செவ்வாய்

செவ்வாய் ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறை ராசி மாறுவார். செவ்வாய் நின்ற ராசியிலிருந்து நான்கு, ஏழு, எட்டாமிடங்களைப் பார்வையிடுவார். குருவுக்கு ஒன்பதாம் பார்வை விசேஷப் பார்வை, சனிக்கு பத்தாம் பார்வை விசேஷப் பார்வையாக இருப்பதுபோல், செவ்வாய்க்கு எட்டாம் பார்வை விசேஷப் பார்வையாக இருக்கிறது. விசேஷப் பார்வையென்றால் பலமான பார்வையென்றுபொருள்.

செவ்வாய் ராசிக்கு மூன்று, ஆறு, பதினொன்றாம் இடங்களில் வரும்போது மட்டுமே நன்மையான பலன் களைத் தருவார். செவ்வாய் ராசிக்கு மூன்றில் நிற்கும்போது தைரியம், தன்னம்பிக்கை பிறக்கும்.செவ்வாய் ராசிக்கு ஆறு, ஒன்பது, பத்தாமிடங் களைப் பார்ப்பார். எதிரியை வெல்லும் ஆற்றல் உண்டா கும். நோய், எதிரி, கடன் பாதிப்பு குறையும். தந்தைக்கு நன்மை, தந்தையால் நன்மை கிடைக்கும். விசேஷப் பார்வை யால் தொழிலில் தனலாபம் கிடைக்கும். தொழில் சம்பந்த மான நற்பலனை எதிர்பார்க்க லாம்.

செவ்வாய் ஆறா மிடத்தில் நிற்கும் போது எதிரியை வெல்லும் ஆற்றல் கிடைக்கும். உடல் வலுப்பெறும். ஆபரண யோகம் கிடைக்கும். சுறுசுறுப்பாக, தைரியமாக செயல்பட்டு நினைத்ததை அடைவர். கடன்தீர வழிபிறக்கும். பாக்கியங்கள் வந்துசேரும். எதிர்பார்ப்புகளில் வெற்றியேற்படும். இடமாற்றம், வெளியூர்ப் பயணங்களால் லாபம் கிடைக்கும். உடல், மனம் வலுப்பெறும் காலம். வேற்றுமொழி, இன மக்களால் லாபமடைவர்.

Advertisment

செவ்வாய் ராசிக்கு பதினொன்றாமிடத்திற்கு வந்ததும் குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். தொழில்வழி லாபம், குடும்ப மகிழ்ச்சி கிட்டும். உற்றார்- உறவினர் போற்றுவர். புத்திர பாக்கியம், புத்திரரால் லாபம் பெறுவர். பூர்வீக, பூர்வபுண்ணியத்தால் லாபம் கிடைக்கும். நோய், எதிரி, கடன்தீரும் காலமாக இருக்கும்.

மற்ற ஒன்பது இடங்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியாகிச் செல்லும்போது தேவை யற்ற வீண் பிரச்சினைகளையே தருவார். செவ்வாய் ரத்த கிரகம் என்பதால் பாவ கிரகச் சேர்க்கை பெறும்போது முன்கோபம், அவசர புத்தி, ஆணவம், கர்வத்தால் காரியத் தடை, வாகன விபத்து, உடலில் ரத்தகாயம் ஏற்படுதல், நோயால் பாதிக்கப்படுதல் மற்றும் எதிலாவது தோல்வியடைவர். ரத்த அழுத்தத்தால் மனம் படபடக்கும். உணர்ச்சிவசப்பட்டு செயல் தடுமாற்றம் பெறுவர்.

சுபகிரகப் பார்வை, இணைவு, சேர்க்கை பெற்றால் எந்த இடத்தில் செவ்வாய் நின்றா லும் தீமையான பலன்கள் குறைந்து நற்பலனே நடக்கும். செவ்வாய்க்கு குருவின் பார்வை குரு மங்கள யோகத்தைத் தந்து அரசாங்க நன்மை, எதிர்பார்ப்புகளில் வெற்றியைத் தரும். சுக்கிரன், செவ்வாய் சேர்க்கையானது காதல், ரொமான்டிக் சிந்தனைகளைத் தரும். பாவகிரகச் சேர்க்கை பெற்றால் முறையற்ற உறவு, காதலைத் தந்து அவமதிப்பைத் தந்துவிடும். வளர்பிறைச் சந்திரன் சுப பார்வை, சந்திர மங்கள யோகத்தைக் கொடுத்து புகழ், சந்தோஷம், வெற்றி, மனமகிழ்ச்சியைத் தரும்.

