சுமார் 55 வயதுடை ஒரு பெண்மணி, நாடியில் பலன்கேட்க வந்திருந்தார்.
"என் வாழ்க்கை பெரியவர்கள் கூறியதுபோன்று நல்லவிதமாக அமைய வில்லை. தவறான செயல்களைச் செய்து, கற்பை சாக்கடையில் கரைத்து தவறான முறையில் நிறைய பணம் சம்பாதித்தேன். அந்தப் பணம், சொத்துகளையெல்லாம் இழந்து, இப்போது கஷ்டப்படுகிறேன். இப்போதும் என்னைத்தேடி ஆண்கள் வருகிறார்கள். ஆனால், என் மனதில் இதுவரை செய்த பாவச்செயலைச் செய்யக் கூடாது என்ற எண்ணம் தோன்றி, அவர் களைத் திருப்பி அனுப்பினேன்.
அதே ஊரில் வசித்தால், இந்த தொல்லையை அனுபவிக்கவேண்டும் என்றெண்ணி, அந்த ஊரைவிட்டு வேறு ஊரில் வந்து வசிக்கிறேன். எனக்கு கணவர், குழந்தைகள் இல்லை. எனக்கு இதுபோன்ற வாழ்க்கை அமைய என்ன காரணம்? திருந்தி வாழ நினைக்கும், எனக்கு அமைதி யான வாழ்க்கை அமைய வழிகேட்டு வந்துள்ளேன்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். அதில் அகத்தியர் எழுத்து வடிவில் தோன்றிப் பலன் கூறினார்.
"முற்பிறவியில் ஒருவனை மணந்து, ஒரு மகனுக்கும் தாயானாள்.
இவளுக்குத் திருமணமான ஒரு தம்பி இருந்தான். இவளது கணவன் இவளின் 30 வயதில் இறந்து போனான். அதன் பிறகு இவள் தன் மகனை அழைத்துக்கொண்டு, தம்பி இருக்கும் ஊருக்கு வந்து, அவன் வீட்டிலேயே வசித்தாள்.
இவன் தம்பியும் இறந்துபோனான்.
அதன்பிறகு தன் மகன், தம்பி மனைவியைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. வறுமை, சிரமத்துடன் வாழ்க்கை அமைந்தது. தம்பி மனைவி இளம் பெண் என்பதால், தவறான வழியில் ஆண்களிடம் பழகினால் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறினாள். முதலில் அவள் மறுத்தாள். ஆனால் குடும்பநிலை, வறுமை என ஏதேதோ கூறி, அவளை சம்மதிக்க வைத்து, பணத்துக்காக பாவத் தொழிலைச் செய்ய வைத்துவிட்டாள்.
இந்தப் பிறவியில், இளம் வயதிலேயே இவளுக்கு மோக உணர்வு ஏற்பட்டுவிட்டது. திருமணத்திற்குமுன்பே ஒருவனிடம் பழக்கம் கொண்டாள். இதையறிந்த பெற்றோர், தன் உறவிலேயே ஒருவனுக்குத் திருமணம் செய்துவைத்தார்கள். அவன் வசதி குறைவானவன். இவள் ஆடம்பரமாக, வாழவேண்டுமென்ற ஆசையால், கணவனுக்கு துரோகம் செய்து, அருகிலுள்ள ஊரில் வசிக்கும் வசதியான ஒருவனிடம் பழக்கம் கொண்டாள். இவளின் ஆசைக்கு செலவிட முடியாத அவன், இவள் உறவை அறுத்துக்கொண்டான்.
ஒரு பெண், ஒரு ஆணைத்தவிர வேறொரு வனுடன் பழக்கம் கொண்டுவிட்டால், அவளுக்கு தைரியம் உண்டாகி, பல ஆண்களுடன் பழகத் தொடங்கிவிடுவாள் என்பது நடைமுறை உண்மை. தான் பழகியவன் விலகியவுடன், தைரியமடைந்து பல ஆண்களிடம் பழகினாள். பல ஆண்களுடன் வேறு ஊர்களுக்குச் சென்று, பல நாள் தங்கி பணம் சம்பாதித்து, இஷ்டம்போல் வாழ்ந்தாள். கணவனைவிட்டு விலகி, இதனையே தொழிலாகக் கொண்டாள். ஆண்களும் ஒரு தவறு செய்தால், பின் அதனையே தொடர்ந்து செய்வான்.
