தேவ குருவின் சிறப்புக்கள்
குருவருள் திருவருள் என்பார்கள். ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தா லும் குருவின் பலம் மிக முக்கியம். அவர் ஜாதகப்படி சுபராக, அசுபராக வந்தாலும் அவர் எந்த வகையிலாவது பலம்பெற்று அமைந்திருக்க வேண்டும். வருடம் ஒருமுறை மாறக்கூடிய குருப்பெயர்ச்சியைக்கூட படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை சுப காரியங்கள் நடக்குமா, வேலை கிடைக்குமா, புதிய முயற்சி, தொழில்கள், பாரின் தொடர்பு, பண விசயம், பதவி, சொத்துக்கள், பிரிந்தவர்கள் இணைவது, தெய்வ பலம், பரிகாரங்கள் இப்படி குருவின் சிறப்புக்களை நாம் சொல்லிக்கொண்டே போலாம். அப்படிபட்ட குருபகவான் ஒவ்வொருவருக்கும் எப்படி அமைந்தால் வாழ்வில் மாபெரும் சிறப்புக்களை பெறக்கூடும் என்பதை எல்லோரும் எளிதாக அறியும் வண்ணம் குருவின் சிறப்புக்கள்.
குருவின் பார்வை மிகப்பெரிய சிறப்புக்கள் ஆகும். 5, 7, 9 இவரது பார்வை. இதில் இரு திரிகோண ஸ்தானங்கள் இவர் பார்வையில் இருப்பது சிறப்பு, ஒரு கேந்திர பாவம்.
அடுத்ததாக இவர் ஒரு ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் அங்கிருந்து 5, 7, 9- ஐ பார்க்கும்போது 12 ராசிகளில் சரம், ஸ்திரம், உபயம் என்ற 3 பிரிவுகள் உள்ளன. இந்த 3 பிரிவுகளையும் தன்னுடைய 3 பார்வைகள்
அமைந்திருப்பது எந்த கிரகத்திற்கும் இல்லாத ஒரு சிறப் பாகும். இயற்கை சுபர் கோடான கோடி தோஷங்களை நீக்ககூடியவர். ஒரு ஆணுக்கு பெண்ணின் யோகத்தை பார்க்க சுக்கிரனை பார்ப்பதுபோல் ஒரு பெண்ணுக்கு புகுந்த இடம், நல்ல கணவன் பாக்கியம் அமைய குருபகவான் மிக முக்கியமானவர். அது மட்டுமல்ல; தம்பதியர்கள் சந்தோஷமாக இருந்து, சந்தான பிராப்தி அமைய குருபகவானின் அருள் கடாட்சியம் தான் முக்கியம். அதனால்தான் இறைவனே நவகிரகங்களில் பணம் என்ன தனத்தையும் இதனை ஆளக்கூடிய தன்னுடைய வாரிசையும் இவர்வசம் முக்கியமாக ஒப்படைத்துள்ளது. தன காரகன், புத்திர காரகன் ஆவார்.
விஞ்ஞான ஆய்வின்படி சூரியனுக்கு சுமார் 48,00,00,030 மைல்களுக்கு அப்பால் உள்ளது.
குருபகவானைப் பற்றிய வரலாறு
இந்திரனுக்கும் தேவாதி தேவர்களுக்கும் குருவாக இருந்தமையால்தான் குரு என்றும், அது மட்டுமல்ல அரசன், பிரகஸ்பதி, அந்தணன், இப்படி இவருக்கு சிறப்பான புனைப் பெயர்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். இவர் பார்வைபட்ட இடம் எல்லாம் கோடி தோஷங்களை நிவர்த்தி செய்து நற்பலன்களை தருகிறார். பாவகிரகங்களில்மீதுகூட இவர் பார்வை செலுத்தும்போது அவர்கள்கூட தங்களுடைய தீய பலன்களை குறைத்து குரு பார்வையால் நற்பலன்களை வழங்குகின்றனர். அதனால் தான் சாஸ்திர விற்பன்னர்கள் குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறி இருக்கிறார்கள். இப்படிபட்ட குருபகவானை கருணைக்கடலை கலங்கமற்றவரை, அறிவில் உறைவிடமானவரை நவகிரகங்களில் சிறந்தவர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சி பூக்களுக்கு நிகராக குருபகவானை சொல்லபடுகிறது. இவர் 1 வருட சஞ்சார கிரகம் ஆவார்.
