திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்பர். அது சொர்க்கமாகுமா, நரகமாகுமா என்பதை கிரகங்கள் தீர்மானிக்கின்றன. இரு மனம் இணைந்தால் திருமணம். அதில் இளசு களுக்கு ஒரு எதிர்பார்ப்பு எழுகிறது.

பெண்ணுக்கு வரும் கணவன் நல்லவனா? அழகனா? அடங்கு வானா? அனுசரித்துச் செல்வானா?

ரெமோவா அல்லது அம்பியா என்று ஏகப்பட்ட வினாக்கள் எழும். அதே போல் ஆடவருக்கும் பல கனவுகள் இருக்கும். மணவாழ்வில் மகிழ்ச்சி இருக்குமா? சுகம் தருமா என்று பல கேள்விகள் எழத்தானே செய்யும்.

நாமொன்று நினைக்க, நடப்பது வேறொன் றாக அன்றோ அமைந்துவிடுகிறது! இந்த நிலை களுக்கு தீர்வுகாண நாம் ஆராயவேண்டிய இடம் களத்திர பாவமெனும் ஏழாம் பாவம் தானே? களத்திர பாவத்திலுள்ள கிரகங்கள், பாவாதிபதியுடன் சேர்ந்த, பார்த்த கிரகங்கள், பாவத் தைப் பார்க்கும் கிரகங்கள், காரகன் சுக்கிரன் ஆகியவற்றின் தன்மைகள் ஆகியவை இந்த பாவத்தை ஆய்வுசெய்ய உதவுகின்றன.

Advertisment

dd

களத்திரபாவமான 7-ஆமிடத்தில் சந்திரன் இருக்கப் பிறந்தவர்கள் சாந்தமானவராக வும், அழகுள்ளவராகவும், வனிதையருக்கு வசப் பட்டவராகவும் விளங்குவர். இதுவே, சூரியன் 7-ல் உள்ளவர்கள் கர்வம் மிக்க, சினம் மிக்க, துணையை வெறுப்புடன் நடத்துபவராக விளங்குவர். செவ்வாய் 7-ல் இருக்க, ஜாதகர் மனைவியைப் பிரிவதோ, இழப்பதோ நிகழும். 7-ஆம் பாவத்தில் அமர்ந்த செவ்வாயை சனி மட்டும் (சுபர் பார்வையின்றி) பார்க்க மனைவி மரணிப்பாள். புதன் களத்திர பாவத்தில் இருக்க ஜாதகர் அங்கஹீனராக வும், கலைகளில் தேர்ச்சி உடையவராகவும், தொழில், வணிகம் ஆகியவற்றில் நிபுணத்து வம் பெற்றவராகவும் திகழ்வார்.

7-ல் குரு இருக்கப்பெற்றவர்கள், தன் தந்தையைக் காட்டிலும் எல்லாவிதத்திலும் சிறந்தவராகவும், புத்திமானாகவும், குணமுள்ள மனைவியை உடையவராகவும் இருப்பார். எனினும், குரு இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடமே சிறப் பதால், வாழ்க்கை சுமாராகவே இருக்கும். களத்திரகாரகன் சுக்கிரன் 7-ல் இருக்கப் பிறந்தவர் கள் அழகானவராகவும், பணக்காரராகவும், பல பெண்களை நேசிப்பவராகவும் திகழ்வார்.

சனி இருக்க, அந்த ஜாதகர் மனைவி மூலம் நோய்களைப் பெற்று பாதிப்படைவார். நிழல் கிரகங்களான ராகு அல்லது கேது இருக்கப் பெற்றவர்கள் தன்னைவிட கீழான நிலையிலுள்ள மங்கையை மணப்பார். சிலர் இல்லாளை இழந்து இன்னலுறுவர். சிலருக்கு மறுதாரம் அமைவதில் தாமதம் ஏற்படலாம்.

ddd

உதாரணமாக, 7-ஆமிடம் மகரமாகி, அதில் தேவகுரு அமர்ந்திருக்க, ஜாதகரின் மனைவி மண்ணுலகம்விட்டு விண்ணுலகம் அடைவாள். 5-ஆம் பாவாதிபதி, களத்திர பாவமெனும் 7-ல் இருந்தாலும் மனையாள் மரணித்து மனத்துயரங்கள் பல அடைவார். அட்டமாதிபதி களத்திர பாவம் ஏறினால் ஜாதகர் இல்லற சுகம் அனு பவிக்க முடியாதவராகவும், மனைவியை இழப்பவராகவும் இருப்பார்.

