ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் தொழில் துறை முக்கிய பங்குவகிக்கிறது. அனைவருக்கும் சவால்விடும் வகையில் தொழில் வளர்ச்சி உலகில் பெருகிவருகிறது. குறிப்பாக இளைஞர்கள் தொழிலில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இன்று அரசு, தனியார் வங்கிகள் தொழில் கடன் கொடுப்பதால் பலர் சொந்தத் தொழில்செய்ய முன் வருகின்றனர். ஒருவருக்கு தொழிலை வழங்கக்கூடிய பத்தாம் பாவகத்தின்மூலம் தொழிலால் உண்டாகக்கூடிய கௌரவம், அந்தஸ்து, தொழில்செய்யும் திறன், தொழிலில் ஜாதகருக்கு இருக்கும் ஆர்வம், தொழில் சம்பந்தப்பட்ட நுணுக்கங்கள், நுட்பங்களை வெளிபடுத்தும் திறன் ஆகியவற்றை அறியமுடியும்.
அனைவரது ஜாதகத்திலும் 10-ஆம் பாவகம் உள்ளது. ஆனால் அனைவரும் தொழில்செய்வது கிடையாது. அதேபோல தொழில்செய்யும் அனைவரும் அதில் பெரும் முன்னேற்றம் பெறுவதும் கிடையாது. சிறிய பெட்டிக்கடை முதல் பன்னாட்டு வணிகம் செய்பவர்கள்வரை அனைவரும் தொழிலில் சாதனை செய்யவேண்டுமென்ற ஆர்வத்துடனேயே தொழில் தொடங்குகிறார்கள். ஆனால் சிலருக்கு பெரிய வளர்ச்சியைக் கொடுக்கும் சொந்தத் தொழில் பலருக்குத் தளர்ச்சியைக் கொடுத்துவிடுகிறது.
ஒருவருக்கு சொந்தத் தொழில் கைகொடுக்குமா என்பதை ஜாதகத்தின்மூலம் எளிதில் கண்டறியமுடியும். அதன்படி 10-ஆமிடம், 10-ஆதிபதி, 10-ஆமதிபதி நின்ற சாரநாதன், 10-ல் நின்ற கிரகங்கள், நவாம்சத்தில் 10-க்குடையவன் நின்ற ராசி , சனிக்கு 10-ஆமிடம், சனிக்குத் திரிகோணத்தில் நின்ற கிரகங்கள், சனி முதலில் தொடும் கிரகம், சனி நின்ற நட்சத்திர சார அதிபதி ஆகிய காரணிகளே ஒருவரின் தொழிலைத் தீர்மானிக்கின்றன.
பன்னிரு பாவகங்களில் பத்தாமதிபதி நிற்பதால் ஏற்படும் பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் இனி பார்க்கலாம்.
பத்தாமதிபதி ஒன்றில்
ஜாதகர் பார்க்கும் தொழில்மூலம் புகழ், அந்தஸ்து, கௌரவம் கிடைக்கப்பெறுவார். தொழில் வாய்ப்புகள் தேடிவரும். அதிகாரத் தோரணை மிக்கவர். நிர்வாகத் திறனுண்டு. தொழில் வளர்ச்சி பற்றிய சிந்தனை மிகையாக இருக்கும். சொந்த முயற்சியில் தொழில் செய்பவர்கள். மிகப்பெரிய தொழிலதிபராக தனித்தன்மையுடன் வலம்வருவார்கள். அதிகார பலமிக்க அரசாங்கப் பதவி, அரசியல் செல்வாக்கு, ஆதாயம், செய்யும் தொழிலில் பெருத்த ஆதாயமுண்டு. நல்ல வருமானமுண்டு. தர்ம ஸ்தாபனம் மற்றும் அறக்கட்டளைகள் நிறுவி அன்னதானம், தானதர்மம் செய்பவர்கள்.
இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் இவர்களுடைய தொழிலறிவு பிறருக்கே பயன்படும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. சிந்தனைத் திறன் குறைவுபடும். முன்னேற்றம் இருக்காது. ஞாயிற்றுக்கிழமை காலை 6.00-7.00 மணிக்குள் சிவதரிசனம் செய்யவும்.
