ஷ்டத்தில் உழன்றுகொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவரும், அடுத்துவரும் குருப்பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சி அல்லதுஏதாவ தொரு பெயர்ச்சி நம் வாழ்க்கையை மாற்றிவிடாதா என்று ஏங்கி, நல்ல காலத்தை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். அதேபோல் எந்த கடவுளாவது நம் பிரச்சினைகள் அத்தனையையும் தீர்த்து வைக்காதா என வேண்டி, ஜோதிடர்கள் சொல்லும் கோவில்களுக்கும், அக்கம் பக்கத்தில் உள்ளோர், "அந்தக் கோவிலுக்குப் போனேன்; கஷ்டம் போச்சு. இந்தக் கோவிலுக்குப் போனேன்; பிரச்சினை எதுவும் எனக்கு வரலை'' என சொல்லும் வார்த்தை களைக் கேட்டும் நம்பிக்கையுடன் சென்று வழிபட்டு வருகிறார்கள்.

எங்கு சென்றும் தொடர் தோல்விகளால் காரணம் புரியாமல், எதிரிகள், துரோகிகள் வைத்த செய்வினையால்தான் நமக்கு கஷ்டமோ என, எதாவது செய்து கஷ்டத்தைத் தீர்த்தால் போதுமென கேள்விப்படும் அத்தனைப் பரிகாரத் தையும் செய்து, சிலர் வெற்றிபெற்ற தாகவும், பலர் தோல்வியடைந்த தாகவும் சொல்கிறார்கள்.

siva

Advertisment

பொதுவாக ஜோதிடர்கள் ஜாத கத்தி-ருக்கும் கெட்ட பலன் களைச் சொன்னால், சராசரி மக்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவார்கள். ஆதலால், கெட்ட பலன்கள் இருந்தாலும் பயமுறுத்தா மல், நம்பிக்கை கொடுக்கவேண்டும். வாக்கு ஸ்தான பலம் ஜோதிடர் களுக்கு அதிகமிருப்பதால் கெடு பலன்கள் சொல்வதைத் தவிர்த்து,' நல்ல காலம் சீக்கிரம் வந்துவிடும்' என சொல்- ஊக்கம் தரவேண்டும். எதிர்மறை எண்ணங்களால் பலர் விரக்தியடையகூடும். ஆதலால் நேர்மறை எண்ணங்களை மக்களுக்கு ஜோதிடர் கள் விதைக்க வேண்டும்.

"ஜோதிடம் என்பது நம்பிக்கை சார்ந்தது. விதியை மாற்றும் வல்லமை கடவுளுக்குண்டு. முயன்றால் முடியா தது எதுவுமில்லை. விதியை மதியால் வெல்லலாம்.' இப்படியெல்லாம் சொல்- நம்பிவரும் வாடிக்கையாளர் களை உற்சாகப்படுத்தி வழிகாட்ட வேண்டிய பொறுப்பு ஜோதிடருக்கு இருக்கிறதென அறிவுரை சொல்கிறார் கள். இப்படிஉண்மையைச் சொல்ல விடாமல் ஜோதிடர்களைத் தடுத்து விட்டு, "கெட்டது நடக்குமென்று முன்பே சொல்-யிருந்தால் எச்சரிக்கை யாக இருந்திருப்போமே' என ஆதங் கப்படுபவர்களும் உண்டு. இதனால் தான் பெரும்பாலான ஜோதிடர்கள் மனம் புண்படக்கூடாதென்று பலனைப் பதமாகச் சொல்வார்கள் என்பதை மக்களும் அறிவர். முத-ல் கோட்சாரப் பலன்களைப் பார்ப்போம்.

