வாழ்க்கையில் ஏதாவ தொரு பிரச்சினையென்றால் கடவுளுக்கு அடுத்தபடியாக பலர் ஜோதிடத்தை நம்புகிறார் கள். "எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? கடைசி வரைக்கும் இதே கஷ்டம் தானா? எனக்கு கோடீஸ்வர யோகம் உள்ளதா? நான் பணக் காரன் ஆவேனா?' என்பது தான் பலரது கேள்வியாக இருக்கிறது. ஒருவர் அனுபவிக் கும் ராஜயோகத்தை இரண் டாக வகைப்படுத்தலாம்.
பிறவி கோடீஸ்வர யோகம்
கோடீஸ்வர குடும்பத்தில் வாரிசாகப் பிறந்து, கடைசிவரை கோடீஸ்வரராக வாழும் யோகம் வெகுசிலருக்கே அமையும். நான்காமதிபதி, செவ்வாய், ஒன்பது, பத்தாமதிபதிகள் பலம்பெற்ற ஜாதகர்கள் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்திருப்பார்கள். முன்னோர்கள், செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்களாக இருப்பார்கள்.
திடீர் கோடீஸ்வர யோகம்
வாழ்க்கையில் சிரமப் பட்டுக் கொண்டிருக்கும் ஒருவர் சாதாரண அடி மட்டதில் அடிமைத் தொழில் செய்துகொண்டு ஜீவனத்துக்குக்கூட கஷ்டம் அனுபவிப்பார் கள். சுகபோக வாழ்க்கை இந்த ஜென்மத்தில் கிடைக்காதென்று நினைக்கும் சிலர் திடீர் யோகத்தின்மூலம் சமூகத்தில் உச்சநிலையை அடைகின்றனர். தகுதிக்குமீறிய வாழ்வு கிடைத்து அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் யோகத்தைப் பெற்று விடுகிறார்கள். எதிர்பாராத ராஜயோகத் தால் சிலர் கோடீஸ்வரராகி விடுகிறார்கள்.
அடிமட்ட நிலையில் இருக்கும் ஒருவர் 9, 11-ஆமிடங்களில் சூரியன் பலம்பெற்றால் தந்தையாலும், சந்திரன் பலம்பெற்றால் தாயாலும், செவ்வாய் பலம்பெற்றால் கணவர், உடன்பிறப்பாலும், புதன் பலம் பெற்றால் மாமன், நண்பர், சொந்த அறிவாலும், குரு பலம்பெற்றால் முன்னோர் கள், அரசியல்வாதி கள், புத்திரர்களா லும், சுக்கிரன் பலம்பெற்றால் மனைவி
வாழ்க்கையில் ஏதாவ தொரு பிரச்சினையென்றால் கடவுளுக்கு அடுத்தபடியாக பலர் ஜோதிடத்தை நம்புகிறார் கள். "எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? கடைசி வரைக்கும் இதே கஷ்டம் தானா? எனக்கு கோடீஸ்வர யோகம் உள்ளதா? நான் பணக் காரன் ஆவேனா?' என்பது தான் பலரது கேள்வியாக இருக்கிறது. ஒருவர் அனுபவிக் கும் ராஜயோகத்தை இரண் டாக வகைப்படுத்தலாம்.
பிறவி கோடீஸ்வர யோகம்
கோடீஸ்வர குடும்பத்தில் வாரிசாகப் பிறந்து, கடைசிவரை கோடீஸ்வரராக வாழும் யோகம் வெகுசிலருக்கே அமையும். நான்காமதிபதி, செவ்வாய், ஒன்பது, பத்தாமதிபதிகள் பலம்பெற்ற ஜாதகர்கள் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்திருப்பார்கள். முன்னோர்கள், செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்களாக இருப்பார்கள்.