பத்தாமதிபதி இரண்டில்
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து தொழில் செய்வார்கள். குடும்பத்தினர் ஜாதகரின் கட்டளைக்கு அடிபணிவார்கள். இவர்களின் ஆலோசனைகளைக் கேட்க ஒரு கூட்டம் இருக்கும். செல்வாக்கு, சொல்வாக்கு மிகுந்தவர். பெரும்பாலும் நஷ்டம் வராத- பேச்சை மூலதனாகக்கொண்ட தொழில் அமையும். பிறரைநம்பி எந்த காரியத்திலும் ஈடுபடமாட்டார்கள். தொழிலில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். வாடிக்கையாளர்களை பேச்சுத் திறமையால் கவரும் தன்மை
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் தொழில் துறை முக்கிய பங்குவகிக்கிறது. அனைவருக்கும் சவால்விடும் வகையில் தொழில் வளர்ச்சி உலகில் பெருகிவருகிறது. குறிப்பாக இளைஞர்கள் தொழிலில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இன்று அரசு, தனியார் வங்கிகள் தொழில் கடன் கொடுப்பதால் பலர் சொந்தத் தொழில்செய்ய முன் வருகின்றனர். ஒருவருக்கு தொழிலை வழங்கக்கூடிய பத்தாம் பாவகத்தின்மூலம் தொழிலால் உண்டாகக்கூடிய கௌரவம், அந்தஸ்து, தொழில்செய்யும் திறன், தொழிலில் ஜாதகருக்கு இருக்கும் ஆர்வம், தொழில் சம்பந்தப்பட்ட நுணுக்கங்கள், நுட்பங்களை வெளிபடுத்தும் திறன் ஆகியவற்றை அறியமுடியும்.
அனைவரது ஜாதகத்திலும் 10-ஆம் பாவகம் உள்ளது. ஆனால் அனைவரும் தொழில்செய்வது கிடையாது. அதேபோல தொழில்செய்யும் அனைவரும் அதில் பெரும் முன்னேற்றம் பெறுவதும் கிடையாது. சிறிய பெட்டிக்கடை முதல் பன்னாட்டு வணிகம் செய்பவர்கள்வரை அனைவரும் தொழிலில் சாதனை செய்யவேண்டுமென்ற ஆர்வத்துடனேயே தொழில் தொடங்குகிறார்கள். ஆனால் சிலருக்கு பெரிய வளர்ச்சியைக் கொடுக்கும் சொந்தத் தொழில் பலருக்குத் தளர்ச்சியைக் கொடுத்துவிடுகிறது.
ஒருவருக்கு சொந்தத் தொழில் கைகொடுக்குமா என்பதை ஜாதகத்தின்மூலம் எளிதில் கண்டறியமுடியும். அதன்படி 10-ஆமிடம், 10-ஆதிபதி, 10-ஆமதிபதி நின்ற சாரநாதன், 10-ல் நின்ற கிரகங்கள், நவாம்சத்தில் 10-க்குடையவன் நின்ற ராசி , சனிக்கு 10-ஆமிடம், சனிக்குத் திரிகோணத்தில் நின்ற கிரகங்கள், சனி முதலில் தொடும் கிரகம், சனி நின்ற நட்சத்திர சார அதிபதி ஆகிய காரணிகளே ஒருவரின் தொழிலைத் தீர்மானிக்கின்றன.
பன்னிரு பாவகங்களில் பத்தாமதிபதி நிற்பதால் ஏற்படும் பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் இனி பார்க்கலாம்.
பத்தாமதிபதி ஒன்றில்
ஜாதகர் பார்க்கும் தொழில்மூலம் புகழ், அந்தஸ்து, கௌரவம் கிடைக்கப்பெறுவார். தொழில் வாய்ப்புகள் தேடிவரும். அதிகாரத் தோரணை மிக்கவர். நிர்வாகத் திறனுண்டு. தொழில் வளர்ச்சி பற்றிய சிந்தனை மிகையாக இருக்கும். சொந்த முயற்சியில் தொழில் செய்பவர்கள். மிகப்பெரிய தொழிலதிபராக தனித்தன்மையுடன் வலம்வருவார்கள். அதிகார பலமிக்க அரசாங்கப் பதவி, அரசியல் செல்வாக்கு, ஆதாயம், செய்யும் தொழிலில் பெருத்த ஆதாயமுண்டு. நல்ல வருமானமுண்டு. தர்ம ஸ்தாபனம் மற்றும் அறக்கட்டளைகள் நிறுவி அன்னதானம், தானதர்மம் செய்பவர்கள்.
இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் இவர்களுடைய தொழிலறிவு பிறருக்கே பயன்படும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. சிந்தனைத் திறன் குறைவுபடும். முன்னேற்றம் இருக்காது. ஞாயிற்றுக்கிழமை காலை 6.00-7.00 மணிக்குள் சிவதரிசனம் செய்யவும்.
பத்தாமதிபதி இரண்டில்
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து தொழில் செய்வார்கள். குடும்பத்தினர் ஜாதகரின் கட்டளைக்கு அடிபணிவார்கள். இவர்களின் ஆலோசனைகளைக் கேட்க ஒரு கூட்டம் இருக்கும். செல்வாக்கு, சொல்வாக்கு மிகுந்தவர். பெரும்பாலும் நஷ்டம் வராத- பேச்சை மூலதனாகக்கொண்ட தொழில் அமையும். பிறரைநம்பி எந்த காரியத்திலும் ஈடுபடமாட்டார்கள். தொழிலில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். வாடிக்கையாளர்களை பேச்சுத் திறமையால் கவரும் தன்மையுடையவர்கள்.
இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் பேச்சால் வம்பு வழக்கை உருவாக்குவார்கள். சொல்லாலும் செயலாலும் ஒன்றமுடியாது. தொழில்மூலம் விரக்தி உண்டாகும். ஞாயிற்றுக்கிழமை காலை 9.00-10.00 மணிவரையிலான சந்திர ஓரையில் பார்வதி, பரமேஸ்வரரை வழிபடவும்.
பத்தாமதிபதி மூன்றில்
உடன்பிறந்தவர்களுடன் இணைந்து தொழில்செய்யும் வாய்ப்பு அதிகம். ஜாதகரின் திறமையை சகோதரர் பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கலாம். சிறு தூரப் பயணம் சார்ந்த தொழிலாக இருக்கும். அடிக்கடி தொழில் நிறுவனத்தை மாற்றுவார்கள். எழுத்து, கமிஷன், ஒப்பந்த அடிப்படையிலான தொழில் செய்வார்கள். சொந்த முயற்சியில் தொழில் செய்வார்கள். தொழிலுக்கு கிளை நிறுவனங்கள் உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் அமையும்.
இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் தொழிலில் உடன்பிறந்தவர்களால் ஏமாற்றமுண்டு. முயற்சி குறைவுபடும். திட்டமிடுதல் இருக்காது. தொழிலில் அலைச்சல், அவசரம், நிலையற்ற தன்மை இருக்கும். தன் படிப்பிற்கு சம்பந்தமில்லாத தொழில் அல்லது பரிச்சயமில்லாத தொழில் செய்து விரயத்தையும், சிரமங்களையும் சந்திப்பர். ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00-8.00 மணிவரையிலான செவ்வாய் ஓரையில் முருகன், பிள்ளையார் படம் வைத்து வழிபடவும்.
பத்தாமதிபதி நான்கில்
நன்கு தெரிந்த பரிச்சயமான தொழில்செய்து வெற்றிவாகை சூடுவார்கள். தொழில் சிறப்பாக நடைபெறும். அரசின் உதவித் தொகை, வங்கிக் கடன் பெற்று தொழில் புரிவார்கள். தொழில் நெளிவு சுழிவுகளைத் தெரிந்துவைத்திருப்பார்கள். மிகப்பெரிய தொழிலதிபராக, சாதனையாளராகத் திகழ்வார்கள். சுயதொழில் லாபத்தால் வீடு, வாகன யோகமுண்டு. கல்வி நிறுவனம் மற்றும் பண்ணைத் தொழிலால் மேன்மையுண்டு. பத்தாமிடத்தில் லக்னரீதியான சுபகிரகம் நின்றால் அது நான்காமிடமான சுக ஸ்தானத் தைப் பார்க்கும். நான்காமிடத்தை சுபகிரகம் பார்ப்பதால் ஜாதகர் சுகவாசியாக இருப்பார். பத்து மற்றும் நான்காமிடத்தில் லக்னரீதியான சுபகிரகம் நின்றால் குறைந்த உழைப்பில் நிறைந்த வருமானம் கிடைக்கும்.
