சந்திரனின் காரகங்கள் மற்றும் உச்ச, நீச நிலைகள் அனைத்தும் பல்வேறு ஜோதிட நூல்கள்மூலமாக நாமறிந்த ஒன்றே. எனவே சந்திரனின் மற்ற முக்கிய நிலைகளைமட்டும் இங்கு பார்ப்போம்.
நெருப்பு ராசிகளில் சந்திரன் இருக்கும் போது சுறுசுறுப்பையும், சக்தியையும், உறுதியான, லட்சியம் மிக்க மனநிலையையையும் அளிக்கிறது. ஸ்திர ராசிகளில் நிரந்தரத் தன்மையையும், விடாமுயற்சியையும், ஒருநிலைபடுத்தக்கூடிய தன்மையையும் மனதிற்கு அளிக்கிறது மதி. காற்று ராசிகளில் சந்திரன் இடம்பெற புத்திகூர்மையையும், புரிந்துகொள்ளும் (மிதுனம்) சக்தியையும், உயர்ந்த மனநிலையையும், சிந்திக்கும் தன்மையையும், எதையும் அனுசரிக்கும் மனோ பாவத்தையும் (கும்பம்) தருகிறது.
ஒரு ஜாதகத்தில் 3-ஆமிடம் மற்றும் 5-ஆமிடத்தோடும், புதனின் தொடர்போடும்கூடிய சந்திரனே, மனதிற்கான முக்கிய குறிகாட்டியாகி றான். ஒரு மனிதனின் மனவுணர்வுகளையும், சூட்சும புத்தியையும், வெவ்வேறு கிரகங்களின் இணைவு மற்றும் வெவ்வேறு ராசிகளுடனான சந்திரனின் உறவே தெரிவிக்கிறது.
சந்திரன், ராசிகளில் குறிப்பிட்ட நுட்பமான பாகைகளில் வரும்போது, அந்த தசா காலங்களில் ஜாதகனின் உடலளவிலும், மனதளவிலும் பல்வேறு நோய்களைத் தந்துவிடுகிறான். அந்த பாகைகளாவன: மேஷம்- 26 பாகை, ரிஷபம்- 12 பாகை, மிதுனம்- 13 பாகை, கடகம்- 25 பாகை, சிம்மம்- 24 பாகை, கன்னி- 11 பாகை, துலாம்- 26 பாகை, விருச்சிகம்- 14 பாகை, தனுசு- 13 பாகை, மகரம்- 25 பாகை, கும்பம்- 5 பாகை மற்றும் மீனம்- 12 பாகைகள் ஆகும்.
சூரியனுடனான சந்திரனின் இணைவு, பல்வேறு ராசிகளில், பல்வேறு பாவகங்களில் பல்வேறுவிதமாக அமைகிறது. அந்தந்த வீடுகளின் காரகத்துவ அடிப்படை யில் மாற்றங்கள் அமைகின்றன. லக்னத் தில் ஜாதகரையும், 2-ல் குடும்ப நிலையையும், பொருளாதார நிலை யையும், 5-ல் குழந்தைகளுடனான பாசப் பிணைப்பையும், யூக லாபத்தையும், 11-ல் அபிலாஷைகளையும், 12-ல் தத்துவ சிந்தனைகளையும், ஆத்மகல்வி நிலைகளையும் அளிக்கின்றது.
சூரியனும் சந்திரனும் அனுகூலமான பார்வைகள் பார்த்துக்கொள்ள நல்ல உற்சாகத்தையும், மகிழ்ச்சிகரமான நிலைகளையும், வாழ்க்கையில் எளிதாக வெற்றியடைதலையும் அளிக்கின்றன. அனுகூலமற்ற பார்வைகள் வாழ்வில் தடைகளையும், வித்தியாசமான மனவுணர்வுகளையும் அளித்துவிடுகின்றன.
சந்திரன், செவ்வாயுடனான அனுகூலப் பார்வை உற்சாகமான, சுறுசுறுப்பான மனநிலையையும், வாழ்வில் வரும் இன்னல் களைத் துணிவோடு எதிர்கொண்டு சமாளிக்கும் திறனையும், செல்வத்தையும், கூர்மதியையும் அளிக்கிறது. அனுகூல மற்ற பார்வை அஜாக்கிரதையான மனநிலை யையும், மிதமிஞ்சிய குடிப்பழக்கத்தையும், தீயகுணத்தையும், மன உளைச்சலையும் அளிக்கிறது.
புதனுடனான நற்பார்வை நகைச் சுவை உணர்வையும், ஊடுருவுகிற புத்திக் கூர்மையையும், இலக்கிய தாகத்தையும், கலை, ஜோதிடம், வணிகம் ஆகியவற்றில் ஆர்வத்தையும், சாதுர்யத்தையும் அளிக்கிறது. அனுகூலமற்ற பார்வை மனக்குழப்பத்தையும், மன சலனத்தையும், கோழைத்தனத்தையும், முக்கிய முடிவுகள் எடுப்பதில் அலைபாயும் மன நிலையையும் அளிக்கிறது.
