உதாரணம் 1- பெண் ஜாதகம்
சென்ற இதழ் தொடர்ச்சி...
கடந்த இதழில் புத்திர தோஷமுள்ள ஒரு ஆணின் ஜாதகத்தை ஆய்வு செய்தோம். மேலும் மூன்று ஜாதகங்களை இங்கு காண்போம்.
உதாரணம் 1- பெண் ஜாதகம் 18-5-1979, இரவு 12.10 மணிக்குப் பிறந்த இந்தப் பெண் ஜாதகத்தில், லக்னாதிபதி சனி 8-ல் மறைந்து ராகுவுடன் இணைவு.
ஜாதகி பிறந்த திதி சப்தமி. திதி. சூன்யமடைந்த வீடுகள் தனுசு, கடகம். திதி சூன்யமடைந்த கிரகங்கள் குரு, சந்திரன்.
லக்னத்தில் 7-ஆம் அதிபதி சந்திரன். ஆண் ஜாதகத்தைப்போலவே, பெண் ஜாதகத்திலும் லக்னம் திதி சூன்ய வீட்டின் அதிபதி சந்திரன் பிடியில் சுயசாரத்தில் இருப்பதாலும், லக்னாதிபதி சனி 8-ல் ராகுவுடன் மறைந்த தாலும் இப்பிறவியில் இவருக்கு ஆகாமிய கர்மா பயனற்ற தாகவும், சாபமாகவும் இயங்கு கிறது.
2-ல் கேது.
குடும்ப ஸ்தானாதிபதி சனி 8-ல் ராகுவுடன்; குடும்ப வாழ்வைக் கத்தரித்துவிட்டது.
4-ஆம் அதிபதி செவ்வாய் தன் வீட்டில் ஆட்சி பலம்பெற்று, கேதுவின் சாரம் பெற்றதால் மாதவிடாய்ப் பிரச்சினை.
5-ஆம் வீட்டிற்கு சனியின் 10-ஆம் பார்வை சிறப்பில்லை. பூர்வபுண்ணிய ஸ்தானதிபதி மற்றும் 5-ஆம் அதிபதி சுக்கிரன் கேது சாரம் பெற்று, லக்னத்திற்கு 4-ல், தன் வீட்டிற்குப் பின்வீட்டில் மறைந்துவிட்டது. 8-ஆம் அதிபதி சூரியன் சுயசாரம் பெற்று 5-ஆம் இடமான பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் நின்றதால், 5-ஆமிடம் வலிமையிழந்து பிராரப்த கர்மா சாபமாகக் களமிறங்கியுள்ளது.
புத்திரகாரகன் குரு, அலி கிரகமான சனியின் சாரம் பெற்று, திதி சூன்ய வீட்டில் நின்றதால், குழந்தைப்பேறு கேள்விக்குறியாகிவிட்டது. குரு- சனி சம்பந்தம் பொருளாதாரத்தில் உயர்வைத் தந்தாலும், திருமண வாழ்வில் மனநிறைவைத் தரவில்லை.
குருவுக்கு பாதகாதிபதி செவ்வாயின் 4-ஆம் பார்வை பட்டதால், பரிகாரம் பெரிதாகப் பலன் தரவில்லை.
7-ஆம் வீடான களத்திர ஸ்தானத்தில் 3, 12-ஆம் அதிபதி குரு. 12-ஆம் அதிபதி 7-ல் உச்சம் பெற்று, திதி சூன்ய அதிபதியாகியதாலும் கணவன்- மனைவி பிரிவினை ஏற்படக் காரணமாக அமைந்தது. பிரிவினை தரும் 12- ஆம் அதிபதி குரு 7-ல் அமர்ந்தது பிரிவினைக்கு இரட்டிப்புக் காரணமாக அமைந்தது.
9-ஆம் அதிபதி புதன் சுக்கிரன் சாரம் பெற்று, அவரே 6, 9-ஆம் அதிபதியானதால், 2-ஆம் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. 9-ஆம் அதிபதி புதன் முதலில் தொட்டது 8-ஆம் அதிபதி சூரியன் என்பதால், முதல் திருமணம் பிரிவினையைத் தந்தாலும், முன்னோர்களின் சஞ்சித கர்மா இவருக்கு வரம், சாபம் இரண்டையும் சம அளவில் தந்துவிட்டது.
எனினும், சனி, ராகு சேர்க்கை கடுமையான புத்திர தோஷம், பித்ரு தோஷம் என்பது மறுக்கமுடியாத உண்மை.