நான்காமிடத்தில் பாவ கிரகம் நின்று 10-ஆமிடத்தைப் பார்த்தால் கடினமாக உழைக்க நேரும். தொழில் கடனுக்காக வீடு, வாகனம், சொத்தை இழக்க நேரும். தாய்- தாய்வழி உறவுகளால் ஆதாயமிருக்காது. ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00-8.00 மணிவரையிலான செவ்வாய் ஓரையில் சரபேஸ்வரரை வழிபடவும்.
பத்தாமதிபதி ஐந்தில்
ஆளுமைத் தன்மை நிறைந்தவர்கள். முன்ஜென்ம வினைக்கேற்ற தொழில் அமையும். குலத்தொழில் அல்லது பூர்வீகம் தொடர்பான தொழில் புரிவர். கடன் பெறா மல் சுயமுதலீட்டில் தொழில் நடத்துவார்கள். உடல் உழைப்பு குறைவாக, மூளையை அதிகம் பயன்படுத்தும் தொழிலைச் செய்வார்கள். பல சமயங்களில் இவர்கள் ஈடுபடும் தொழிலுக்கு முதலீடே தேவையற்றதாக இருக்கும். தாய்மாமனுடன் இணைந்து தொழில் செய்பவர்கள். சிலருக்கு முதல் குழந்தை பிறந்தபிறகு சொந்தத் தொழில் அமைப்பு உருவாகும். கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் நடத்தலாம். பயபக்தியுடன் நியாய தர்மத்திற்குக் கட்டுப்பட்டு தொழில் நடத்துபவர்கள். பலவிதமான தொழில்கள் இவர்களைத் தேடிவரும். குலதெய்வத்தின் பெயரில் தொழில் நடத்துவார்கள் அல்லது லாபத்தில் சிறுபகுதியை குலதெய்வக் கோவிலுக்குக் காணிக்கையாக செலுத்துவார்கள்.
இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் அதிர்ஷ்டத்தை நம்பிப் பிழைப்பார்கள் அல்லது சட்டத்திற்குப் புறம்பான தொழிலில் குல கௌரவத்தை இழப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00-7.00 மணிவரையிலான குரு ஓரையில் சிவனுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வழிபடவும்.
பத்தாமதிபதி ஆறில்
தொழில் சார்ந்த நஷ்டக் கடன் கூடிக்கொண்டே இருக்கும். கஷ்டமான தொழில் செய்யும் சூழல், திடீர் விரயம் உண்டாகும். அதனால் டென்ஷன் மிகுதியாகும். இந்த அமைப்புடையவர்கள் கடனுக்கு பயந்து நோயை வரவழைத்துக்கொள்வார்கள். மிகுதியான தொழில் எதிரிகள் உண்டு. கூட்டாளியால், தாய்மாமனால் வஞ்சிக்கப் படுவார்கள். அடிமைத்தொழில் செய்வதே சிறப்பு. அல்லது முதலீடில்லாத தொழில் நல்லது.
இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் நிலையான தொழிலோ உத்தியோகமோ அமையாது. சிலர் ஆறு மாதம் சொந்தத் தொழில், ஆறு மாதம் அடிமைத் தொழில் என நிலையற்ற தன்மையுடன் வாழ்வார்கள். உத்தியோகத்தில் எவ்வளவுதான் கடுமையாக உழைத்தாலும், கஷ்டப்பட்டாலும், திறமை களை வெளிப்படுத்தினாலும் உழைப்பிற்குத் தகுந்த சம்பள உயர்வும் பதவி உயர்வும் என்றைக்குமே இருக்காது. காலம் முழுவதும் ஒரே உத்தியோகத்தில், ஒரே நிலையிலும் ஒரே சம்பளத்திலும் ஒரே பதவியிலும்தான் இவர்கள் இருப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை காலை 6.00-7.00 மணிவரையிலான சூரிய ஓரையில் கோதுமை அல்வா படைத்து சூரிய பகவானை வழிபடவும்.
