ஒரு உயிர் இந்த மண்ணில் ஜனனமாகிறதென்றால், போன ஜென்மத்தில் அந்த உயிர் செய்த பாவ- புண்ணியத்தின் மிச்சத்துடன்தான் தோன்றுகிறது. இந்த ஜென்மத்தில் இவர்களின் வாரிசாகத் தோன்றி அவர்களின் பாவ- புண்ணியத்திற்கேற்ற பலன்களையும், தன்னுடைய பாவ- புண்ணியத்திற்கேற்ற பலன்களையும் அனுபவித்துச் செல்லவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு உயிரின் விதியாகும்.
ஒருவருக்குப் பிறக்கும் பிள்ளைகளால் அடையும் பாக்கியங்களும், சங்கடங்களும் கூட கடந்த ஜென்மத்திற்குரிய பாவ- புண்ணிய கணக்கின் வினைப்பயன்தான். கடந்த ஜென்மத்தின் கர்மவினைகளைக் கழிப்பதற்காக உருவான இப்பிறவியின் சூட்சுமங்களை உள்ளடக்கியதுதான் ஒவ்வொருவரின் ஜாதகமும்.
நாளை என்ன நடக்கப்போகிறதென்ற கேள்வியைவிட, அடுத்த நிமிடம் நமக்கு எத்தகையதாக இருக்குமென்பதுகூட எவராலும் யூகிக்கமுடியாத ஒன்றாகவே இருந்துவருகிறது.
இந்த நிலையில்தான் ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து சரியாகக் கணிக்கப்படும் ஜாதகம், உடல்நிலையை மருத்துவத்துறையி னர் ஸ்கேன் செய்து கண்டுபிடிப்பதுபோல், ஒரு மனிதரின் வாழ்க்கையை அவருடைய ஜாத கத்திலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.
ஜோதிடம் என்று வருகிறபோது, தசை, புக்தி, அந்தரம், தசாநாதனின் நிலை. புக்திநாதனின் நிலை, அந்தர கிரகத்தின் நிலை, ராசிநாதனின் நிலை, லக்னாதிபதியின் நிலை. மற்ற கிரகங்களின் நிலை, ஸ்தானப்பலன், ஜெனமத்தில் தொடங்கி விரயம் முதலான பன்னிரண்டு பாவாதிபதிகளின் நிலை, காரகாதிபதிகளின் தன்மை என்று அனைத் தையும் ஆராய்ந்து பார்க்கும்போதுதான் அந்த ஜாதகரின் நிலையும், எதிர்காலமும் புலப்படும்.
ஒருவர் ஜாதகம்போல் அடுத்தவரின் ஜாதகம் அமைவதில்லை என்பதுடன், ஒரே நேரத்தில் பிறக்கும் இருவருக்கும் வாழ்க்கை ஒன்றுபோல் இருப்பதில்லை. அதற்குக் காரணம் அவர்களுடைய கடந்த பிறவியின் பூர்வபுண்ணியப் பலனென்பது இருவருக்கும் வெவ்வேறானதாக இருப்பதுதான்.
இந்த நிலையில் ஜோதிடர்களிடம் தங்கள் பலனைத் தெரிந்துகொள்ள வரும் பெரும்பாலானவர்கள் தங்கள் கனவுகளை யெல்லாம் ஜோதிடரிடம் கொட்டி, நான் எப்போது செல்வந்தனாவேன்? எப்போது வீடு வாங்குவேன்? எப்போது வாகனம் வாங்குவேன்? எப்போது பதவிக்கு வருவேன்? நான் ஆசைபட்டவருடன் ஆசைபட்டப்படி வாழமுடியுமா? கோடிஸ்வரன் ஆவேனா என்பதையெல்லாம்
ஒரு உயிர் இந்த மண்ணில் ஜனனமாகிறதென்றால், போன ஜென்மத்தில் அந்த உயிர் செய்த பாவ- புண்ணியத்தின் மிச்சத்துடன்தான் தோன்றுகிறது. இந்த ஜென்மத்தில் இவர்களின் வாரிசாகத் தோன்றி அவர்களின் பாவ- புண்ணியத்திற்கேற்ற பலன்களையும், தன்னுடைய பாவ- புண்ணியத்திற்கேற்ற பலன்களையும் அனுபவித்துச் செல்லவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு உயிரின் விதியாகும்.