Advertisment

புதன்

புதன் மாதம் ஒருமுறை ஒரு ராசிக்குப் பெயர்ச்சியாவார். புதன் கிரகம் ராசிக்கு நான்கு, ஆறு, எட்டு, பத்து, பதினொன்று ஆகிய இடங்களுக்கு வரும்போது நற்பலன் களை வாரிவழங்குவார். புதன் நான்கில் வரும்போது தாயார், சொந்தபந்தத்தால் சுகமடைவர். குடும்பத்தில் சுபகாரியம் மனமகிழ்ச்சியைத் தரும். ராசிக்கு ஆறில் வரும்போது நோய், எதிரி, கடன் பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி கிடைக்கும். எட்டாமிடத்தில் மறைந்த புதன் நிறைந்த லாபத்தைத் தருவார். புத்திரர்களால் லாபம், பூர்வீக, பூர்வபுண்ணியத்தால் நன்மைகள் ஏற்படும். ஆடை, ஆபரணங்கள் கிடைக்கும். பத்தாமிடத்திற்கு வரும் புதனால் தொழில் மேன்மை கிடைக்கும். துணைவரால் யோகம், நண்பர்களால் சந்தோஷம், சுகத்தைப் பெறுவர். பெண்களால் ஆதாயமடைவர். ராசிக்குப் பதினொன்றில் வரும் புதனால் குடும்பத்தால் லாபம், குடும்பத்திற்கு லாபம் கிடைக்கும். லாபகரமான விஷயங்கள் தேடிவரும். ஆனால் புதன் ராசிக்கு ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பன்னிரண்டாமிடங்களுக்குச் சென்றால் தீய பலன்களையே தருவார். சுபகிரக இணைவு, பார்வை என ஏதாவது சம்பந்தப்பட்டால் தீமைகள் குறையும். புதன்- சூரியனை நெருங்கியே பயணம் செய்வதால் சூரியன், புதன் இணைவு புதாதித்ய யோகத்தால் அரசாங்க நன்மை கிட்டும். தீய பலன்கள் குறையும். சூரியனிடம் அஸ்தங்கப்பட்டு தன் தீய பலன்களை செயல்படுத்த முடியாமல் போவார்.ஆதலால் பொதுவாக கோட்சார புதனால் கொடிய பலன்களைத் தரமுடியாது. தசை நன்றாக இருந்தால் அரசு லாபம்,நல்ல புத்தி, நற்செயல் செய்ய, வெற்றிக்கு ஆலோசனை தரும் அறிவைத் தருவார்.

சுக்கிரன்

சுக்கிரன் மாதம் ஒருமுறை ஒரு ராசிக்குப் பெயர்ச்சியாவார். சுக்கிரன் ஆறு, ஏழு, பத்து ஆகிய மூன்று இடங்களில் மட்டும் நல்ல பலன்களைத் தரமாட்டார். ஆறாமிடத்திற்கு வரும் சுக்கிரன் காரியத்தடை, மந்தம், சந்தோஷக் குறை, வீண் பிரச்சினைகளை உண்டுசெய்வார். ராசிக்கு ஏழாமிடத்திற்கு சுபகிரகமான சுக்கிரன் வந்தால் பெண்களால் தொல்லை, அவமானம், கிடைக்கவேண்டிய சுகம் கிடைக்காமல் அவதிப்பட நேரும். கல்யாணத் தடை, காரியத் தடை உண்டாகும். ராசிக்கு பத்தாமிடத்திற்கு சுக்கிரன் வந்து கேந்திராதிபத்திய தோஷமடைவதால் பெண்களால் கலகம், துன்பம், கண்டம், நஷ்டம், அவமானம் அடைவர். கலைகளால் பாதிப்பு, காரியத் தடை, தாமதம், தோல்வி உண்டாகும். எல்லா ராசிக்காரர்களுக்கும் இந்தப் பலன் பொருந்தாது. ராசிக்கு சுக்கிரன் பாதகாதிபதி, மாரகாதிபதி, ஆறு, எட்டு, பன்னிரண்டாம் அதிபதியாகி அல்லது கோட் சார சுக்கிரன் பாவகிரகத்தால் பாதித்து அல்லது ஏதாவது ஒருவகையில் கெட்டால், கெட்ட பலன்கள் தராமல் நன்மை செய்வார்.

