மானுட வாழ்வியல் பயணத்தில் ஒவ்வொரு மனிதனுக் கும் வரமாக அமைவது திருமணமும் குழந்தைப் பேறும்.
அப்படிப்பட்ட வரம் எல்லாருக்கும் இயல் பாக அமைந்துவிடுகிறதா என்றால் நிச்சய மாக இல்லையென்று சொல்லமுடியும். காலா காலத்தில் நிகழும் நிகழ்வுகள்தான் நெருடல் இல்லா வாழ்வுக்கு வழிவகுக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
இதற்கெல்லாம் காரணங்கள் பற்பல இருந்தா லும், ஜாதகரீதியாக நாம் அணுகுவது சிறப்பு.
ஒரு ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய் ஆகியவை பாதிக்கப்படுவது- அதாவது அஸ்தங்கம், மறைவு ஸ்தானங்களில் அமர்வது, நீசம் போன்றவையும், லக்னத்திற்கு ஏழாமதிபதி மேற்கூறிய காரணங்கள்ரீதியாக அமைவதும், மேலும் மூத்தோர் வழிபாடு சரியாகப் பின்பற்றாததனால் ஏற்பட்ட பித்ரு தோஷமும், மாந்தியுடன்கூடிய சுக்கிரனும், சுக்கிரனின் காலில் ஏறிய மாந்தியும் திருமணத்தைத் தடுக்க வல்லவை என்று ஜோதி டத்தில் உரைக்கப்பட்டுள்ளது.
இதில் சுக்கிரனின் காலில் ஏறிய மாந்தி ஒரு ஜாதகத்தில் இருப்பின், அந்த ஜாதகரின் வீட்டில் பிறந்த பெண்களுக்கும் சரி; அந்த வீட்டிற்கு வாழ்க்கைப்பட்டு வந்த பெண்களுக்கும் சரி- எண்ணிலடங்கா துயரங்கள் நிகழ்வதைப் பல ஜாதகங்களில் காணமுடிகிறது. குறிப்பாக திருமணம், திருமண உறவில் பெரும் பாதிப்பைக் கொண்டுவருகிறது.
இவையனைத்தும் சரிவர இருந்துமே திருமணத் தடை உள்ள ஜாதகங்களை ஆராயும் பொழுது சில நுட்பமான விடியங்கள் பொதிந் துள்ளன. தாரா பலன்ரீதியாக திருமண காலத்தில் நிகழும் தசாநாதன் மற்றும் புக்திநாதன் ஏறிய நட்சத்திரத்திற்கு, மூன்று மற்றும் ஏழாம் இடத்திற்கான நட்சத்திரத் தொடர்பு திருமணத் தடையைத் தருகிறது.
அதோடு மட்டுமல்லாமல், தசாநாதன் ஏறிய நட்சத்திரத்திற்கு விபத்து நட்சத்திரத்துடன் தொடர்பு ஏற்படும்பொழுது சில விபத்து களையும் சந்திக்கும் சூழல், ஜாதகருக்கு அமைந்து விடுவதனால், இதுவும் திருமணத் தாமதத்திற்கு ஒரு காரணமாக அமைகிறது.
மேலும் ஏழாமதிபதி 6 அல்லது 8-ல் இருந்தால் நிச்சயமாக திருமண வாழ்வின் சில இடர்ப்பாடுகள் இருக்கும் என்பதை உணர்ந்து, அதற்கு ஏற்றாற் போல ஏழு மற்றும் அதன் அதிபதி யோடு சனி சம்பந்தபடும்பொழுது தங்களின் தகுதியைவிட சற்று குறைவான- அதாவது பொருளாதார ரீதியாகவோ கல்விரீதியாகவோ சற்று குறைவை ஏற்றுக்கொள்ளும் மனோ நிலையை வளர்த்துக்கொள்வது சிறப் பாகும்.
இதில் எவ்வளவு பிரச்சினைகள் இருப்பினும், அருகிலுள்ள பழமையான சிவன் கோவிலில் அமையப்பெற்றுள்ள கோபுரத்தின் நிழல் விழும் பகுதியில், ராகுகால வேளையில் 24 நிமிடங்கள் திருமண மாகாத நபரை அமரவைப்பது திருமணத் தடையைத் தகர்த்தெறியும்.
மேலும் அவர்கள் வசிக்கும் ஊரின் எல்லையிலுள்ள பெண் தெய்வங் களுக்கு பௌர்ணமி தினத்தில் வளையல், ஜாக்கெட் பிட், தாலிக் கயிறு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் ஆகியவற்றுடன் ஒரு மாவிளக்கை இரவு 7.00 மணிக்கு வைத்து வழிபட்டுவிட்டு, எந்தப் பொருளையும் எடுக்காமல் வீட்டிற்கு வந்து பூஜையறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிடவேண்டும்.
