நெற்றியில் அழகாக விபூதி பூசி, சந்தனம், குங்குமம், கருப்பு மை என வண்ணங்களில் பொட்டு, கழுத்தில் ருத்ராட்ச மாலை, காவி வேட்டி, வெள்ளை சட்டை, தோலில் காவித் துண்டுடன் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஒருவர் சென்னை அலுவலகத்திற்கு ஜீவ நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமர சொன்னேன். அவர் "நமச்சிவாயம்' என்று ஈசன் நாமத்தைக் கூறியவாறு அமர்ந்தார்.

நான் அவரிடம் எதுவும் கேட்காமலேயே அவர் தன்னைப் பற்றிய விவரங்களையும் எதற்காக நாடி படிக்க வந்தேன் என்று கூறத் தொடங்கினார்.

dd

Advertisment

"ஐயா எனது வம்சம் முன்னோர்கள் பரம்பரையாக ஜோதிடத் தொழில் செய்துவந்தார்கள். இப்போது நானும் ஜோதிடத் தொழில் செய்துவருகின்றேன். மேலும் ஜோதிடத்தில் பட்டம் பெற்றுள்ளேன். என்னிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கு பலன்கூறி பரிகாரங்களும் செய்துவைப்பேன்.

எனக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண்மகன் என மூன்று குழந்தைகள் உண்டு. இதில் எனது மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகின்றது. ஆனால் இதுவரை அவளுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இந்த புத்திர தடைக்கு காரணமென்ன? அவளுக்கு குழந்தை பாக்கியம் உண்டா இல்லையா? எனது இரண்டாவது மகளுக்கு 30 வயதாகின் றது. இவளுக்கு திருமணம் முடிந்து கணவனுடன் ஒரு வருடம் மட்டுமே சேர்ந்துவாழ்ந்தால். இப்போது கணவனை விட்டுப் பிரிந்துவந்து என்னுடன்தான் வசித்துவருகின்றாள். அவளுக் கும் குழந்தை இல்லை. அவனுடன் சேர்ந்துவாழ மறுத்துவருகின்றாள்.

என் மகனுக்கு 27 வயதாகின்றது. இன்னும் திருமணம் செய்துவைக்க முடியவில்லை. எவ்வளவோ பெண்களைப் பார்த்தும் ஒன்றும் சரியாக அமையாமல் திருமணம் தடையாகி கொண்டு போகின்றது. காரணம் அறிய முடியவில்லை. இவனுக்கு திருமணம் எப்போது நடக்கும்? பெண் சொந்தமா-அந்நீயமா? என் மூன்று குழந்தைகளின் வாழ்க்கை யிலும் குறைகள். நானும் எனது மனைவி, குழந்தை களும் மனம் நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வருகின்றோம். எங்கள் குடும்பத்தில் இது போன்ற நிலை ஏற்பட காரணமென்ன? குழந்தை களின் குறைகள் நீங்கி நல்ல வாழ்க்கை அமைய எனக்குத் தெரிந்தது, இன்னும் மற்றவர்கள் கூறிய அனைத்துப் பரிகாரங்களையும் செய்தும் எந்த பலனும் இல்லை. இறுதியாக எங்கள் குறைகள் நீங்கி நல்ல வாழ்க்கை அமைய அகத்தியர் வழிகாட்டுவார் என அவரை நாடி வந்துள்ளேன்'' என்றார்.

Advertisment

உங்கள் குழந்தைகளுக்கு ஜாதக பொருத்தம் பார்த்துதானே திருமணம் செய்துவைத்தீர்கள் என்றேன். என் பெண்களுக்கு ஜாதகப் பலன் பத்து பொருத்தும் பார்த்து வளர்பிறையில் நல்ல முகூர்த்தநாளில் முகூர்த்த லக்னம் தோஷம் இல்லாத நேரத்தில், வேத முறைப்படி வேதம் ஓதி, சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம் தவறில்லாமல்தான் திருமணம் செய்து வைத்தேன். அவர் கூறியதை பொறுமையாக கேட்டுவிட்டு ஓலையை பிரித்துபடிக்கத் தொடங்கினேன்.

இவரின் மூத்த மகளுக்கு திருமணமாகி ஐந்து வருடம் சென்றும் குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறுகின்றான். ஒரு குழந்தை பிறப்பதும் பிறக்காமல் போவதற்கும் பெண் மட்டும் காரணம் இல்லை. ஆணிற்கும் பங்குண்டு. இந்தப் பெண்ணின் கணவனின் வம்ச நிலையறிந்து எதனையும் கூறவேண்டும். அவர்கள் இருவரையும் என்னை நாடி வரச் சொல். அவர்கள் குறைதீர பலன் கூறுகின்றேன்.

