"உனக்கு நான்; எனக்கு நீ பொருத்தமான ஜோடி!,' "நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க,' "என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்' என்று, திருமணத்திற்கு நல்ல பொருத்தமுள்ளதா- எந்த ராசிக்கு எந்த ராசி ஜாதகர் பொருத்தமாக இருப்பார்- ஒரு ராசிக் காரரின் நடவடிக்கை எப்படிப்பட்டது- காதலில், காமத்தில் எப்படிப்பட்டவர்- இருவருக்கும் சீர்மிகு (ஐடியல் மேச்) பொருத்தமுள்ளதா என அலசி ஆராய் வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். இருவர் இயல்புகளையும் சீர்தூக்கி இணைப்பது இனிய இல்லறத்திற்கு வழிவகுக்குமல்லவா?
மேஷம்
மேஷ ஜாதகர் காதலில் தீவிரமானவர். மிகவும் நேர்மையானவர். உண்மையானவர் மற்றும் எதிர்பாலரை மிகவும் கவர்ந்துவிடும் பாசமிக்கவர். சுதந்திரமானவர். காதலில் சாகசங்கள் புரிவதே இவர்களின் அடிப்படை குணமாகும். இவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கவேண்டுமெனில் பிறரை அடக்கி யாள நினைக்கும் குணத்தைக் குறைத்துக் கொள்ளவேண்டும். பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். இவர்கள் தங்கள் காதலை மாற்றாமல் பழைய காதலைத் தொடர்வதே நல்லது.
கணவர்கள்
மேஷக் கணவர்கள் மிகவும் விரும்பத் தக்க துணைவர்கள். பொதுவாக இவர்கள் அழகிய, அறிவுள்ள நல்ல துணைவரையே நாடுவர்; தேர்ந்தெடுப்பர். இவர்கள் தயாள குணமும், நல்ல செலவாளியாகவும் இருப்பர்.
மனைவிகள்
மேஷ மனைவிகள் புத்திசாலித்தனம், நகைச் சுவையுணர்வு உடைய வர்கள். சுதந்திரமானவர்கள். கர்வம் மிக்கவர்கள். எப் போதும் தங்கள் தோற்றத்தைப் பற்றியும், குடும்பத்தைப் பற்றியும் பெருமை யடித்துக்கொள்பவர்கள். ஆனால் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். தங்கள் கணவர் தங்களை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டுமென எதிர்பார்ப் பவர்கள். தற்பெருமை மிக்கவர்கள். மற்றவர்களை நேருக்கு நேராகப் புகழ விரும்பமாட்டார்கள். பொதுவாக, மேஷப் பெண்கள் தங்கள் கணவனை அடக்கியாள்வதிலும், ஆட்டிப்படைப்ப திலும் வல்லவர்கள். போராட்ட குணமுடையவர்கள். சிருங்கார ரசம் அதிகமுள்ளவர்கள். இவர்களைப் பொறுமையாக தாஜா செய்வதன் மூலமாகவே அடக்கியாளமுடியும். சுருக்கமாக, நெருப்புத் தன்மையுடைய வர்கள் இந்த மேஷப் பெண்கள்.
சீர்மிகு பொருத்தம்
மேஷ ராசி ஜாதகர்கள் திருமணம் செய்துகொள்ள மிகவும் பொருத்தமானவர்கள் சிம்மத்தார், துலாம் மற்றும் விருச்சிகத்தார் ஆவர். ஆனால், இவர்கள் ஆடம்பரம் மற்றும் வீண் செலவுகளைக் குறைத்துக்கொண்டு சேமிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.