குருவுடனான சந்திரனின் அனுகூலமான பார்வை பரந்த மனப்பான்மையையும், இரக்க மனதையும், திடமனதையும், கடமையுணர்வையும், தலைமைப் பண்பையும், தத்துவம் மற்றும் மாயாஜாலக் கல்வியில் ஆர்வத்தையும், செல்வ நிலைகளையும், தர்ம சிந்தனையையும் அளிக்கிறது. அனுகூலமற்ற பார்வை வாழ்க்கையில் தடைகளையும், ஏழ்மையையும், உணர்ச்சியின்மையையும் அளிக்கிறது.
சந்திரனின், சுக்கிரனுடனான நற்பார்வை கலையுணர்வுள்ள மனதையும், நடிப்பு, சிற்பக்கலை, கவிதை, நடனக்கலை போன்றவற்றையும், மற்றவர்களிடம் பாசத்துடன் அனுசரித்துச் செல்லும் தன்மையையும் அளிக்கிறது. துர்பார்வை தவறான வழிகாட்டுதலுடன்கூடிய பாசத்தையும், மணவாழ்க்கையில் பாதிப்பையும், பகற்கனவு காணுதலையும் அளிக்கிறது.
சனியுடனான நற்பார்வை அளவற்ற பொறுமையையும், புத்திக்கூர்மையையும், ஆழ்ந்த அறிவையும், தத்துவம் மற்றும் மாயாஜாலங்களில் ஆர்வத்தையும் அளிக்கின்றது. துர்பார்வை நரம்புத்தளர்ச்சி, பொறுமையின்மை, சோம்பேறித்தனம், சுயநலம் மற்றும் மனக்குழப்பத்தையும் அளிக்கிறது.
சந்திரனின் ராகுவுடனான இணைவு (இரண்டும் பலமிக்கதாக இருப்பின்) ராஜ தந்திரத்தையும், உள்ளுணர்வால் மற்றவர் களின் பலவீனங்களை அறியும் தன்மையையும் அளிக்கிறது. சந்திரன் பலமற்றவனாக இருப் பின் பைத்திய நிலையையும், மந்தபுத்தியையும் அளிப்பதோடு, ஜாதகரைத் தந்திரக்காரனாக வும், கபடதாரியாகவும் ஆக்கிவிடுகிறது.
கேதுவுடனான நற்பார்வை ஞானம்மிக்க வராகவும், பக்திமிக்கவராகவும், தத்துவார்த்த மான மனதையும் அளிக்கிறது.
இனி, மதியின் தாக்கத்தை ஆராய மதிப்பு மிக்க மகான்களின் ஜாதகங்களைக் காண்போமா?
ஆதிசங்கரர்
ஆதிசங்கரரின் ஜாதகத்தில், லக்னாதிபதி சந்திரன் புத்திக்கூர்மைக்குக் காரகனான புதனின் மிதுன ராசியில் இருக்கிறார். செவ்வாய், சந்திரனுக்கு கேந்திரத்தில் உள்ளார்.
குருவும் திரிகோணத்தில் உள்ளார். சனியும் குருவும் பரிவர்த்தனை. 8-ஆமிடமான கும்பத்தி-ருந்து சந்திரனை குரு பார்க்கிறார். கும்பம் மறைபொருளுள்ள ராசியாகும். 12-ல் உள்ள சந்திரன் அவரை சிந்தனாவாதியாகவும், இணையற்ற தத்துவவாதியாகவும் ஆக்கியது. சந்திரன்மீதான செவ்வாயின் பார்வை வாதிடுவதில் வல்லவராக்கியது. உச்ச சூரியன் மற்றும் சுக்கிரன், புதன் இணைவு, அவரை ஈடில்லாத பிரசங்கியாகவும், கலைஞராகவும் ஆக்கியது.
ரமண மகரிஷி
சந்திரன்- கேது இணைவுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ரமண மகரிஷியின் ஜாதகமாகும். சந்திரனையும் கேதுவையும் கும்பத்தி-ருந்து குரு பார்வைசெய்கிறரர். இது அவருக்கு உயர்ந்த, சுறுசுறுப்பான உள்ளத்தைத் தந்தது. மறைபொருளை உணர்த்தும் கும்ப ராசியி-ருந்து குரு உண்மை நிலையை உணரவைத்தது. இவை 5 மற்றும் 9-ஆமிடமானதால் தெய்வீகத் தன்மையை உணர்ந்தார். அவருடைய தத்துவார்த்தமான முயற்சிகளுக்கு ஆதரவாக ஆத்மகாரகன் சூரியன், மற்றொரு தத்துவ ராசியான தனுசுவில் சந்திரனுக்கு 7-ல் இருந்து உதவினான். வளர்பிறை சந்திரனும் வர்க்கோத்தமம் பெற்றதால் உயர்ந்த மனோ சக்தியைப் பெற்றார்; உணர்ந்தார்.
சந்திரனின் நிலைகளை ஆராய்ந்து, அது எவ்வாறு பலவிதங்களில், பல துறைகளில், மனநிலையில், திறமைகளில், தகுதிகளில் மனமாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை இன்னும் பல ஜாதகங்கள்மூலமாகக் காணலாம் என்றாலும், விரிவஞ்சி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.