திடீர் கோடீஸ்வர யோகம்
வாழ்க்கையில் சிரமப் பட்டுக் கொண்டிருக்கும் ஒருவர் சாதாரண அடி மட்டதில் அடிமைத் தொழில் செய்துகொண்டு ஜீவனத்துக்குக்கூட கஷ்டம் அனுபவிப்பார் கள். சுகபோக வாழ்க்கை இந்த ஜென்மத்தில் கிடைக்காதென்று நினைக்கும் சிலர் திடீர் யோகத்தின்மூலம் சமூகத்தில் உச்சநிலையை அடைகின்றனர். தகுதிக்குமீறிய வாழ்வு கிடைத்து அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் யோகத்தைப் பெற்று விடுகிறார்கள். எதிர்பாராத ராஜயோகத் தால் சிலர் கோடீஸ்வரராகி விடுகிறார்கள்.
அடிமட்ட நிலையில் இருக்கும் ஒருவர் 9, 11-ஆமிடங்களில் சூரியன் பலம்பெற்றால் தந்தையாலும், சந்திரன் பலம்பெற்றால் தாயாலும், செவ்வாய் பலம்பெற்றால் கணவர், உடன்பிறப்பாலும், புதன் பலம் பெற்றால் மாமன், நண்பர், சொந்த அறிவாலும், குரு பலம்பெற்றால் முன்னோர் கள், அரசியல்வாதி கள், புத்திரர்களா லும், சுக்கிரன் பலம்பெற்றால் மனைவி யாலும், சனி பலம்பெற்றால் வேலையாட்கள் மூலமும், ராகு- கேது பலம்பெற்றால் நேர்மையற்ற வழியிலும் செல்வம் சேரும்.
ஜோதிட சாஸ்திரத்தில் ஆயிரக்கணக் கான யோகங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் நடைமுறையில் சில யோகங்கள் மட்டுமே பலவிதமான பலன்களைத் தந்துகொண்டி ருக்கின்றன. அதில் ஒன்றுதான் விபரீத ராஜ யோகம். ஒரு திறம்பட்ட ஜோதிடரையும் பலன் சொல்வதில் நிலை தடுமாறச் செய்ய வைக்கும் யோகமாகும். ஒரு ஜாதகத்தைப் பார்த்தவுடன் ஜாதகத்திலுள்ள சிறப்பான யோகம் பற்றிக் கூறினால் ஜாதகர் அனுபவிக் கும் பலன்கள் முற்றிலும் மாறுபட்டிருக்கும். சில ஜாதகத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த யோகமும் இருக்காது. ஆனால் அனுபவிக்கும் பலன்கள் பிரம்மாண்டமாக இருக்கும். இந்த முரண்பாட்டிற்கு என்னதான் காரணமாக இருக்கும் என்பதை சற்று உள்ளாழ்ந்து உற்று நோக்கினால் இந்தப் புதிருக்கு விடை கிடைக்கும்.
விபரீத ராஜயோகம்
ஒருவருக்கு வாழ்க்கையில் கிட்டும் ஒரு நன்மையை யோகம், அதிர்ஷ்டம் என்று சொல்கிறோம். யோகமென்பது ஒருவித நன்மைக்கான அறிகுறி. ஒரு ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலிருந்து 3, 6, 8, 12 ஆகிய நான்கு பாவகங்கள் மறைவு ஸ்தானம், துர்ஸ்தானம் என்பதால் சிறப்பற்றதாகக் கருதுகிறோம். ஆனால் ஒருவர் கர்ம வினைப் படி அனுபவிக்கவேண்டிய சுபம், துன்பங் களைப் பரிபூரணமாகத் தருவது இந்த மறைவு ஸ்தானங்களே.
யோகங்களில் இரு நிலைகள் உள்ளன. ஒன்று வரம்புக்கு உட்பட்டதாகவும் நம்பும் வகையிலும் அமைகிறது. மற்றொன்றோ வரம்புக்கு மீறியதாகவும் நம்பமுடியாத வகையிலும் அமைகிறது. இந்த இரண்டாவது யோகம்தான் விபரீத ராஜயோகம் என கூறப் படுகிறது.