பத்தாமதிபதி ஏழில்
கூட்டுத் தொழில் சிறப்பான பலன் தரும். ஒருவரின் ஜாதகத்தில் 7-ஆமதிபதி ஆட்சி, உச்சம்பெற்றால் கூட்டுத் தொழில் கைகொடுக்கும். 10-ஆமதிபதியுடன் இணையும் பலம்பெற்ற கிரகங்களின் காரகத்துவத்திற்கேற்ற நபர்கள் தொழில்ரீதியாக வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருப்பார்கள். ஒருசிலருக்கு 7-ஆம் பாவகம் வலிமையாக இருக்கும். 10-ஆமிடமான தொழில் ஸ்தானம் பலம் குறைவாக இருக்கும். பணபலம் மிகுதியாக இருக்கும். இவர்களுக்கும் கூட்டுத் தொழில் சிறக்கும். சிலர் சிறுவயது முதல் நண்பர்களுடன் இணைந்து சொந்தத் தொழில் நடத்துவார்கள். சிலர் திருமணத்திற்குப்பிறகு சொந்தத் தொழிலில் ஈடுபடுவார்கள். சிலர் உத்தியோகத்தில் இருந்துகொண்டு சுயதொழில் அல்லது கூட்டுத் தொழில் செய்வார்கள்.
இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால், புதன் வலிமை பெற்றவர்கள் சுயநலத்துடன் தன் எதிர்காலத்தைப் பற்றி மட்டும் சிந்திப்பவர்கள். சமாளிக்கமுடியாத சந்தர்ப்பத்தில் எதிரியை நயவஞ்சமாக உறவாடி வீழ்த்தும் சாமர்த்தியசாலிகள். கூட்டாளியை மதிமந்திரியாக செயல்பட்டு தன் கட்டுப்பாட்டில் வைப்பவர்கள். புதன் வலிமை குறைந்தவர்களுக்கு கூட்டாளியால் நட்டம், நம்பிக்கைத் துரோகம் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை காலை 8.00-9.00 மணிவரையிலான புதன் ஓரையில் மகாவிஷ்ணுவை வழிபடவேண்டும்.
பத்தாமதிபதி எட்டில்
தொழிலில் முன்னேற்றம் கிடைக்காது. தொழில்மூலம் வம்பு, வழக்கு, கட்டப் பஞ்சாயத்து இருக்கும். இந்த அமைப்பு டையவர்கள் உழைப்பைவிட அதிர்ஷ்டத்தை மிகவும் நம்பி வாழ்வார்கள். அதிர்ஷ்டம் அவமானத்தையும், மனவேதனையையும் தரும். ஓரிடத்தில் நிலையாக இருக்கமுடியாமல் தொழிலுக்காக அலைந்து திரியநேரும். பலருக்கு அவமானம் தொடர்கதையாக இருக்கும்.
தீராதநோய், தீராதகடன், மீளமுடியாத தொழில் வழக்குண்டு. கஷ்ட ஜீவனம் நிரம்பியவர்கள். சிலர் விரக்தியில் சட்டத்திற்குப் புறம்பான தொழில் நடத்துவார்கள் அல்லது அசுபத் தன்மையுடன் பிரபலமாவார்கள். 8, 10-ஆமதிபதி இருவரும் கெட்டால் விபரீத ராஜயோகத்தால் பதவி, புகழ், கௌரவம் அடைவார்கள். நம்பிக்கையான, திறமையான வேலையாட்கள் கிடைக்கப் பெறுவதுடன், வேலையாட்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்து, அதன்மூலம் சம்பாதிப்பார்கள். சிலர் வெளியூர், வெளிநாட்டில் நல்ல உத்தியோகம், வருமானம் பெறுவார்கள். சுபக் கடன், தூரதேச தொழில் ஏற்றுமதி, பழைய வீண் பொருட்கள் மறுசுழற்சி சார்ந்த தொழில், பிறர் பிரச்சினைகளுக்கு வழிகாட்டும் வழக்கறிஞர், டாக்டர், ஜோதிடர் போன்ற தொழில் அமையும். ஞாயிற்றுக்கிழமை காலை 10.00-11.00 மணிவரையிலான சனி ஓரையில் லட்சுமிநரசிம்மரை வழிபடுவது நல்லது.
