டன் இல்லாத வாழ்வு தான் ஒரு மனிதனுக்கு பெருவாழ்வு, சந்தோஷமான வாழ்வு. அந்த கடன் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்றுதான் நாம் ஒவ்வொரு வரும் முயற்சி செய்கின்றோம். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் செலவை சமாளிக்க முடியாத சூழ்நிலையில் கடன் வாங்கி விடுகின்றோம். சில சமயங்களில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் வட்டிக்குமேல் வட்டி குட்டிபோட்டு கடன்சுமை அதிக மாகிவிடும். இந்த கடன் பிரச்சினையில் இருந்து எளிமையாக விடுபடவேண்டும் என்றால் நீங்கள் இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தை சரியான முறையில் பயன்படுத்தவேண்டும். மைத்ரேய முகூர்த்தத்தில் செய்யவேண்டிய எளிமையான சின்ன சின்ன பரிகாரங் களை செய்துவந்தாலே உங்கள் கடன் பிரச்சினை சீக்கிரம் சரியாகிவிடும். இந்த மாதம், அதாவது ஜூலை மாதத்தின் மைத்ரேய முகூர்த்தம் எந்த தேதியில், எந்த நேரத்தில் வரப்போகிறது என்பதை பற்றியும், அந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் என்ன பரிகாரம் செய்வது என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

dd

ஜூலை மாத மைத்ரேய முகூர்த்தம்

11-7-2023 செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணிமுதல் 2.00 மணிவரை மைத்ரேய முகூர்த்தம்.

28-7-2023 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிமுதல் 9.00 மணிவரை மைத்ரேய முகூர்த்தம்.

இந்த மாதத்தில் இருக்கும் மற்ற இரண்டு மைத்ரேய முகூர்த்தத்தில் என்ன பரிகாரம் செய்வது என்பதைத்தொடர்ந்து பார்ப்போம்.

11-7-2023 செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணிமுதல் 2.00 மணிவரை மைத்ரேய முகூர்த்தம் இருக்கிறது. செவ்வாய்க்கிழமை இந்த மைத்ரேய முகூர்த்தம் வந்திருப்பதால் துர்க்கையம்மனை நினைத்து இந்த பரிகாரத்தை செய்யப்போகின்றோம்.

வீட்டிலேயே பூஜை அறையில் துர்க்கை யம்மனை நினைத்து ஒரு விளக்கு ஏற்றி வையுங்கள். மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வையுங்கள்.

அடுத்தபடியாக ஒரு பிரியாணி இலையை எடுத்து அதில் உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினையை எழுதுங்கள். எத்தனை பேருக்கு எவ்வளவு கடன் தொகை கொடுக்க வேண்டுமோ, அதை எல்லாம் தனித்தனியாக ஒவ்வொரு பிரியாணி இலையில் எழுதவேண்டும். உதாரணத்திற்கு 3 பேரிடம் கடன் வாங்கி இருந்தால், மூன்று பிரியாணி இலைகள் இருக்கும். (ரமேஷிடம்

வாங்கிய 1,00,000 ரூபாய் கடனை சீக்கிரம் திருப்பி தர வேண்டும்.) இப்படி எழுதி வைக்கவும்.

பூஜையறையில் துர்க்கையம்மனையும் குலதெய்வத்தையும் மனதார வேண்டிக் கொண்டு எழுதிய பிரியாணி இலைகளை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, கடனையெல்லாம் திருப்பி கொடுத்து விட்டோம். பண கஷ்டமெல்லாம் தீர்ந்துவிட்டது. செல்வ வளம் குவிக்கின் றது என்று நினைத்து அந்த பிரியாணி இலையை அந்த விளக்கில் எரித்து பொசுக்கிவிடுங்கள். சாம்பலை தண்ணீரில் கரைத்து கீழே கொட்டிவிடலாம்.

இந்த பரிகாரத்தை மைத்ரேய முகூர்த்த நேரத்தில் நம்பிக்கையோடு செய்தால் நிச்சயமாக உங்கள் கடன் சுமை ஏதாவது ஒரு ரூபத்தில் அடைவதற்கான வழியை இந்த பிரபஞ்சம் காட்டிக் கொடுக்கும்.

28-7-2023 வெள்ளிக்கிழமை காலை 7 மணிமுதல் 9 மணிவரை இருக்கக் கூடிய மைத்ரேய முகூர்த்தத்தில் என்ன பரிகாரம் செய்வது. வெள்ளிக்கிழமை சேர்ந்து வந்திருப்பதால் இது மகாலட்சுமிக்கு உயரிய மைத்ரேய முகூர்த்தமாக சொல்லப்பட்டுள்ளது.

அதுவும் காலை நேரத்திலேயே வந்திருக்கிறது.

மேலே சொன்னபடி ஒரு மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி, தீபம் ஏற்றி வையுங்கள்.

மகாலட்சுமி தாயை நினைத்துக் கொள்ளுங்கள். இதற்கு கூடவே பாசிப்பருப்பு பாயசத்தை நிவேதனமாக கட்டாயம் வைக்கவேண்டும். செவ்வாய்க்கிழமை வந்திருக்கும் மைத்ரேய முகூர்த்தம் அன்று எப்படி பிரியாணி இலையில் கடன்தொகையை எழுதி விளக்கில் எரித்தீர்களோ, அதே போல மகாலட்சுமியையும் குலதெய்வத் தையும் நினைத்து இந்த வெள்ளிக்கிழமையும் பிரியாணி இலையில் கடன் பிரச்சினையை எழுதி அந்த நெய் ஊற்றி ஏற்றிய தீபச்சுடரில் எரித்துவிடுங்கள்.

செல்: 9842550844.