3, 6, 8, 12-க்கு உடையவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு ராசியில் அமர்ந்தாலோ அல்லது ஒருவரையொருவர் சமசப்தமமாகப் பார்த் துக்கொண்டாலோ அல்லது ஒருவர் பாத சாரத்தில் மற்றவர் நின்றாலோ இந்த யோகம் முழுமையாக அமைகிறது. இதில் 8-ஆமதிபதி மட்டும் தனித்தே இந்த யோகத்தை வழங்கும் நிலையும் உண்டு.
அதாவது 8-க்குரியவர் 6-ல் நின்றால் அவர் 12-ஆமிடத்தை ஏழாம் பார்வையாகப் பார்ப்பதால், இந்த மூன்று இடங்களும் இணைக்கப்படுகின்றன. இதேபோல் 8-க்குரியவர் 12-ல் நிற்கும்போதும் இந்த யோகம் முழுமையாக அமைகிறது.
அதாவது "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்றொரு பழமொழி உண்டு. கெட்ட வீட்டிற்குரிய ஒரு கிரகம், மற்றொரு கெட்ட வீட்டில் அமர்ந்தால் விபரீத ராஜயோகத்தை உண்டாக்கும். இந்த மறைவு ஸ்தானங்கள் ஆட்சி, உச்சம்பெறாமல், கேந்திர- திரிகோணம் பெறாமல் வலுக் குன்றியவர்கள் விபரீத ராஜயோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை அடைகிறார்கள்.
இவர்கள் அடுத்தவர் பொருளை அனுபவிக் கும் யோகம் பெற்றவர்கள். மூன்றாம் பாவகம் பாதி மறைவு ஸ்தானமாகக் கருதப்படுகிறது. எனவே இதன் அதிபதி மத்திமமான பாவராக அமைக்கிறார்.
பன்னிரன்டாமிடம் முக்கால் பங்கு மறைவு ஸ்தானமாகும். ஆறு மற்றும் எட்டா மிடங்கள் முழு மறைவு ஸ்தானங்களாகும். இதன் அதிபதிகள் ஒரு ஜாதகத்திற்கு முழு பாவ கிரகங்களாக அமைகிறார்கள்.
ஒரு ஜாதகத்தில் மறைவு ஸ்தானாதிபதிகள் வலுக் குறைவாக இருப்பதே சிறப்பு. மறைவு ஸ்தானாதிபதிகள் ஆட்சி, உச்சம்பெறாமல் நின்றால் விபரீத ராஜயோகம் ஏற்பட்டு சுபப் பலனும் தரும். மறைவு ஸ்தானங்கள் வலுப்பெற்றவர்களுக்கு நோயும் கடனும் தேடிவரும்.
மேலே குறிப்பிட்ட அமைப்புகளின் அடிப்படையில், லக்னாதிபதி வலுவாகவும், 3, 6, 8, 12 ஆகிய வீட்டு அதிபதிகளில் ஒருவராவது ஆட்சி அல்லது உச்சம்பெற்ற நிலையில் இருப்பது சிறப்பான பலன்களை அளிக்கக்கூடிய விபரீத ராஜயோகம். அந்த மறைவு ஸ்தானாதிபதிகள் பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனியாக இருந்து மறைந் தால் புகழுடன் கோடீஸ்வர வாழ்க்கை கிடைத்துவிடும்.
