ஜோதிடமென்பது காலக் கண்ணாடியாக விளங்கக்கூடிய சிறந்த கலையாகும். ஜாதகம், கைரேகை, எண் ஜோதிடம், வாஸ்து சாஸ்திரம், பிரசன்னம், சாமுத்திரிகா லட்சணம் என பலவகையாகப் பிரிக்கப்படும் ஜோதிடக் கலையில், தற்போது எண் ஜோதிடமானது மக்களிடையே பரவலாகப் பேசப்படும் கலையாக விளங்குகிறது. எண் ஜோதிடத்தைக் கொண்டு நமது பெயர் நம் ஜாதகத்திற்கு சாதகமாக இருக்கிறதா என்றும், தொழில் தொடங்கினால் அதற்கு வைக்கும் பெயர் ஏற்றதாக இருக்குமா என்றும் அறிந்து கொள்ளமுடியும்.
தற்போது சிலர் "பெயர்தான் எல்லாம்; பெயர் மாற்றினால் உங்கள் வாழ்க்கையே மாறிவிடும்' என்று பொதுத்தளத்தில் பேசுகின்றனர். ஆனால் நவகிரகங்கள்தான் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. நமக்கு நற்பலன் ஏற்பட வேண்டுமென்றால் நற்பலன் உண்டாகும். அதுபோல கெடுதியான காலங்களில் கெடுதிகள்தான் ஏற்படும். பரிகாரங்கள் செய்வதன் மூலமாகவும், எண்ஜோதிடத்தின் மூலமாகவும் கெடுதிகளி-ருந்து ஓரளவு தப்பிக்கலாமே தவிர முழுமையாகத் தப்பித்துவிட முடியாது. பெயர் மாற்றமென்பது சற்று சாதகமான பலனை உண்டாக்கும். அப்படி அமைக்கின்றபோது பகை எண்களான 4, 7, 8-ல் பெயர் வைப்பது நல்லதல்ல.
பிறந்த தேதிக்கு ஏற்றாற்போல பெயர் வைப்பது எப்படி?
உதாரணமாக, ஒருவர் பிறந்த தேதியானது 2-9-2021 என்று வைத்துக் கொள்வோம். இதில் பிறவி எண் 2, விதி எண் (மொத்த கூட்டுத்தொகை) 7.
மேற்கூறியவாறு பிறவி எண், விதி எண் இரண்டிற்கும் நட்பு எண்ணில் பெயர் வைத்தால் மிகச்சிறப்பாக இருக்கும். குறிப்பாக 2, 7-க்கு 1 அல்லது 6-ல் பெயர் வைத்தால் மிகச்சிறப்பாக இருக்கும். இந்தியாவில் தந்தை யின் பெயரை இன்ஷியலாகப் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. பெயர் வைக்கும் போது இனிஷியல் இல்லாமல் பார்க்கும்போதும் நட்பு எண்ணில் இருக்கவேண்டும். இன்ஷியலுடன் பார்க்கும் போதும் நட்பு எண்ணில் இருக்கவேண்டும்.
உதாரணமாக, ஒரு குழந்தை பிறவி எண் 1, விதி எண் 3-ல் பிறந்திருக்கிறதென வைத்துக்கொள்வோம்.
அப்படியிருக்கும்போது 1, 3-ல் பெயர் வைத்தால் நல்லது. உதாரணமாக, தந்தை பெயர் பாலாஜி (இஆகஆஓஒ) என வைத்துக்கொண்டால் "இ' இன்ஷியலாக வரும்.
B. R A V I
2 2 1 6 1
இதன் கூட்டுத்தொகை 12 வருகிறது. இதில் இன்ஷியல் இல்லாமல் பார்க்குபோது 1-ல் வருவதும், இன்ஷியலுடன் பார்க்கும்போது 3 வருவதும் மிகச்சிறப்பாகும்.