அடுத்த தலைமுறையை உருவாக்கும் சனி பகவான் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/lord-saturn-will-create-next-generation-prasanna-astrologer-i-anandhi

ரு தலைமுறையை உருவாக்கும் சக்திகொண்டவர் சனி பகவான்.

வம்சம், தலைமுறை, பாவம், புண்ணியம் இவற்றை பிரதிபலிக் கக்கூடிய கிரகங்கள் சனி, ராகு, கேதுகள். இவர்களின் அனுக்கிரகம் இல்லாமல் ஒரு தலைமுறை உருவாகாது. செயற்கை கருத்தரிப்பு முறை என்பது முழுக்க முழுக்க ராகு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். குழந்தையை குறிக்கக்கூடிய குருவிற்கு ராகு சம்பந்தம் இல்லாத காலத்தில் செயற்கை கருத்தரிப்பு முறை சாத்தியம் இல்லாத விஷயம். குருவுக்கும் ராகுவுக்கும் சம்பந்தமில்லாத காலங் களில் செயற்கை கருத்தரிப்பு முறை பற்றிய எண்ணமே வராது அல்லது செயற்கை கருத்தரிப்பு முறை தோல்வியை சந்திக்கும். என் அனுபவத் தில் பலருக்கு நான் செயற்கை கருத்தரிப்பு முறையை அணுக தேர்வு செய்து கொடுத்த நேரம் மிகச்சரியாக இருந்திருக்கிறது. குரு, சனி, ராகு, சனி, கேது சம்பந்தம் இல்லாமல் வாரிசுகள் உருவாகாது.

தாய்- தந்தையின் ஜாதகத்திலுள்ள குருவிற்கும் பெற்றோர் கள் ஜாதகத்திலுள்ள குருவிற்கும் சம்பந்தம் இருந்தால் பெற்றோருக் கும் குழந்தைகளுக்கும் சுப கர்மா அதிகமிருக்கும். பெற்றோர்கள் ஜாதகத் திலுள்ள குருவிற்கும் பிள்ளைகள் ஜாதகத்திலுள்ள சனிக்கும் சம்பந்தம் இருந்தால் க

ரு தலைமுறையை உருவாக்கும் சக்திகொண்டவர் சனி பகவான்.

வம்சம், தலைமுறை, பாவம், புண்ணியம் இவற்றை பிரதிபலிக் கக்கூடிய கிரகங்கள் சனி, ராகு, கேதுகள். இவர்களின் அனுக்கிரகம் இல்லாமல் ஒரு தலைமுறை உருவாகாது. செயற்கை கருத்தரிப்பு முறை என்பது முழுக்க முழுக்க ராகு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். குழந்தையை குறிக்கக்கூடிய குருவிற்கு ராகு சம்பந்தம் இல்லாத காலத்தில் செயற்கை கருத்தரிப்பு முறை சாத்தியம் இல்லாத விஷயம். குருவுக்கும் ராகுவுக்கும் சம்பந்தமில்லாத காலங் களில் செயற்கை கருத்தரிப்பு முறை பற்றிய எண்ணமே வராது அல்லது செயற்கை கருத்தரிப்பு முறை தோல்வியை சந்திக்கும். என் அனுபவத் தில் பலருக்கு நான் செயற்கை கருத்தரிப்பு முறையை அணுக தேர்வு செய்து கொடுத்த நேரம் மிகச்சரியாக இருந்திருக்கிறது. குரு, சனி, ராகு, சனி, கேது சம்பந்தம் இல்லாமல் வாரிசுகள் உருவாகாது.