இந்தத் தம்பதியினர் ஜாதகத்தில் தினம், மாகேந்திரம் மற்றும் நாடிப் பொருத்தம் இல்லை. மாகேந்திரப் பொருத்தமில்லாத ஜாதகத்திற்கு நாடிப் பொருத் தமாவது இருக்கவேண்டும். ராசி மற்றும் ரஜ்ஜுப் பொருத்தம் மட்டும் பார்த்து நடந்த திருமணம். கட்டப் பொருத்தம் பார்த்திருந்தால் இந்தப் பிரிவினை ஏற்பட்டிருக்குமா? முதலில் திருமணம்தான் நடந்திருக்குமா? பத்து வருடங்களாகப் போராடிய தம்பதியினர், இறுதியில் விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். இருவருடைய கர்மவினையும் வாழவிடவில்லை.
உதாரணம் 2- ஆண் ஜாதகம்
29- 6- 1975, இரவு 1.10 மணிக்குப் பிறந்த இந்த ஆண் ஜாதகத்தில், லக்னத்தில் குரு. லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பலம். இவருக்கு இந்த ஜென்ம ஆகாமிய கர்மா வரமாக செயல்படுகிறது.
2- ஆம் அதிபதி செவ்வாய் 2-ல் ஆட்சிபலம் பெற்றதால், குடும்ப ஸ்தானம் சிறப்பாக இருக்கிறது. எனினும், செவ்வாய்- கேது சாரம் பெற்றால் சில மனவருத்தமும் உள்ளது.
ஜாதகர் பிறந்த திதி பஞ்சமி. திதி சூன்யமடைந்த வீடுகள் மிதுனம், கன்னி. திதி சூன்ய கிரகம் புதன்.
3-ஆம் அதிபதி சுக்கிரன் 5-ல் திதி அதிபதி புதனின் சாரத்தில் நிற்கிறது. 3- ல் புதன், கேது. திதி சூன்ய அதிபதி புதன் 3-ல். 4-ல் சூரியன், சனி என சில கிரக இணைவுகள் இவருக்கு அணுக்களில் பல பிரச்சினைகளையும் தந்துவிட்டன.
5-ஆம் அதிபதி சந்திரன் 12-ல் மறைந்து ராகு சாரம் பெற்றதாலும், 8- ஆம் அதிபதி சுக்கிரன் 5-ல் திதி சூன்ய அதிபதி புதனின் சாரம் பெற்றதாலும், பாக்கிய ஸ்தானம் வலிமையிழந்ததாலும், ஆட்சிபலம்பெற்ற குருவின் பரிபூரணப் பார்வையால் பூர்வபுண்ணியம் காலதாமதமாகப் பலன் தரும்.
3-ல் கேது. 9-ல் ராகு. இவரின் மூன்று தலைமுறை முன்னோர் களின் சஞ்சிதக் கர்மா இவருக்கு சாபமாகக் களமிறங்கியுள்ளது. சூரியன், சனி இணைவு இவர்களின் மூன்று தலைமுறை முன்னோர் களுக்கும் முன்னோர்கள் வழிபாடு என்றால் என்னவென்றே தெரியாது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
3-ல் கேது. 9-ல் ராகு. வம்சா வளியாக இவர்களின் குடும்பத்திற்கு குழந்தையின்மை, திருமணத்தடை போன்ற பல பிரச்சினைகள் இவரின் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு இருந்துகொண்டே இருக்கும். 9-ஆம் இடத்திற்கு குரு பார்வை இருப்பதால், இவருக்கு பலன்தரும் பரிகாரங்கள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன.
எனினும், 10-ஆம் இடமான கர்ம ஸ்தானத் திற்கு கர்மகாரகன் சனியின் பார்வையும், காலபுருஷ 5-ஆம் அதிபதி சூரியனின் பார்வையும் இருப்பதால், கர்மம் செய்ய புத்திரன் உண்டு என்பதை உணர்த்துகிறது.
உதாரணம் 2- பெண் ஜாதகம் 16-8-1979. மாலை 4.27 மணிக்குப் பிறந் துள்ளார்.
ஜாதகி பிறந்த திதி தசமி. திதி சூன்ய வீடு விருச்சிகம். அதிபதி செவ்வாய்.
இந்தப் பெண் ஜாதகத்தில் லக்னாதிபதி குரு 8- ல் உச்சம். லக்னாதிபதி 8- ல் மறைந் ததால் லக்னம் வலிமையில்லை. லக்னத்திற்கு 5, 12-ஆம் அதிபதி, திதி சூன்ய அதிபதி செவ்வாயின் 7-ஆம் பார்வை. லக்னம் பலமிழந்ததால் ஆகாமிய கர்மா சாபமாக செயல்படுகிறது.
குடும்ப ஸ்தானாதிபதி சனி 9-ல் ராகுவுடன் இருப்பதால், குடும்ப வாழ்க்கை மனநிறைவைத் தரவில்லை.