கோட்சாரப் பலன்கள்

ஒருவரின் வாழ்நாள் பலனை, ஜாதகர் பிறந்த நாள், நேரம், பிறந்த ஊர் அடிப்படையில் கணித்த ஜாதகத்தை வைத்துப் பலன் சொல்வார்கள். "கோள்' என்பது கிரகம்; "சாரம்' என்றால் நகர்வு. வானத்தி-ருக்கும் கிரகங்களின் நகர்வுதான் கோட்சாரம். ஜாதகம் பார்க்கும் நாளன்று, பிறந்த ஜாதகத்தின் ராசியின் அடிப்படையில் கோட்சாரத் தில் இருக்கும் தற்போதைய நவகிரக நிலைகளின் அடிப்படையில் கணக் கிட்டு, அன்றைய பலன்களைச் சொல்வதுதான் கோட்சாரப் பலன். நவகிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட நாட்களுக்கொரு முறை ஒரு ராசியி-ருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும்.

நவகிரகப் பெயர்ச்சிகள்

ஒரு ராசியி-ருந்து மற்றொரு ராசிக்கு சந்திரன் இரண்டு நாள், ஆறு மணி; சூரியன் ஒரு மாதம்; செவ்வாய் ஒன்றரை மாதம்; புதன் ஒரு மாதம்; சுக்கிரன் ஒரு மாத காலத்தில் பெயர்ச்சி யடைவர். இவையனைத்தும் குறுகிய காலப் பெயர்ச்சிகள். எனவே இந்த கிரகங்களின் பெயர்ச்சிகளால் ஜாதருக்கு பலன்களில் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால் குரு ஒரு வருடமும், சனி இரண்டரை ஆண்டுகளும், ராகு- கேது ஒன்றரை வருடத்திற்கொருமுறையும் என ஒரு ராசியைவிட்டு இன் னொரு ராசிக்கு மாறுவார்கள். குரு, சனி, ராகு- கேது பெயர்ச்சி வருடக்கணக்கில் இருப்பதால் வாழ்க்கையில் பெரும் மாற்றங் களை ஏற்படுத்துகின்றன.

குறிப்பாக சனி இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசி யி-ருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதால், ஜாதகரின் பலன் குறிப்பிடத்தக்க வகையில் வித்தியாசப்படுகிறது. கோட்சாரப் பலன்களின் தாக்கம் ஜாதகத்துக்கு ஜாதகம் மாறும்.

ஒரே ராசிக்காரர்களில் சிலருக்கு நற்பலன்கள் அதிக மாகவும், சிலருக்கு மத்திமமாகவும், இன்னும் சிலருக்கு குறைவாகவும் நடைபெறும். அதற்குக் காரணம் அவரவர் 1, 5-ஆமிடம் பூர்வபுண்ணியப்படியும், சுய ஜாதகத்தில் நடைபெறும் தசாபுக்திகள் அடிப்படையிலும் அமையும். தீமை தரும் தசாபுக்தி நடக்கும்போது, கோட்சாரப் பலன் நன்றாக இருந்தால் ஆறுதலான சில நற்பலன்கள் நடைபெறும். கோட்சாரப் பலனை ராசிக்கு- அதாவது சந்திரன் நின்ற இடத்திற்கு மட்டுமே பார்க்கவேண்டும். லக்னத்திற்கு கோட்சாரப் பலன் பார்க்கக்கூடாது. "எதிலாவது நல்லது, எப்படியாவது நல்லது நடக்கவேண்டும் அல்லது ஏதாவது நல்லது சொல்லுங்கள்'

என மக்கள் வற்புறுத்துவதால், "பாசிடிவ் வைப்' கேட்பவர்களுக் காகவும், வியாபாரத்திற்காகவும் சிலர் இப்போது லக்னத்திற்கு கோட்சாரப் பலன் சொல்கிறார்கள். லக்னத்திற்கு கோட்சாரப் பலன் சொல்வது முற்றிலும் தவறான முறை.

