பாராளும் நாயகன் பரமனுக்காக மேற்கொள்ளப்படும் அஷ்ட விரதங்களில் மிகவும் சிறப்புவாய்ந்தது பிரதோஷ விரதமாகும்.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறைச் சந்திரனின் 13-ஆவது நாள் திரயோதசி திதி என்றும், இந்தநாளில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரையிலான காலம் பிரதோஷ காலம் என்றும் அனுஷ்டிக்கப்படுகிறது.

திங்கட்கிழமையில் பிரதோஷம் வந்தால் சோமவாரப் பிரதோஷம் என்றும், சனிக்கிழமையில் வரும்பொழுது மகா சனிப் பிரதோஷம் என்றும் வழிபடப்படுகிறது.

புராணரீதியாக, தேவர்கள் மற்றும் அசுரர்கள் கூடி எடுக்கப்பட்ட அமிர்தத்திற்கு முன்பு ஆர்ப்பரித்துத் தோன்றிய ஆலகால விஷத்தை, சிவபெருமான் ஏகாதசியன்று உட்கொண்டு, துவாதசி முழுக்க மயக்கமுற்று, திரயோதசி திதியில், பகல் விடைபெற்று இரவு நடைபயிலும் சந்தியா நேரமான 4.30 மணிமுதல் 6.00 மணிக்குத் தன் மருள் நீங்கி எழுந்து, நிருத்தத் தாண்டவம் என்னும் பிரளய தாண்டவத்தை, தனது ஐந்துவிதமான தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை அம்மையுடன்கூடி ஆடி உலக ஜீவிதத்திற்கெல்லாம் அருள்புரியும் காலமே இந்த பிரதோஷ காலமாகும்.

Advertisment

மாயாதிமயமானது மனம். விடையேறும் ஈசன் நந்தி பகவானின் இரு கொம்புகளுக்கிடை யான வெற்றிடத்தில் நடம்புரிந்து மாயையை அகற்றும் நிகழ்வை நிகழ்த்திக்கொண்டு அமர்ந்துள்ளார். தீர்க்கமுடியாத தோஷங் களைத் தீர்க்கவல்ல காலமே பிரதோஷ காலமாகும்.

dd

மகா சனிப் பிரதோஷம்

Advertisment

ஒரு சனிப் பிரதோஷத்தில் அனுஷ்டிக் கப்படும் விரதத்தால், ஆகம விதிகளுடன் கூடிய 120 பிரதோஷங்களில் கலந்துகொண்ட பலனைப்பெற முடியும் என்கின்ற புராணங்களில்.

அறிவியல், வானவியல், உளவியல்ரீதியான உணர்தலில் மகா சனிப் பிரதோஷம்

சூரிய பாதையின் தளத்தில் புவியிலிருந்து நோக்கும் பட்சத்தில், சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையிலான கோணம் ஒரு அமாவாசையில் 0 டிகிரியில் தொடங்கி, அடுத்த பௌர்ணமியில் 180 டிகிரியை அடைகின்றது. அடுத்த அமாவாசையில் 360 டிகிரியைச் சுற்றி மீண்டும் 0 டிகிரியை அடைகிறது. சந்திரனின் இயக்கம் 30 திதிகளாக அடங்குகின்றது. ஒரு திதிக்கு 12 பாகை அளவைக் குறிக்கும் திரயோதசி திதி 13 மற்றும் 28-ஆவது திதியாகும்.

144 டிகிரியிலிருந்து 156 டிகிரிவரைவுள்ள திதி வளர்பிறைத் திதியாகவும், 324 டிகிரி முதல் 336 டிகிரி வரையிலான திதி தேய்பிறைத் திதியாகவும் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. இதில் மாபெரும் இயக்கங்களான சூரியன் மற்றும் சந்திரனின் இணைவிற்கு முந்தைய திதிகளாக திரயோதசி திதியும், பிரிகின்ற திதியாக திரிதியையும் வகுக்கப்பட்டுள்ளது.