இவள் செய்யும் தொழிலில் சிலர் இவளுக்கு வாடிகையாளர்களாவே இருந்தார்கள். அதில் ஒருவன், "இளமையும் அழகும் உடம்பும் இருக்கும் வரைதான் உன்னால் இந்தத் தொழிலைச் செய்து பணம் சம்பாதிக்க முடியும். இப்போது உன்னிடம் உள்ள பணத்தைக்கொண்டு, ஏதாவது வியாபாரம் செய்தால், இன்னும் நிறைய பணம் கிடைக்கும். வயதான காலத்தில் சிரமமின்றி வாழ்வாய்' என்று ஆசை வார்த்தைகளைக் கூறி இவளை சம்மதிக்க வைத்தான்.
"வியாபாரம் செய்வதைவிட, இருக்கும் பணத்தை வட்டிக்குக் கொடுத்தால், வீடுதேடி வட்டிப் பணம் வரும்' என்று கூறினான். அவன் பேச்சை நம்பி அவன் யாருக்கெல்லாம் பணம் தரச்சொன்னானோ, அவர்களுக்கெல்லாம் பணம் கொடுத்தாள். ஆனால் பணம் வாங்கியவர்கள் எல்லாரும் பணத்தைத் திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார்கள். இவள் நம்பியவனும் இவளை விட்டுவிட்டு ஓடிவிட்டான்.
முற்பிறவியில் தன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு செய்த பாவம், இப்பிறவியில் அதே பாவத்தை இவளைச் செய்யவைத்து, அந்தப் பாவச் செயலால் சம்பாதித்த பணத்தை யும் இழக்கவைத்தது. இந்தப் பிறவியில் இவள் வம்சம் வளர ஒரு வாரிசில்லை. அதனால் இவளுக்கு இனி இந்த பூமியில் அடுத்து ஒரு பிறவியில்லை. இதுவே கடைசிப் பிறவி. இவள் முற்பிறவியில் பெண்ணிற்கு செய்த பாவத்தை அனுபவித்துத் தீர்க்கப் பிறந்தவள் என்பதால், இவளின் வருங்கால வாழ்க்கைக்கு வழி கூறுகிறேன்.
இவள் தன் வாழ்வின் இறுதிவரை ஆசையைத் துறந்து, ஒரு துறவிபோல் வாழவேண்டும்'' என்று கூறியவர், ஒரு பெண்ணின் பெயரையும், அவள் வசிக்கும் ஊரின் பெயரையும் கூறி, "அவளும் தன் வாழ்வில் இவளைப் போன்றே தவறு செய்து வாழ்ந்தவள். இப்போது மனம் திருந்தி தான் சம்பாதித்த பாவப் பணத்தைக்கொண்டு ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு, ஆதரவு தரும் ஒரு காப்பகத்தை நடத்திவருகிறாள்.
அவள் இவளுக்கு வேலையையும், பாது காப்பையும் தருவாள். அவள் சொல்லும் வேலையைச் செய்து, அவள் தரும் ஊதியத் தைப் பெற்றுக்கொண்டு, அவளுடனேயே வசிக்கச் சொல்'' என்று கூறிவிட்டு ஓலையிலிருந்து மறைந்தார்.
"அகத்தியர் கூறியபடியே செய்கிறேன்'' என்று கூறி விடைபெற்றுச் சென்றார்.
முற்பிறவிகளில், எந்த தவறைப் பிறருக்குச் செய்தோமோ, எந்த பாவத்தை பிறரைச் செய்யவைத்தோமோ, அதே தவறை, பாவத்தை இப்பிறவியில் செய்து, அனு பவித்து வாழவேண்டும் என்ற உண்மை காரணத்தை நானும் அறிந்துகொண்டேன்.
சித்தர்கள் கூறியுள்ள தமிழ்முறை ஜோதி டத்தில், ஒரு பெண்ணின் ஜாதக ராசிச் சக்கரத்தில் சுக்கிரன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 7, 2, 12 ஆகிய ராசிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண் கிரகங்கள் இருந்தால் அவள் பல திருமணங்கள் முடிப்பாள்; பல ஆண் களுடன் பழக்கம் கொண்டிருப்பாள் என்று ஆய்வின் அனுபவத்தின்மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
செல்: 99441 13267