ஜாதகமும் சட்பலத்தில் குருபகவான்
உங்கள் ஜாதகத்தில் இந்த குருபகவான் திரிகோண வீடுகளில் எந்த லக்னத்தில் இடம் பெற்றாலும் நன்மையே.
அத்துடன் பொதுவாக 2, 5, 7, 9-ஆம் இடங்களில் இருக்கும்போது பெரிய பாதிப்புகள் தராமல் ஓரளவு யோக பலனை தருவார். இதே இடங்களில் கோட்சாரப்படி உங்கள் ராசிக்கு அவர் சஞ்சரிக்கும்போது 1 ஆண்டுகாலம் சாதகமான பலனை தருவார். பொதுவாக கேந்திரத்தில் குரு இருப்பது தோஷமாகும். திரிகோணம் பெற்று (1, 5, 9) கேந்திரத்தில் இருந்தால் யோகமே. திரிகோணம் இல்லாமல் கேந்திரத்தில் குரு இருந்தால் தோஷமே. உபய லக்னங்களுக்கு மட்டும் குரு மறைவது நன்மை. இரண்டாவதாக திரிகோணத்தில் யோகமே. இதர பாவத்தில் பலம் இல்லை.
சட்பலம் என்ற ஆய்வை பார்க்கும்போது வர்க்க சக்கரங்கள்மூலமாக 16 சோடச வர்க்கங்களில் குருபகவான் பலம் அறிந்து பின் 1. ஸ்தான பலம் (Positional streanth),, 2. கால பலம் (Temparol streangth), 3. திருக் பலம் (Aspect streangth), 4. திக்கு பலம் (Directionall streanth), 5. சேஷ்ட்டா பலம் (Motional streangth) 6. நைசர்க்கிய பலம்(Natural streangth) இந்த 6 வகை பலங்களில் ஸ்தான பலம் 275 மதிப்பெண்கள், திருக்பலம் 50 மதிப்பெண்கள், திக்கு பலம் 58 மதிப்பெண்கள், கால பலம் 87 மதிப்பெண்கள், சேஷ்ட்டா பலம் 83 மதிப்பெண்கள், நைசர்க்கிய பலம் 57 மதிப்பெண்கள் இந்த மதிப்பெண்களுக்குமேல் பெற்றிருக்கவேண்டும். சட்பலத்தில் மொத்த மதிப்பெண்களாகிய 650 மதிப்பெண்கள் பெறவேண்டும் இதற்குமேல் இருந்தால் நன்மை. இதனால் குருவின் பலம் நன்கு அமையும்.
குருவினால் உருவாகும் ராஜயோகங்களும் உதாரண ஜாதகங்களும்
ஹம்ச யோகம்: லக்னத்திற்கு கேந்திரத்தில் (1, 4, 7, 10-ல்) குரு உச்சம், ஆட்சியாக அமைந்து இருப்பாரானால் அது அம்ச யோகமாகும். இதனால் ஜாதகர் முகவசியமாகவும், புகழ்மிக்கவராகவும், ஆராய்ச்சி திறனும், மிகப்பெரிய பதவிகளையும் பணத்தை நன்கு சேமிக்க கூடியவராகவும் இருப்பார். எந்த வகையிலாவது ஒரு துறையில் ஏற்றம் பெறுவார்.
கோடீஸ்வர யோகம்: தனத்தில் அதிபதி குருபகவான் கேதுவுடன்கூடி லக்னத்திற்கு கேந்திர இடம்பெற்றால் இது கோடீஸ்வர யோகமாகும். இதனால் அந்த ஜாதகர் சாதரண நிலையில் இருந்தால் பெரிய அளவில் தொழில் செய்து சம்பாதிப்பார். எந்த வகையிலாவது எதிர்பாராத நல்லதொரு வாழ்க்கை இந்த யோகத்தால் ஜாதகர் அடையமுடியும்.
