"ஓம் ஹும் ஜும் சஹ
அர்த்தநாரீஸ்வர ரூபே
ஹ்ரீம் ஸ்வாஹா'
என்னும் அர்த்தநாரீஸ்வர மந்திரத்தை கணவன் அல்லது மனைவி இருவருமே சொல்லிவரலாம். விரைவில் தம்பதியிடையே இருந்துவந்த பிணக்குகள் தீரும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வார்கள். புரிந்துகொண்டு விட்டுக் கொடுப்பார்கள்.
தினமும் அதிகாலையில் கிழக்கு முகமாக பூஜையறையில் அமர்ந்து, "ஓம் சௌம் பார்வதி தேவி நமஹ' என்று ஆத்மார்த்தமாக சொல்லிவாருங்கள். 54 முறை அல்லது 108 முறை ஜெபிக்கலாம். இதேபோல், "ஓம் க்லீம் ஸ்ரீ ரதி தேவி சமேத ஸ்ரீ காமதேவாய நமஹ' என்று மூன்றுமுறை ஜெபித்து, பெண்கள் குங்குமத்தை இட்டுக்கொண்டு வாருங்கள். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தில் நிம்மதி பரவும். பிரிந்த தம்பதி விரைவில் ஒன்றுசேர்வார்கள்.
பெண்கள் தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு தாலிச்சரடில் குங்குமம் இட்டுக்கொண்டு அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள். விரைவில் தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த குழப்பங்களும் பிணக்குகளும் நீங்கும்.
உப்பு, மிளகு பரிகாரம்
கணவன்- மனைவிக்குள் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க உப்பு மற்றும் மிளகு சிறந்த பரிகாரமாக இருக்கிறது. தாந்திரீகம் மற்றும் மாந்திரீகம் போன்ற விஷயங்களில் உப்பு, மிளகு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. எவரையும் வசியம் செய்யும் சக்தி இந்தக் கல் உப்பு மற்றும் மிளகிற்கு நிச்சயமுண்டு. ஒருவரை வசியம் செய்யவும், அவரை நம் வசப்படுத்திக் கொள்ளவும், நம்மீது அன்பு பெருகச் செய்யவும் உப்பு, மிளகு சிறந்த பரிகாரப் பொருட்களாகும். எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு நாள், நட்சத்திரம், நேரம், காலம் ஒன்றும் கிடையாது.
கணவன்- மனைவிக்குள் இருக்கும் தீராத சண்டை, சச்சரவுகள் தீர்வதற்கு முதலில் இருவரும் அமைதியான நிலையில் அமர்ந்து மனம்விட்டுப் பேச வேண்டும். சண்டையைத் தீர்த்துக்கொள்ள முடிவெடுத்துவிட்டால் எவ்வளவு சண்டை, சச்சரவுகள், எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதனைத் தாங்கிக்கொள்ளும் மனோதிடத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
27 மிளகு, உப்பு
உங்களால் முடிந்த நேரத்தில் நீங்கள் தூய்மையாகக் குளித்துவிட்டு, பூஜையறையில் ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்துகொள்ளுங்கள். அதில் முக்கால் பாகம் தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள். குண்டுகுண்டாக இருக்கும் 27 மிளகுகள் மற்றும் இருபத்தேழு கல் உப்புகளை எண்ணியெடுத்து வைத்துக்கொள்ளுங்கள். கணவன்- மனைவியிடையே சண்டை தீரவேண்டுமென்று மனதார நினைத்துக் கொண்டு, கண்ணாடி டம்ளருக்குள் இருக்கும் தண்ணீரில் முதலில் ஒவ்வொரு கல் உப்பையும் எடுத்துப் போட்டுக் கொண்டே வரவேண்டும். பிறகு மிளகையும் போடவேண்டும்.
