mercury

புதன், குரு, சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். நிறைய படித்தவராக இருப்பார். அறிவாளியாக இருப்பார். எப்போதும் சந்தோஷமாக வாழ்வார். பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள். ஜாதகர் அரசரைப்போல வாழுவார். எல்லா இடங்களிலும் அவருக்கு மரியாதை இருக்கும்.

Advertisment

புதன், குரு, சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் படிப்பாளியாக இருப்பார். பேச்சுத் திறமை இருக்கும். சிலர் ஆசிரியராக இருப்பார்கள். பலருக்கும் நன்மைகள் செய்வார்கள். சிலர் கோவில் அர்ச்சகர்களாக இருப்பார்கள். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும்.

புதன், குரு, சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், தொழிலுக்காக ஜாதகர் அதிகமாக பயணங்கள் செய்வார். நன்கு படித்தவராக இருப்பார். சிலர் கணக்காளராகவோ ஆடிட்டராகவோ இருப்பார்கள். தொழிலில் வெற்றி கிடைக்கும். பெயர், புகழ் இருக்கும். சகோதரர்களுடன் சுமாரான உறவு இருக்கும். 35 வயதிற்குப் பிறகு சொந்த வீடு அமையும்.

Advertisment

புதன், குரு, சுக்கிரன் 4-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். நல்ல பேச்சாற்றலிருக்கும். சொந்த வீடு, வாகனம் இருக்கும். பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள். அழகான மனைவி அமைவாள். திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

புதன், குரு, சுக்கிரன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், வாரிசுகள் நன்றாக இருப்பார்கள். சிலர் பெரிய அரசு பதவிகளில் இருப்பார்கள். சிலர் மருத்துவர்களாக இருப்பார்கள். பேச்சுத் திறமை இருக்கும். தைரிய குணம் இருக்கும். ஜாதகர் தன் பேச்சை மூலதனமாக வைத்து பணம் சம்பாதிப்பார்.

புதன், குரு, சுக்கிரன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு காலில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சிலர் வெளிநாட்டில் இருப்பார்கள். சிலர் அதிகமாக பயணம் செய்வார்கள். மனைவி அழகாக இருப்பாள். பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள். சொந்த வீடு, வாகனம் இருக்கும்.

புதன், குரு, சுக்கிரன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், திருமணத்திற்குப் பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும். மனைவி அழகாக இருப்பாள். பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள். ஜாதகருக்கு நல்ல பேச்சாற்றல் இருக்கும். எல்லா இடங்களிலும் மதிப்பு இருக்கும்.

புதன், குரு, சுக்கிரன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் உடல்நலம் கெடும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். ருசித்து சாப்பிடுபவராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். பணவரவு இருக்கும். வாரிசுகள் நன்றாக இருப்பார்கள். ஜாதகர் சாந்தமாக பேசுவார். குடும்பத்தை நல்ல முறையில் காப்பாற்றுவார்.

புதன், குரு, சுக்கிரன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கும். அவர் சாஸ்திரங்கள் அறிந்தவராக இருப்பார். பல வேதங்களைக் கற்றவராக இருப்பார். தர்மச் செயல்களைச் செய்வார். நல்ல மனைவி அமைவாள். பூர்வீக சொத்து கிடைக்கும்.

புதன், குரு, சுக்கிரன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நேர்மையானவராக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார். சிலர் கலைத்துறையில் இருப்பார்கள். சிலர் நீதிபதிகளாக இருப்பார்கள். தான்கற்ற தொழிலின்மூலம் ஜாதகர் பலருக்கும் நன்மைகள் செய்வார். சிலர் ஆராய்ச்சியாளராக இருப்பார்கள். சிலர் ஜோதிடர்களாக இருப்பார்கள். 36 வயதிற்குப் பிறகு நல்ல பணவரவு இருக்கும்.

புதன், குரு, சுக்கிரன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல பிள்ளைகள் அமைவார்கள். உடல்நலம் நன்றாக இருக்கும். நல்லபடிப்பு இருக்கும். அதன்மூலம் பெயர், புகழ் கிடைக்கும். நல்ல பணவரவு இருக்கும். சிலர் பொன், வைர வியாபாரிகளாக இருப்பார்கள். சிலர் ஆசிரியர்களாக இருப்பார்கள். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

புதன், குரு, சுக்கிரன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் வெளிநாட்டில் இருப்பார்கள். சிலர் வெளியூரில் தங்கி படிப்பார்கள். பணவரவு நன்றாக இருக்கும். ஏழை வீட்டில் பிறந்தாலும், கோடீஸ்வரராக ஆகிவிடுவார் ஜாதகர். நல்ல பேச்சாற்றல் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

செல்: 98401 11534