ரிஷபம்
அசுரகுரு சுக்கிரன் அதிபதியாவதால் காதல் விவகாரங்கள், இசை மற்றும் கலையார்வம், சினிமா, நாடக ஆர்வம் அதிகமிருக்கும். எவ்வளவு எதிர்ப்புகளும் தடங்கல்களும் வந்தாலும் தங்கள் காதலை விட்டுக்கொடுக்கமாட்டார்கள். காதலில் நேர்மையைக் கடைப்பிடிப்பவர்கள். காம உணர்வுமிக்கவர்கள். இவர்களுக்கு சுய கட்டுப்பாடு அவசியம். இவர்கள் உணர்ச்சிவசப்பட்டு காதலிக்க மாட்டார்கள். வாழ்க்கையில் தன் துணையைத் தேர்ந்தெடுக்க, நீண்ட நெடுங்காலம் எடுத்துக்கொள்வார்கள். காதலில் உண்மை யானவர்கள். ஆழ்ந்த மன உணர்ச்சி யுடையவர்கள். காதலில் பிணக்குகளை விரும்பாதவர்கள். குழப்பங்களை வெறுப்பவர்கள். இனிய உபசரிப்பை விரும்பி ஏற்பர். ஆடம்பரத்தை அதிகம் விரும்புவர். எப்போதும் தங்களின் சமூக, பொருளாதாரக் கடமைகளை மறவாதவர்கள். இவர்கள் தன் காதல் மனைவிக்கு- கணவனுக்கு விசுவாசமானவர்களாக நடந்துகொண்டால் மட்டுமே இவர்களது மணவாழ்க்கை சிறப்பானதாக இருக்கும்.. இவர்களுக்கிடையே விவாகரத்து என்பது அரிதானதாகும். இவர்கள் ஈருடல் ஓருயிராக, எவ்வித துன்பங்கள் எதிர்வரினும் தாங்கிக்கொண்டு, இணைபிரியாமல் இன்பவாழ்வு வாழ்வர். தன் துணைக்கு நல்ல இருப்பிடமளித்து, நன்றாக கவனித்து, எந்த சூழ்நிலையிலும் கைவிடாமல் பாதுகாத்துக்கொள்வார்கள்.
கணவர்கள்
மனைவியை தெய்வமாக நினைத் துத் தொழுபவர்கள். போற்றுபவர்கள். நம்பகத்தன்மை உடையவர்கள். உண்மை யானவர்கள் மற்றும் தாராள குணமுடைய வர்கள். எப்போதும் தங்கள் மனைவிக்கும், குடும்பத்திற்கும் தேவையானவற்றைத் தவறாது அளித்து மகிழ்ப்பவர்கள். தன் மனைவி நேர்த்தியாக உடையணிவதையும், கவர்ச்சிகரமாகவும், மலர்ந்த முகத்துடனும் இருப்பதையே விரும்புவார்கள். தங்கள் துணையுடன் விசாலமான காதலுடனும், பாசத்துடனும் வாழ்வார்கள். மண வாழ்க்கையில் தங்கள் துணைக்கு முழு ஒத்துழைப்பையும் நல்கும் நல்ல கணவர்கள் இவர்கள் என்றால் மிகையாகாது.
மனைவிகள்
இவர்கள் நல்ல மனைவிகள். நல்ல தாயுள்ளம்கொண்ட தாய்மார்கள். தனிமை விரும்பிகள் மற்றும் அமைதியானவர்கள். தங்கள் கணவர் தன் மேற்கொண்டுள்ள அன்பையும், காதலையும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பவர்கள். தங்கள் காதலை ரகசியமாக வைத்திருக்க மாட்டார்கள். மிகவும் வெளிப்படையானவர்கள். மகிழ்ச்சிகரமான மண வாழ்க்கையையே வாழவிரும்புபவர்கள். தன்வீட்டை நன்றாகப் பராமரிப்பதில் ஆர்வமுள்ளவர்கள். தன் குழந்தைகளுக்கு, நல்ல தாயாக வாழ நினைப்பவர்கள். கடமையுணர்வுள்ளவர்கள். அமைதியை விரும்பும், தூய உள்ளமுடைய ரிஷபப் பெண்கள், வாழ்க்கைக்குகந்த துணையாக தங்களைமாற்றிக் கொள்வர். காதல் மிக்கவர்கள். ஆனாலும் அவர்களுடைய உணர்வுகள் சுலபமாக காயமடைவதில்லை. எனவே, அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள். நல்லவிதமாக வளர்க்கப்பட்ட, புத்திசாலித்தனம் மிக்க குழந்தைகளால் மகிழ்ச்சி, ஆதாயம், மதிப்பு, மரியாதை ஆகியவை இவர்களுக்கு வந்துசேர்வது உறுதி.