ஒருவருக்குப் பிறக்கும் பிள்ளைகளால் அடையும் பாக்கியங்களும், சங்கடங்களும் கூட கடந்த ஜென்மத்திற்குரிய பாவ- புண்ணிய கணக்கின் வினைப்பயன்தான். கடந்த ஜென்மத்தின் கர்மவினைகளைக் கழிப்பதற்காக உருவான இப்பிறவியின் சூட்சுமங்களை உள்ளடக்கியதுதான் ஒவ்வொருவரின் ஜாதகமும்.
நாளை என்ன நடக்கப்போகிறதென்ற கேள்வியைவிட, அடுத்த நிமிடம் நமக்கு எத்தகையதாக இருக்குமென்பதுகூட எவராலும் யூகிக்கமுடியாத ஒன்றாகவே இருந்துவருகிறது.
இந்த நிலையில்தான் ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து சரியாகக் கணிக்கப்படும் ஜாதகம், உடல்நிலையை மருத்துவத்துறையி னர் ஸ்கேன் செய்து கண்டுபிடிப்பதுபோல், ஒரு மனிதரின் வாழ்க்கையை அவருடைய ஜாத கத்திலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.
ஜோதிடம் என்று வருகிறபோது, தசை, புக்தி, அந்தரம், தசாநாதனின் நிலை. புக்திநாதனின் நிலை, அந்தர கிரகத்தின் நிலை, ராசிநாதனின் நிலை, லக்னாதிபதியின் நிலை. மற்ற கிரகங்களின் நிலை, ஸ்தானப்பலன், ஜெனமத்தில் தொடங்கி விரயம் முதலான பன்னிரண்டு பாவாதிபதிகளின் நிலை, காரகாதிபதிகளின் தன்மை என்று அனைத் தையும் ஆராய்ந்து பார்க்கும்போதுதான் அந்த ஜாதகரின் நிலையும், எதிர்காலமும் புலப்படும்.
ஒருவர் ஜாதகம்போல் அடுத்தவரின் ஜாதகம் அமைவதில்லை என்பதுடன், ஒரே நேரத்தில் பிறக்கும் இருவருக்கும் வாழ்க்கை ஒன்றுபோல் இருப்பதில்லை. அதற்குக் காரணம் அவர்களுடைய கடந்த பிறவியின் பூர்வபுண்ணியப் பலனென்பது இருவருக்கும் வெவ்வேறானதாக இருப்பதுதான்.
இந்த நிலையில் ஜோதிடர்களிடம் தங்கள் பலனைத் தெரிந்துகொள்ள வரும் பெரும்பாலானவர்கள் தங்கள் கனவுகளை யெல்லாம் ஜோதிடரிடம் கொட்டி, நான் எப்போது செல்வந்தனாவேன்? எப்போது வீடு வாங்குவேன்? எப்போது வாகனம் வாங்குவேன்? எப்போது பதவிக்கு வருவேன்? நான் ஆசைபட்டவருடன் ஆசைபட்டப்படி வாழமுடியுமா? கோடிஸ்வரன் ஆவேனா என்பதையெல்லாம் கேட்பவர்களாகவே உள்ளனர்.
இத்தகைய உணர்வுகொண்டவர் களுக்கு வாழ்க்கையின் மறுபக்கம் என்று ஒன்றி ருப்பதே தெரியாமல் போய் விடுகிறது. இப்போதுள்ள நிலையாவது நீடிக்குமா? இருக்கும் பதவி நிலைக் குமா? பார்க்கும் வேலை யில் பிரச்சினைகள் உண்டாகுமா? சட்டச் சிக்கலோ வம்பு வழக்கோ ஏற்படுமா? உறவுகளுடன் சேர்ந்து வாழமுடியுமா? நான் சேர்த்து வைத்திருப் பதையெல்லாம் அனுபவிப்பதற்கு எனக்கு ஆயுள் இருக்குமா என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களாக, தெரிந்துகொண்டு அதற்கேற்ப வாழமுயற்சிப் பவர்களாக பெரும்பாலோர் இல்லை.