நீசபங்க ராஜயோகம்
ஒரு கிரகம் உச்சம்பெற்றால் நூறு சதவிகிதப் பலன் கிடைக்கும். நீசம்பெற்றால் நல்ல பலன்கள் கிடைக்காது என்பது விதி. எப்பொழுதுமே விதியென்று ஒன்றிருந்தால் விதிவிலக்கென்று ஒன்றுண்டு. நீசம்பெற்ற கிரகம் நீசபங்கம் பெறும்போது மிகவும் வலுவான நிலையை அடைந்து அபரிமித மான பலனைத் தருகிறது. நீசம்பெற்ற கிரகத்திற்கு வீடுகொடுத்த ராசியாதிபதி ஆட்சி, உச்சம் பெற்றால் அது நீசபங்க ராஜயோகம் என்ற அமைப்பைத் தருகிறது. நீசனை நீசன் பார்த்தல்- அதாவது நீசம்பெற்ற ஒரு கிரகம் நீசம்பெற்ற மற்றொரு கிரகத்தைப் பார்ப்பது நீசபங்க ராஜயோகம்,
உதாரணமாக, மேஷத்தில் நீசம்பெற்ற சனி, துலா ராசியில் நீசம்பெற்ற சூரியனைப் பார்ப்பது நீசபங்க ராஜயோக அமைப்பாகும். பாதகாதிபதி நீசம், வக்ரம் போன்று வலுவிழந்து தசை நடந்தாலும், ஜாதகரை கோடீஸ்வரராக மாற்றிவிடும். சுபகிரக, கேந்திர, திரிகோண அதிபதிகள் ராசியில் நீசம்பெற்று அம்சத்தில் பலம்பெற்றாலும் சுபயோகப் பலன்களே நடைபெறும்.
முற்றிலும் எதிர்பாராத ஒரு நிலையில், சுலபமான வகையில் அல்லது குறுக்குவழியில் ஒருவருக்கு மிகப்பெரிய சமூக, பொருளாதார அந்தஸ்து கிடைப்பதே விபரீத, நீசபங்க ராஜயோகமாகும். ஒரு ஜாதகத்தில் மேலே குறிப்பிட்ட யோகமிருந்தாலும் சில குறிப்பிட்ட தசாபுக்திக் காலங்களில் மட்டுமே ராஜயோகம் செயல்படும். மேலும் 12 ராசிகளிலும் 9 கிரகங்கள் அமர்ந்து அவை பார்க்கும் வீடுகளைப் பொருத்தும், இணைந்திருக்கும் கிரங்களைப் பொருத்தும் ஒருவருக்கு யோகங்களும், பலன்களும், நன்மை- தீமைகளும் நடைபெறும். லக்னாதிபதி, ராசியாதிபதிகளின் தசை நடக்கும்போது ஜாதகர் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும். திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.
ராஜயோகம் பலர் ஜாதகத்தில் இருந்தாலும் சிலருக்குதான் யோகத்தின் பலனை முழுமையாக அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கிறது. சராசரி வாழ்க் கைக்கே போராடும் நிலையில், நாம் எங்கே கோடீஸ்வரராவது என்று நம்பிக்கை இழந்து வாழ்வதே இதற்கு முதல் காரணம். இரண்டாவதாக, பல வருடங்கள் சேமித்த பொருளைக்கொண்டும், கடன் வாங்கியும் புதிய தொழில் தொடங்கும்போது, முதலில் ஜாதகத்தில் தொழில் தொடங்கும் நேரம் தற்போது உண்டா, தொழிலால் லாபம் கிடைக்குமா, கூட்டுத் தொழில் வெற்றி தருமா என்பதையெல்லாம் கருத்தில்கொள்வது மிக முக்கியம்.
அதிர்ஷ்டத்துக்காகக் காத்திருப்பது, ஏங்குவதைவிட அவரவர் ஜாதகத்தில் எந்த நேரத்தில், எந்தத் துறையில் ஈடுபட்டால் கோடீஸ்வரராக முடியும் என்பதைக் கண்டறியவேண்டும்.
பலரின் ஜாதகத்தில் கோடீஸ்வர யோகம் இருந்தாலும் சுயஜாதகரீதியாக நல்ல நேரம் பார்த்து, வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்துவதில்லை. பலர் கோட்சாரப் பலனை மட்டுமே பார்க்கிறார்கள். 3, 6, 8, 12-ஆமதிபதி தசை, பாதகாதிபதி, மாரகாதிபதி தசைகளில் நடக்கப்போகும் பலன்களை முழுமையாகத் தெரிந்துகொண்டு செயல்பட்டால் அடுத்த நொடியேகூட வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்து நீங்களும் கோடீஸ்வரராகிவிட முடியும்.
செல்: 98652 20406