சீர்மிகு பொருத்தம்
கன்னி, மகரம், கடகம், விருச்சிகம் மற்றும் மீனத்தில் பிறந்தவர்கள் சீர்மிகு பொருத்தம் உடையவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு இடையேயான பொருத்தம், நல்ல துணையாக, ஒத்த கருத்துடையவர்களாக, சிறப்பான, அமைதியான, மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமைந்து, இருவருக்கும் என்ன பொருத்தம் இப்பொருத்தம் என அமைந்துவிடுகிறது.
மிதுனம்
மிதுனம் ஓர் உபயராசி. எனவே இவர்கள் மாறுபட்ட, பலவகைப்பட்ட சுவாரஸ்யமான- சுவையையுடைய வாழ்கையையே விரும்புவர். வெகுவிரைவில் மற்றவர்களிடம் நட்பாகி, அடிக்கடி நண்பர்களிடம் குற்றம் கண்டுபிடித்து, நல்ல நட்பை இழந்துவிடுவார். எனவே, எப்போதும், எந்த நிலையிலும், எவ்வளவு முயன்றாலும் அவர்களுக்கு திருப்தியளிக்கக்கூடிய நட்பை இவர்கள் பெறுவது அரிதாகும். இவர்களைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமாகும். இவர்களுடைய அதிக சந்தோஷத்திற்கு மூலாதாரமே இவர்கள் காதலில் அதிக சாகசங்கள் செய்வதில்தான் இருக்கிறது. இவர்கள் அன்பு, காதல் அனைத்திலும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதைவிட, மனதைக் கட்டுப்படுத்துவதே சாலச்சிறந் தது. இவர்கள் கணக்குப் பார்த்துக் காதலிக் கும் சிடுமூஞ்சிகள் ஆவர். காதலிப் பதுபோல் நடிப்பதில் வல்லவர்கள். இவர்களின் புத்திசாலித்தனத்திற்கு சமமான துணையமைந்தால், இவர்களின் மணவாழ்க்கை மிக மகிழ்ச்சிகரமானதாக அமையும். இல்லையெனில் வாழ்க்கையில் பிரிவினை தொடரலாம்.
கணவர்கள்
"ஆமாம் சாமி' போடக்கூடிய மனைவியையே விரும்புவார்கள். இவர்களின் துணைவியர், வீட்டில் அமைதியும், இசைவும், மகிழ்ச்சியும் நீடித்துநிலைக்க வேண்டுமெனில், இவர்களின் காதல் நடிப்பை பெரிதுபடுத்தக்கூடாது. இவர்கள் மனைவியோடு காதல் செய்யும்போது அதிக செலவும், நஷ்டமும் ஏற்படுமாயின் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்கள். சிலருக்கு அடங்காப்பிடாரி மனைவியமைந்து, அவள் தரும் நிரந்தரத் தொல்லைகளை சமாளிக்கமுடியாமல் வீட்டைவிட்டு ஓடிக்கூடவிடுவார்கள்.