ஜோதிடரிடம் பலன் கேட்பவர்களின் கேள்விகள் எல்லாம் அவர்களுடைய ஆசைகளின் வெளிப்பாடுகளாக இருக்கிறதேயொழிய அவற்றையெல்லாம் வைத்து வாழவும், அனுபவிக்கவும் தங்களுக்கு விதி இருக்கிறதா என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ள பெரும்பாலனவர்கள் நினைப்பதில்லை.
வாழ்க்கையில் சாதகமானவற்றை அறிந்து கொள்வதற்கு முன்பாக நமக்கு முன்பாக வுள்ள பாதகங்களையும், எதிர்வரப்போகும் பிரச்சினைகளையும் அவசியமாக நாம் தெரிந்துகொள்ளவேண்டும். நமக்கு உண்டாகப்போகும் யோகங்களைத் தெரிந்து கொள்வதற்குமுன் அவயோகங்களையும் தெரிந்துகொள்ளவேண்டும்.
ஒவ்வொருவரின் விதியென்பது சுவர் போன்றது. அந்த சுவர் இருந்தால்தான் நம்முடைய ஆசை என்கிற சித்திரங்களை எழுத முடியும். அதற்காக நாம் தெரிந்துகொள்ள வேண்டியதுதான் நமக்குரிய பாதகாதிபதி யைப் பற்றியும் மாரகாதிபதிகள் பற்றியும்.
ஜோதிட சாஸ்திரத்தில் நமக்குரிய அதிர்ஷ் டங்கள் பற்றிக் கூறப்பட்டிருப்பதுபோல் நமக்குரிய கண்டங்களும் கூறப்பட்டுள்ளன. மாரகாதிபதியின் தசை, ஆயுள் ஸ்தானாதி பதியின் தசை, மூன்றாமிட அதிபதியின் தசை நடக்கும் காலத்தில் மாரகாதிபதியின் புக்தி நடைபெறும்போது நாம் மிகமிக எச்சரிக்கையாக இருந்திடவேண்டும்.
அதேபோல், ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு லக்னத்திற்கும் மாரகாதிபதி பற்றி யும், பாதாகாதிபதி பற்றியும் கூறப் பட்டுள் ளது. அந்தந்த கிரகங்களின் தசைகள் நடக்கும் காலத்தில் நாம் எச்சரிக்கையாக இருந்திட வேண்டும்.
நமக்குரிய மாரகாதிபதிகள் யார்? பாதகாதி பதி யார் என்று கேட்பவர்களுக்காகவே ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள தகவல்களை இங்கே வழங்குகிறேன்.