மிதுனம் 7-ஆமிடமாகி அங்கே, சனி, சூரியன் இணைவுபெற, ஜாதகர் மனைவியை இழப்பவராகவோ அல்லது புத்திரபாக்கி யம் இல்லாதவராகவோ இருப்பார். கன்னி 7-ஆமிடமாகி, அதில் குருவும், சதுர்த்த கேந்திரமாகிய 4-ஆம் வீட்டில் பாவரும் இருக்க மணாளனின் மனைவி மரிப்பாள்.

7-ஆமிடம் மீனமாகி, அதில் சூரியன் இருந்தால் ஜாதகர் சக்தியற்றவராக இருப்பதோடு இல்லாளையும் இழப்பார். மேற் சொல்லப்பட்ட பாவ கிரகங்கள் தங்கள் சொந்த வீட்டிலோ, உச்ச வீட்டிலோ இருப்பின் மனைவிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

சுக்கிரன், செவ்வாயின் நவாம்சம் அல்லது தனது சுய வீடுகளான மேஷம், விருச்சிகத்தில் இருந்து, சுக்கிரன், செவ்வாயுடன் இணைந் திருந்தாலும், பார்த்தாலும் ஜாதகர் பிறர் மனையாளுடன் சேர விருப்பமுடையவராக இருப்பார். சுக்கிரன் 7-ஆமிடத்தில் இருந்தாலும் பிறன் மனை நோக்கும் குணம் உடையவராக இருப்பார்.

ஜென்ம லக்னமோ அல்லது சந்திரா லக்னமோ எது பலமானதோ, அதற்கு 7-ஆம் பாவத்தை எடுத்துக்கொண்டு பலன் உரைப்பதே சிறப்பு. 7-ஆம் பாவத்தில் அசுப கிரகங்கள் அமர, ஜாதகர் மனைவியை இழப்பார். 7-ஆம் பாவத்தில் சந்திரன், சூரியன், செவ்வாய் இருந்தால் ஜாதகர் மறுமணம் செய்துகொள்வார். பொதுவாக, இல்லாளை இழந்து இன்னுமொரு திருமணம் செய்துகொள்பவர்கள் ஜாதகத்தில் தாரதோஷமோ, பெண் சாபமோ இருக்கும். இதன்காரணமாகவே, இளமையிலேயே மனைவியை இழந்து மறுதாரம் அமைய காலதாமதம் ஏற்படும். தோஷ, சாப நிவர்த்தி ஹோமம் செய்து ரக்ஷை ஏற்பது, மாங்கல்ய பிராப்த யந்திரப் பிரதிஷ்டை போன்றவற்றின்மூலம் நிவாரணம் பெறலாம்.

7-ஆம் பாவத்தை சுப கிரகங்கள் பார்த் தால் ஜாதகர் நல்ல மனையாளை அடைவார்.

சிலருக்குத் திருமணம் தாமதமாகலாம். மறுமணமும் ஏற்படலாம். ஆனால் இரண்டாம் திருமணமே தாமதப்படும். முன்பே கூறப் பட்டதுபோல் ஜாதகத்தில் அமைந்துள்ள தார தோஷமோ அல்லது முற்பிறவியில் ஏற்பட்ட சாபமோ காரணமாக இருக்கும். உரிய பரிகாரத் திற்குப்பிறகு திருமணம் உறுதியாக நடக்கும்.

ஏழாமதிபதி அல்லது களத்திர காரகன் உச்சம், வக்ரம் பெற்றாலும் அல்லது லக்ன கேந்திரங்களில் இருந்தாலும் ஜாதகர் மிக பலமுடையவராகி, ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை உடையவராய் இருப்பார்.

அதேபோல், 7-ஆமதிபதி உபய ராசியிலோ அல்லது அதன் நவாம்ச ராசியிலோ இருந்தால் ஜாதகர் இருதார யோகம் உடையவராவார்.

7-ஆம் பாவம் உச்ச ராசியாக அமையப் பெற்றால், மனைவிமூலம் திரண்ட செல்வத்து டன், நிலபுலன், வீடு, வாகனம் போன்றவற் றுடன் ஜாதகருக்கு சுகபோக சுப வாழ்க்கை அமையும். 7-ஆம் வீடு, அதன் அதிபதி, களத்திர காரகன், சுக்கிரனுக்கு இடம் கொடுத்த வன் ஆகியோரின் அமைப்பு குறிப்பாக உச்ச ராசியிலோ, ஆட்சி வீட்டிலோ, மூலத் திரிகோண வீட்டிலோ அல்லது வர்க் கோத்தம நிலையோ அடையுமாயின் அல்லது சுப கிரக இணைவு, பார்வை பெறுமாயின் மற்றும் 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய பாவங்களில் இவ்விணைவு ஏற்படுமாயின் ஜாதகருக்கு சகல சௌபாக்கியங்களும், செல்வங்களும், நீண்ட ஆயுளும் கூடிய களத்திரம் ஏற்படும்.

செல்: 97891 01742