பிறகு நள்ளிரவில் நிச்சயமாக ஒரு கண் விழிப்பு வரும். அந்த சமயத் தில் பூஜையறையில் வைத்துள்ள ஒரு எலுமிச்சைப் பழத்தை எடுத்துச் சென்று வீட்டு வாசல் படியில் வைத்து கைகளால் நசுக்கி உடைத்துவிட வேண்டும்.
இந்த இரண்டு பரிகாரங்களும் திருமணத்தடையை உடைத்தெறிய வல்லவை.
இதேபோல ஏழாமதிபதி மற்றும் இரண்டாமதிபதி ஏறிய நட்சத்திர நாதன் ஜாதகத்தில் நன்றாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்குரிய விருட் சத்தை வழிபடுவது மிகச் சிறப்பைத் தரும்.
குழந்தைப் பேறு
மஞ்சள் கொடி மங்கலமாய் சூடிய சில மாதங்களில் தொப்புள்கொடி உறவை உள்ளமும் உறவுகளும் தேட ஆரம்பித்துவிடும்.
சிலருக்கு இதில் ஏற்படும் தடைகள் மனரீதியான பாதிப்பையும், உறவு களுடனான விரிசலையும் ஏற்படுத்தி விடுகிறது.
இதற்கான ஜோதிட விதிகளை ஆராயும்பொழுது, ஐந்தில் ராகு, ஐந்தில் சனி, குரு பலமிழப்பது, ஐந்தாமதி பதி பலமிழப்பது போன்றவை பெரும்பாலாக சொல்லப்படுகிறது. சற்று ஆழமாக ஆராயும்பொழுது சூரியன் மற்றும் சுக்கிரனின் இணைவும், அதேபோன்று சுக்கிரன் மற்றும் செவ்வாயின் இணைவும் பெரும் பங்குவகிக்கிறது.
சுக்கிரன் என்பது உயிரணு மற்றும் கருமுட்டைக்குப் பொறுப்பேற்கும். செவ்வாய் கருமுட்டை மற்றும் உயிரணுக்களின் வலுவை சொல்லக்கூடியது. இவை சூரியனுடன் சேரும்பொழுது இவற்றின் தன்மை மிகவும் பாதிக்கப்படுகிறது.
குழந்தைகாரகன் குரு ஒரு சுற்று வருவதற்கு 12 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். 12 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகள் குருவின் தன்மை பொருந்தியவர்கள். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வியாழக்கிழமைகளில் 12 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகளுக்கு மஞ்சள் நிற லட்டு தானமாகத் தர வேண்டும்.
அதேபோன்று 16 கொம்பு மஞ்சள் எடுத்து ஒரு நீளமான மஞ்சள் துணியில் முடிந்து, குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருக்கும் பெண்ணின் வயிற்றில் வியாழக்கிழமை இரவு கட்டிவிட வேண்டும். இந்த மஞ்சளை மறுநாள் மஞ்சள் துணியோடு நீரில் போட்டு ஊறவைத்து, ஊறியபிறகு அவிழ்த்து அரைத்து, அதில் ஒரு பகுதியை குருபகவானின் பாதங்களில் பூசி குங்குமமிட்டு, இரண்டு நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டுவந்தால் நிச்சயமாக குழந்தை வரம் கிடைத்தே தீரும் என்பது அனுபவ உண்மை.
அரைத்த மஞ்சளின் மற்றொரு பகுதியை நீரில் கரைத்துக் குளித்துவிடவேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது குழந்தை வரம் கிடைத்துவிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.
திருமணத் தடையானாலும் சரி; குழந்தைப் பேறு சார்ந்த பிரச்சினையானாலும் சரி- புதுச்சேரியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தென்னம்பாக்கம் ஸ்ரீ அழகு முத்தையனார் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு, பின் மாப்பிள்ளை, பெண்போல சிலை செய்துவைப்பதாக வேண்டிக் கொண்டு, குழந்தை பிறந்தால் குழந்தைபோல் உருவம் செய்துவைப்பதாக வேண்டிக்கொண்டு வந்தால், நிச்சயமாக கோவில் சென்றுவந்த ஏழு அல்லது எட்டு மாதங்களில் இதற்கான தீர்வுக்கு வழிவகுக்கும். இந்த சிலைகள் வேண்டுதல் நிறைவேறிய பிறகு செய்தால் போதுமானது.
செல்: 80563 79988