சர லக்னங்களுக்கு மாரகலி பாதகாதிபதிகள்
மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு லக்னங்களையும் சரம், ஸ்திரம், உபயம் என்று மூன்று பிரிவுகளாக ஜோதிட சாஸ்திரம் வகுத்துள்ளது. இதில் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கும் சர லக்னங்களாகும். இந்த லக்னங்கள் ஒவ்வொன்றுக்கும் இரண்டாமிடமும், ஏழாமிடமும் மாரகாதிபதிக்குரிய- அதற்கு நிகரான கண்டத்தை வழங்கிடக்கூடிய இடங் கள் என்றும், அந்த இடத்திற்குரிய அதிபதிகள் அந்த நிலையை உண்டாக்குவார்கள் என்றும், அதேபோல் பதினொன்றாம் இடத்தின் அதிபதி பாதகத்தை உண்டாக்கக்கூடிய பாதகாதிபதியாக இருப்பார் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அதன் அடிப்படையில், மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, இரண்டுக்கும் ஏழுக்கும் அதிபதியான சுக்கிர தசை நடைபெறும் காலத்தில் கண்டத்தை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படுமென்றும், பதினொன்றுக்கு அதிபதியான சனிபகவானின் மகாதசையில் பாதகங்களை சந்திக்கவேண்டிய நிலை உருவாகுமென்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இரண்டுக்கும் ஏழுக்கும் அதிபதிகளான சூரியன் மற்றும் சனி தசை நடைபெறும் காலத்தில் கண்டத்தை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படுமென்றும், பதினொன்றுக்கு அதிபதியான சுக்கிர பகவானின் மகாதசையில் பாதகங்களை சந்திக்கவேண்டிய நிலை உருவாகுமென்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இரண்டுக்கும் ஏழுக்கும் அதிபதியான செவ்வாய் தசை நடைபெறும் காலத்தில் கண்டத்தை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படு மென்றும், பதினொன்றுக்கு அதிபதியான சூரிய பகவானின் மகாதசையில் பாதகங்களை சந்திக்கவேண்டிய நிலை உருவாகுமென்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, இரண்டுக்கும் ஏழுக்கும் அதிபதிகளான சனி மற்றும் சந்திரன் தசை நடைபெறும் காலத்தில் கண்டத்தை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படுமென்றும், பதினொன்றுக்கு அதிபதியான செவ்வாய் பகவானின் மகாதசை யில் பாதகங்களை சந்திக்கவேண்டிய நிலை உருவாகுமென்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
ஸ்திர லக்னங்களுக்கு மாரக- பாதகாதிபதிகள்
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய நான்கும் ஸ்திர லக்னங்களாகும். இந்த லக்னங் கள் ஒவ்வொன்றுக்கும் மூன்றாமிடமும் எட்டாமிடமும் மாரகாதிபதிக்குரிய- அதற்கு நிகரான கண்டத்தை வழங்கிடக் கூடிய இடங்கள் என்றும், அந்த இடத்திற் குரிய அதிபதிகள் அந்த நிலையை உண்டாக்கு வார்கள் என்றும், அதேபோல் ஒன்பதாம் இடத்தின் அதிபதி பாதகத்தை உண்டாக்கிடக் கூடிய பாதகாதிபதியாக இருப்பார் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அதன் அடிப்படையில் ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மூன்றுக்கும் எட்டுக்கும் அதிபதிகளான சந்திரன் மற்றும் குரு தசை நடைபெறும் காலத்தில் கண்டத்தை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும் என்றும், ஒன்பதாமிடத்திற்கு அதிபதியான சனி பகவானின் மகா தசையில் பாதகங்களை சந்திக்கவேண்டிய நிலை உருவாகுமென்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மூன்றுக்கும் எட்டுக்கும் அதிபதிகளான சுக்கிரன் மற்றும் குரு தசை நடைபெறும் காலத்தில் கண்டத்தை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படுமென்றும், ஒன்பதாம் இடத்திற்கு அதிபதியான செவ்வாய் பகவானின் மகாதசையில் பாதகங்களை சந்திக்கவேண்டிய நிலை உருவாகுமென்றும் ஜோதிட சாஸ்திரம் கூறகிறது.
விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மூன்றுக்கும் எட்டுக்கும் அதிபதிகளான சனி மற்றும் புதன் தசை நடைபெறும் காலத்தில் கண்டத்தை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படுமென்றும், ஒன்பதாம் இடத்திற்கு அதிபதியான சந்திர பகவானின் மகாதசையில் பாதகங்களை சந்திக்கவேண்டிய நிலை உருவாகுமென்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மூன்றுக்கும் எட்டுக்கும் அதிபதிகளான செவ்வாய் மற்றும் புதன் தசை நடை பெறும் காலத்தில் கண்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுமென்றும், ஒன்பதாமிடத்திற்கு அதிபதியான சுக்கிரன் பகவானின் மகாதசையில் பாதகங்களை சந்திக்கவேண்டிய நிலை உருவாகுமென்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
உபய லக்னங்களுக்கு மாரக- பாதகாதிபதிகள்
மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கும் உபய லக்னங்களாகும். இந்த லக்னங் கள் ஒவ்வொன்றுக்கும் ஏழாமிடமும் பதினொன்றாம் இடமும் மாரக ஸ்தானங்களாகும். உபய லக்னங்களுக்கு ஏழாமதிபதியே பாதகாதிபதியும் ஆவார்.
