குரு பதினொன்றில் லாப ஸ்தானத்திற்கு வந்தவுடன் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டத்தால் பணவரவு, செல்வம், செல்வாக்கு புகழ் வந்து சேரும். மூத்த சகோதரர் பகை மாறி, ஆதரவு கிடைக்கும். கெடுக்க நினைப் பவர்களும் கெடுக்கமுடியாமல் தவிப்பர். சிலருக்கு இளைய தாரம் கிடைக்கும் அல்லது இளைய தாரத்தால் லாபம், சந்தோஷம் உண்டாகும். எதிர்பார்த்த, எதிர்பாராத லாபம் தேடிவரும். குரு பதினொன்றாமிடத்தில் நின்று மூன்று, ஐந்து, ஏழாமிடத்தைப் பார்ப்பார். நினைத்தது நடந்து தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும். இளைய சகோதரர்கள் திடீர் பாசம் காட்டுவர். பிரிந்த சகோதர உறவு இணையும் காலம். புத்திர பாக்கியம், புத்திரர்களால் லாபம் உண்டாகும். புத்திரர்கள் பெற்றோர் சொல்கேட்டு நடப்பர். பூர்வீக லாபம், நன்மை பெறுவர். மனைவியால் லாபம், மனைவிக்கு லாபம் ஏற்படும். மனஸ்தாபங்கள் நீங்கி குடும்பம் சந்தோஷமாக இருக்கும் காலம். பலவகையில் மனமகிழ்ச்சி உண்டாகும் பொற்காலமாக இருக்கும்.

பதினொன்றாமிட குருவால் குடும்பம், தொழில், குழந்தைகளால் நன்மை என சந்தோஷத்தைத் தரும் அத்தனை ஆசைகளும் நிறைவேறும். நோய் தீர்ந்து உடல் ஆரோக்கியம் பெறுவர். நீண்டநாள் நோய்க்குத் தீர்வு கிடைக்கும். புதிய மருந்தால் உடல் தேறும். தசை சரியில்லாதவருக்குக்கூட ஓரளவு நன்மையை குரு செய்வார்.

பன்னிரண்டாமிடத்திற்கு விரய குருவாகப் பெயர்ச்சியானவுடன் அயன சயன சுகம் கெடும். நிம்மதியான தூக்கத்தை இழந்து தவிப்பர். இராவணன் முடி வீழ்ந்ததாகச் சொல்வர். அதாவது போரில் தோற்று தனக் குண்டான மரியாதையை இராவணன் இழந்து கண்டமடைந்தார். நிறைய விரயமும் தோல்வியும் அடையக்கூடிய காலமாக இருக்கும். தேவையற்ற வீண் அசைச்சல், காரணமின்றி செய்ததையே திரும்பச் செய்தல், பயணங்கள் என அலைந்து திரிய நேரும். நெருங்கியவர்களால் அவமானங் கள் ஏற்படும். எண்ணம், செயல்களில் திடீர் மாற்றம் ஏற்படும். எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத சூழல் அமையும். விரயங்களால் விரக்தி ஏற்படும். எப்படி யும் நல்லது நடக்காது என தோன்றும். எடுத்த காரியங்கள் தடைப்படும் அல்லது தள்ளிப்போகும். பன்னிரண்டாமிட குரு நான்கு, ஆறு, எட்டைப் பார்வையிடுவார். தாயாருக்கு கண்டம், தாயாரால் பாதிப்பு, தாயாருக்கு விரயச் செலவு, வீடு, வாகன மாற்றம் அல்லது பழுது பார்த்தல், தொழில் இடமாற்றம் உண்டாகும்.

