ல்லாத் துறைகளையும்போல மகளிருக்கு ஜோதிடத் துறையிலும் தனி இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. "பிரஹத் ஜாதக' வராகமிஹிரர், "பலதீபிகை' மந்த்ரேஷ்வரர், "ஜாதக பாரிஜாத' ஆசிரியர் வைத்தியநாத சூரியும் தங்கள் பங்கிற்குத் தனியாக ஸ்திரீ ஜாதக அத்தியாயம் என, பெண்களுக்கு சிறப்பான ஜாதகப் பலன்களைக் கூற தனிப் பாடத் தொகுப்பை வழங்கியுள்ளனர்.

ஒரு பெண்மணியின் ஜாதகத்தில் லக்னத்தால், சந்திரனால் உடலமைப்பு, அழகு, குணம், வடிவம் ஆகியவற்றை உணர்ந்துகொள்ளவேண்டும் என்றும், லக்னத்திலிருந்து எட்டாம் வீட்டால் மாங்கல்ய பலத்தையும், ஒன்பதாம் வீடு மற்றும் ஐந்தாம் வீட்டால் குழந்தை பாக்கியத்தையும், ஏழாம் வீட்டால் வாழ்க்கைத் துணையாக வரும் கணவனின் தன்மையையும் உணர்ந்துகொள்ள வேண்டுமென்றும் ஜோதிட சாஸ்திர நூல்கள் சொல்கின்றன.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னம் மற்றும் சந்திரன் அமர்ந்த ராசி பெண் பால் ராசிகளாகிய ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீன ராசிகளாக அமைந்து காணப்பட்டால், பூரணமான பெண்ணின் வடிவை, குணத்தைக்கொண்ட மங்கையாக அவள் திகழ்வாள் என கூறலாம். மேலும் இத்தகைய அமைப்பு சுபகிரகப் பார்வை, சேர்க்கைப் பெற்றுக் காணப்பட்டால் நற்குணமுடைய மங்கையாக, அலங்காரம் நிறைந்தவளாக, அணிகளைப் பூண்டவளாக, மங்களம் நிறைந்த பெண்மணியாகத் திகழ்வாள் எனக் கூறலாம்.

Advertisment

ama

மாறாக பெண்ணின் ஜாதகத்தில் லக்னம் மற்றும் சந்திரன் ஆண்பால் ராசிகளில் ஒன்றில் அமைய (மேஷம், மிதுனம், சிம்மம், தனுசு, கும்பம்) ஆணின் குணநலன்களையும், ஆணின் உடல் அமைப்பையும் பெற்றவளாக விளங்குவாள் என்பதனை அறிந்து கொள்ளலாம். இத்தகைய அமைப்பில் பாவ கிரகத்தின் சேர்க்கை, பார்வை பெற்றுக் காணப்பட்டால் நற்குணமற்ற மங்கையாகத் திகழ்வாள் என்பதனையும் நாம் உணர்ந்துகொள்ளலாம்.

Advertisment

எனவே ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சந்திரனும் லக்னமும் பெண் ராசிகள் அமைந்து, சுப கிரகத்தின் பார்வை, சேர்க்கை பெறுவது சிறப்பு என்பதனை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் எந்த கிரகமும் இல்லாமல், சுபகிரகப் பார்வையும் இல்லையெனில் நற்குணமற்றவன் கணவனாக அமையும் யோகத்தைப் பெற்றவள் எனவும் கூறவேண்டும். இத்தகைய அமைப்பைப் பெற்ற பெண்ணானவள் நல்ல கணவனை அடைய சாவித்திரி விரதம் மேற்கொள்வது அல்லது வேத பண்டிதர் களின் கருத்துகளைக் கேட்டு அதற்கான பரிகாரங்களைச் செய்துகொள்வது சிறப் பாகும்.

லக்னத்திலிருந்து ஏழாம் வீடு, ஏழாம் வீட்டிலமைந்த நவாம்சகம் சுப கிரகத்தின் வீடாக இருக்க, அழகுடையவளும், கணவனுக்கு மிக விருப்பமான பெண்மணி யாகவும் திகழ்வாள் என்பதனை உணர்ந்து கொள்ளவேண்டும். ஏழாம் வீடு சனியின் வீடாக, சனி நவாம்சகம் உதயமாகிட, சற்று வயதானவர் கணவனாக வருவார் என்று கூறலாம். ஏழாம் வீடு செவ்வாயின் வீடாக, செவ்வாயின் நவாம்சகம் உதயமாகிட, கணவன் பெண் விரும்பியாகவும், அதிகம் கோபம் கொண்டவராகவும் திகழ்வார் என்பதனையும் உணரவேண்டும். புதன் வீடு ஏழாம் வீடாக வர, புதனின் நவாம்சகம் அமைந்து காணப்பட்டால், கணவன் நிரம்பக் கற்ற பண்டிதனாக- கூர்மையான அறிவுகொண்டவனாக விளங்குவான் எனக் கூறவேண்டும். குருவின் வீடு ஏழாம் வீடாக அமைய, ஏழாம் வீட்டில் குருவின் நவாம்சகம் உதயமாக, நற்குணம் கொண்டவ னும் புலன்களை வென்றவனுமாகிய ஆண்மகன் கணவனாக அமைவான் என உணரவேண்டும்.