அங்கிச யோகம்: உங்க லக்னத்தில் இருந்து 1, 4, 7, 10-ல் குரு நட்பு, ஆட்சி, உச்சமாக அமையின் அது அங்கிச யோகமாகும், இதனால் உடலில் விந்துவை அதிகமாக உற்பத்தி செய்யும் தன்மை உடையவராக இருப்பர். தன் மூளையை நன்கு பயன்படுத்துவீர்கள். நல்ல புத்திர அம்சங்களை, சமூகத்தில் ஒரு மதிப்புள்ள வராக இருப்பார். உடல் அமைப்பை நன்கு பெற்று இருப்பவர். ஆனால் பெண் மோகம் அதிகம் இருக்கும்.
கஜகேஸரி யோகம்: குருவுக்கு கேந்திரத்தில் 1, 4, 7, 10-ல் சந்திரன் இடம் பெற்றால் இந்த யோகம். இதன் பலன் ஜாதகத்தில் எவ்வித தோஷம் இருப்பின் அவை நீங்கும். அரசனுக்கு சமமான வாழ்க்கை வாழ்பவர். ஏதேனும் ஒரு துறையில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் பிரபலமாக கூடியவர். எத்தனை கஷ்டம், நஷ்டம் ஏற்பட்டாலும் துவண்டுவிட மாட்டீர்கள். எப்பொழுதும் பண வருவாய் இருந்துகொண்டே இருக்கும்.
மருத யோகம்: குருவும், சுக்கிரனும் ஒருவருக்கு ஒருவர் கேந்திரத்தில் நீசம் பகையில்லாமல் இடம்பெறின் இந்த யோகம் உண்டாகும். இதனால் நல்ல தந்திரசாலியாகவும், இத்துடன் ஏதேனும் ஒரு நுட்பத்தை அறிந்து எந்த வகையிலாவது பலர் பாராட்டும் அளவில் ஜாதகர் ஈடுபடக்கூடும்.
சிவராஜ யோகம்: குருவும்- சூரியனும், சிம்மம், தனுஷ், மீனம் இவற்றில் இடம்பெற்றிருந்தால் இந்த யோகம் உண்டாகும். இதனால் அரசு பீடத்தை எந்தவகையிலும் ஆளக்கூடியவராக இருப்பார். அரசு சகாயம் உடையவர். தன் பிறப்பு இடத்தின்மூலம் பெருமை அடைபவர். பேச்சால், செயலால், எதையும் சாதிப்பவர், சிவ பக்தர். எதையும் நன்கு நிர்வகிக்கும் ஆற்றல் உடையவர்.
அசுபர யோகம்: குருவும், சந்திரனும் லக்னத்திலிருந்து லக்னாதிபதி சுபர் களுடன்கூடி இருந்தால் இந்த யோகம். இதன் பலன் அரசியலில் ஈடுபாடு, பல பொது சமூக சேவை கள் அல்லது டிரஸ்டு நிறுவனம் இதுபோன்றவற்றில் கௌரவ பதவி, பவர், பணியாட்களை பெற்று இருப்பவர். சரித்திர சான்றாககூட திகழ்பவர்.
குரு சந்திர யோகம்: குருவுக்கு திரி கோணத்தில் 1, 5, 9-ல் குருவும், சந்திரன் நீசம், பகை இல்லாமல் இருப்பின் இந்த யோகம். இதனால் கடைசிவரை ஜீவனக் கஷ்டம் இராது. முகஸ்துதி உடையவர். முன்னேற் றம் உள்ளவர். துன் தேஜஸை நன்கு அமையப் பெற்றவர். ஏதேனும் ஒரு துறையில் பெயர் புகழுடன் விளங்ககூடும். உங்க சொல்லுக்கு மக்கள் மதிப்பு இருக்கும்.
குரு மங்கள யோகம்: குருவுக்கு திரிகோணத்தில் 1, 4, 7, 10-ல் செவ்வாய், பகை.
நீசம் இல்லாமல் இடம்பெற்று இருப்பது இந்த யோகமாகும். இதன் பலன் மணி, மனை, தோட்டம் இப்படி பூமி இனங்களினால் பயன் பெறுவீர்கள். ஸ்திர சொத்தின்மூலம் செல்வம் சேரும். எதையும் சாதிக்க கூடியவர். வாழ்வில் எந்தவகையிலும் போராடி எப்படி யும் தான் நினைத்ததை அடைய நினைப்பவர்.