தேவையில்லாமல் திடீர் கடன் வாங்குதல் அல்லது சுபக் கடனாக வீடுகட்டுதல் நடக்கும். நோயால் பாதிப்பு, புதிய நோய் வருதல், சுகத்தைக் கெடுக்கும் சம்பவத்தால் மன உளைச்சல் ஏற்பட்டு மனமும் உடலும் கெடும். தூக்கமின்மையால் அவதி உண்டாகும். எதிரி வலுப்பெறுவர் அல்லது எதிரிக்குப் பணிந்துபோக நேரும். போக்குவரத்தில் கவனமாக இருக்கவேண்டும். எங்கும் எதிலும் விரயத்தையே சந்திக்க நேரும். விரக்தியடைவர். குடும்பத்தைப் பிரிந்து வெளியிடங்களில் இருக்கநேரும். சில ராசிகளுக்கு குரு பன்னிரண்டில் பலவீனமானால் தீமைகள் குறைந்து நன்மை நடக்கும். நல்ல தசை நடந்தால் சுப விரயங்களும், ஆடம்பரச் செலவுகள் செய்து சந்தோஷமான அயன சயன சுகத்தையும் அடைவர்.

Advertisment

சனிப்பெயர்ச்சி

சனி ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்குச் செல்வதையே சனிப்பெயர்ச்சி என்கிறோம். சனிப்பெயர்ச்சி இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும். சனி நின்ற இடத்திலிருந்து மூன்று, ஏழு, பத்து ஆகிய இடங்களைப் பார்வையிடுவார். சனி நின்ற வீட்டைவிட பார்த்த இடத்தைக் கெடுப்பார். சனி ஒவ்வொரு ராசி யாக 12 ராசிகளையும் கடந்துவர ஒரு சுற்று 30 வருடங்கள் ஆகும். அதேபோல் வான மண்டலத்தில் சூரியனை சனிக் கோள் ஒருமுறை சுற்ற ஏறக் குறைய 30 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. சனி ராசிக்கு 3, 6, 11-ல் வரும்போது யோகத்தையும், 5, 9, 10-க்கு வரும்போது சுமாரான பலன்களையும், ராசிக்கு 4-ல் அர்த்தாஷ்டமச் சனியாகி முடக்கத்தையும், 7-ல் கண்டச்சனியாகி பல பாதிப்புகளையும் தருவார். 8-ல் அஷ்டமச்சனியாக வரும்போது வாட்டுவார். 12, 1, 2 ஆகிய இடங்களில் ஏழரைச்சனியாக அமர்ந்து சொல்லமுடியாத வேதனைகளைக் கொடுத்து வாழ்க்கையைப் புரியவைப்பார். சனியின் முப்பது ஆண்டுகள் கொண்ட ஒரு சுற்றில் ஏழரை ஆண்டுகள் மட்டுமே நன்மையான பலன்களைத் தருவார்.

சனி நீதி வழங்கும் கிரகம். அவரவர் பூர்வஜென்ம கர்மாவின்படி நல்ல- தீய பலன்களில் வித்தியாசம் இருக்கும். சனி பாதகமான இடங்களுக்கு வரும்போது தண்டனைகள் வழங்கினாலும், வாழ்க்கையின் உண்மைத் தன்மையைப் புரியவைக்கவே செய்வார். யாருக்கு எப்படி சொன்னால் புரியுமோ அப்படிச் சொல்வார். மனித வாழ்க்கையில் எதுவும் நிலையில்லை;

Advertisment

அதனால் பற்றற்று வாழ்வதே நல்ல வாழ்க்கை என்பதை உணரவைப்பார். சனியின் பலன்கள் சிலருக்கு அதிக பாதிப்புகளையும், சிலருக்கு அதிக நன்மைகளையும் தரும்.

அதற்கு சுய ஜாதகப்படி அவரவருக்கு நடக்கும் தசாபுக்திதான் காரணம்.

உதாரணமாக, ஏழரைச்சனி நடப்பவர்கள் எல்லாருக்கும் கெடுபலன்கள் நடக்காது. சுக்கிர தசையும் ஏழரைச்சனியும் சேர்ந்து நடப்பவர்கள் பலருக்கு யோகமான பலன்கள் நடைபெறும். அவரவர் ஜாதகப்படி தீமை குறைந்து நன்மைகள் அதிகம் நடக்கும். சிலருக்கு கஷ்டமே அதிகம் நடக்கும். ஐந்தாமிடமான பூர்வபுண்ணிய ஸ்தானம் நன்றாக இருந்தால் தீமைகள் குறைந்து நன்மை நடக்கிறது.

