திருமணம் சொர்க் கத்தில் நிச்சயிக்கப்படு கிறது என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால் தற்காலத் தில் திருமணம் ரொக்கத் தில் நிர்ணயிக்கப்படுகிறது. மண வாழ்க்கை சொர்க் கத்தில் உறுதி செய்யப்பட் டாலும், ரொக்கத்தில் முடி வானாலும் மணமகனும் மணமகளும் உறவா? அந்நியமா என்பது திருமணத்திற்கு ஜாதகம் பார்க்க வருபவர்களின் பிரதான கேள்வியாக இருக்கும்.

சில வருடங்களுக்கு முன்புவரை உற்றார்- உறவுகள், சொந்த பந்தங் களுடன் கூட்டுக் குடும்ப மாக ஒரே ஊரில் வாழ்ந்தார்கள். திருமண வயதிலிருக்கும் தங்களுடைய வாரிசு களுக்கு உறவுகளுக்குள் மட்டுமே திருமணம் செய்தார்கள். அறிமுகமில்லாத- சொந்தபந்தமில்லாத ஊரில் திருமணம் செய்வதில்லை. அறிமுகமில்லாத இடத் தில் பெண் எடுப்பதுமில்லை; கொடுப் பதுமில்லை. பொதுவாக உறவில் திருமண மென்றால் தாய்- தந்தைவழி உறவு, தாய் மாமன்வழி உறவில் மட்டுமே வரனைத் தேர்வுசெய்வார்கள். மேலும் உறவுகளுக்குள் திருமணம் செய்யும்போது குடும்ப சொத்து வெளிநபர்களுக்குச் செல்லாது. வது, வரன் குணநலன்கள் குறித்து விசாரிக்கத் தேவை யில்லை. பெண்ணைப் பெற்ற தாய்க்கு தன் உடன்பிறந்த சகோதரர் வீட்டுக்கு தன் மகளை மருமகளாக அனுப்பவேண்டு மென்ற ஆசை இருக்கும். தந்தைக்கு தன் சகோதரியின் வீட்டில் தன் மகளை வாழ அனுப்பவேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். இது உலக இயல்புதானே.

vv

Advertisment

ஒருவருக்கு ஜோதிடரீதியாக திருமணம் சொந்தத்தில் அமையுமா- அந்நியத்திலா என்பதை எப்படி அறிவது என்பதைக் காணலாம்.

கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உறவுமுறையைக் குறிக்கும். ஜென்ம லக்னத்திற்கு 3-ஆமிடமானது இளைய உடன்பிறப்பையும், 11-ஆமிடமானது மூத்த உடன்பிறப்புகளையும் பற்றிக் கூறுமிடம். சகோதர காரகர் செவ்வாய். 3, 11-ஆம் பாவகம், செவ்வாய் சம்பந்தம் எந்த விதத்தில் இருந்தாலும் நெருங்கிய உறவில் திருமணம் நடைபெறும்.

லக்னத்திற்கு 4-ஆமிடம் தாய் ஸ்தானம்.

நான்காம் பாவகக் காரகர் சந்திரன். 4-க்கு 1-ஆமிடம் 2-ஆம் பாவகம். 2-க்கு 5-ஆமிடம் 6-ஆம் பாவகம். 2-ஆமிடம் தாயின் மூத்த சகோதரனையும், 6-ஆமிடம் மூத்த சகோதரரின் மகன் அல்லது மகளை யும் குறிக்குமிடம்.

4-க்கு 3-ஆமிடம் 6-ஆம் பாவகம். 6-க்கு 5-ஆமிடம் 10-ஆம் பாவகம். எனவே 6-ஆமிடம் தாயின் இளைய சகோதரனையும், 10-ஆமிடம் தாயின் இளைய சகோதரரின் மகன் அல்லது மகளைப் பற்றிக் கூறுமிடம்.

ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 9-ஆமிடம் தந்தை ஸ்தானம். தந்தைக்காரகர் சூரியன். 9-க்கு 11-ஆம் பாவகம் 7-ஆமிடம். 7-க்கு 5-ஆமிடம் 11-ஆம் பாவகம். எனவே 7-ஆமிடம் தந்தையின் மூத்த சகோதரியை யும், 11-ஆமிடம் தந்தையின் மூத்த சகோதரி யின் மகன் அல்லது மகளையும் பற்றி தெரிவிக்குமிடம்.

9-க்கு 3-ஆமிடம் 11-ஆமிடம். 11-க்கு 5-ஆமிடம் 3-ஆம் பாவகம். எனவே 11-ஆம் பாவகம் தந்தையின் இளைய சகோதரியை யும், 3-ஆமிடம் தந்தையின் இளைய சகோதரியின் மகன் அல்லது மகளைப் பற்றி அறிவிக்குமிடம்.

ஆக 3, 6, 10, 11-ஆம் பாவகங்கள் முறைப் பெண் அல்லது முறைப் பையனைக் குறிக்கும் பாவகங்களாகும்.

