும். அல்லது தந்தையைப் பிரிந்து வாழ்வார்கள். அல்லது தந்தைக்கு ஆரோக்கியக் குறைபாடு மிகுதியாக இருக்கும். பாக்கிய பலம் குறைந்தவர்கள். முன்னோர்களுக்கு முறையான பித்ருக் கடன் தீர்க்க முடியாதவர்கள். இவர்கள் பெரும் பாலும் வெளிநாட்டில் வசிப்பார்கள். வெகு சிலர் வெளிநாட்டுக் குடியுரிமைபெற்று அங்கேயே தங்கிவிடுவார்கள்.
மத நம்பிக்கை, தீர்த்த யாத்திரை செல்லுதல், தெய்வத் திருப்பணி, தானதர்மம் செய்வதில் ஆர்வம் குறையும். சிலர் காலம்கடந்து உயர்கல்வி, ஆராய்ச்சிப் படிப்பு படிப்பார்கள்.
பரிகாரம்: பௌர்ணமியில் குலதெய்வத்தை வழிபட மாற்றமும் ஏற்றமும் உறுதி.
பத்தாமதிபதி
10-ஆமிடம் என்பது கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம்; புகழ், அதிகாரம், அரசாங்க உத்தியோகம் ஆகியவை பற்றிக் கூறுமிடம். 10-ஆமதிபதி ராகு- கேது அச்சிற்கு வெளியே நின்றால் குடும்பத்தின் முக்கியமான கர்ம காரியங்களில் கலந்துகொள்வதில் தடை யிருக்கும். கர்மம் செய்ய புத்திரன் இருக்கும் வாய்ப்பு குறைவு. அரசாங்க உத்தியோகம் கிடைப்பதில் தடை, தாமதம் நிலவும்.
அல்லது அரச உத்தியோகத்தால் கிடைக்கும் புகழ், அந்தஸ்து, கௌரவம் மட்டுப்படும். அரசியல், அரசாங்க ஆதாயம் குறைவுபடும். பல தொழில்செய்து பண விரயத்தையும், நஷ்டத்தையும் சந்திப்பவர்கள். பல தொழில் அனுபவமுண்டு. அதேபோல் தொழில் சார்ந்த விஷயத்திற்கான உதவி, முன்னேறுவதற்கான வாய்ப்புகள் தேடிவரும்போது அதனைத் தவறவிடுவார்கள்.
10-ஆமதிபதிக்கு சுப வலுப்பெற்ற குரு லக்ன சுபர் சம்பந்தமிருந்தால் பன்னாட்டு வணிகத்தில் கொடிகட்டிப் பறப்பார்கள். வெகுசிலர் உத்தியோகத்திலிருந்துகொண்டே சுயதொழிலிலும் பிரகாசிப்பார்கள்.
பரிகாரம்: தசமி திதியில் சுத்தமான பசும்பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
பதினொன்றாமதிபதி
11-ஆமிடம் தொழில் மற்றும் பிற வழிகளில் ஏற்படும் லாபம், வழக்குகளில் வெற்றி, மூத்த சகோதர- சகோதரி, சித்தப்பா, இளைய மனைவி ஆகியவை பற்றிக் கூறுமிடம்.
பதினொன்றாமதிபதி ராகு- கேது அச்சிலிருந்து ஒதுங்கியிருந்தால் மனதில் நிறைவேறாத, நிறைவேற்ற முடியாத ஆசைகள், எண்ணங்கள் மிகுதியாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் மற்றும் அங்காளி பங்காளிகள் சத்ருவாக செயல் படுவார்கள். அவர்களுடன் சொத்து, சுகம் தொடர்பான வழக்கிருக்கும். சிலர் கிளிபோல் மனைவி இருந்தாலும் குரங்குபோல் ஒரு வைப்பாட்டி வைத்து வாழ்வைத் தொலைப்பார்கள். இளையதாரத்தால் சொத்துகளை இழப்பார்கள். வேலை, தொழில்மூலம் வரும் வருமானத்தினால் குடும்பத்தை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு கடன்பட நேரிடும். இதற்கு குரு பார்வை, லக்ன சுபர்களின் சம்பந்தமிருந்தால் பல வழிகளில், பல தொழில்களில் சிறிய முதலீட்டில் பெரிய லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டச் சொத்து, புதையல், லாட்டரி, போட்டி, பந்தய லாபமுண்டு. நண்பர்கள் மற்றும் வேலையாட்கள் ஆதரவுண்டு.
மூத்த சகோதர- சகோதரிகள், சித்தப்பா, இளைய மனைவிமூலம் பணவரவும், ஆதாயமும், உதவியும் உண்டாகும்.
பரிகாரம்: ஏகாதசி திதியில் சத்திய நாராயணரை வழிபடவேண்டும்.
பன்னிரண்டாமதிபதி
12-ஆமிடம் அயன, சயன ஸ்தானம், தலைமறைவு வாழ்க்கை, விரயம், அந்நிய தேச வாசம், வறுமை ஆகியவை பற்றிக் கூறுமிடம். 12-ஆமதிபதி ராகு- கேது அச்சிலிருந்து விலகியிருந்தால் கட்டாந்தரையில், மரத்தடியில் படுத்தாலும் மன சஞ்சலமின்றி நிம்மதியாகத் தூங்குவார்கள். வாழ்க்கையை வந்தவாக்கிலும், போனவாக்கிலும் விதிமேல் பழிபோட்டு எதார்த்தமாக வாழ்வார்கள். எதற்காகவும் பெரியதாக அலட்டமாட்டார்கள். எதிலும் தடை, தாமதங்கள் ஏற்படும். தேவையற்ற பழக்க வழக்கங்கள் ஏற்படும். வீண் செலவுகளால் குடும்பத்தில் குழப்பமேற்பட்டு குடும்பத்தைப் பிரியநேரிடும். சிலர் வைத்தியத்திற்காக அதிகம் கடன் பெறுவார்கள். சிலருக்கு வரவிற்கு மேல் விரயச்செலவு இருந்துகொண்டே இருக்கும். வெளியூர், வெளிநாட்டில் வாழ்ந்தால் வாழ்க்கை வசந்தமாகும். பல தொழில் அனுபவங்கள் இவர்களிடம் இருக்கும். இவர்களுடைய தொழில்ஞானம் பிறருக்குப் பயன்படும். ஆனால் இவர்களுக்குப் பயன்படாது. பலர் கௌரவ அடிமையாக அல்லாடுகிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. வேலையாட்களை வைத்திருக்கும் முதலாளிகளுக்கு இலவச ஆலோசனையால் நல்ல முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். சிலர் குடும்பத்தில் நிம்மதியில்லாத நிலை அல்லது கடன் பிரச்சினைக்காக தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள்.
பரிகாரம்: அமாவாசை, பௌர்ணமி நாட்களில் சித்தர்களை வழிபடவேண்டும். உடலும், உள்ளமும் குளிர புனித நீராட ஆன்மபலம் பெருகும்.
கர்மபந்தம் இல்லாத ஒருவருடன் சம்பந்தம் ஏற்படாது. அந்தவகையில் ராகு- கேது அச்சிலிருந்து ஒதுங்கிய கிரகம முழுமையான கர்மபந்தம். பூர்வஜென்ம விட்டகுறையின் தொடர்ச்சி.
செல்: 98652 20406