nn

ஏழரைச்சனி

சனி ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் இருப்பார். சந்திரன் நின்ற ராசிக்கு பன்னிரண்டு, ஒன்று, இரண்டு ஆகிய மூன்று இடங்களுக்கு அடுத்தடுத்து சனி வரும் காலமான மூன்று இரண்டரை ஆண்டுகளைக் கூட்டினால் வரும் ஏழரை வருடங்களின் தொகுப் பையே "ஏழரைச்சனி' என்கிறோம். இதில் பன்னிரண்டாமிடத்திற்கு வரும் இரண்டரை ஆண்டுகளை "விரயச்சனி' என்றும், ஒன்றாமிடத்திற்கு- அதாவது ராசியின்மீது வருவதை "ஜென்மச்சனி' என்றும், இரண்டாம் வீட்டிற்கு சனி வரும் இரண்டரை ஆண்டுகளை 'பாதச்சனி' எனவும் சொல்கிறோம். பொதுவாக முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு மனிதருக்கும் ஏழரைச்சனி வரும். முதன் முதலில் வரும்போது- அதாவது முதல்சுற்றை "மங்குசனி' என்றும், இரண்டாவது முறை வருவதை "பொங்குசனி' என்றும், மூன்றா வது சுற்றை "மரணச்சனி' எனவும் அழைப்பார் கள். இப்படி ஒருவரின் ஆயுள் காலத்தில் சனி மூன்று சுற்றுகள் வருவார். இதனை வைத்துதான் "முப்பது ஆண்டுகள் வாழ்ந்தா ரும் இல்லை; முப்பது ஆண்டுகள் வீழ்ந்தாரும் இல்லை' என சொல்வார்கள்.

விரயச்சனி

சனி பன்னிரண்டாமிடத்திற்கு விரயச் சனியாக வந்து தன் பார்வையால் இரண்டு, ஆறு, ஒன்பதாமிடங்களைப் பார்ப்பார். ஒன்பதாமிடம் தந்தை ஸ்தானமாக இருப்ப தால் தந்தைக்கு கண்டம், தாய்- தந்தைக் கிடையே சண்டை, சச்சரவு, பிரிவு, இழப்பு உண்டாகும். தந்தைக்கு பாதிப்பு, தந்தையால் பாதிப்பு, தந்தைவழி சகோதரர் மற்றும் பங்காளிகளால் பாதிப்புண்டாகும். சொத்து களால் சகோதரர்களுக்குள் பிரச்சினை, காவல் நிலையம், நீதிமன்றம் செல்ல நேரும்.

முறையான பங்கு, முறையான நீதி கிடைக்காது. தவறே செய்யாமல் தண்டனை பெறுதல், அவப்பெயர், அவமானம் உண்டாகும்.

உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது.

குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை வந்துகொண்டே இருக்கும். குடும்பத்திற் குள்ளேயே எதிரி உருவாகுவர். சில ஜாதகரின் பெற்றோர்களுக்கு கள்ளத் தொடர்பு, உறவைத் தந்து குடும்ப மானத்தைக் கெடுக்கும்.

சிலருக்கு இளைய தாரத்தைக் கொடுத்து விடும். யாருக்காவது பணம் கொடுத்திருந்தால் திரும்பக் கிடைக்காது. வாங்கியிருந்தால் கொடுக்க முடியாத சூழல் உருவாகும். வாக்கு தவறவேண்டி இருக்கும். தன்மான இழப்பு, நண்பர்களால் அவமானம் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் மனஸ்தாபம், உடன்பிறந்தவர்களுக்குக் கண்டம், கஷ்டம் ஏற்படும். நோய், எதிரி, கடனால் அவதிப் படுவர். யாரையும் நம்பி ஜாமின் கையெழுத் துப் போடக்கூடாது. அடுத்தவருக்காக வக்காளத்து வாக்குதல், பொறுப்பேற்றல் அவதியையே தரும். வாய்ப் பேச்சால் வம்பு, வழக்கு ஏற்படும். பாக்கியக் குறை உண்டாகும். எதைத் தொட்டாலும் நஷ்டம், தடை, தாமதம், விரயம் ஏற்படும்.