ve

சுக்கிரன் ராசிக்கு மேற்சொன்ன மூன்று இடங்களைத் தவிர்த்து மற்ற ஒன்பது இடங்களுக்குப் பெயர்ச்சியாகும்போது செல்வம், செல்வாக்கு, பெண்களால் யோகம், தாம்பத்திய சுகம், பணவரவு, அரசாங்க நன்மை, கௌரவம், சுபகாரியம், ஆடை, ஆபரணச் சேர்க்கை, மகிழ்ச்சி, வெற்றி, கலை யார்வம், சுகம், சந்தோஷமான அனுபவங்கள் கிடைக்கப் பெறும். புத்திர லாபம், புத்திர பாக்கியம், தெய்வ அனுகூலம் என நன்மை களை வாரிவழங்குவார். மனிதனுக்கு சந்தோ ஷம் தரும் சுக்கிரன் மட்டுமே அதிக தொல்லை களைத் தருவதில்லை. சுக்கிரன் பெயர்ச்சியில் ஆறு, ஏழு, பத்தில் இருந்தாலும் சுபகிரக இணைவு, பார்வை சம்பந்தம் பெற்றால் தீயபலன் குறைந்து நன்மையே கிடைக்கும். நல்ல தசை நடந்தால் தினமும் சொகுசாக வைத்துக்கொள்ள சுக்கிரன் பெயர்ச்சி துணைநிற்கும்.

வக்ர நிலையின் பலன்

கிரகம் வக்ரமடைவது என்றால், வானிலிருக்கும் கிரகங்கள் சுற்றுப்பாதையில் சுழன்று வரும்போது சுழலும் வேகம் குறைவது, பின்னோக்கிச் செல்வது, நகராமல் அதே இடத்தில் சுழல்வது போன்ற தோற்றமே யாகும். பூமி சூரியனைச் சுற்றிவரும்போது வளைவான பாதையில் உண்டாகும் தோற்றமே வக்ரமாக சொல்லப்படுகிறது. பஞ்சாங்கத்தில் அடுத்தடுத்த நட்சத்திரத்திற்குச் செல்ல வேண்டிய கிரகம் கடந்துவந்த நட்சத்திரத் திற்கே பின்னோக்கிச் செல்வது.

உதாரணமாக அஸ்வினி நட்சத்திரத்திலிருந்து நான்கு பாதங்கள் கடந்து பரணி நட்சத் திரத்திற்குச் சென்றுவிட்டு, மீண்டும் பரணி 2-ஆம் பாதத்திலிருந்து பரணி 1, அஸ்வினி 4, அஸ்வினி 3 என பின்னோக்கி வருவதுதான் வக்ரம். ஒவ்வொரு கிரகத்திற்கும் வக்ர காலங்கள் மாறுபடும். சூரியன், சந்திரனுக்கு வக்ரமில்லை. ராகு- கேது எப்போதும் பின்னோக்கியே சுழலுகின்றன. அதனால் ராகு- கேதுக்களுக்கும் வக்ரமில்லை.

ஏனைய ஐந்து கிரகங்களான குரு, சனி, சுக்கிரன், புதன், செவ்வாய்க்கு வக்ரம் உண்டு. சனி கிரகம் வருடம் ஒருமுறை 120 நாட்கள்முதல் 150 நாட்கள்வரை வக்ரமாவார். குரு ஒவ்வொரு வருடமும் குறைந் தது தொன்னூறு நாட்கள் வக்ரமாவார். செவ்வாய் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை அறுபது நாட்கள் வக்ரமடைகிறார்.

சுக்கிரன் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நாற்பத்தைந்து நாட்கள் வக்ரம் பெறுவார். புதன் மூன்று மாதத்திற்கு ஒருமுறை- அதாவது வருடத்திற்கு மூன்று முறை, மூன்று வாரங்கள் வக்ரமடைகிறார். சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 5, 6, 7, 8-ஆமிடங்களில் கிரகங்கள் வக்ரமடையும். ஒன்பதாமிடத்திற்கு வந்ததும் வக்ர நிவர்த்தியடைவார்கள். வக்ர காலத்தில் தான் நின்ற இடத்தில் தரவேண்டிய பலனுக்கு எதிர்மறையான பலனைத் தருவர். நன்மை தரவேண்டிய இடத்தில் நின்று வக்ரமானால் தீயபலனையும், கெட்ட இடத்தில் நின்று வக்ரமானால் நல்ல பலனையும் தருவர்.