பத்தாமதிபதி ஒன்பதில்
இது தர்மகர்மாதிபதி யோகம். பரம்பரை பரம்பரையாக குலத்தொழில் செய்வார்கள். தந்தையால் புகழ், அந்தஸ்துண்டு. சமுதாய அந்தஸ்து நிறைந்தவர்களின் நட்பு, பரம்பரை அரசியல் தொழில் போன்ற அம்சமுண்டு. 10-ஆமதிபதி 9-ல் இருப்பதைவிட 9-ஆமதிபதி 10-ல் இருப்பது சிறப்பு. பிறருக்கு உபதேசம் செய்யும் தொழில்களான நீதிபதி, வழக்கறிஞர், ஜோதிடம், மத போதகர், கல்லூரி , பாடசாலை அமைத்தல் போன்ற கௌரவத் தொழில் அமையும். குறிப்பாக பிறர் மதிக்கக்கூடிய தொழில்களைச் செய்வார்கள். உயர்கல்வி யோகமுண்டு. அரசு உத்தியோகத்தில் இருப்பவர்கள்.உயரதிகாரிகளைத் தன்வசப்படுத்தி பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற அனைத்துத் தேவைகளையும் நிறைவுசெய்துகொள்ளும் தந்திரசாலிகள்.
இதற்கு அசுப கிரக சம்ந்தமிருந்தால் குல கௌரவம் கெடும். தொழில் ஞானம், சமுதாய அந்தஸ்து கிடைக்காது. வி.ஐ.பிகளுக்கு சேவகம்செய்து அடிமையாக வாழ்வார்கள் அல்லது அடுத்தவர்களை நம்பிப் பிழைப்பார்கள். கற்ற கல்வியை முறையாகப் பயன்படுத்தத் தெரியாது அல்லது படிப்பிற்கு சம்பந்தமில்லாத வேலையில், அடிமைத்தனமாக வேலைசெய்து ஜீவிப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரையில் கிருஷ்ணரை வழிபடவும்.
பத்தாமதிபதி பத்தில்
தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டகரமான தொழில் அமையும். நிர்வாகத் திறன், தலைமை தாங்கும் பண்புண்டு. தொழில்நுட்பம் அறிந்தவர்கள். தன் கையே தனக்குதவி என, பிறரை நம்பாமல் சுய முயற்சியால் முன்னேறு வார்கள். தொழிலில் அதீத மேன்மையுண்டு. அரசாளும் யோகம், அரசு உத்தியோகமுண்டு. பிறரை வழிநடத்தும் அதிகார நிலையில், தான் தனித்தியங்கி பலருக்கு வேலைதரும் இயல்பில் இருப்பார்கள். நீடித்த வருமானமும், தொழில் செய்யுமிடங்களில் நல்ல மரியாதையும் கௌரவமும் ஜாதகருக்குக் கிடைக்கும். மாமியார் ஆதரவுண்டு. மாமியார் மூலம் தொழில் உதவி கிடைக்கும். அல்லது மாமியார் தொழிலை ஏற்று நடத்துவர்.
இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் ஜாதகர் சொந்தத் தொழில் செய்தாலும் முன்னேற்றம் இராது. உழைப்பு முதலீட்டிற் கேற்ற வருமானத்தைப் பெற்றுத் தராது. ஞாயிற்றுக்கிழமை காலை, இரவு 8.00-9.00 மணிக்குள் நாய்களுக்குத் தேன் தடவிய சப்பாத்தி வழங்கவும்.
