ருவரது ஜனனகால ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறுக்குடையவர் ரோகாதிபதியாவார். அவர் எந்த நட்சத்திரத்தில் நிற்கிறாரோ, அந்த நட்சத்திரம் ஆதிக்கம் செலுத்தும் இடத்தில்தான் முதலில் நோய் ஆரம்பமாகும். ஐந்தாமிட மான பூர்வபுண்ணியத் தொடர்பால் ஏற்படும் நோய்களை லக்னத்திற்கு ஆறாமிடத் தின்மூலம் அறியமுடியும். வாழ்வியல் முறை மற்றும் உணவுப் பழக்கத்தால் ஏற்படும் நோய்களை சந்திரன்மூலம் தெரிந்துகொள்ள வேண்டும். லக்னத் திற்கு எட்டாமிடம் மற்றும் உடல் காரகனாகிய

சந்திரன் நின்ற இடத்திற்கு ஆறாமிடத்தின் தன்மைக் கேற்ப நோயின் தாக்கம் மாறுபடும். எது எப்படி யிருந்தாலும் ஜோதிடம் பார்க்க வருபவர்கள் பலர் தங்கள் லக்னம் மற்றும் ராசிப்படி எந்த முறை வைத்தியம் நோயை குணமாக்கும்- எந்த நாளில் சிகிச்சை ஆரம்பிப்பது போன்ற பல தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.

இந்தக் கட்டுரையில் ரோகத்திற்குத் தீர்வுதரக் கூடிய சில முக்கிய குறிப்புகளைக் காணலாம்.

நட்சத்திரத்தால் ஏற்படும் நோய்களும் குணமாகும் காலமும்

Advertisment

அஸ்வினி- 19 நாள்.

பரணி- குணமாவது கடினம்.

கார்த்திகை- குணமாவது கடினம்.

Advertisment

ரோகிணி- 17 நாள்.

மிருகசீரிடம்- 25 நாள்.

திருவாதிரை- குணமாவது கடினம்.

புனர்பூசம்- 9 நாள்.

பூசம்- 10 நாள்.

ஆயில்யம்- குணமாவது கடினம்.

மகம்- வருடக் கணக்காகும்.

dd

பூரம்- குணமாவது கடினம்.

உத்திரம்- 8 நாள்.

அஸ்தம்- 15 நாள்.

சித்திரை- 16 நாள்.

சுவாதி- குணமாவது கடினம்.

விசாகம்- 25 நாள்.

அனுஷம்- வருடக் கணக்காகும்.

கேட்டை- குணமாவது கடினம்.

மூலம்- 2 நாள்.

பூராடம்- குணமாவது கடினம்.

உத்திராடம்- 41 நாள்.

திருவோணம்- 17 நாள்.

அவிட்டம்- 11 நாள்.

சதயம்- 13 நாள்.

பூரட்டாதி- குணமாவது கடினம்.

உத்திரட்டாதி- 7 நாள்.

ரேவதி- வருடக் கணக்காகும்.

கடைப்பிடிக்க வேண்டிய மருத்துவ முறை: ஆறாமதிபதி நின்ற நட்சத்திர அதிபதிக்கேற்ற மருத்துவத்தைப் பின்பற்றவேண்டும். அதன்படி-

சித்த மருத்துவம்

ராகுவின் நட்சத்திரமான திருவாதிரை, சுவாதி, சதயம் மற்றும் கேதுவின் நட்சத்திர மான அஸ்வினி, மகம், மூலத்தில் ஆறாமதி பதி சஞ்சரிப்பவர்கள் சித்த வைத்தியம் செய்ய வேண்டும்.

யுனானி மருத்துவம்

சூரியனின் நட்சத்திரமான கிருத்திகை, உத்திரம், உத்திராடத்தில் ஆறாமதிபதி நின்றால் யுனானி முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஹோமியோபதி

சந்திரனின் ரோகிணி, அஸ்தம், திரு வோண நட்சத்திரத்தில் ஆறாமதிபதி சம்பந்தம் பெற்றால் ஹோமியோபதி மருந்து சாப்பிட வேண்டும்.

மின்சார சிகிச்சை

செவ்வாயின் மிருகசீரிடம், சித்திரை, அவிட்ட நட்சத்திரம் 6-ஆமதிபதிக்கு தொடர்புபெற்றால் மின்சார சிகிச்சை செய்யவேண்டும்.

மூலிகை மருத்துவம்

சுக்கிரனின் பரணி, பூரம், பூராட நட்சத்திரத்தில் ஆறாமதி பதி நிற்பவர்கள் மூலிகை மருத்துவத்தால் நோயை குணமாக்கவேண்டும்.

செந்தூரம், பஸ்பம்

குருவின் நட்சத்திரங் களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி போன்ற நட்சத்திரத்துடன் ஆறாமதிபதி இணைந்தால் செந்தூரம், பஸ்பங்கள் சாப்பிடுவதன்மூலம் நோய் நிவர்த்தியாகும்.

சாது, சந்நியாசி, மாகான் தரும் மருந்துகள்

சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதியில் ஆறாமதிபதி சேர்ந்தால் சித்தர்கள், சாதுக்கள், சந்நியாசிகள், மகான் கள் ஆசிபெற்று, அவர்கள் கையினால் மருந்து வாங்கி உண்ணவேண்டும்.

கலப்பு மருந்து

புதனின் ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத் திரங்கள் ஆறாமதிபதி சாரம்பெற்றால் பல வகை கலப்பு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

12 லக்னத்தினர்- ராசியினர் மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெறக்கூடாத நாட்கள்

மேஷம்- புதன், வெள்ளி, சனி.

ரிஷபம்- வெள்ளி, செவ்வாய், சனி.

மிதுனம்- செவ்வாய், வியாழன்.

கடகம்- சனி, வெள்ளி.

சிம்மம்- சனி.

கன்னி- சனி, வியாழன்.

துலாம்- வியாழன், செவ்வாய், ஞாயிறு.

விருச்சிகம்- செவ்வாய், வெள்ளி, திங்கள்.

தனுசு- வெள்ளி, புதன்.

மகரம்- திங்கள், செவ்வாய்.

கும்பம் - திங்கள், ஞாயிறு, வெள்ளி.

மீனம்- ஞாயிறு, புதன்.

பொதுவாக தீராத, நாள்பட்ட நோய் களுக்கு முதன்முத-ல் செவ்வாய், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மருந்து உட்கொள் வது நல்லது.

பரிகாரம்

எந்த வைத்தியத்திற்கும் கட்டுப்படாத நோயினால் அவதியுறுபவர்கள் துர்க்கையின் ரோக நிவாரண அஷ்டகத்தை தினமும் ராகு வேளையில் கேட்க அல்லது படிக்க விரைவில் பூரணநலம் உண்டாகும். அல்லது சுய ஜாதகத் தில் 5-ஆமதிபதியின் பலமறிந்து உரிய ரத்தினங் களை அணியலாம்.

செல்: 98652 20406