மனைவிகள்
மிதுனப் பெண்கள் மிகவும் புத்திசாலிகள். இவர்கள் மனதளவில் ஒத்துப்போகிற துணையையே விரும்புவார்களேயன்றி, வீட்டைப் பாதுகாப்பவர்களை விரும்பமாட்டார்கள். திருமணத்திற்குப் பிறகும், இவர்கள் தங்கள் வெளிவட்டாரத் தொடர்புகளை, நிகழ்வுகளை விட்டுவிடமாட்டார்கள். இவர்களின் விருப்பத்திற்கு மாறாக, கணவர் நடப்பதையோ, கேள்வி கேட்பதையோ பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்; விரும்பவும் மாட்டார்கள். சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கு, இவர்கள் சாதுர்யமாக நடந்து கொள்ளவேண்டும். இவர்களை எளிதில் ஏமாற்றிவிடமுடியாது. இவர்கள் சேவை மனப் பான்மையுடையவர்கள். அதன்காரணமாக கணவனை உதாசீனப்படுத்துவர். அல்லது வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருக்க விரும்புவர். மிகவும் சுத்தத்தை விரும்பும் இவர்கள் தங்கள் வீட்டை சுத்தமாகவும், அழகாகவும் பாராமரிப்பார்கள்.
சீர்மிகு பொருத்தம்
மிதுனத்தாருக்கு மிக்க பொருத்த முடையர்கள் துலாம், கும்பம், மேஷம் மற்றும் சிம்மத்தார் ஆவார்கள். இவ்விணைவுகள் சிறந்த பொருத்தமாகி, தம்பதியர் அனுகூல மான, மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கையைப் பெறுவர்.
கடகம்
அன்பு செலுத்துவதில் மிக விசுவாச முள்ள, கபடற்ற, உண்மையுள்ள, மிக்க பிரியமுள்ள கடகத்தார் மாறுதலற்ற, ஊக்கமளிக்காத, சுவையற்ற, வெறுப்பளிக்கும், சோர்வுண்டாக்கும், காதலுணர்வு மேம்படாத வாழ்க்கையுடையவர்கள். அவர்கள் தங்கள் துணையிடம், தங்கள் மனதிலுள்ள விசுவாசத்தை, உண்மையை, பிரியத்தை வெளிப்படையாக உணர்த்தும் திறமை குறைந்தவர்கள். இவர்கள் நேர்மையானவர்கள். உண்மையானவர்கள். பிடிவாதமானவர்கள். கடின நெஞ்சமுடையவர்கள். எதையும் தெளிந்து செயல்படுத்தக்கூடியவர்கள். ஆயினும், சலனபுத்தியுள்ள, அடிக்கடி மாறக் கூடிய மனதுடையவர்கள். இவர்கள் தன் குடும்பம், தன் வீடு என சந்தோஷமான வாழ்க்கை வாழ, பாசமழை பொழிந்து, நிரந்தர இன்பமுடன் வாழ்பவர்கள். பொதுவாக இவர்கள் சிறந்த வீட்டுப் பறவைகள். ஆனால், காமமும் சிருங்காரமும் ஒருங்கே அமைந்த குணமுடையவர்கள். தன் தேவைகளைத் தியாகம்செய்து, தன் மக்களுக்கு நற்கல்வி தந்து, அனைத்து சுகங்களையும் அளிக்கவல்லவர்கள். இவரின் குழந்தைகளும் இவருக்கு நன்றியுள்ளவர்க ளாக, கீழ்ப்படிதலுள்ளவர்களாகவும், கடமையுணர்வார்களாகவும் இருப்பர். மேலும், உண்மையுள்ளவர்கள். அமைதியான, குளிர்ச்சியான மனதையுடையவர்களாகவும், கூர்மதி உடையவர்களாகவும், கதாநாயகர் களாகவும் விளங்குவர்.
கணவர்கள்
கடகத்துக் கணவர்கள் தங்கள் மனைவியை தேவதையாகவும், தெய்வ மாகவும் போற்றுபவர்கள். இவர்கள் குடும்பப்பாங்கான பெண்களையே விரும்புபவர். எல்லாவழிகளிலும், தன் மனைவியை மனமகிழ்ச்சியுடன் வைத்திருப்பர். அன்பைப் பொழிவர். ஆயினும், இவர்கள் தவிர்க்கவேண்டிய தீய பழக்கங்கள் என்னவெனில், திருப்தியற்ற மனநிலையில், ஏதாவதொரு வழியில் மனைவியை விமர்சிப்பதும், குறைகூறுவதும், தேவையற்ற முறையில் அன்றாட வீட்டு விவகாரங்களில் தலையிட்டு சந்தோஷமற்ற சூழ்நிலைகளை உருவாக்குவதுமாகும்.