5, 12-ஆம் அதிபதி செவ்வாய் திதி சூன்யமடைந்து, 7-ஆம் இடமான மிதுனத் தில் ராகு சாரத்தில். ராகு நின்ற இடம் 9. 7-ல் நின்ற செவ்வாய் 5- ஆம் அதிபதி, 9-ல் நின்ற ராகுவின் நட்சத்திரம் என்பதாலும், 2, 12-ஆம் இடத்திற்கு குரு பார்வை இருந்த தாலும், பெரிய கருத்து வேறுபாட்டைத் தரவில்லை.
விருச்சிகம் திதி சூன்ய வீடு என்பதால், பெண்ணிற்கு மாதவிடாய்க் கோளாறு மற்றும் கருப்பை பாதிப்பு.
புத்திரகாரகன் குரு சூரியனுடன் நெருங்கிய பாகையில் இணைந்து, அஸ்தமன தோஷம் அடைந்ததால் குழந்தை பாக்கியம் இல்லை. இவருக்கு பூர்வ புண்ணியம் சாபத்தைத் தந்துவிட்டது.
கணவன்- மனைவி இருவர் ஜாதகத்திலும் 3-ல் கேது, 9-ல் ராகு. இருவருக்கும் ஒரேமாதிரியான கர்மவினைப் பதிவாக மூன்று தலைமுறை முன்னோர்களின் பாவமும் சேர்ந்துவிட்டன.
சனி + ராகு சேர்க்கை கடுமையான பித்ரு தோஷம், புத்திர தோஷம்.
இவர்களுக்கு தினம், மாகேந்திரம், ரஜ்ஜு, வசியப் பொருத்தமில்லை. இது எந்தப் பொருத்தம் பார்த்து நடந்த கல்யாணம் என்று தெரியவில்லை.
ஆண் ஜாதகத்திலுள்ள குரு பெண் ஜாதகத் திலுள்ள சுக்கிரனைப் பார்ப்பதே இவர்களின் மன ஒற்றுமைக்குக் காரணம். ஆனால், குழந்தையின்மையைப் பெரிதாக நினைக்காமல் ஆதர்ச தம்பதியராக இருக்கிறார்கள். பெண் ணைவிட ஆணுக்கு புத்திர ஸ்தானம் வலிமை யாக இருக்கவேண்டும் என்பதால், இவர்களுக்கு 2020-ல் குழந்தை பாக்கியம் உண்டு என்று கூறப் பட்டுள்ளது.
இன்னாருக்கு இன்னார் என்று பிரபஞ்சம் எழுதிவைத்தபடிதான் வாழ்க்கை அமையும் என்றாலும், திருமணப் பொருத்தம் என்ற பரிகாரத்தின்மூலம் கர்மாவை மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய உபாயத்தை அளித்ததும் பிரபஞ்சம்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் பொருத்தம் சிறப்பாக இருந்தால்தான் புத்திர பாக்கியமும், புத்திரர் களால் செல்வமும் வளமும் உண்டாகும்.
ஒரு ஜாதகத்திலுள்ள குறையைக் கட்டப் பொருத்தம் பார்த்தால் மட்டுமே தெளிவாக உணரமுடியும் என்பதை உணர்த்தவே இந்தக் கட்டுரை. யார் மனதையும் புண்படுத்துவதற்கல்ல.
இங்கே கொடுக்கப்பட்ட நான்கு ஜாதகங் களில் மூன்றில் 3, 9-லுள்ள ராகு- கேதுக்களே வாழ்வியல் பிரச்சினையைத் தந்திருக்கின்றன. இதுபோல் பல ஜாதகங்களில் 9-ஆம் இடம் எனும் பாக்கியஸ்தானமே பல்வேறு வாழ்வியல் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகிறது. பாக்கிய ஸ்தானத்தில் பதிவில் இல்லாத எந்த நிகழ்வும் நடக்க சாத்தியமே இல்லை. 9-ஆம் இடம் முன்னோர்களின் பாவ புண்ணியத் தால் பெறும் பாக்கியத்தைக் குறிக்குமிடம். முன்னோர்கள் புண்ணியம் செய்தால் அதன் புண்ணியப் பலன் வாரிசுகளுக்கு மிகுதியாகும். பாவம் செய்தால் பாவப் பலன் தன் வாரிசுகளுக்கு போய்ச்சேரும். இதைத்தான் பெரியோர்கள், புண்ணியம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை; பாவம் செய்யக்கூடாது என்று கூறியுள்ளனர்.
எனவே, வாழும்போது புண்ணியப் பலன்களைச் சேர்த்து குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்க முயல்வது அனைவரின் கடமையாகும்.
செல்: 98652 20406