காலபுருஷ தத்துவப்படி களத்திரகாரக னான சுக்கிரன், காலபுருஷ லக்னமான மேஷத்திற்கு 2, 7-ஆம் அதிபதி. எனவே 2, 7-ஆம் பாவகங்கள் திருமண வாழ்க்கையைப் பற்றிக் கூறும் பாவங்களாகும். எனவே லக்னம் எதுவாக இருந்தாலும் 7-ஆமதிபதி 2, 7-ஆம் பாவகங்களுடன் சம்பந்தம் பெற்றால் உறவில் திருமணம் அமையும் வாய்ப்புகள் அதிகம்.

அதன்படி லக்னத்திற்கு 7-ஆம் பாவக மானது 3, 7, 11 மற்றும் 2, 6, 10-ஆம் பாவகத் துடன் சம்பந்தம் பெற்றால் சொந்தத்தில் திருமணம் நடைபெறும் சாத்தியக்கூறுகள் அதிகம். 7-ஆம் பாவகமானது லக்னத்திற்கு 1, 5, 9 மற்றும் 4, 8, 12-ஆம் பாவகங்களுடன் இணைந்தால் அந்நியத்தில் திருமணம் நடைபெறும்.

7-ஆமதிபதி 11-ஆமிடத்தில் நின்றாலும் அத்தை மகளை மணம்புரிவார்.

7-ஆமதிபதி 6-ல் நின்றால் தாய்மாமன் மகளை விவாகம் செய்வார்.

7-ஆமதிபதி 10-ஆம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றால் தாய்வழி உறவில் திருமணம் நடக்கும்.

7-ஆமதிபதி 3, 11-ஆமிடத்தில் நின்றால் தாய்- தந்தையரின் குடும்ப நண்பர் மகன், மகளை மணமுடிப்பார் அல்லது சகோதரி யின் தோழியைத் திருமணம் செய்வார்.

7-ஆமதிபதி 2, 3, 6, 7, 10, 11-ஆமதிபதி களோடு தனித்திருந்தால் உறவில் திருமணம் நடக்கும்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் களத்திர காரகன் செவ்வாய். ஒரு பெண்ணுக்கு தந்தைவழி உறவில் திருமணம் நடைபெற வேண்டுமெனில் தந்தை காரக கிரகம் சூரியனுடன் பெண்ணின் களத்திர காரக கிரகம் செவ்வாய்க்கும் சம்பந்தமிருக்க வேண்டும்.

அதாவது ஜென்ம லக்னத்திற்கு 9-ஆமிடம் தந்தை ஸ்தானமாகும். 9-க்கு 9-ஆமிடமான, 5-ஆமிடம் தந்தைவழி முன்னோர்கள் மற்றும் பூர்வ புண்ணியத்தைப் பற்றிக் கூறும் ஸ்தானமாகும். ஒரு பெண்ணின் ஜாத கத்தில் 5, 7, 9-ஆமிடங்களுக்கு சூரியன், செவ்வாய் சம்பந்தமிருந்தால் திருமணமா னது தந்தைவழி உறவில் அமையும்.

ஒரு ஆணின் ஜாதகத்தில் களத்திரகாரகன் சுக்கிரன். ஒரு ஆணுக்கு தந்தைவழி உறவில் திருமணம் நடைபெறவேண்டுமெனில் தந்தை காரக கிரகம் சூரியனுடன் ஆணின் களத்திர காரக கிரகம் சுக்கிரனுக்கும் சம்பந்தமிருக்க வேண்டும். ஒரு ஆணின் ஜாதகத்தில் 5, 7, 9-ஆமிடங்களுக்கு சூரியன், சுக்கிரன் சம்பந்தமிருந்தால் திருமணமானது தந்தைவழி உறவில் அமையும்.

ஒரு பெண்ணுக்கு தாய்வழி உறவில் திருமணம் நடைபெறவேண்டும் எனில் தாய்காரக கிரகம் சந்திரனுடன் பெண்ணின் களத்திர காரக கிரகம் செவ்வாய்க்கு சம்பந்தமிருக்கவேண்டும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 4, 5, 7-ஆமிடங்களுக்கு சந்திரன், செவ்வாய் சம்பந்தமிருந்தால் திருமணமானது தாய்வழி உறவில் அமையும்.

ஒரு ஆணுக்கு தாய்வழி உறவில் திருமணம் நடைபெறவேண்டுமெனில் தாய்க்காரக கிரகம் சந்திரனுடன் ஆணின் களத்திரக்காரக கிரகம் சுக்கிரனுக்கு சம்பந்தமிருக்கவேண்டும். ஒரு ஆணின் ஜாதகத்தில் 4, 5, 7-ஆமிடங் களுக்கு சந்திரன், சுக்கிரன் சம்பந்தமிருந்தால் திருமணமானது தாய்வழி உறவில் அமையும்.