ஜென்மச்சனி

ராசிக்கு சனி வரும்போது- அதாவது ஜென்மத்தில் சனி நிற்பதை ஜென்மச்சனி என்கிறோம். ராசியில் நிற்கும் சனி மூன்று, ஏழு, பத்தாமிடத்தைப் பார்ப்பார். சந்திரனான உடல்மீது சனி வந்ததும் ஜாதகரின் உடல் நிலையை பாதிக்கும். விபத்தால் கண்டம், கை கால்களில் அடிபடுதல், விஷத்தால் பாதிப்பு, சர்ப்பம் தீண்டியதுபோல் உடல்மாறும். தோற்றப்பொலிவை இழப்பர். புதியநோய் ஏற்படும். எதையோ பறிகொடுத்த, இழந்த தோற்றத்தைப் பெறுவர். மனநிலை காரகரான சந்திரனில் சனி மனக் குழப்பத்தைத் தருவார். "ஏன்டா மனிதனாகப் பிறந்தோம்' என வருத் தப்பட்டு, வெறுக்குமளவு கஷ்டத்தைத் தரு வார். மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சொல்ல முடியா கஷ்டங்களை வாரிவழங்குவார்.

நம்பிக்கை துரோகிகளாக நண்பர்கள், உடன்பிறந்தவர்கள், உறவினர்கள் இருப்பார் கள். அல்லது ஜென்மச்சனியில் துரோகியாக மாறிவிடுவர். கண்ணில் படும் அனைவரும் எதிரியாவர். ஏமாற்றம் தாங்கமுடியாமல் சண்டை போடுவர். எங்கும் எதிலும் தோல்வியே ஏற்படும். கெட்டவர்கள் நன்றாக வாழ்வதைக் காண்பார்கள். நீதிகேட்டு அவமானப்படுவர். எதையும் மாற்றமுடியா இயலாமையே ஏற்படும். தைரியத்தை இழந்து "நம்மால் எதுவும் முடியாதோ' என மன உளைச்சலுக்கு ஆளாவர். தற்கொலை செய்துகொள்ளுமளவு ஏமாற்றம், வெறுப்பு உண்டாகும். யார் நல்லவர், யார் கெட்டவர் என தெரியாமல்- புரியாமல் தவிப்பர். உடனிருந்தே கெடுப்பார்கள்.

நல்லவர்களை சந்திக்க முடியாது. நல்லவர் களை விலக்கி வைப்பர் அல்லது நல்லவர்கள் விலகி விடுவர். மன அழுத்தத்தால் கெட்ட எண்ணங்கள், பொறாமை, கொடுஞ்செயல் செய்வர் அல்லது செய்ய முயற்சிப்பர். இயலாமை கடும் கோபமாக உருவாகி, அடுத்தவரைப் பழிவாங்கப்போய் தானே பலியாகிவிடுவர். என்னால் எல்லாம் முடியு மென இருந்தவரைக்கூட எதற்கும் இயலாத வராக சனி பகவான் ஆக்கிவிடுவார். தான் என்ற ஆணவம், கர்வத்தை முற்றிலும் அழித்துவிடு வார். யாருக்காக- எதற் காக வாழ்கிறோமென புரியாத அளவு நிகழ்வுகள் நடக்கும். நாம் இல்லை யென்றால் எதுவும் நடக் காது என்கிற கற்பனை எண்ணத்தை அழித்து, நமக்காக யாரும் எதற்காக வும் காத்திருக்க மாட்டார் கள்; நாம் இறந்துவிட் டால் நம்மை மறந்து விடுவார்கள் என்கிற உண்மையை சனி போதிப்பார். எப்படிச் சொன்னால் புரியுமோ அப்படி சொல்லிப் புரிய வைப்பார். அறிவுரையால் திருந்தாதவர்களை அடித் துத் திருத்துவார். ஜென் மச்சனி வாழ்வின் நிதர்சனமான உண்மையை உணர வைத்துவிடும்.