குருப்பெயர்ச்சி

குருப்பெயர்ச்சி வருடம் ஒருமுறை நடைபெறும். 12 ராசிகளான மேஷம்முதல் மீனம்வரை ஒவ்வொரு ராசியிலும் ஒரு வருடம் தங்குவார். அதனால் குருவுக்கு 12 வருடம் ஒரு சுற்று. அதாவது வான மண்டலத்தில் சூரியனை வியாழன் கோள்ஒருமுறை சுற்ற 12 வருடங்கள் ஆகும். அதைதான் ஜோதிடத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக கோட்சாரத்தில் குரு ராசிக்கு 2, 5, 7, 9, 11-ஆமிடங்களில் இருந்தால் நற்பலனையும்; 1, 3, 4, 10 ஆகிய இடங்களில் சுமாரான பலன்களையும்; 6, 8, 12-ஆமிடங்களில் தீய பலன்களையும் தரும். இதுவும் ராசிக்கு ராசி பலன்கள் மாறுபடும். ஜாதகரின் ஜாதக தசாபுக்திக்கு ஏற்றபடியும் நன்மை- தீமை நடக்கும்.

பொதுவாக குரு ஒரு ராசியில் பன்னிரண்டு மாதங்கள் இருப்பார். குருப் பெயர்ச்சி இரண்டு மாதங்களுக்கு முன்பே பலன் கொடுக்க ஆரம்பித்துவிடும். "குரு நின்ற இடம் பாழ்; பார்க்குமிடத்திற்கு நன்மை செய்வார்; குரு கொடுக்க நினைத்தால் தடுக்கமுடியாது; திருமணத்திற்கான குரு பார்வை, குருபலம் வந்துவிட்டது' என குருவைப் பற்றி நிறைய சொல்லலாம்.

"குரு பெயர்ச்சியான பிறகும் எனக்கு அதே நிலைதான். போன குருப் பெயர்ச்சிகூட நன்றாக இருந்தது.நல்ல இடத்திற்கு வந்தபிறகுதான் அதிக தொல்லையே நடக்கிறது. சோஷியல் மீடியாவில என் ராசிக்கு ஆகா ஓகோன்னு சொன்னாங்க. எங்க... இருப்பதைவிட கஷ்டம் அதிகமாகிட்டே போகுது. இன்னும் ரெண்டு மாசத்துல சரியாகிடும்னு சொல்றாங்க. முதல்ல நாளைக்கு நான் இருப்பனான்னே தெரியல.

அவ்வளவு கஷ்டம்' என புலம்புபவர்கள் நிறைய உண்டு. உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். குருப்பெயர்ச்சி ஒரு ராசியி-ருந்து மற்றொரு ராசிக்கு செல்வதென்பது, அந்த ராசிக்குரிய நட்சத்திரத்தில் நகர்வார். ஒரு ராசிக்குள் மூன்று நட்சத்திரங்கள்- அதன் பாதங்கள் இருக்கும். வானில் நட்சத்திரங்கள் நகர்வதுபோல் தினந் தோறும் மெல்ல நகர ஆரம்பிக்கும். அது புரியாமல், குரு அடுத்த ராசிக்கு மாறிய மறுநாளே நல்லது நடக்கவில்லையே புலம்ப ஆரம்பித்து விடுவர். சிலருக்கு இரண்டு மாதத்திற்கு முன்பேகூட நற்பலன் கிடைக்கும். ஏனென்றால் ஒருசில நட்சத்திரங்கள் இரண்டு ராசிகளில் இருக்கும். அப்போது அந்த நட்சத்திரத்தில் குரு வந்தவுடன் நற்பலன் கொடுக்க ஆரம்பித்து விடும்.குருப்பெயர்ச்சிஆரம்பித்தவுடன் ஜாதகரின் ராசி, நட்சத்திர பாதம் நட்பு நிலையில் இருக்க, கோட்சாரப் பலன் நன்மை செய்யத் தொடங்கும். சிலருக்கு நடுப் பகுதியிலும், குருப்பெயர்ச்சி நடந்து அடுத்த நட்சத்திர ராசிக்குக் கிளம்பும் நேரத்திலும் சுப காரியங்கள் நடைபெறும்.