அந்தவகையில் ஒருவருக்கு மாமன்வழியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தால் களத்திர காரக கிரகம், தாய்மாமனைக் குறிக்கும் காரக கிரகமான புதனுடன் சம்பந்தமிருந்தால் அந்தப் பெண்ணுக்கோ பையனுக்கோ மாமன்வழி உறவில் திருமணம் அமையுமென்று கூறலாம்.

ஒருவரது ஜாதகத்தில் 7-ஆம் பாவகத்தில் செவ்வாய், சனி, ராகு- கேது போன்ற அசுப கிரகங்கள் சேர்க்கைப் பெற்றால் அந்நியத்தில் திருமணம் நடக்கும். 5-ல் செவ்வாய், சனி, ராகு- கேதுவுக்கு சுக்கிரனின் சம்பந்தமிருந்தால் கலப்புத் திருமணம், மதம்மாறி திருமணம் நடக்கும்.

சொந்தத்தில் திருமணமா? அந்நியத்தில் அமையுமா என்பது திருமண வயதை அடைந்த வர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாகும். அக் காலங்களில் சொந்தமும், சொத்தும் விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக, சொந்தத் தில் திருமணத்தை செய்துமுடித்தார்கள். உளவியல்ரீதியாக உறவில் திருமணம் சுபமா என்று ஆய்வுசெய்தால் மருத்துவரீதியாக சொந்தங்களில் திருமணம் செய்தால் பிறக் கும் குழந்தைக்கு பாதிப்பிருக்கும் என்பதால் சொந்தத்தில் திருமணம் செய்வதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. மேலும் தற்காலத்தில் சொந்தத்தில் திருமணம் செய்த பலர் மனக்கசப்பால் பாராமுகமாக வாழ்கிறார் கள். உறவுகளுடன் ஒட்டாமல் தனித் தீவாக வாழும் குடும்பங்களும் இருக்கிறார்கள்.

கருத்து வேறுபாட்டால் சிலர் உறவு களின் இல்லங்களில் நடைபெறும் சுப- துக்க நிகழ்வுகளுக்கு உடன்பிறப்புகளை அழைப்பதில்லை. அழைத்தாலும் பங்கேற்பதில்லை. அழைக்காவிட்டாலும் குடும்பப் பிரச்சினை வெளியே தெரியாதவாறு நல்ல- கெட்ட நிகழ்வுகளை ஒன்றாக சேர்ந்து நடத்தும் குடும்பங்களும் இருக்கிறார்கள். இதுபோன்ற பல்வேறு நடைமுறை உறவுகளின் பிரச்சினையைத் தங்களுக்கு சாதகமாக்கி மாந்த்ரீகம், தாந்த்ரீகம் என்ற பெயரில் உறவு களை ஒட்டவைக்க முடியும் என்ற ஏமாற்று வேலையும் பிரபலமாகிவருகிறது.

100 ஆண்டுகளுக்கு முன்புவரை ஒவ்வொருவரும் தம் குடும்பத்திற்கு பத்துமுதல் இருபது வாரிசுகளை உருவாக்கினார் கள் என்பதால், 21 தலைமுறைக்கு வாரிசுகள் வாழ்ந்தார்கள். 60 வருடங்களுக்கு முன்புவரை ஒரு குடும்பத்தில் 5 முதல் 10 வாரிசுகள் இருந்ததால் 13 தலைமுறைக்குப் பின்பு வாரிசில்லாத நிலை இருந்தது. ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக வீட்டிற்கு ஒன்றிரன்டு குழந்தைகளே இருப்பதால் 7 தலைமுறை உருவாவதே பெரிதாகிவிட்டது.

இந்த 21-ஆம் றூற்றாண்டில் திருமணத்தடையும் குழந்தைப் பேறின்மையும் மிகுதியாகிவிட்டமையால் மனிதகுலம் தனது தலைமுறையை, வாரிசுகளை உருவாக்குவது கேள்விக்குறியாகி வருகிறது என்பதால் உறவு களில் திருமணம், ரத்தபந்த உறவுகள் அடுத்த தலைமுறைக்குக் கிடைக்காத பாக்கியம், தற்போதுவாழ்ந்துகொண்டிருப் பவர்களுக்கு மட்டுமே பிரபஞ்சம் வழங்கிக் கொண்டிருக்கும் அற்புதக் கொடை.

பிறப்பும் இறப்பும் நிச்சயமற்ற உலகில், வாழும் நாட்களில் விட்டுக்கொடுத்து வாழப்பழகினால் உறவுகளால் இன்பம் மட்டுமே நீடிக்கும். உடன்பிறந்தவர்களிடம் வேற்றுமையுணர்வுடன் வாழ்ந்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலை ரத்தபந்த உணர்வைப் பிரதிப-க்கும். உடல் அசையா விட்டாலும் உணர்வு அசைந்தே தீரும். எனவே நெருங்கிய ரத்தபந்த உறவுகளுடன் திருமணத்தைத் தவிர்த்து தூரத்து உறவில் திருமணம் செய்தால் உறவு வளரும்.

செல்: 98652 20406