அதன் அடிப்படையில் மிதுன லக்னத் தில் பிறந்தவர்களுக்கு ஏழுக்கும் பதினொன் றுக்கும் அதிபதிகளான குரு மற்றும் செவ்வாய் தசை நடைபெறும் காலத்தில் கண்டத்தை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படுமென்றும், ஏழாமதிபதியான குரு பகவானே இவர்களுக்கு பாதகாதிபதியாகவும் மாறுவதால் குரு மகாதசையில் பாதகங்களை சந்திக்கவேண்டிய நிலை உருவாகுமென்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஏழுக்கும் பதினொன்றுக்கும் அதிபதிகளான குரு மற்றும் சந்திரன் தசை நடைபெறும் காலத்தில் கண்டத்தை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படுமென்றும், ஏழாமதிபதியான குரு பகவானே இவர்களுக்கு பாதகாதிபதியாகவும் மாறுவதால் குரு மகாதசையில் பாதகங்களை சந்திக்கவேண்டிய நிலை உருவாகுமென்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஏழுக்கும் பதினொன்றுக்கும் அதிபதிகளான புதன் மற்றும் சுக்கிரன் தசை நடைபெறும் காலத்தில் கண்டத்தை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படுமென்றும், ஏழாமதிபதியான புதன் பகவானே இவர்களுக்கு பாதகாதிபதி யாகவும் மாறுவதால் புதன் மகாதசையில் பாதகங்களை சந்திக்கவேண்டிய நிலை உருவாகுமென்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஏழுக்கும் பதினொன்றுக்கும் அதிபதிகளான புதன் மற்றும் சனி தசை நடைபெறும் காலத்தில் கண்டத்தை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படுமென்றும், ஏழாமதிபதியான புதன் பகவானே இவர்களுக்கு பாதகாதிபதியாகவும் மாறுவதால் புதன் மகாதசையில் பாதகங் களை சந்திக்கவேண்டிய நிலை உருவாகு மென்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இவற்றுடன் ஒவ்வொரு லக்னத்திற்கும், அந்த லக்னத்திற்கு இரண்டாம் இடத்திற்குரிய வரின் தசை நடைபெறும் காலத்திலும் கண்டங் களை சந்திக்கவேண்டிய நிலை வருமென்ற ஒரு கருத்தும் ஜோதிட உலகில் உண்டு.
இவற்றையெல்லாம் தெரிந்துகொள்வதால் ஒவ்வொரு லக்னத்தினரும் அந்தந்த தசை நடைபெறும் காலத்தில் உடல்நிலையில் எச்சரிக்கையாக இருப்பதுடன் பயணங்களி லும் கவனமாக இருக்கமுடியும்.
மாரக தசை, பாதகாதிபதி தசை என்று வருகின்றபோது மாரகம்தான் நிகழும் என்பதல்ல; அதற்கு நிகரான கண்டங் களும் உண்டாகலாம். பூர்வஜென்ம புண்ணியங்களின் அடிப்படையிலும் ஆயுள்காரகன், ஆயுள் ஸ்தானாதிபதிகளின் நிலைகளினா லும் கண்டங்களிலிருந்து மீண்டுவரலாம் என்றாலும், நாம் ஒவ்வொருவரும் நமக்குரிய மாராகாதிபதிகள் தசை நடைபெறும் காலத்திலும், பாதகாதிபதி தசை நடைபெறும் காலத்திலும் மிகுந்த எச்சரிக்கையாக இருந்திடவேண்டும்.
செல்: 94443 93717