"வாழ்க்கை ஒரு நொடியில் முடிந்துவிடும். எதை நேசிக்கிறோமோ அது கிடைக்காது அல்லது அதனால் தொல்லை வரும். நம்பி ஏமாறுவோம். நம்பிக்கை துரோகிகளால் ஏமாற்றப்படுவோம். யார்மீது பாசம் வைக்கிறேமோ அவர்களை இழக்கநேரும் அல்லது அவர்களால் ஏமாற்றப்படுவோம். சொந்தம், பந்தம், உற்றார்- உறவினர் இருந்தும் யாருமில்லாத அனாதைபோல் வாழநேரும். இந்த உலகில் எதுவும் நிலை யில்லை' என்பது புரியும். எதன்மீதும் பற்று வைத்தாலும் கிடைக்காமல் அல்லது கிடைத்து வெறுக்குமளவு சம்பவங்கள் நடந்து பற்றற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோம். பற்றற்ற வாழ்க்கையே, ஏமாற்றமில்லா நல்வாழ்வைத் தரும் என்பதை சொல்லும் அற்புதமான காலமாக ஜென்மச்சனி இருக்கும்.

ராசியில் இருக்கும் சனி எண்ணம், செயல்பாடுகளில் மாற்றத்தைத் தரும். தீய நண்பர் சேர்க்கை, கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமை யாவர். இளைய சகோதர வழி தொல்லை ஏற்டும். முறையற்ற உறவுகளைத் தரும். திருமணத்தடை, தாமதம், காதலால் தொல்லை, பிரிவு, அவமானம், மன வேதனை உண்டாகும். கனவுகளில் வாழநேரும். எதார்த்தத்தை மனம் ஏற்காது. நண்பர்களால் ஏமாற்றம், பிரிவு, இழப்பு ஏற்படும். கணவன்- மனைவி பிரிவு, இழப்பு வரும். ஜாதகரும் அவர் துணைவரும் நோயால் பாதிக்கப்படுவர். சிறிய பிரச்சினைகூட பெரிதாகி இருவரும் நீதிமன்றம், காவல்நிலையம் செல்லக் கூடும். ஒருவரையொருவர் ஏமாற்றிக்கொள்வர்.

தொழில் அமையாமல் கஷ்டப்படுதல், உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காமல் போராடுதல், பிடிக்காத இடத்திற்கு பணி மாற்றம், பதவி இறக்கம், பணத்திற்காக தன்மானத்தைவிட்டு சுயத்தை இழத்தல், செய்தொழிலில் நஷ்டம், வீடு இடமாற்றம், அவமானம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பிரச்சினை, ஜாமின் கையெழுத்தால் எதிர்பாராத தொல்லை, நம்பி ஈடுபட்டு ஏமாற்றமடைதல் போன்றவை நிகழும். கூட்டுத் தொழிலில் கூட்டாளியால் துரோகத்தை சந்தித்தல், கூட்டுத் தொழிலால் தொல்லையை அனுபவித்தல் நிகழும். தினம் தினம் பிரச்சினைகளை சந்தித்தல், சிறிய தொல்லை களை சமாளிக்கமுடியாமல் தவித்தல், எதையாவது தேடி அலைந்து திரிதல், தேச சஞ்சாரம் செய்தல், குடும்பத்தைவிட்டுத் தனித்து வாழ்தல், வேலை விஷயமாகவோ, பிரச்சினைகளாலோ குடும்பப்பிரிவு ஏற்படும். பரதேச வாழ்க்கையே கிடைக்கும். மன அமைதி தேடி மனம் அலையும். அன்புக்கு ஏங்கும். புதிய உறவுகள் முதலில் ஆறுதலும் பின்பு அவதியையும் தரும்.

பாதச்சனி

இரண்டாமிடத்திற்கு சனி வந்து பாதச் சனியாகி நான்கு, எட்டு, பதினொன்றா மிடத்தைப் பார்வையிடுவார். தாயாருக்கு கண்டம், பாதிப்பு, தாயாரால் பாதிப்பு, தாயார்வழி சொந்தங்களால் பாதிப்பு, நிலம், வீடு சம்பந்தமாக பிரச்சினை, வீட்டைப் புனரமைத்தல், புதிய வீடு கட்டுதல், நிலம் தொடர்பான விஷயங்கள் நடைபெறும். வாகனப் பழுது, வாகன மாற்றம், வாகன விபத்து ஏற்படும். உறவினர்களுக்கு உதவுதல், உறவினர்களால் அவமானப்படுதல், உறவு களால் வேதனை ஏற்படும். யார் நல்லவர், யார் கெட்டவர், யாரிடம் எப்படிப் பேசவேண்டும் என்கிற அடிப்படை விஷயங்களே இப்போது தான் புரியும். ஒருவரிடம் நாம் சொன்ன விஷயத்தை வேறிடத்தில் வேறுவிதமாக அவர் சொல்லி "ஏன்டா சொன்னோம்' என்கிற அளவு ஆகிவிடும்.