வக்ரகாலம் என ஏன் வருகிறதென்றால் தொடர்ந்து நன்மை நடந்தால், மனிதன் ஆணவமாகி தொல்லை தருவான். தொடர்ந்து தீமை நடந்தால் மனம் வெறுத்து இறந்தே போய்விடுவான். அதனால் தெளிய வைத்து தெளிய வைத்து அடிவிழுந்தால் கொஞ்சம் ஆறுதலாகி நடப்பார்கள். என்னதான் குரு, சனிப்பெயர்ச்சிகளால் தொல்லை வந்தாலும் வக்ரகாலத்தில் தீமை குறையும்.

அதேபோல் கிரகம் அதிசாரமாகும். பின்னோக்கி வராமல் அதிவேகமாக முன்னோக்கி அடுத்த ராசிக்கு கிரகம் சென்றுவிடுவதுதான் கிரக அதிசாரமாகும். மனிதனுக்கு நன்மை- தீமை கலந்து நடப்பதற்காகவே வானில் கிரகங்களும் சுழற்சியில் மாற்றம் செய்கின்றன. மனித உடம்புக்கும் கிரகங்களுக்கும் நேரடித் தொடர்புண்டு. கிரக கதிர்வீச்சுகள் நம்மீது படுவதைப்போலவே நம் மனம், உடல்நிலை செயல்படும். நெடுநாட்கள் சண்டையில் பிடிக்காமல் இருப்பவரைக்கூட கிரகப் பெயர்ச்சியானதும் மன்னித்து மறந்து ஏற்றுக்கொள்வதைப் பார்க்கலாம். சிறிய காரணத்திற்காக வாழ்நாள் முழுவதும் பேசாமல் பிரிந்தவர்களும் உண்டு. கிரகங்களின் சுழற்சி தனிநபர் வாழ்வை மாற்றும்.

கோட்சாரம் பலன்தரும் காலம்

கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியானவுடன் பலன் தருவதில்லை. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் மாறியவுடனே துவங்கி தன் காலம் முழுவதும் பலன் தருவர். குரு, சுக்கிரன் பெயர்ச்சியாகி மத்தியில் முழுப்பலன் தருவர். சனி, ராகு- கேதுக்கள் தாமதமாகப் பின்னால் பலன் தருவர்.

மேலும் ஒரு ராசியிலிருந்து கிரகம் மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவதற்கு முன்பே அடுத்த ராசியைப் பார்க்கத் தொடங்கிவிடுவார். அதனால்தான் நல்லதோ- கெட்டதோ நடப்பதற்குமுன்பே சில நாட்களுக்குமுன் பலன்களுக்கான செயல்முறை வேலைகள் நடக்கும். சில நேரம் உள்ளுணர்வு சொல்லியதாகக்கூடத் தோன்றும். சூரியன் ஐந்து நாட்களுக்கு முன்பும், புதன், சுக்கிரன்ஏழு நாட்களுக்கு முன்பும், செவ்வாய் எட்டு நாட்களுக்கு முன்பும், குரு இரண்டு மாதங்களுக்கு முன்பும், சனி ஆறு மாதங்களுக்கு முன்பும், ராகு- கேது மூன்று மாதங்களுக்கு முன்பும் தான் நின்ற ராசியைவிட்டு அடுத்த ராசியைப் பார்க்கத் தொடங்குவர். இதனால் பெயர்ச்சிக்குப்பிறகு கொடுக்கவேண்டிய பலனை முன்பே கொடுக்கத் துவங்கிவிடும்.

தினப்பலன்

அன்றைய நாளின் கோட்சார கிரகங்களை வைத்து ஒருவரின் நடவடிக்கையைச் சொல்ல முடியும். ஒருநாள் கோபமாக இருக்கும் மனிதன் அடுத்தநாள் சாந்தமாக மாற இந்த கிரகங்களின் பெயர்ச்சியே காரணமாக இருக்கும். முக்கிய நிகழ்வுகள் நடக்கும் காலங்களில் அந்தநாளின் கோட்சார கிரகங்கள்பலன்களின் தன்மைகளைக் கொடுத்திருக்கும். வெற்றி- தோல்வி, சந்தோஷத்தின் உச்சம், சோகத்தின் நிலையை மாற்றும் சக்தியை கோட்சார கிரகங்களே தீர்மானிக்கின்றன. அன்றாடம் தினப்பலன் பத்திரிகை, ஊடகங்களில் மேற்கண்ட முறைகளிலேயே தொகுத்து ஆராய்ந்து சொல்கிறார்கள். தினப்பலன் பெரும்பாலானவர்களுக்கு பலிக்கும்.

நவகிரகங்களின் அன்றைய கோட்சாரத் துடன், ஜாதக தசா புக்திகளையும் கணக்கிட் டால் சரியான தினப்பலனை தனிநபருக்குச் சொல்லிவிடலாம்.