மனைவிகள்
கடக மனைவிகள் தங்கள் கணவனைப் பூஜிப்பவர்கள். விசுவாசமிக்கவர்கள். பாசமிக்கவர்கள். கடமையுணர்வுள்ளவர்கள். நோய்வாய்பட்டவர்கள். இன்முகமுடைய வர்கள். கருணையுள்ளம் கொண்டவர்கள். தன் மக்களுக்கு பாசமிக்க தாயாக விளங்குவர். குடும்பச் சூழலைத் தக்கபடி அமைத்துக்கொள்ளும் இவர்கள் சில நேரங்களில் தங்கள் மனநிலைக்கேற்றபடி மாற்றிக்கொள்வார்கள். தன்னை நன்கு கவனித்துக்கொள்ளும் கணவரின் செயல்பாடுகளில் திருப்தியடைவார்கள். அவருக்கு பக்தி மார்க்கத்திலும் உதவிகரமாக இருப்பர். இவர்கள் ஒதுக்கப்படும்போதும், அலட்சியப்படுத்தப்படும்போதும், எதையும் இவர்களைக் கலக்காமல் முடிவெடுக்கும்போதும் மனமுடைந்து போவார்கள். இதன்காரணமாக அவர்கள் திடமான மனதுடன், தீர்மானமாக ஒத்துழைப்பு அளிக்கமாட்டார்கள். அதிலிருந்து மாறக்கூடிய மனதுடையவர்கள் என்றாலும், இவர்களின் கணவர், இவர்கள் தாங்கமுடியாத அளவுக்கு வன்மையாக செயல்பட்டால் மாறமாட்டார்கள். இவர்கள் பார்ப்பதற்கு திறந்த மனதுடையவர்கள்போல், உண்மையானவர்கள்போல் தோற்றமளித்தாலும் உண்மையில், அனைத்து உண்மைகளையும் வெளியிடாமல் மறைத்துவிடக்கூடிய குணமுடையவர்கள். காம உணர்வும், கற்பனை வளமும் மிக்கவர்கள். சுலபமாக பிறரை வசீகரிக்கக்கூடியவர்கள். நேரத்துக்குத் தக்க வளைந்துகொடுத்து நடப்பவர்கள்.
சீர்மிகு பொருத்தம்
கடகத்தார் கடகம், விருச்சிகம் அல்லது மீனத்தாரை மணந்து மகிழ்வது உசித மாகும்.
சிம்மம்
சிம்மத்தார் சீர்மிகு காதலர்கள் ஆவர். காமத்தில் நெருப்பு. உண்மையும் விசுவாசமிக்க காதலரானாலும் காதலைக் கடைவிரிக்க விரும்பமாட்டார்கள். கமுக்கமாகக் காதலிப்பர். ஏனெனில், பொது இடங்களில் அவ்வாறு செய்வது கௌரவக் குறைவென்று எண்ணுபவர்கள். எதிர் பாலினத்தின்மீது மிகவும் பாசமிக்கவர்கள். பெண்கள் கூட்டத்தின் மத்தியிலேயே இருப்பதை விரும்புபவர். எனவே, இவரை மணக்கும் பெண்கள் பொறாமை கொள்ளக்கூடாது. இவரை சரியாகப் புரிந்துகொண்டு, ஒருவருக்கொருவர் சந்தேகங்கொள்ளக் கூடாது. ஏழாமிடம் பலமற்றிருந்தால், இருவருக்கிடையேயும் பிரிவினை நிகழ்வது உறுதி. இவர்கள் தங்கள் குழந்தைகள்மீது மிகவும் அன்பு செலுத்துவர். அவர்களைப்பற்றி மிகவும் பெருமை கொள்வர். இவர்களின் குழந்தைகள் சுதந்திர நோக்குடையவர்கள். எனவே, சிம்மப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சார்ந்து வாழாவிட்டால் குழந்தைகள் நம்பிக்கையிழந்து விடுவார் கள். அவர்களின் குழந்தைகளும் சிம்மத் தில் பிறந்திருந்தால் சிறந்த அமைப்பாளர் களாகவும், கர்வமுள்ளவர்களாகவும், நற்குணமுள்ளவர்களாகவும், பிறருக்கு உதவுபவராகவும், பிறரிடம் அன்புடைய வராகவும், தைரியசாலிகளாகவும், நம்பிக்கை மிக்கவர்களாகவும், புகழ் பெற்றவர்களாகவும் விளங்குவார்கள். இங்கு, இந்த ராசியில் பிறந்தால் மட்டுமே இக்குணங் கள் இருக்குமென அர்த்தங்கொள்ளக் கூடாது. மற்ற ராசிகளில் பிறந்தவர்கள் அந்த ராசிக்குரிய குணங்களோடு இருப் பார்கள்.
