கன்னி
கன்னியில் பிறந்தவர்கள் அதிபுத்திசாலிகள். தன் துணையைத் தேடிக்கொள்வதில் மிகவும் கஷ்டப்படுவார்கள். ஏனெனில், இவர்கள் மகிழ்ச்சியை எதிர்பார்ப்பதைவிட, அறிவுப்பூர்வமான துணையை எதிர்நோக்கு வதேயாகும். இவர்கள் சந்தோஷத்தையும், காமத்தையும்விட அறிவுக்கு முக்கியத் துவமளிக்கும் அறிவுஜீவிகளாவர். சில நேரங்களில், இவர்களது எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை அளிக்கக்கூடும். மிகவும் கூச்ச சுபாவமுள்ள இவர்கள், காதலைக் கையாள்வதில் வல்லவர்கள் அல்ல. பொறுமையுள்ள இவர்களுக்கு தங்கள் துணைமீது குற்றம் கண்டுபிடிக்கும் குணம் இயற்கையாகவே அமைந்துவிடுகிறது. எனவே, பிறரோடு சம்பாஷிக்கும்போது அவர்களை சாந்தப்படுத்தும் விதத்தில், தாஜா செய்ய முற்படக்கூடாது. மென்மையான உணர்ச்சிகளோடும் இவர்கள் இருக்கக்கூடாது. இவர்களால் காதலிக்கப்படுபவர்கள், அழகில்லாதவர்களாக இருந்தாலும், அறிவில்லாதவர்களாக இருந்தாலும், எல்லாம் இருப்பதாக பாராட்டப்படவேண்டும்; மெச்சப்படவேண்டும். அப்படி செய்தாலே இவர்களும் பாராட்டப்படுவர் என்பதை தங்கள் மனதிற் கொள்ளவேண்டும்.
கணவர்கள்
கன்னி ராசிக்காரர்கள், திருமண பந்தத்தை ஒரு சமூகத் திட்டமாகவும், பார்ட்னர்ஷிப் ஒப்பந்தமாகவும் கருதுவதால், வெகு காலத்திற்கு பிரம்மச்சாரிகளாக காலந்தள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. ஆயினும், இவர்களின் துணையின் உதவியோடு இவர்களின் மண
கன்னி
கன்னியில் பிறந்தவர்கள் அதிபுத்திசாலிகள். தன் துணையைத் தேடிக்கொள்வதில் மிகவும் கஷ்டப்படுவார்கள். ஏனெனில், இவர்கள் மகிழ்ச்சியை எதிர்பார்ப்பதைவிட, அறிவுப்பூர்வமான துணையை எதிர்நோக்கு வதேயாகும். இவர்கள் சந்தோஷத்தையும், காமத்தையும்விட அறிவுக்கு முக்கியத் துவமளிக்கும் அறிவுஜீவிகளாவர். சில நேரங்களில், இவர்களது எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை அளிக்கக்கூடும். மிகவும் கூச்ச சுபாவமுள்ள இவர்கள், காதலைக் கையாள்வதில் வல்லவர்கள் அல்ல. பொறுமையுள்ள இவர்களுக்கு தங்கள் துணைமீது குற்றம் கண்டுபிடிக்கும் குணம் இயற்கையாகவே அமைந்துவிடுகிறது. எனவே, பிறரோடு சம்பாஷிக்கும்போது அவர்களை சாந்தப்படுத்தும் விதத்தில், தாஜா செய்ய முற்படக்கூடாது. மென்மையான உணர்ச்சிகளோடும் இவர்கள் இருக்கக்கூடாது. இவர்களால் காதலிக்கப்படுபவர்கள், அழகில்லாதவர்களாக இருந்தாலும், அறிவில்லாதவர்களாக இருந்தாலும், எல்லாம் இருப்பதாக பாராட்டப்படவேண்டும்; மெச்சப்படவேண்டும். அப்படி செய்தாலே இவர்களும் பாராட்டப்படுவர் என்பதை தங்கள் மனதிற் கொள்ளவேண்டும்.
