திருமணம் என்ற நிகழ்வு ஒவ்வொரு ஆண்- பெண்ணின் வாழ்விலும் ஒரு முக்கிய நிகழ்வாகும். ஆண்- பெண்ணுக்கு திரு, திருமதி என்ற அடைமொழி திருமணத்திற்குப்பிறகு ஏற்படுகிறது. திருமணம் என்பது இன்றைய நிலையில் வாழும் சமுதாயத்தை சார்ந்து இருக் கிறது. பண்டைய காலங்களில் மிக இளைய வயதில் திருமணம் செய்தார்கள். கடந்த 20, 30 வருடத் திற்கு முன்பெல்லாம் ஆணுக்கு 25 வயதிற்கு முன்பும் பெண்ணுக்கு 20 வயது வாக்கிலும் திருமணம் செய்தனர். தற்போது ஆண்களுக்கு 28, 30 வயதிலும், பெண்களுக்கு 25, 27 வயதிலும் திருமணம் செய்கிறார்கள். பொதுவாக ஜோதிட ரீதியாக ஒருவர் ஜாதகத்தில் கிரக அமைப்புகள் சாதகமாக இருந்துவிட்டால் திருமணத்திற்காக முயற்சிகள் மேற்கொள்கின்றபொழுது உடனே கை கூடிவிடும். அதுவே கிரக அமைப்புகள் சாதகமற்று இருந்துவிட்டால் திருமண தாமதம் ஏற்படும்.
ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு ஏழாம் வீடு திருமண வாழ்க்கையைக் குறிக்கக்கூடிய ஸ்தானமாகும். இரண்டாம் வீடு குடும்பத்தைக் குறிக்கக்கூடிய ஸ்தானமாகும். 2, 7-ஆம் வீடுகள் சிறப்பாக இருந்து, அதாவது பாவ கிரகங்கள் 2, 7-ஆம் வீடுகளில் இல்லாமல் இருந்து, ஏழாமதிபதி கேந்திர, திரிகோணங்களில் அமைந்து, ஆண் ஜாதகத்தில் சுக்கிரனும், பெண் ஜாதகத்தில் செவ்வாயும் சுபகிரகப் பார்வையோடு வலுவாக இருந்து, திருமண வயதில் நடக்கக்கூடிய தசை, புக்தியும் சாதகமாக இருந்துவிட்டால் திருமண வயது காலத்தில் எளிதில் நல்லது நடந்துவிடும்.
அதுவே ஒரு ஜாதகத்தில் ஏழாமதிபதி மறைவு ஸ்தானங்களில் இருந்தாலும், ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் வக்ரம் பெற்றோ, பாவகிரகத் தொடர்போடு இருந்தா லும், பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் வக்ரம் பெற்றோ, பாவ கிரகத் தொடர்போடு இருந்தாலும் திருமணம் அமைய தடை, தாமதம் உண்டாகிறது. நவகிரகங்களில் சுபகிரகப் பார்வை என்பது சிறப்பு. பாவகிரகப் பார்வை என்பது ஒருவர் வாழ்வில் தடை, தாமதத்தை ஏற்படுத்தும். நவகிரங்களில் பாவியான சனி இருக்கும் இடத்திலிருந்து 3, 7, 10 ஆகிய ஸ்தானங்களைப் பார்ப்பார். சனி பார்வை ஏழாம் வீட்டுக்கு, ஆண்கள் ஜாதகத் தில் சுக்கிரனுக்குகோ, பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய்கோ இருந்தால் திருமணம் நடைபெறு வதில் தடை, தாமதங்கள் உண்டாகிறது. திருமண தொடர்பாக பல்வேறு விஷயங்கள் இருந்தாலும், திருமணத்தடை நீங்க திருமண வயதை அடைந்த வர்கள் திருமணஞ்சேரி சென்றுவருவது நன்மையை ஏற்படுத்துகிறது.
மயிலாடுதுறையை அடுத்துள்ள குத்தாலம் எனும் ஊருக்கு வடகிழக்கே ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் திருமணஞ்சேரி எனும் திருத்தலம் அமைந் துள்ளது. அங்கு கோவில்கொண்டுள்ள கல்யாண சுந்தரரேஸ்வரர்- கோகிலாம்பிகையை வழிபடும் பக்தர்களுக்கு விரைவில் திருமணம் நிகழும் என்பது ஐதீகம்.