இவனின் இரண்டாவது மகள் கணவனை விட்டுப் பிரிந்து வாழ்வதற்குரிய காரணத்தை கூறுகின்றேன். இவனின் முன்னோர்கள் காலத்தில் இவனின் தந்தை வழிபாட்டுடன் பிறந்த ஒரு பெண், அதாவது இவன் தகப்பனின் அத்தை. அவள் தன் கணவரை வெறுத்து கணவனுக்கு மனைவி தரக்கூடிய பாசம், அன்பினை தராமல் ஒதுக்கிவிட்டு பல ஆண்களுடன் நட்புகொண்டு தன் விருப்பப்படி எதனையும் செய்து வாழ்ந்துவந்தாள். கணவன் இல்லற துறவிபோல் வாழ்ந்தான். மனைவியின் பாசம் உறவு கிடைக்காத அவன், மரணத்தருவாயில் மனைவியைத் தவிர்த்து சாபமிட்டு இறந்தான்.

முற்பிறவியில் சுகமும் மரியாதை அடை முடியாத கணவன் விட்ட சாபம் அவள் பிறந்த குடும்பத்தில் பிறந்த இவளுக்கு கணவனின் பாசமும், மனைவி என்ற மரியாதையும் அடைய முடியாமல் தடுத்துவருகின்றது. இதுபோன்று இவள் கணவன் பல பெண்களுடன் தொடர்பு கொண்டு, தன் சுகமே பெரிதென வாழ்ந்து வருகின்றான். கணவனின் பாசம் கிடைக்காத மகள் இப்போது கணவனைவிட்டு பிரிந்து தகப்பனுடன் வாழ்ந்துவருகின்றாள்.

முற்பிறவிகளில் குடும்பத்தில் பாதிக்கப்பட்ட பெண் விட்ட சாபத்தைத் தடுக்க பிரார்த்தனை, வழிமுறைகள் உண்டு. ஆனால் மனைவியால் துரோகம் இழைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட கணவன் விட்ட சாபத்தைத் தடுக்க நிவர்த்தி பரிகாரங்கள் கிடையாது. இப்பிறவியில் அவன் செயலால் அவனுக்கு உண்டாகும் பெண் சாபம் அவனை பாதிக்காது. இனி அவனுடன் இவள் சேர்ந்துவாழ்ந்தாலும் அவனுக்கு சமைத்துப் போடும் வேலைக்காரியாகத்தான் வாழவேண்டும். அவனிடமிருந்து இவளை பிரித்து வேறு ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்து நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடு.

இரண்டாவது மகளின் வருங்கால நல்வாழ்விற்கு இதுதான் வழி.

ஐயா, என் மகளும் அவனுடன் சேர்ந்துவாழ மாட்டேன் என்று கூறுகின்றாள். அகத்தியரும் அதனையே கூறுகின்றார். அவன் விவாகரத்து தர சம்மதிப்பானா? எனது மகளுக்கு வேறு மாப்பிள்ளை கிடைப்பானா? இதையும் அகத்தியரிடமே கேட்டுசொல்லுங்கள்.

இவன் மகளை விவாகரத்து செய்ய அவன் சம்மதிப்பான் என்று கூறிவிட்டு மேலும் மகளுக்கு இரண்டாவது கணவனாக வரப் போகின்றவனை பற்றிய விவரங்களை விளக்கமாக கூறினார்.

அகத்தியர் வாக்குப்படியே அவனை விவாகரத்து செய்துவிட்டு அவர் அடையாளம் காட்டியவனையே திருமணம் செய்துவைக்கின் றேன் என்றவர். எனக்கு ஒரு சந்தேகம் அதனையும் தெளிவுபடுத்துங்கள். என் தந்தையின் அத்தை தான் இப்போது என் மகளாகப் பிறந்து தான் முற்பிறவியில் செய்த பாவத்திற்கு உரிய பலனை அனுபவிக்கிறாள் என்று அகத்தியர் கூறுகிறார்.

இதனை எப்படி அறிந்துகொள்வது.

தந்தையின் அத்தையை இவன் பார்த்திருந் தாலும் சரி அல்லது அவரது உருவப்படம் இருந்தால் அவளின் முகச்சாயல், கண், காது, மூக்கு அமைப்பு, நடை, பேச்சு, செயல், அலங்காரம் செய்துகொள்ளுதல், மாற்றானிடம் சகஜமாக பேசுவது போன்றவற்றை கவனமாக பார்க்கச்சொல். அதில் சில ஒற்றுமைகள் இருக்கும்போது அகத்தியர் கூறியது சரியென்று இவன் அறிந்துகொள்ளட்டும்.

ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள். தவறாக எண்ண வேண்டாம். நான் வேத முறை கணித ஜோதிடம்மூலம் ஜாதகம் பத்து பொருத்தம் பார்த்து என் பெண்களுக்குத் திருமணம் செய்துவைத்து அவர்களது வாழ்வில் சிக்கல், சிரமங்களை அனுபவிக்க செய்துவிட்டேன். ஒரு ஆணின் ஜாதகம்மூலம் அவன் பல பெண்களுடன் உறவுகொள்வான். மனைவியை ஏமாற்றி வாழ்வான் என்பதை எப்படி அறிந்துகொள்வது. இதனை ஒரு தந்தையாக கேட்கவில்லை. ஒரு ஜோதிடனாக விண்ணப்பிக்கிறேன். எனக்கும் இது தெரிந்தால் திருமண பலன், பொருத்தம் பார்க்கவரும் பல பெண்களை இத்தகைய ஆண்களிடமிருந்து என்னாலும் காப்பாற்ற முடியும் என்ற நல்ல எண்ணத்தில்தான்.

ஒன்றுக்குமேல் பல பெண்களைத் திருமணம் செய்துகொண்டவர்கள் பல பெண்களுடன் உறவு, நட்புகொண்டு வாழ்ந்துவரும் ஆண்கள் பலரின் ஜாதகங்களை, சித்தர்கள் கூறிய தமிழ் ஜோதிடமுறையில் ஆய்வுசெய்து, நான் அனுபவத்தில் அறிந்ததைக் கூறுகிறேன்.

ஒரு ஆணின் ஜாதகத்தில் "குரு' என்னும் கிரகம் அந்த ஜாதகனைக் குறிக்கும் உதாரணக் கிரகமாகும். ராசி சக்கரத்தில் குரு இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2, 12-ஆவது ராசிகளில் சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் சம்பந்தப்பட்டு இருந்தால் அவன் பல பெண்களுடன் உறவுகொள்வான். மனைவி அல்லாது வேறு பெண்களை புணர்வான்.

இனி இவன் மகனின் திருமணத்தடைக்கு பாவ- சாப காரணத்தை கூறுகின்றேன். இவனது முன்னோர்கள் பரம்பரை ஜோதிடத் தொழில் செய்து வந்தவர்கள். இவனது பாட்டன்களில் ஒருவன் தன்னிடம் ஜோதிடம் பார்க்க வந்த ஒரு பெண்ணிடம் பழக்கம்கொண்டு அவளை வாழ்வின் இறுதிவரை காப்பாற்றுவேன் என்று உறுதி கூறி, தன் குடும்பத்தினருக்கு தெரியாமல் திருமணம்செய்து வேறொரு ஊரில் குடியமர்த்தி, அவளுடன் குடும்பம் நடத்தினான்.

அந்தப் பெண்ணிற்கும் இவனது பாட்டனுக் கும் உண்டான உறவினால் அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மூன்று வருடங்கள் மகிழ்ச்சியாக சென்ற வாழ்வில் விரிசல் ஏற்பட்டது. இறுதிவரை காப்பாற்றுவேன் என்றவன் அவளைவிட்டு பிரிந்தான். ஆதரவில்லா அந்த அபலை பெண், தானே உழைத்து, தன் குழந்தையையும் காப்பாற்றினாள்.

இவன் பாட்டன் செய்த துரோகத்தை எண்ணியெண்ணி மனம் நொந்து அவள் வாழ்வின் இறுதியில் அந்தப்பெண் விட்ட சாபம் தன்னை விரும்பிய மங்கையை ஏளனம் பேசி ஒதுக்கிய பாவம், இப்போது இவன் மகன் ஒரு கன்னியை கரம் பற்ற தடையாக உள்ளது இந்தப் பெண்ணின் சாபம் நீங்கவும் அவள் ஆத்மா சாந்தியடையவும் நான் கூறும் சில பிரார்த்தனைகளை முறையாக செய்தால் இவன் மகன் திருமணம் நடக்குமென்று வழிமுறைகளை கூறினார். மேலும் மகனுக்கு மனைவியாக வரப்போகின்றவள் பற்றிய விவரங்களையும் கூறிவிட்டு அகத்தியர் ஓலையில் இருந்து மறைந்தார்.

நாடியில் பலன் கேட்கவந்த ஜோதிடரும் அகத்தியரை வணங்கிவிட்டு விடைபெற்றுச் சென்றார்.

செல்: 99441 13267