இது பூமியில் வாழும் அத்தனை ஜீவன்களின் மனோநிலையில் ஒரு உன்னதமான மாற்றத்தை ஏற்படுத்தும் சூழலாக உருவாகின்றது என்பது வானியல்ரீதியான ஒப்பீடு ஆகும். எனவே இந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வழிபாடு ஜீவிதத்தில் பெரும் மாற்றத்தை அளிக்கும் என்பதில் ஐயமே இல்லை.

உடலியல் நிகழ்வுகளில் பிரதோஷ காலம்

மனித உடலில் அமைக்கப்பட்டுள்ள கால அட்டவணையில், ஒவ்வொரு வேளையிலும் ஒரு உள்ளுறுப்பு இயக்கத்தினைச் சார்ந்து அமர்ந்துள்ளது.

இந்த நேர அட்டவணையைக் கொண்டு பயணித்தால், மாலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை சிறுநீரகத்தின் செயல்பாடு மிகுந்து காணப்படுகிறது.

உடலில் சேகரிக்கப்பட்டுள்ள அத்தனை விஷத்தன்மைகளையும் வெளியேற்றுகின்ற பொறுப்பினைப் பெற்றுள்ள சிறுநீரகத்தின் இயக்கம் அதீதமாக இருப்பதனால், இந்த காலகட்டத்தில் மனதின் நிலையானது ஒரு அமைதியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும்.

மேலும் எல்லா ஆலயங்களிலும் மாலை 4.00 மணிக்கு மேற்பட்ட நேரத்தில் நடை திறக்கப்படுவதற்கும், மனித உடலின் சக்தி ஓட்டத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்புள்ளது.

உடலில் சேகரிக்கப்பட்டுள்ள விஷங்களை வெளியேற்றும் தன்மையினை இந்த நேரம் பொறுப் பேற்றுள்ளது. இந்த நேரம்தான் விஷமுண்ட நீலகண்டன் மருள் நீங்கி எழும் காலமாகவும் அமைந்துள்ளது.

17-8-2024 அன்று அனுஷ்டிக்கப் படும் பிரதோஷ தினத்தின் கிரக நிலைகள் அதியற்புதம் வாய்ந்தவை யாகும்.

இதுவரை ஏற்றுவந்த பித்ரு மற்றும் மாத்ரு தோஷங்களையும், வாயில்லா ஜீவன்களுக்கு நம்மால் தெரிந்தோ- தெரியாமலோ ஏற்பட்ட தோஷங்களையும் நிவர்த்திசெய்யக் காத்திருக்கும் காலமாகும்.

அன்றைய தினத்தில் ஆன்மகாரகன் மற்றும் தந்தைக்காரகன் சூரியன் ஆட்சி வீடான சிம்மத்திலும், மனோகாரகன் சந்திரன் தனது சொந்தவீடான கடகத்திலும் நிற்பதோடு மட்டுமல்லாமல், கர்மகாரகன் சனியின் பூச நட்சத்திரத்தில் பயணிக்கிறது. அதேபோன்று கர்மகாரகன் சனிபகவான் தனது சொந்த வீடான கும்பத்தில் நிற்பதும் பல கோடி தோஷ நிவர்த்திக்கு வழி வகுக்கும்.

அதோடு மட்டுமல்லாமல் சூரியனின் ஓரையில் பிரதோஷ காலம் அமைவதனால் வழிவழியாக வந்த பிதுர்தோஷம் களையப்படும் காலமாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த பித்ரு தோஷத்தினால் ஏற்பட்டி ருக்கும் நற்காரியத் தடைகள், தாமதத் திருமணம், புத்திர பாக்கியத்தில் தடை, மனரீதியான பதட்டமும் மரண பயமும் நீங்கும் அற்புதமான வழிபாடாக இந்த சனி மகாப் பிரதோஷம் அமைந்துள்ளது.

இந்த பிரதோஷத்திற்கு இளநீர், பால், தயிர், நல்லெண்ணெய், தாமரைப்பூ ஆகியவற்றை வாங்கி ஆலயத்திற்குத் தந்து வழிபட, வழிவழியாக வந்த அத்தனை பிரச்சினைகளும் நீங்கி வாழ்வில் வசந்தம் வரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

செல்: 80563 79988