ஏழாம் வீடு சந்திரனின் வீடாக, சந்திரனின் நவாம்சகம் உதயமாக, இலகுவான மனம்கொண்ட ஆண்மகன் கணவனாக வருவான் என்று உணரவேண்டும் சூரியனின் வீடு ஏழாம் வீடாக அமைய, சூரியன் நவாம்சகம் ஏழாம் வீட்டில் உதயமாக, கடினமாக உழைப்பவனும், அதிக தொழில்களைக் கொண்டவனுமாகிய ஆண்மகன் கணவனாக அமைவான்.

பொதுவாகவே ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாம் வீடும், ஏழாம் வீட்டோனும் வலுவாக அமைய, சிறப்பான மணவாழ்வு அமையும். மாறாக வலுவற்றுக் காணப்பட்டால் மணவாழ்வு சிறக்காது என உணர்ந்து, மணவாழ்வு சிறப்புப் பெற பரிகாரங்களைச் செய்துகொள்ள வேண்டி யது அவசியமாகும்.

பெண்ணின் ஜாதகத் தில் சந்திரன், சுக்கிரன் லக்னத்திலிருக்க, ஆச்சரியமடையும் குணம் கொண்டவளும், சந்திரன், புதன் லக்னத் திலிருக்க, நடனம், இசை போன்ற கலைகளை அறிந்தவளும் நற்குண முடையவளும் பணிவு கொண்டவளாகவும் பெண் விளங்குவாள் என உணரவேண்டும்.

பல சுப கிரகங் கள் லக்னத்தில் அமர்ந் திருக்க, பல பணிப் பெண்கள் சூழ, ஆடை, அணிகலன்களுடன், அதிக சுகங்களைப் பெற்ற- செல்வத்தைப் பெற்ற மங்கையாக விளங்குவாள்.

ஒரு பெண்ணின் ஏழாம் வீடு மற்றும் எட்டாம் வீட்டில் பாவ கிரகம் அமர்ந்து களத்திர தோஷத்தை ஏற்படுத்தினாலும், ஒன்பதாம் வீட்டில் ஒரு சுப கிரகம் வலுவோடு அமர்ந்திருந்தால் களத்திர தோஷம் விலகி சிறப்பான மணவாழ்வு அமையுமென ஜோதிட நூல்கள் கூறுகின் றன. அவ்வாறே ஏழாம் வீட்டில் மற்றும் எட்டாம் வீட்டில் பாவ கிரகம் அமர்ந்தாலும், அந்த பாவ கிரகமானது சுப கிரகங்களுடைய ஷட்வர்க்கங்களில் அமர்ந்து காணப்பட் டால், அந்தப் பாவ கிரகங்கள் களத்திர தோஷத்தை உருவாக்குவதில்லை என்பதை யும் உணர்ந்துகொள்ளவேண்டும்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் எட்டாம் வீட்டில் பாவ கிரகம் அமர்ந்தாலும், இரண்டாம் வீட்டில் சுப கிரகம் இருக்க அவள் சுமங்கலியாகவே மரணமடைவாள்.

புதன், குரு, சுக்கிரன், சந்திரன் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் வலுவோடு அமர, லக்னம் ஒற்றைப்படை ராசியில் ஒன்றாக அமைய, அப்பெண் அதிக சாஸ்திரங்களைக் கற்றவளும் உபநிஷத்துகளைக் குறித்தும்கூட விவாதம் செய்யும் ஞானம் பெற்றவளாகவும் விளங்குவாள்.

கற்கடக லக்னமாகவும், லக்னத்தில் சந்திரன் வலுவோடும் அமைய, புதன், குரு ஆகிய இரு கிரகங்களும் சந்திரனுடன் லக்னத்தில் அமர்ந்து காணப்பட் டால் எல்லா கல்வியும் கற்றவளும், புகழ், அழகு கொண்டவளுமாக இருப்பாள்.

அவ்வாறு சுக்கிரன், சந்திரன் லக்னத்தில் அமர்ந்திருக்க அழகு தேவதையைப் போன்ற உடலமைப்பைக்கொண்ட பெண்மணி எனவும், எட்டாம் வீட்டில் சுபகிரகம் இருக்க மன்னனின் மனைவியாக இருப்பாள் எனவும் அறியலாம். அவ்வாறே லக்னத்தில் சுபகிரகச் சேர்க்கை, சுபகிரகப் பார்வை, சுபகிரக நவாம்சம் பெற்றுக் காணப்பட்டால் கற்பொழுக்கம் நிறைந்தவளாகவும், சாதுர்ய குணமுடையவளுமாகவும் விளங்குவாள் என உணரலாம்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் களத்திர தோஷம் மற்றும் விதவா தோஷம் அமைந்து காணப்பட்டால், அவற்றிலிருந்து விடுபட்டு சிறப்பான மணவாழ்வைப் பெறுவதற்கு சில பரிகாரங்களை "பாவகுதூபலம்' என்னும் நூல் கூறுகிறது.

"வைதவ்ய யோக யுக்தாயா: கன்யாயா:

சாந்தி பூர்வகம் வேதோத்த

விதினோத்வாகம் கரரயே சிரம் ஜீவனம்.'

அதாவது ஒரு பெண்ணின் ஜாதகத்தில், இத்தகைய தீமையான- மணவாழ்வை சீரழிக்கும் அமைப்பு காணப்பட்டால், அத்தகைய பெண்மணி பிரதீபா விவாகம் என்னும் பரிகாரத்தைச் செய்துகொள்வதும், அதுபோன்று சாவித்திரி விரதம், பிப்ல விரதம் போன்ற விரதங்களை நியதிகளுக்கு உட்பட்டு மேற்கொள்வதும் சிறப்பான மணவாழ்வைத் தரும் பரிகாரமாகக் கூறப் பட்டுள்ளது.

செல்: 94438 08596