கணவர்கள்
சிம்மக் கணவர்கள் உணர்ச்சிவசப் பட்ட மனநிலையுடையவர்கள். தங்கள் மனைவிமேல் உச்ச காதலையுடையவர்கள். ஆனால், மற்ற பெண்களுக்கு நடுவே, கவர்ச்சி மையமாகவும் திகழ்வார்கள். சிம்மக் கணவர்களை, அவர்களது மனைவிமார்கள் நன்றாகப் புரிந்துகொண்டு, அனுசரித்து வாழ்ந்தால், கணவனால் மிகவும் விரும்பப்படுபவளாகவும், அன்பு செலுத்தப்படுபவளாகவும், அவனால் மெச்சப்படுபவளாகவும் இருப்பாள். மேலும், அம்மனைவி வியக்கத்தக்க வகையில் குடும்பச் சூழலுக்கு ஒத்தவளாக, ஜாடிக்கேத்த மூடிபோல் அமைவாள். அத்தகைய மனைவியையோ, தன் குடும்பத்தாரையோ பிறர் பழிப்பதை- அவமதிப்பதை ஒருபோதும் சிம்மக் கணவன் அனுமதிக்கமாட்டான். பொறுக்கமாட்டான். தீரமான சிம்மக் கணவர்கள் எப்போதும் தங்கள் சமூக பொறுப்பையும் உணர்ந்தவர்களாகவே இருப்பர். இவர்கள் காமம் மிக்கவர்கள். காதல் வயப்பட்டவர்கள். மூர்க்க சுபாவமும் உடையவர்கள். எனவே, சிம்மத்தில் பிறந்தவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு தனது இல்லத்தில் மகிழ்ச்சிகரமான, அதிர்ஷ்டகரமான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ள, அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது.