கணவர்கள்
கன்னி ராசிக்காரர்கள், திருமண பந்தத்தை ஒரு சமூகத் திட்டமாகவும், பார்ட்னர்ஷிப் ஒப்பந்தமாகவும் கருதுவதால், வெகு காலத்திற்கு பிரம்மச்சாரிகளாக காலந்தள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. ஆயினும், இவர்களின் துணையின் உதவியோடு இவர்களின் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமைந்துவிடுகிறது. மிகவும் சிக்கனத் தைக் கடைப்பிடிப்பதால், இவர்களின் குடும்பவாழ்க்கை பாதிக்கப்படலாம். எனவே, சிக்கனப் பழக்கத்தை இவர்கள் கைவிட்டால் நல்லது.
மனைவிகள்
2, 7 மற்றும் 11-ஆமதிபதிகள் முறையே சுக்கிரன், குரு, சந்திரன் ஆகியோர் சுபர்கள் ஆவர். இவர்கள் குறிகாட்டுவது புத்திக்கூர்மை, மேதாவித்தனமுடைய அனுசரித்துச்செல்லும், காரியத்தில் கைகொடுக்கும் அன்புக் கணவன் இவர்களுக்கு அமையும் என்பதேயாகும். இவர்களை நன்கு புரிந்துகொண்டு வாழும் துணையே அமையும். எனவே, இன்பகரமான, இனிய வாழ்க்கை இவர்களுக்கு அமைவது உறுதி. இவர்கள் சிக்கனம் பார்ப்பவராக இருக்கலாம்; ஆனால் கஞ்சத்தனம் செய்பவர்களாக இருக்கக்கூடாது. இவர்கள் தன் கணவனுக்கு பக்தி மார்க்கத்தில் ஒத்துழைக்கவோ, அவனுக்கு இனிய துணையாகவோ இருக்கமாட்டார்கள். ஆயினும், இவர்களது வாழ்க்கைச் சக்கரம் சீராகவே ஓடும். இப்பெண்கள் காமத்தைப் பொருத்தவரை மிகவும் தொல்லை தரக்கூடிய நிகழ்வாகவும், மோசமான நடவடிக்கையாகவும் கருதுவர். இந்த விஷயத்தில், இவர்களை இவர்களாகவே மாற்றிக்கொண்டால்தான் உண்டு. இதன்காரணமாக, இவர்களுக்கு குறைவான எண்ணிக்கையிலேயே குழந்தைகள் இருக்கும். இவர்களின் குழந்தைகளுக்குத் தேவையான வசதிகளை எந்தவிதத்திலாவது, கட்டாயம் செய்துகொடுத்து விடுவார்கள். எனவே இவர்களின் குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலமுண்டு. ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வர் எனலாம். ஆனால் இவர்கள் குழந்தைகளிடம் தங்கள் பாசத்தை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள்.
சீர்மிகு பொருத்தம்
ரிஷபம், மகரம் ஆகிய பூமி ராசிகளும், நீர் ராசிகளான கடகம், விருச்சிகம் ஆகியவையும் மிகமிகப் பொருத்தமுள்ளவையாகும். திங்கட்கிழமைகளில் பிறந்தவர்களையும், சந்திரனின் நட்சந்திரங்களான ரோகிணி, ஹஸ்தம் மற்றும் திருவோண நட்சத்திரங்களில் பிறந்தவர்களையும் மணந்துகொண்டால் முன்னேற்றகரமான, சந்தோஷகரமான வாழ்க்கை இந்த ராசிக்காரர்களுக்கு அமையும்.
துலாம்
காதல் விவகாரங்களில் வல்லவர்கள். எனவே இவர்கள் காம வாழ்க்கைக்காக பிறரால் காதலிக்கப்படுபவர்கள்; விரும்பப்படுபவர் களாவர். காதலில் இவர்கள் உண்மையானவர்கள், மிகவும் பிரியமுடன் கூடியவர்கள். இவர்களது வசீகர முகம், நேர்த்தியாக உடையணியும் விதம் ஆகியவை எதிர்பாலரை இவர்கள்வசம் சுண்டியிழுத்து வசப்படுத்தும். இவரது காம உணர்ச்சி உயிர்த்தெழுந்து விரைவில் மறையக்கூடிய தன்மையுடையது. துலாத்தவர்கள் எதிர்பாலருடன் இணைந் திருக்கும்போது, மிகவும் அனுபவித்து, மகிழ்ச்சியில் திளைப்பவர்கள். மிகவும் கடமையுணர்வு உடையவர்கள். இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்பவர்கள். சல்லாப வாழ்க்கையிலும், சமூக, உல்லாச கேளிக்கைகளிலும் ஈடுபாடும், நல்லார்வமும் உடையவர்கள். இல்லத்தில் எப்போதும் இன்பமாகயிருப்பவர்கள். மிக உயர்ந்த நிலையிலான வாழ்க்கையையே வாழவிரும்புபவர்கள். சில நேரங்களில், இவர்களுக்கு ஈடுகொடுக்கமுடியாத, திருப்தியளிக்க முடியாத வாழ்க்கைத் துணையே அமையக்கூடும்.