பத்தாமதிபதி பதினொன்றில்
அதிர்ஷ்டசாலிகள். ஒன்றுக்கு மேற்பட்ட தொழிலுண்டு. பல தொழில் கிளைகளுண்டு. எந்தத் தொழிலைச் செய்தாலும் லாபமுண்டு. தொட்டது துலங்கும். சிறப்பான தொழில் அமையும். புத்திசாலித்தனத்தால் பிறர் முதலீட்டை மூலதனமாகப் பயன்படுத்தி லாபம் ஈட்டுவார்கள். பலரை ஒரேநேரத்தில் வேலைவாங்கும் நிர்வாகத் திறமை, தந்திரம் மிகுந்தவர்கள். தொழிலில் நுட்பங்களை யும் நுணுக்கமான சூட்சுமங்களையும் அறிந்தவர்கள். லாபமில்லாத தொழிலை செய்யமாட்டார்கள். கோடிக்கணக்கில் பணம் புரளும் தொழிலையே செய்பவர்கள். பலருக்குத் தொழில் வாய்ப்புகளை வழங்கும் முதலாளி வர்க்கத்தினர். தொழிலால் செல்வாக்கு, புகழ் பெறுவார்கள். சிலருக்கு இரண்டாம் திருமணத்திற்குப்பிறகு சுயதொழில் அமையும்.
இதற்கு அசுபகிரக சம்பந்தமிருந்தாலும் பெரிய பாதிப்பிருக்காது. ஞாயிற்றுக்கிழமை காலை 7.00-8.00 மணிவரையிலான சுக்கிர ஹோரையில் மகாலட்சுமி வழிபாடு நல்லது.
பத்தாமதிபதி பன்னிரண்டில்
நினைத்தபடி ஜாதகருக்கு தொழில் அமையாது. தொழில் தொடங்கியபிறகு அது சார்ந்த ஆர்வம் குறையும் அல்லது நினைத்தபடி யோகத்தைத் தராது. திடீர் கடனும் விரயமும் உண்டாகும். தொழிலில் நிறைய நஷ்டம் ஏற்படும். பெரிய அளவில் தொழில்செய்து பெரிய அளவில் இழப்பை சம்பாதிப்பவர்கள். சொந்தத் தொழில், வேலையில் கடுகளவுகூட நிம்மதியில்லாத நிலை நீடிக்கும். நித்தம் நித்தம் பிடிக்காத வேலையை வேண்டா வெறுப்பாக, குடும்பத்திற்காக செய்ய நேரும். தொழில் சார்ந்த அமைப்புகளில் பெரிய அளவு நிம்மதி இருக்காது. கடுமையான மன உளைச்சலையும் டென்ஷனையும் உருவாக்கும்.
சிலர் கௌரவத்திற்காக, கிடைக்காத வெற்றியைத் துரத்தி தாங்கமுடியாத இழப்பால் தன்னையே மாய்த்துக்கொள்வார்கள். பலருக்கு வெளிநாட்டு வேலை நல்ல திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பகல் 11.00-12.00 மணிக்குள் வயது முதிர்ந்தவர்களுக்கு அன்னதானம் வழங்கவும்.
பத்தாமதிபதியை மட்டும் வைத்து அவர் தொழிலை நிர்ணயிக்க முடியாது. அதற்கு வலுசேர்ப்பது தொழில் காரக கிரகம் சனி. ஒருவருடைய ஜாதகத்தில் சனி பலம்பெற்றால் தொழில் நன்றாக இருக்கும். பலர் தங்களின் ஜாதகத்தில் சுயதொழில் அமைப்பிருக்கிறதா என்பதை சரிபார்ப்பதில்லை. சுய ஜாதகத்தை சரிபார்த்து அமைப்பு சரியில்லை என்றாலும், "என் மனைவி பெயரில் தொழில் செய்கிறேன்; அம்மா, அப்பா, குலதெய்வம் பெயரில் தொழில் செய்கிறேன்' என விடாப்பிடியாக இருப்பார்கள். யாருடைய பெயரில் தொழில் செய்தாலும் தொழிலை இயக்குபவரின் சுய ஜாதகம், தசாபுக்திக்கேற்பவே ஜாதகரின் செயல்பாடுகள் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
பரிகாரம்
தொழில் தொடர்பான பிரச்சினையை சந்திப்பவர்கள் தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதுடன் ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்யவேண்டும். அல்லது ஒலிக்கச்செய்து கேட்கவேண்டும்.
"ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹர ப்ரம்ஹாத்மகாய தீமஹி
தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷண பைரவ ப்ரசோதயாத்'
என்னும் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை பாராயணம் செய்தால் தொழில் வளர்ச்சி, முன்னேற்றம் உண்டாகும்.
செல்: 98652 20406