பெண் ஜாதகம்

ஜோதிட ஜாதகப் பலன்களில் ஆண்- பெண் பேதமில்லை. ஆண்களின் ஜாதகத் தைப் பார்ப்பதுபோலதான் பெண்களின் ஜாதகத்தையும் பார்த்துப் பலன் சொல்ல வேண்டும். பெரிய வித்தியாசம் இருக்காது. பெண்கள் மனநிலை, கலாச்சாரம் ஆகிய வற்றை அடிப்படையாகக்கொண்டே ஜோதிடர்கள் பலன்சொல்லியிருக்கிறார் கள். ஆணாதிக்கம் இருந்தது உண்மையே. இருந்தாலும் அதன் தேவையைத் தவிர்க்கமுடியாது. பெண்ணால் மட்டுமே நல்ல சமூகத்தை உருவாக்க முடியும். பெண்களின் ஒழுக்கத்தை முன்னிலைப் படுத்தியதன் நோக்கமே மனித வளர்ச்சிக்காக தான் என்று சொன்னால் மிகையாகாது.

அதனால் ஜாகத்தில் சில நுணுக்கமான இடங்களை பெண்களுக்குக் கண்டறிந்துள் ளனர்.

பெண்களுக்கு நான்காமிடம் கற்பையும், ஏழாமிடம் கணவரின் நிலையையும், எட்டா மிடம் மாங்கல்யத்தையும், ஒன்தாமிடம் சந்ததிகளின் நிலையையும், ஐந்தாமிடம் புத்திர பாக்கியத்தையும் குறிப்பிட்டு ஆய்வுசெய்து சொல்லவேண்டும்.

ஆண்களுக்கு களத்திரகாரகனாக சுக்கிரனை வைத்து மனைவி பற்றியும், பெண் களுக்கு களத்திரகாரகனாக செவ்வாயை அடிப்படையாகக்கொண்டு கணவர் நிலையையும் குறிப்பிடவேண்டும். இவ்வாறு நுணுக்கமாக ஆராய்ந்து திருமணம், குழந்தை, தொழில் ஸ்தானம் பார்த்து, சுபகிரக குரு பார்வை கவனித்துச் சொன்னால் தான் ஜாதகப் பலன் சரியாக இருக்கும்.

ருது ஜாதகம்

குழந்தையாக இருக்கும் பெண்ணுக்கு கர்ப்பப்பை திறக்கும் காலத்தை ருதுகால மாகக் கணிக்கிறோம். முற்கால உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல், கலாச்சாரம், பெண் களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப் பாக வைத்திருந்தன. அதனடிப்படையில் கணிக்கப்பட்ட ருதுப் பலன்கள் சரியாக இருந்தது. பெண் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் குடும்ப மூத்தவர்கள், பெற்றோர்,

உறவினர் மனரீதியாக பலமாக பாதுகாப்ப ளித்தனர். இரவு நேரங்களில் மட்டுமே கர்ப்பப்பை திறக்குமென அறிவியல் ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று ருதுகால விழிப்புணர்வு, பெற்றோருக்கே சரியாகத் தெரியாததால் ருதுவாகும் சரியான நேரத்தைச் சொல்ல முடியாமல், கண்ணில்படும் நேரத்தைச் சொல்கிறார்கள். அதனடிப்படையில் லக்னம் சரியாகக் கணிக்க முடிவதில்லை. சந்திரன் இரண்டேகால் நாட்கள் ஒரே ராசியில் இருப்பதால் தோராயமாக ராசி சொல்லமுடியும். சில நேரங்களில் நட்சத்திரம் மாறி அடுத்த ராசி ஆகிவிட்டால் தவறான பலன் சொல்லவேண்டியதாகிவிடும். நடை முறைச் சிக்கல், குழப்பத்தால் ருது ஜாகத்தை விட்டு பிறந்த ஜாகத்தைப் பின்பற்றுவதே நல்லது. சில குழந்தைகளுக்கு பிறக்கும் நேரத்தை சரியாகச் சொல்லாததால் ஜாதகப் பலனே மாறியிருக்கிறது. சில நிமிடங்கள் மாறினாலும் துல்லியமான பலன்கள் சொல்லமுடியாமல் தவறாகிவிடுகிறது. முடிந்த அளவு குழந்தை பிறந்த நேரத்தை சரியாகத் தெரிந்து கணித்து பிறந்த ஜாதகத் தைப் பார்த்தாலே நமக்குத் தேவையான பலன்கள் கிடைத்துவிடும்.

செல்: 96003 53748