மரகத யோகம்: குருவும். புதனும் கேந்திர திரிகோணத்தில் குறிப்பாக இயற்கை சுபக்கிரக ராசியில் இடம்பெற்று இருப்பது இந்த யோகம். இதனால் படிப்பு, பட்டம், தொழில், கதை, கவிதை, இதன் ஈடுபாடு எந்தவகையிலாவது சில துறைகளிலும் நன்கு பிரகாசிக்க கூடியவராக இருப்பீர்கள். லீகல் அட்வைசராக இருப்பவர்களுக்கு இந்த யோகம் கூடியமட்டும் அமைந்து இருக்கும்.
குறிப்பாக குருபகவானையும் தட்சிணா மூர்த்தியையும், வியாழக்கிழமையில் வழிபடு வதுடன் இவர்களுக்கு முல்லை, செம்மங்கி மலர்களை மாலையாக சூடி, மஞ்சள் வஸ்திரம் சாற்றி, கொண்டக்கடலை, நெய் பொங்கல் நெய்வேத்தியம் செய்து, அர்ச்சனை, ஆராதனை செய்து அபிஷேகமும் செய்து வழிபடவும். கரும்பு சாற்றினால் தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் செய்வதும், யானைக்கு ஏதேனும் தானம் செய்யலாம். குறிப்பாக சிதம்பரம், கடலூர், தஞ்சை நாச்சி யார் கோவில் இங்கே சென்று தரிசிப்பது, அர்ச்சனை செய்வது, குரு ஸ்தலமான திரு ஆலங்குடி சென்று ஆபத்து சகாஸ்வரரை வழிபடவும். இத்தகைய பரிகாரங்களை சரியாக செய்துகொண்டால் பட்டமங்கலம் அசுப பல குருவின் அமைப்பில் இருந்து விடுபடலாம்.
குரு வசம் உள்ள பொறுப்புக்கள்
பேங்க், கஜானா, ஆசிரியர் தொழில், வருவாய்துறை, மந்திரி, நிர்வாகத்துறை, திருமண விசயம், புத்திரர்கள், ஜீவன வகைய றாக்கள், சுப காரியங்களுக்கு பயன்படக்கூடிய பொருட்கள், குரு வர்க்கம், தேவாலயம் தரும் காரியங்கள். மதகுருமார்கள், திருப்பணி கோவில் சம்பந்தபட்டவர்களுக்கு அதிகாரம் செலுத்தக்கூடியவர், அறிவ பரந்த ஞானம், மனிதாபிமான், இறைவழி ஆற்றல், கருணை, மற்றோரை அனுசரித்துப்போதல், ஜோதிடம், ஆன்மிக பொருட்கள், கைடுகள், ரெவின்யூ தொடர்பு, ஒ.ஆ.ந போன்ற நிர்வாகங்கள், வருமான வரித்துறைகள், மந்திரி ஆகுதல், முக்கிய கௌரவ பதவிகள், நீதித்துறை, நற்பணிகளை செய்தல், சரிர பலம், சந்தோசம், பெருந்தன்மை, வைராக்கியம், ரசாயனம், அழகிய வீடுகள் அமைத்தல், வசதியான வாழ்வு, சட்டம் அறிவு அணிமணிகள், ஜுவல்லரி, பட்டை தீட்டும் தொழில்கள், புனித நீராடல், படைபலம் முதலியன ஆகும்.
குறிப்பு
ஒரு ஜாதகருக்கு சுபராக குரு வருகின்றபோது திரிகோணம் கேந்திரம் இதில் இருப்பது பலம். எந்த லக்னம் ஆனாலும் அவருக்கு சொல்லப்பட்டுள்ள 5 வீடுகளில் எங்கு இருந்தாலும் நன்மை. அசுபராக வருகின்றபோது மறைவிடம், திரிகோணம் செல்வது நன்மை. இப்படி இருப்பவர்களுக்கு குரு பகவானால் அவருக்கு உரிய தொழில் களுக்குள் பரிணமிக்ககூடும். 4 வர்க்க சக்கரங் களில் கோபுராம்சமாகும். இப்படி உள்ளவர் களுக்கு குருபகவான் மிகப்பெரிய அளவில் செல்வமும், பதவியும் பொருப்புக்களும் இத்துடன் அவருக்கு உரிய யோகமும் அமைந் திருந்தால் பல பதவிகள், பணிகள், தொழில் மூலம் மக்கள் மத்தியில் புகழ் சம்பாத்தியத் துடன் வாழ்வார்கள்.
செல்: 94431 37989