அழகிய வாழ்வியலுக்கு அடிப்படையானது நட்புறவும், அன்பும் என்று நம் முன்னோர்கள் எல்லா வகை யிலும் நமக்கு எடுத்துரைத்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல் இக வாழ்விற்கு மிகவும் உறுதுணையாக இருப்பது செல்வம் நிறைந்த சூழலாகும்.
இந்த செல்வம் நம்மிடமே நிலைத் திருக்க அன்னை மகாலட்சுமியின் அருள் கடாட்சம் பரிபூரணமாக இருக்க வேண்டும் என்பது நாம் அறிந்த ஒன்றுதான் .
அப்படி அந்த கருணை கடாட்சம் நம்மிடம் நிலைநிறுத்திக் கொள்ள ஒரு சில வழிமுறைகளையும், சம்பிரதாயங்களையும், நம் முன்னோர் கள் வழிவகை செய்து நம்மிடம் அளித்துள்ள போதிலும்கூட, ஒரு கதையின்மூலம் அதன் வீரியத்தை காணலாம் வாருங்கள்.
பெரும் பணக்காரனான ஒரு வியாபாரியின் வீட்டில் செல்வ செழிப்பிற்கு பஞ்சமே இல்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது.
ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி நீயும், உன் முன்னோர்களும், செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இதுவரை நான் உங்கள் வீட்டில் தங்கி இருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்துவிட்டது.
எனவே, இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன் என்று கூறினார்.
அதற்குமுன் உனக்கு ஏதாவது வரம் வேண்டுமா? என்று கேட்டு அப்படி ஏதாவது தேவைப்பட்டால் பெற்றுக்கொள் என்று கூறினார்.
அங்கே ஒரு நிபந்தனை விதிக்கப் பட்டது. என்னை மட்டும் இங்கேயே தங்கி விடு என்று கூறக்கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை.
மறுநாள்பொழுது விடிந்தது. வியாபாரி யின் வீட்டிலுள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றை கூறினார் செல்வந்தர்.
மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவரின் குடும்பத்தினாரிடம் ஆலோ சனை கேட்க, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான ஆலோசனை கூறினார்கள்.
ஆனால் அவர்கள் அனைவருமே ஒரே கருத்தையே வெளியிட்டனர். நவரத்தினங் களை வரமாக கேளுங்கள், ஏராளமான பொற் குவியல்களை கேளுங்கள், நிறைய உணவுப் பொருட்களை கேளுங்கள், பலவற்றை கேளுங்கள் என்று அடுக்கிக்கொண்டே போனார்கள்.
அப்பொழுது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம் அப்பா, நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எல்லாவற்றையும் வரமாக கேட்டு வாங்கினாலும் அது நம் வீட்டில் நிலைக்க போவதில்லை.
ஏனெனில் எப்பொழுது ஒரு வீட்டில் இருந்து மகாலட்சுமிதேவி வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டதோ, அவள் வெளியேறிய வுடன் அவளது ஐஸ்வரியமும் வெளியேறி விடும்.
இந்தப் பொருட்களும் நம்மிடம் நிலைக் காமல் வெளியேறி சென்றுவிடும்.
எனவே எப்பொழுதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும் படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள் என்று கூறினார்.
இளையமகள் கூறியதே சரியென்று வியாபாரிக்கு தோன்றியது. அதை இறுதி முடிவாககொண்டு இரவு தூங்கச் சென்றார் வியாபாரி. அன்றைய தினம் இரவில் அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினார். அவளிடம் அன்னையே எங்கள் குடும்பத்தில் உள்ளவர் களிடம் எப்பொழுதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது என்று வியாபாரி கேட்டார்.
லட்சுமி தேவி சிரித்தபடியே, இப்படி ஒரு வரத்தை கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டி போட்டுவிட்டாய், எந்த குடும் பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கின்றார்களோ, எந்த குடும் பத்தில் சண்டை, சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவெடுத்துள்ளேன்.
எனவே, நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உங்கள் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன் என்று அங்கேயே தங்கி விட்டாள்.
எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை மதித்து வழிபடுகின்றார்களோ, எங்கு நாகரீக மான முறையில் மற்றவர்களுக்கு உரிய மரியாதையோடு பழகுகின்றார்களோ, பிறரு டைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கின்றார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன் என்று, இந்திரனிடம் ஒருமுறை மகாலட்சுமி தாயார் கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கின்றது.
சுபிக்சத்தை அள்ளித்தந்து வாழ்வை வளமாக்கும் சூழ்நிலையை அளிக்கும் இல்லங் களில், பேசப்படும் வார்த்தைகளாலும், மொழி களாலும், சில அலைவரிசைகள் ஏற்படுகின் றன.
அவைகள் நேர்மறையாக இருந்தால், நல்ல அதிர்வலைகளையும், எதிர்மறையாக இருந்தால் அதைச் சார்ந்த அதிர்வலைகளை யும் உண்டாக்குவது நிச்சயம். அங்கு வசிக்கும் மக்கள் அதையே சுவாசிக்கும் சூழல் உருவாகு வதனால் அதைச் சார்ந்த எண்ணத் தோன்றல் கள் அவர்களை வழிநடத்துவது திண்ணம்.
எனவேதான் வீட்டில் பேசப்படும் வார்த் தைகளில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது பல புராணங்களும், இதி காசங்களும், பெரியவர்களும், நமக்கு ஆணித் தரமாக கூறிவரும் அறிவுரைகள் ஆகும்.
வீட்டில் இரு வேலையும் ஏற்றப்படும் தீபங்களின்மூலமும், அன்பான அணுகு முறையின் மூலமும் தயவே வடிவான மகாலட்சுமி தாயாரை நம் இல்லத்திலேயே தக்க வைத்துக்கொள்ள முடியும்.