திருமணஞ்சேரி திருத்தலத்தில் இறைவன் சிவபெருமான் இறைவி கோகிலாம்பிகையைத் திருமணம் செய்ததால், இத்தலம் திருமணஞ் சேரி என்று பெயர்பெற்றது. இத்தலத்தில் எழுந்தருளி யுள்ள உத்வாகநாதர் கோகிலாம்பிகையை, திருமணம் தடைப்படுபவர்கள் வந்து வழிபட்டு அர்ச்சனைசெய்து, கல்யாண சுந்தரருக்கு மாலை சாற்றி, அர்ச்சனைசெய்து வழிபட்டால் திருமணம் விரைவில் கைகூடும். அப்படி திருமணம் கைகூடி நடைபெற்ற பின்னர், தம்பதிகள் இருவரும் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுச் சென்றால் இல்வாழ்க்கையில் சகலவித சௌபாக்கியங்களையும் பெற்று சிறப்போடு வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
இங்கு அமைந்துள்ள ராகு பகவானுக்கு பாலா பிஷேகம், பால் பொங்கல் நெய்வேத்தியம் செய்து வழிபட்டால் ராகு தோஷம் நிவர்த்தியாகி புத்திர சந்தான விருத்தியும் உண்டாகிறது.
பிராத்தனைக்குச் செல்லும்போது எடுத்துச் செல்லவேண்டிய பூஜைப் பொருள்கள்: மஞ்சள், குங்குமம், பல்கைமஞ்சள் (பெரிய மஞ்சள்) கற்பூரம், ஊதுபத்தி, சர்க்கரை, தீப எண்ணெய், வெற்றிலைப் பாக்கு, வாழைப்பழம், எலுமிச்சம்பழம் 2, புஷ்பமாலை 3, சைவி புஷ்பம், உதிரி புஷ்பம், சந்தனம், தேங்காய் 3. மேற்கூறிய பூஜைப் பொருட்களை வீட்டிலிருந்தும் கொண்டுசெல்லலாம் அல்லது கோவிலின் அருகிலேயே வாங்கிக்கொள்ளலாம். ஆலயத்தினுள் நுழைவதற்குமுன் பூஜைப் பொருட் களை சரிபார்த்துக்கொள்ளலாம். ஆலயத்தினுள் நுழைந்ததும் எந்த பிரார்த்தனைக்காக வந்திருக்கின் றோமோ அதற்கான அர்ச்சனை டிக்கெட்டை வாங்கிக்கொள்ளவும்.
இவையனைத்தையும் எடுத்துச்சென்று செல்வ விநாயகரின்முன் வைத்து, திருமண மானவர்கள் ஒருபுறமும், திருமண மாகாதவர்கள் ஒருபுறமும் நின்று சங்கல்பம் செய்துகொள்ளவேண்டும். கன்னிப் பெண்கள் கூந்தலின் அடிநுனி வெளியே தெரியாதபடி முடிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் சேலை முந்தானை யையும் இழுத்துப் போர்த்தி செருகிக் கொள்ள வேண்டும். சங்கல்பத்தின்போது நல்ல கணவர் வரவேண்டும்; நல்ல மனைவி அமையவேண்டும்; குழந்தை பாக்கியம் வேண்டும் என்று அவரவரின் வேண்டுதலுக்கேற்ப பிரார்த்தனை செய்துகொள்ளவேண்டும். பின்னர் அர்ச் சனைத் தட்டை எடுத்துக்கொண்டு இறைவி கோகிலாம்பாளுடன் காட்சிதரும் உத்வாக நாதர்- கல்யாணசுந்தரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடவேண்டும்.
இந்த திருமணஞ்சேரியில் மூல விக்ரகமான உத்வாகநாதர் லிங்கத்திற்கு முன்பாக, இறைவனும் இறைவியும் பஞ்சலோகத்தில் திருமணக் கோலத்தில் அருள்பாலிக்கும் காட்சி வேறெங்குமே காணக் கிடைக்காத அற்புதக் காட்சி யாகும். இங்கு அனுதினமும் மணக்கோலத்தில் காட்சிதந்து தங்களை வேண்டித் துதிப்பவர் களையும் மணக்கோலம் பூணவைக்கும் இறைவன்- இறைவியை வழிபட்டு அர்ச்சனைத் தட்டை வைத்துவிட்டு அதனருகே அமர வேண்டும்.
பெயர், நட்சத்திரம், கோத்திரம் போன்றவற்றை குருக்களிடம் கூறினால், நமது பெயருக்கு தேங்காய் உடைத்து ஆலயத்தில் அர்ச்சனை செய்யத் துவங்குவார்கள். நாம் கொண்டுசென்ற மூன்று மாலைகளில் ஒன்றை இறைவனுக்கு, ஒன்றை இறைவிக்கு அணிவித்து கற்பூர தீபாராதனை காட்டுவார்கள். பின்னர் ஒவ்வொருவராக அழைத்து விபூதி, குங்குமப் பிரசாதங்களுடன் எலுமிச்சம் பழத்தையும், பெண்களுக்கு தட்டை மஞ்சளையும் சேர்த்துக் கொடுப்பார்கள். பின்னர் கல்யாண சுந்தரர் கழுத்திலிருந்து மாலையை எடுத்துவந்து கன்னிப் பெண்களுக்கும், கோகிலம்பாள் கழுத்திலுள்ள மாலையை எடுத்துவந்து திருமணமாகாத ஆண்களுக்கும் கொடுத்து அணிந்துகொள்ளச்சொல்வார்கள். மாலையை அணிந்துகொள்ளும் நேரத்தில் கெட்டி மேளமும், நாதஸ்வரமும் இனிமையாக ஒலிக்கும். இது பார்ப்பதற்கு ஒரு குட்டி திருமண வைபவம் போலிருக்கும்.
