முதுமையில் அமையும் திருமண யோகம்! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/marriage-yoga-old-age-melmaruvathur-s-kalaivani

னித வாழ்வில் ஆகச்சிறந்த பல சுப நிகழ்வுகளும், சடங்கு மற்றும் சம்பிரதாயங்களும் நிகழ்ந்தவண்ணமே பயணிப்பது இயல்பு.

இதில் குழந்தைப் பிறப்பு தொடங்கி காதுகுத்தும் சடங்கு, திருமணம், வளைகாப்பு என வயதிற்கு ஏற்றாற் போல் பல நிகழ்வுகளை சந்தித்தவண்ணமே நம் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.

மேற்கூறியதுபோல் வயதிற்கு ஏற்றாற் போல் சுப நிகழ்வு என்பதில் திருமணம் ஒரு தலை சிறந்த நிகழ்வாகும்.

திருமணமானது சிலருக்கு இளம் வயதி லேயே நிகழ்கின்றது. அதாவது 18 வயதுமுதல் 25 வயதிற்குள்ளாகவே நிகழ்ந்துவிடுகிறது. சிலருக்கு 40 முதல் 45 வயதுவரையும் திருமணம் நடப்பதை நாம் கண்கூடாகக் கண்டிருக்கின்றோம்.

ஆனால் 60 வயதிற்குமேலும் திருமணம் என்கின்ற நிலையையும் காணமுடிகின்றது.

mm

இது சற்று ஆச்சரியத்தை அளித்தாலும், மனிதர்களின் மனநிலையில் மாற்றத்தையும், அதை சார்ந்த தேவையையும் எடுத்துரைக்கிறது.

இயல்பாகவே கூட்டத்தோடு பயணித்த மானுடம், தனிமையினை எல்

னித வாழ்வில் ஆகச்சிறந்த பல சுப நிகழ்வுகளும், சடங்கு மற்றும் சம்பிரதாயங்களும் நிகழ்ந்தவண்ணமே பயணிப்பது இயல்பு.

இதில் குழந்தைப் பிறப்பு தொடங்கி காதுகுத்தும் சடங்கு, திருமணம், வளைகாப்பு என வயதிற்கு ஏற்றாற் போல் பல நிகழ்வுகளை சந்தித்தவண்ணமே நம் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.

மேற்கூறியதுபோல் வயதிற்கு ஏற்றாற் போல் சுப நிகழ்வு என்பதில் திருமணம் ஒரு தலை சிறந்த நிகழ்வாகும்.

திருமணமானது சிலருக்கு இளம் வயதி லேயே நிகழ்கின்றது. அதாவது 18 வயதுமுதல் 25 வயதிற்குள்ளாகவே நிகழ்ந்துவிடுகிறது. சிலருக்கு 40 முதல் 45 வயதுவரையும் திருமணம் நடப்பதை நாம் கண்கூடாகக் கண்டிருக்கின்றோம்.

ஆனால் 60 வயதிற்குமேலும் திருமணம் என்கின்ற நிலையையும் காணமுடிகின்றது.

mm

இது சற்று ஆச்சரியத்தை அளித்தாலும், மனிதர்களின் மனநிலையில் மாற்றத்தையும், அதை சார்ந்த தேவையையும் எடுத்துரைக்கிறது.

இயல்பாகவே கூட்டத்தோடு பயணித்த மானுடம், தனிமையினை எல்லா சூழ்நிலையும் ஏற்றுக்கொள்வதில்லை. அதிலும் முதுமையில் தனிமை என்பது ஏற்புடையதாக இருக்காது.

இந்த தன்மையின் வலியினை ஏற்காத மனமானது ஏதோவொரு துணையை எதிர் பார்ப்பது இயல்பே.

இது உடலியல் சார்ந்தோ அல்லது காமம் சார்ந்தோ, ஈர்ப்பு சார்ந்த பயணமோ என்றால், பெரும்பாலும் இல்லையென்றே சொல்லலாம்.

தனக்கென ஒரு தாய்மை அரவணைப்பைத் தேடுகின்ற தன்மைதான் இதில் மேலோங்கி அமைந்துள்ளது.

60 வயது என்னும்பொழுது நிச்சயமாக முதல் திருமணத்தில் முறிவு அல்லது மனைவி இறந்த சூழலில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இவர்களின் ஜாதகத்தை ஆராயும்பொழுது 7-ஆம் பாவகமான முதல் தாரம் என்னும் நிலை சுகமாக அமையாமல், 11-ஆம் பாவகம் மற்றும் 9-ஆம் பாவகம் பலமாக இருந்து,

அதன் தசாபுக்திக் காலங்கள் வரும்பொழுது இரண்டாவது திருமணத்திற்கான சூழலை உருவாக்கித் தருகிறது.