எல்லா மிளகு மற்றும் கல் உப்புகளை யும் போட்டு முடித்தபின்பு நீங்கள் மனதார உங்கள் பிரச்சினையை நினைத்து வேண்டிக்கொள்ளவேண்டும். "என்னுடைய கணவன் அல்லது மனைவி என்மேல் மீண்டும் பழைய அன்புடன் அதேபோல இருக்கவேண்டும். எல்லாரையும்போல நாங்களும் ஒருமித்த தம்பதிகளாக வாழவேண்டும்' என்று மனதார வேண்டிக் கொண்டபின், கண்ணாடி டம்ளரை எடுத்துக்கொண்டுபோய் அப்படியே ஓடும் தண்ணீரில் கரைத்துவிடுங்கள். நீர் நிலைகள் இல்லாதபட்சத்தில் உங்கள் வீட்டிலிருக்கும் சிங்க்கில் கொட்டிவிடலாம். அல்லது கால்படாத இடத்தில் ஊற்றிவிடுங்கள். இந்த பரிகாரத்தைச் செய்த கொஞ்ச நாட்களிலேயே நிச்சயம் நல்லதொரு மாற்றம் தெரியும்.
திங்கட்கிழமை விரதம்
மனபிரச்சினையால் பிரிந்த கணவன்- மனைவி, உற்றார்- உறவினர் ஒன்று சேர்ந்து வாழ சிவனாருக்கு சோமவாரப் பூஜை செய்து வந்தால் விரைவில் ஒன்று சேர்வர். சோமனான சந்திர பகவான் இவ்விரதத்தை மேற்கொண்டு நற்கதி பெற்றான்.
எனவே இது சோமவார விரதம் என்றழைக்கப்படுகிறது. சிவபெருமானுக்கு மேற்கொள்ளும் விரதங்களில் மகத்துவம் வாய்ந்தது இந்த சோமவார விரதம். இவ்விரதத்தை பெரும்பாலானோர் கார்த்திகை மாதத் திங்கட்கிழமைகளில் மட்டுமே அனுசரிக்கின்றனர். ஆனால் எல்லா திங்கட்கிழமைகளிலும் இந்த விரதமிருக்கலாம். அப்படியிருந்தால் கணவனின் பரிபூரண அன்பை மனைவி பெறலாம் என்பது நம்பிக்கை.
சோமவார விரதத்தை மேற்கொள்பவர் கள் எப்போது வேண்டுமானாலும் எந்த திங்கட்கிழமையிலும் துவங்கலாம். திங்கட்கிழமையன்று அதிகாலையில் நீராடி மாலைவரை விரதமிருந்து சிவ- பார்வதி பூஜைகள் மேற்கொள்ளவேண்டும். இதனால் கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் சூழ்நிலை நிச்சயம் கிடைக்கும்.
மேலும் பிரிந்த கணவன்- மனைவி ஒன்றுசேர மனதை ஒருநிலைப்படுத்தி 21 திங்கட்கிழமை விரதமிருந்தால், மனம் மாறி இல்லறம் நல்லறமாக மாறும். மேலும் மாங்கல்ய தோஷம், களத்திரதோஷம் நீங்கும். இவ்விரத முறையில் பெரியவர்களின் ஆசீர்வாதம் மிக முக்கியமானதாகும். பெற்றோரிடமோ அல்லது மாமனார்- மாமியாரிடமோ அல்லது வயதான தம்பதியரிடமோ ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ளலாம்.
சிவபார்வதி தரிசனம்
திங்கட்கிழமையில் சிவபெருமான் பார்வதிதேவியுடன் இணைந்த படத்திற்கு வில்வார்ச்சனை செய்து லிங்காஷ்டகம் படிக்கலாம். அல்லது சிவபெருமான் மற்றும் பார்வதிதேவிக்குரிய மந்திரங்களை ஜெபிக்கலாம். முழுமையாக விரதமிருக்க முடியாதவர்கள் நீராகாரத்தை உணவாக எடுத்துக்கொள்ளலாம். பழச்சாறுகள், பால், பழம் போன்றவற்றை உட்கொண்டு விரதம் மேற்கொள்ளலாம். நைவேத்தியமாக பழங்களையும், உங்களால் முடிந்த பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்ற ஏதாவதொரு நிவேதனத்தையும் படைக்கலாம். சிவ- பார்வதியை வணங்கினால் நிச்சயம் நம்முடைய வேண்டுகோள் நிறைவேறும். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.
செல்: 98425 50844