கையில் கொடுத்த பிரசாதங்களையும், அர்ச்சனைத் தட்டையும் கீழே வைக்காமல், கழுத்திலுள்ள மாலையைக் கழற்றாமல், யாருடனும் பேசாமல் மணமக்களைப்போல மாலை சகிதமாய் கோவிலை வலம்வர வேண்டும், வேண்டுதலிலேயே மனம் முழுவதுமாய் ஈடுபட்டிருக்க வேண்டும். பின்னர் வீழ்ந்து வணங்கி, சற்றுநேரம் அமர்ந்து விட்டு எழுந்து வெளியில் வரவேண்டும்.
திருமணஞ்சேரியில் கொடுத்த பிரசாதங் களை பூஜையறையில் வைத்துவிட்டு தலைக்குக் குளித்துவிட்டு வந்து ஒரு தீபத்தை ஏற்றிவைத்து அதை கல்யாண சுந்தரராக, கோகிலாம்பாளாக பாவித்து மூன்றுமுறை வலம்வரவேண்டும். பின்னர் எலுமிச்சம் பழத்தை நறுக்கி சாறு பிழிந்து, அந்த சாற்றில் உப்பு, சர்க்கரை போன்றவற்றைக் கலக்காமல் நீரை மட்டும் சேர்த்து குடிக்கவேண்டும். இதை கோவிலுக்குச் சென்றுவந்த ஒரு வாரத்திற்குள் செய்யவேண்டும். பெண்கள் கோவிலில் பிரசாதமாகக் கொடுத்த மஞ்சளை இழைத்து, அது தீரும்வரை தினமும் தேய்துக்கொள்ள வேண்டும். அந்த மஞ்சளை பிறர் உபயோகிக்க அனுமதிக்கக்கூடாது. மஞ்சள் தீரும்வரை தொலைத்துவிடாமல் இருக்கவேண்டும். விபூதி, குங்குமத்தை தினமும் நெற்றியில் இட்டுக்கொண்டு, கொண்டுவந்த மாலையை வழிபடவேண்டும். இவ்வாறு முறையுடன் வழிபட்டுவந்தால் திருமணம் விரைவில் கைகூடும்.
திருமணம் கைகூடி மணமானபின் தம்பதி சமேதரராய் திருமணஞ்சேரிக்குச் சென்றுவரவேண்டும். அப்போது பூஜையறையில் மாட்டிவைத்திருக்கும் மாலையையும் (நாரையாவது) கொண்டு செல்லவேண்டும். முன்பு கூறிய பரிகாரப் பொருட்களுடன் இப்பொழுது நான்கு மாலைகள், நான்கு தேங்காய்கள் (ஒன்று அதிகமாக) வாங்கிச் செல்லவேண்டும்.
இந்தமுறை நிவேதனப் பொருகளை பொங்கலுக்காகவும் சேர்த்து எடுத்துச் செல்லுதல் அவசியமாகும். இந்த முறையும் குருக்கள் அர்ச்சனைசெய்து விபூதி, குங்குமம், மஞ்சள், எலுமிச்சம்பழம் போன்றவற்றைக் கொடுத்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் சூட்டிய மாலைகளைக் கொடுத்து இருவரையும் மாலை மாற்றிக்கொள்ள சொல்வார். இப்போதும் கெட்டிமேளம் முழங்கும். பின்னர் யாருடனும் பேசாமல் பிரசாதங்களைக் கையில் ஏந்திக் கொண்டு கோவிலை வலம்வருதல் வேண்டும். பின்னர் நமஸ்கரித்து எழுந்து கழுத்திலுள்ள மாலையை பையில் வைத்துக்கொண்டு பழைய மாலையை ஆலயத்திற்கு வெளியிலுள்ள சப்த சாகரத் திருக்குளத்தில் விட்டுவிடவேண்டும்.
வழிபாட்டு முறைகளை முடித்துவிட்டு நேரே வீட்டிற்கு வந்து, அடுத்த நாள் காலையில் இருவரும் தலைகுளித்துவிட்டு தீபத்தை ஏற்றி வைத்து மூன்றுமுறை வலம்வந்து, எடுத்துவந்த மாலையை பெரியவர்கள் முன்னிலையில் மாற்றிக்கொண்டு பெரியவர்களிடமும் ஆசி பெற்று ஒரு வார காலத்திற்குள் இரண்டு மாலைகளையும் உங்கள் ஊர் கோவில் குளத்தில் விட்டுவிடவேண்டும். தினமும் மஞ்சள் தேய்த்து பெண் குளிக்கவேண்டும். இருவரும் எலுமிச்சம் பழச் சாற்றை பருகி விபூதி, குங்குமத்தை அது தீரும்வரை இட்டுக் கொள்ளவேண்டும்.