அதற்கான காரணம், குரு எந்த நட்சத்திரத்தில் இருக்கும்போது பலன் தரமுடியுமோ அப்போதுதான் தருவார்.

குருப்பெயர்ச்சிப் பலன்கள்

சந்திரன் இருக்கும் ராசிக்கு குரு வருவதை "ஜென்ம குரு' என்பார்கள். "ஜென்ம குருவில் ராமர் வனவாசம் சென்றார்' என உதாரணத்திற்குச் சொல்வர். ராமர் தனக்கு மறுநாள் நடக்கவிருந்த பட்டாபிஷேகத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு நாட்டை விட்டே வெளியேறினார். இதி-ருந்து நாம் பலனைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் எதிர்பார்த்த காரியம் தடைப்படும். நினைத் தது நடக்காது. நம்பிக்கை துரோகம் நடக்கும். கலகம் உண்டாகும். இதனால் மனக் குழப்பம் ஏற்படும். உடல்நலம் பாதிக்கப்படும். நியாயமாக கிடைக்கவேண்டியது கிடைக்காது. போராடவேண்டி இருக்கும். மனஸ்தாபம் ஏற்படும். வீண் அலைச்சல், நாளை நடக்கவேண்டியது தள்ளிப்போதல், மந்தநிலை நீடிக்கும்.

குரு நின்ற இடம் பாழ்; பார்க்கும் இடத்திற்கு நல்ல பலன் கிடைக்கும் என்னும் அடிப்படையில் ஜென்மத்தில் குரு நின்று, பார்க்கும் 5, 7, 9-ஆம் இடங்களுக்கு நல்ல பலன்களை வாரிவழங்குவார். குரு ஜென் மத்தில் நின்று தன்னைக் கெடுத்தாலும், முன்னேற்றத்தைத் தடுத்தாலும், ஊரைவிட்டு வெளியே துரத்துதல், வேலை விஷயமாக வெளியூர் செல்லவைத்தாலும், நோய், எதிரி, கடனால் பாதிக்கப்படச் செய்தாலும், ஐந்தாமிடமான பூர்வபுண்ணிய ஸ்தானம் வலுப்பெறும். அதாவது குழந்தைகள், குல தெய்வம், அவர்களுக்கான கடமைகளைச் செய்யவைப்பார். ஏழாமிடமான தொழில் கூட்டாளி, வாழ்க்கைத் துணைவருக்கு நன்மை செய்வார். ஒன்பதாமிடமான வாழ்நாள் பாக்கியமான புத்திர பாக்கியம், வீடு, மனை, வாகனங்களைத் தருவார்.

பலவீனமான பாவ வலுப்பெற்ற ஜென்ம குருவாக இருந்தால், மேற்கண்டவற்றால் கெடுபலன் ஏற்பட்டு துயரங்களை அடைவார். ஜென்ம குரு வந்ததும் சிலருக்கு ஏதாவது காரணத்தால் உறவினர் பகை ஏற்பட்டு, குடும்பப் பிரிவை சந்திப்பர். உடல், மனரீதீயாக பல இன்னல்களை சந்திப்பர். "வனத்தில் சீதையை சிறை வைத்ததும் ஜென்ம குருவில்' என்பர். ஆதலால் ஜென்ம குருவில் மருத்துவமனை, சிறை அல்லது நான்கு சுவர்களுக்குள் அடைந்துகிடைக்கும் நிலை அல்லது மறைந்து வாழவேண்டிய சூழல் உண்டாகும். துன்பமே நடந்தால் வெறுத்துப் போவர் என்பதால், குரு பார்க்கும் இடத்திற்கான சில நன்மைகளும் நடக்கும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 96003 53748