மனைவிகள்
சிம்மப் பெண்கள் பேராவலுடைய, லட்சியவாதிகள் ஆவர். சீரியமுறையில் தன் வீட்டைப் பேணுபவர்கள். வெற்றிகரமான சமூக சேவகிகள். மொத்ததில் அனைவரிடத்திலும் தங்கள் தனி முத்திரையை, தனக்கு அனுகூலமாகப் பதித்துவிடுபவர்கள். எப்போதும் நிலைத்திருக்கும் அன்புள்ளம் கொண்டவர்களாதலால், மிகவும் பிரபலமான நிலைக்கு உயர்ந்து, சமூகத்தில் கட்டளையிடும் அளவுக்கு, தலைமைப் பொறுப்பேற்க வல்லவர்கள். சிம்மப் பெண், தன் சிம்மத்தில் பிறந்த கணவன், எதிர்பாலினர் மத்தியில் புகழ்பெறுவதைப் பற்றியும், பொது நலவாதியாக இருப்பதைப் பற்றியும், தான் செய்த உதவிகளுக்கு பிரதிபலனை எதிர்பார்க்காதவராக இருப்பதைப் பற்றியும் சந்தேகங்கொள்வது தேவையற்ற ஒன்றா கும். சிம்மப் பெண்கள் இனிய, முன்னேற்றமிக்க, அமைதியான வாழ்க்கைவாழ, தங்கள் கணவனின் நற்குணத்தையும், பாசத்தையும், கருணையையும், உண்மைக் காதலையும் மெச்சுவதோடு, தங்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது அவசியமாகிறது. இவர்கள் அன்பால் அடக்கியாண்டு, தன்னைக் கட்டுக்குள் வைத்திருக்கும் முரட்டுக் கணவனையே விரும்புவர். காமம்மிக்க இப்பெண்களுக்கு, சுயக்கட்டுப்பாடு தேவை. தன் கருத்தே பெரிதென நினைக்கும் இவர்கள் இறுமாப்புடையவர்கள். தன்வீட்டில், தான் வைத்ததே சட்டம், தன் வார்த்தைகளே பெரிதென அனைவரும் தன் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டுமென எதிர்பார்ப்பவர்கள். பொதுவாக, சிம்மக் கணவன், சிம்மப் பெண்களை மணப்பது சிக்கலை ஏற்படுத்தும். ஏனெனில், உடை விஷயத்திலும், ஆபரணங் கள் விஷயத்திலும் இவர்களை ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாது. அதன்காரணமாக இவர்கள் வாழ்க்கை நரகமாகலாம். அவள் திருப்தியடைந்தால் மட்டுமே வீடு சொர்க்கமாகும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, ஒற்றுமையாய் இருப்பதன்மூலமே இவர்கள் வாழ்க்கை வளம்பெறும்.
சீர்மிகு பொருத்தம்
சிம்மம் ஒரு நெருப்பு ராசி. எனவே, நெருப்பு ராசிகளான மேஷம், தனுசு ராசிகள் சீர்மிகு பொருத்தமுடையவையாகும். காற்று ராசிகளான மிதுனம், துலாம் மற்றும் கும்பமும் அதிகமாக ஒத்துப் போகக் கூடியவையாகும். மேஷம், தனுசு ஆகிய ராசிகள் கண்டிப்பாக முழு சந்தோஷத்தையும், இருவரிடையே இசைந்த வாழ்க்கையையும் தரக்கூடியவையாகும். கும்பத்தில் பிறந்தவர்கள், சிம்மத்தாரை தெய்வமாக மதிப்பவர்கள். அவர்களுக்காக அனைத்தையும் அர்ப்பணிப்பவர்களாவர். துலாத்தில் பிறந்தவர்கள், தோழமையுணர்வு உடையவர்கள், கஷ்டங்களைத் தவிர்ப்ப வர்கள், எந்த விலைகொடுத்தேனும் அமைதியை வாங்கிவிடுபவர்கள் ஆவர். மிதுனத்தில் பிறந்தவர்கள் இணை பிரியாதவர்கள்; உண்மையானவர்கள்; அன்பைப் பொழிபவர்கள்; சாதுர்யம் மிக்கவர்கள். இவர்கள் எப்போதுமே தன் துணையை மகிழ்ச்சிகரமாக வைத்துக்கொள்பவர்கள். மேஷக் கணவனால் மட்டுமே இவர்களை அடக்கியாளமுடியும். அதன்காரணமாக, இப்பெணகள் தங்கள் எல்லையுணர்ந்து நடப்பர். இவர்களால்தன் அதிகாரத்தை கணவன்மேல் செலுத்தமுடியாது. அதன்காரணமாக குடும்ப ஒற்றுமை மற்றும் முன்னேற்றம் உயர்ந்து, நல்வாழ்க்கையும் அமைந்துவிடுவதால், மேஷக் கணவனை மணக்கும் சிம்மப் பெண்கள் அதிர்ஷ்டசாலிகளென்று சொல்லலாம்.
தொடர்ச்சிஅடுத்த இதழில்...
செல்: 97891 01742