கணவர்கள்
மகிழ்ச்சிமிக்கவர்கள். காமம்மிக்கவர்கள். காதல் சாகசம்புரிபவர்கள். துணையை அனுசரித்துச்செல்பவர்கள். இவர்கள் தங்களால் முடிந்தவரை, தனது துணையை நல்ல உயர்நிலையில் வாழவைக்க முயற்சிசெய்பவர்கள். தனது குடும்பத்தார்க்கு ஆடம்பர வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சாதனங்களையும், விலையுயர்ந்த பொருட்களையும் அளித்து, அவர்களை எப்போதும் மகிழ்ச்சிகரமாக வைத்திருப்பவர்கள். அதன்மூலமாகத் தன் அன்பை உணர்த்த, வெளியிடத் தயங்கமாட்டார்கள். இவ்வளவு வசதிகள் செய்துகொடுத்தும் தன் துணை தனக்கு ஆதரவாக நடந்துகொள்ளவில்லையெனில் ஏமாற்றமடைவார்கள். ஆனால் அதற்காக கோபங்கொண்டு விவாகரத்துவரை செல்லமாட்டார்கள். அவர்களோடு இணைந்து, அனுசரித்துச்செல்வதையே விரும்புவார்கள்.
மனைவிகள்
அறிவுக் கூர்மையுடையவர்கள். சாமர்த்தியசாலிகள். இவர்கள் அமைதியை நிலைநிறுத்த விரும்புவார்களேயன்றி, தர்க்கம் செய்வதை விரும்பமாட்டார்கள். இயற்கையாகவே காமம்மிக்கவர்கள். காமக்கவர்ச்சிமிக்கவர்கள். இவர்கள் பொதுவாக, ஆடம்பர வாழ்க்கையில் ஆனந்தித்திருக்க ஆர்வமுடையவர்கள். தன் துணையை அன்பால், காதலால் ஆராதித்து மகிழ்பவர்கள். நவநாகரீக ஆடைகள், இசை, நடனம், களியாட்டக் கூடங்கள், உணவுவிடுதிகள் என வாழ்க்கையின் அனைத்து சுகங்களையும் அனுபவித்து மகிழும் ஆர்வமிக்க மனங்கொண்டவர் கள். அமைதியானவர்கள். தார்மீக குணமுடையவர்கள். சிறந்த ராஜதந்திரி. எதையும் இவர்கள்மீது திணிக்கமுடியாது. இவர்களை ஏமாற்றவும்முடியாது. இவர்கள் மன ஏழுச்சியும், மனக்கிளர்ச்சியும் உணர்ச்சியும்மிக்கவர்கள். எவராலும் நேசிக்கத் தகுந்தவர்கள். எதையும் மறந்து, மன்னித்து ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள். ஊதாரித்தனம் உடையவர்கள். இவர்களின் துணையைக் குறிக்கும் ஸ்தானங்களில் 2, 7 மற்றும் 11 ஆகியவற்றின் அதிபதிகள் செவ்வாய், சூரியன் ஆவர். எனவே, விரைவில் உணர்ச்சிவசப்படக் கூடிய, கோபம்மிக்க, மூர்க்கமான, சுதந்திர எண்ணங் கொண்ட துணையே அமையும். எனவே துலாத் தார் தங்கள் ராஜதந்திரத்தால், சாதுர்யத்தா லும் இத்தகைய இயற்கையாகவே, நெருப்பு குண மிக்க துணையின் குணத்தை நல் வழியில் மாற்றி வீட்டில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
சீர்மிகு பொருத்தம்
துலாத்தார் காற்று ராசிகளான மிதுனம் மற்றும் கும்பத்தாருடன் சீர்மிகு பொருத்த முடையவர்கள். இவர்களுடன் ஒத்துப் போகாத ராசிகள் கடகம், மகரம் மற்றும் மீன ராசி ஜாதகர்களேயாவர். மற்ற ராசிக் காரர் கள் இவர்களை அனுசரித்துச்செல்வார்கள்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 97891 01742