இந்த கருத்துகளை ஆராயும்பொழுது, ஏன் இவர்கள் மனைவி இறந்து ஓரிரு வருடங்களில் திருமணம் செய்திருக்கலாமே என்கின்ற ஐயம் நமக்குத் தோன்றும். ஆனால் இவர்களுக்கு 11-ஆம் பாவகமோ அல்லது ஒன்பதாம் பாவகமோ தொடர்புபெறாமல் இரண்டாவது திருமணம் நடப்பதே கிடையாது என்பது உறுதியாகிறது.

உதாரண ஜாதகம்-1

மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம், தனுசு லக்னத்தில் பிறந்த ஜாதகமாகும்.

இவருக்கு தற்பொழுது வயது 59 முடிந்து 60-ஆவது வயதைத் தொடுகின்றது.

இந்த ஜாதகத்தை ஆராயும்பொழுது, லக்னத்திற்கு 7-ஆம் அதிபதியான புதன் மறைவு ஸ்தானமான 6-ஆமிடத்தில், அஷ்டமாதிபதி சந்திரன் 7-ல். இதுவே இங்கு ஒரு வேதனையைத் தரப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்த்துகிறது.

மேலும் 7-ஆம் அதிபதி புதன் சூரியனுடன் அஸ்தங்கம் அதோடு சூரியன், செவ்வாய், புதன், ராகு இவர்களின் கூட்டு, நிச்சயமாக இவரின் முதல் மனைவிக்கு விபத்து நிகழும் என்பதை உணர்த்துகிறது.

இந்த விதியின்படி புதன் தசை, ராகு புக்தி, செவ்வாய் அந்தரம், சுக்கிரனின் சூட்சுமத்தில், வாகன விபத்தில் இவரின் மனைவியின் மரணம் நிகழ்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக இரண்டாவது திருமணம் பற்றிய சிந்தனைக்கு இடம்கொடுக்காமல் இருந்துவந்தார். தற்பொழுது வருகின்ற 27- 12-2024 அன்று இவருக்கு இரண்டாவது திருமணம் நடப்பதற்கான நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

இத்தனைக் காலங்கள் கடந்து இந்த ஜாதகத்திற்கு இரண்டாவது திருமணத்திற்கான வாய்ப்பு யார் வழங்கியது என்று ஆராயும் பொழுது, இவரின் ஜாதகத்தில் 11-ஆம் அதிபதி சுக்கிரன் உச்சத்தில் இருந்து தசை நடத்தும் சூழலில், இவருக்கு காலம் கடந்த திருமணம் அமைந்துள்ளது.

உதாரண ஜாதகம்- 2

இது 1957-ஆம் ஆண்டு பிறந்த ஜாதகம் ஆகும். இவர் மகர லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரத்தில் பிறந்துள்ளார்.

இவரின் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி சந்திரன் மூல நட்சத்திரத்தில், லக்னத்திற்கு 12-ஆமிடத் தில் ஏழாம் அதிபதி அமைந்துள்ளார்.

ஜோதிட விதிப்படி கேதுவின் நட்சத்திரங் களான அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத் திரங்களில் அமர்ந்து எந்த கிரகம் தசை நடத்து கின்றதோ, அந்த கிரகம் ஜாதகத்தில் எந்த பாவகத்திற்குப் பொறுப்பேற்று இருக்கின் றதோ, அந்த பாவகத்திற்கான உயிர் காரகம் பாதிக்கப்படும் என்னும் விதிப்படி. 1999-ஆம் ஆண்டு இவரின் மனைவி மரணத்தைத் தழுவினார்.

அந்த காலகட்டத்தில் இந்த ஜாதகருக்கு சந்திர தசையில் குரு புக்தி சென்றுகொண்டி ருந்தது.

கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் கழித்து இவரின் 9-ஆம் அதிபதியின் சாரம் வாங்கிய ராகு தசையில் 11-ஆம் அதிபதியான செவ்வாயின் புக்தியில் இவருக்கு இரண்டாவது திருமணம் முடிந்தது.

உதாரண ஜாதகம் ஒன்றில் அமைந்தது போலவே இவருக்கும் 24 வருடங்கள் கழித்து 9 மற்றும் 11-ஆம் பாவகங்களில் தொடர்பு வரும் பொழுது திருமணம் நடந்தேறியது. இவருக்குத் திருமணம் நடக்கும்பொழுது இவரின் வயது 67 ஆகும்.

ஒரு ஜாதகத்தில் முதுமையில் திருமணம் நிகழ்வதற்கான வாய்ப்பை தசாபுக்திகள் அமைத் துத் தந்துவிடும் என்பது இந்த இரண்டு ஜாதகத் தின்மூலம் உறுதியாகிறது.

செல்: 80563 79988

bala041024
இதையும் படியுங்கள்
Subscribe