பொதுவாக அடுத்தவர் சொல்லும் அவர் களின் ரகசியங்களைக் கேட்காதீர்கள். பிறகு நீங்கள் சொல்லிதான் வெளியே தெரிந்ததாக உங்களுடன் சண்டைக்கு வருவார்கள். ஆனால் அவர்கள் அந்த ரகசியத்தை பலரிடம் சொல்லி யிருப்பார்கள். பாதச்சனியில் இப்படிப்பட்ட பலவித மனிதர்களை சந்திக்க வைக்கும். சுகமாக வாழ வழியில்லாமல் தவிக்கநேரும். தன்னைவிட தகுதியில் கீழானவர்களோடு இருக்க நேரும். ஒன்றுக்கும் உதவாத கண்டவர் களிடம் அறிவுரை கேட்க நேரும். அத்தனை சுகத்தையும் இழந்து பிடிக்காத இடத்தில் தங்குதல், சுகாதாரமற்ற வீட்டில் இருத்தல், பிடிக்காத மனிதருடன் சேர்ந்துவாழ நேரும். தினம்தினம் மரணப்போராட்டமாக இருக் கும்.

தீடீர் விபத்து, திடீர் நஷ்டம், திடீர் இழப்பு ஏற்படும். குடும்பத்தில் நோய், எதிரி, கடனால் அவஸ்தை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் உடனே கரைந்துவிடும். வருமானத்திற்கு மீறிய செலவுண்டாகும். வாங்கிய கடனைக் கட்டமுடியாமல் பணம் கொடுத்தவரிடம் திட்டுவாங்கி அவமானப்பட நேரும். எவ்வளவு லாபம் கிடைத்தாலும் அதனை சேர்த்து வைக்க முடியாது. ஏதாவதொரு வழியில் காரணமின்றி காணாமல்போகும். "கெஞ்சிக் கேட்கிறார்கள்; நாளைக்குத் தருகிறேன்' என பணம் வாங்குபவர்கள் திரும்பத் தராமல் அலைக்கழிப்பர். சில நேரம் நீதிமன்றப்படி ஏறவைத்துவிடும். பணம் வாங்கியவர்களிடம் "எப்படியாவது தயவுசெய்து கொடுங்கள்; வட்டியில்லாமல் அசலைக் கொடுத்தால் போதும்' என கெஞ்சும் காலம் வந்துவிடும். பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படும். குடும்பப் பிரிவு, குடும்பக் கலகம் என விதவிதமான பிரச்சினைகள் வரும். ஆனா லும் ஏழரைச்சனியின் கடைசிக்காலம் என்பதால் நன்மைகள் நடக்க ஆரம்பிக்கும். ஏழு வருடங்கள் கொடுத்த அனுபவத்தால் யாரிடம் எப்படிப் பேசுவது, கையாள்வதென தெரிந்து, புரிந்து, நல்ல முடிவுகளை உடனுக் குடன் எடுத்து முன்னேற்றப் பாதையில் செயல்படத் தொடங்குவர். சுயமாக வீடு, வாகனம் வாங்குதல், நிரந்தரத் தொழில் அமையும் யோகம் கிடைக்கும். மேற்சொன்ன கெட்ட பலன்கள் ஏழரை ஆண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் நடக்கிறது.

ஏழு வருடம், மாதம், வாரம், நாள், ஏழு மணிநேரம், ஏழு நிமிடத்திலோ பலன்கள் நடந்துமுடிந்து விடுகிறது. ஏழரைச்சனிக் காலத்தில் நேர்மையாக நடந்தால் சோதனைகள் வந்தாலும் சாதிக்கலாம். தவறான வழியில் சென்று சந்தோஷமாக வாழ்பவர்கள் திடீரென்று எழமுடியாத கீழ்நிலைக்குச் சென்றுவிடுவர்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 96003 53748