தாய்- தந்தையின் ஜாதகத்திலுள்ள குருவிற்கும் பெற்றோர் கள் ஜாதகத்திலுள்ள குருவிற்கும் சம்பந்தம் இருந்தால் பெற்றோருக் கும் குழந்தைகளுக்கும் சுப கர்மா அதிகமிருக்கும். பெற்றோர்கள் ஜாதகத் திலுள்ள குருவிற்கும் பிள்ளைகள் ஜாதகத்திலுள்ள சனிக்கும் சம்பந்தம் இருந்தால் குழந்தை பிறகு பல மடங்கு வாழ்வாதாரம் உயரும். பெற்றோர்கள் ஜாதகத்திலுள்ள குருவிற்கும் பிள்ளைகள் ஜாதகத்திலுள்ள கேதுவிற்கும் சம்பந்தம் இருந்தால் குடும்பத்தில் அழிவு ஆரம்பமாகும். பெற்றோர்கள் ஜாதகத்திலுள்ள குருவிற்கும் பிள்ளைகள் ஜாதகத்திலுள்ள ராகுவிற்கும் சம்பந்தம் இருந்தால் குசேலனும் குபேரனாவான். பெற்றோர்கள் ஜாதகத்திலுள்ள சனிக்கும் பிள்ளைகள் ஜாதகத்திலுள்ள கேதுவிற்கும் சம்பந்தமிருந்தால் தொழில் மாற்றம் உருவாகும். அடுத்த தலைமுறை உருவாவதில் சங்கடம் இருக்கும். பெற்றோர்கள் ஜாதகத்திலுள்ள சனிக்கும் பிள்ளைகள் ஜாதகத்திலுள்ள ராகுவிற்கும் சம்பந்தமிருந்தால் புதிய கர்ம வினை தாக்கம் அதிகம் உருவாகும்.

ss

ஒரு தலைமுறை என்பது சுமார் 30 ஆண்டுகள். அதாவது சனிபகவான் ராசி சக்கரத்தை ஒருமுறை வலம்வர எடுத்துக் கொள்ளக்கூடிய கால அளவு 30 ஆண்டுகள். ஒருவரின் ஜனன ஜாதகத்தை எடுத்துக்கொண்டால் அவரின் ஜாதகத்தில் சனிக்கும் அவரின் பெற்றோர்களின் ஜாதகத்திலும் உள்ள சனிக்கும் நிச்சயமாக தொடர்பு இருக்கும். சனிபகவானுக்கு 3, 7, 10-ஆம் பார்வைகள் உண்டு. பெற்றோர்களின் ஜாதகத்திலுள்ள சனிபகவான் தனது 3, 7, 10-ஆம் பார்வையால் தமது குழந்தைகளின் ஜாதகத்திலுள்ள சனிபகவானை பார்ப்பார். அல்லது குழந்தைகளின் ஜாதகத்திலுள்ள சனிபகவான் பெற்றோர்களின் ஜாதகத்திலுள்ள சனிபகவானை 3, 7, 10-ஆம் பார்வையால் பார்ப்பார். வெகுசிலருக்கு பெற்றோர்கள், பிள்ளைகள் ஜாதகத்தில் முன்பின் ராசிகளில் சனிபகவான் சஞ்சாரம் செய்வார். இதை அறிவியல்ரீதியான டி.என்.ஏ டெஸ்ட் என்றும் கூறலாம். குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்படும்போது சில உண்மைகளை அறிந்து கொள்ள தற்போது நீதிமன்றங்கள் டி.என்.ஏ டெஸ்ட் எடுக்கிறது. ஒரு ஜாதகத்தில் இருக்கும் சனிபகவானுக்கும் பிறந்த குழந்தையிடம் இருக்கும் சனிபகவானுக்கும் இடையே இருக்கும் சம்பந்தத்தை வைத்து குழந்தை மற்றும் பெற்றோர்களுக்கு இடையிலான கர்ம பந்தத்தை கூறமுடியும்.

வாழ்ந்து மறைந்த முன்னோர்களே தங்கள் குடும்பத்தில் மீண்டும் வாரிசுகளாக பிறப்பார்கள். மறித்த முன்னோர்களுக்கும் பிறந்த குழந்தைகளுக்கும் உருவ ஒற்றுமை, செயல்பாடு, குணநலன்களில் ஒற்றுமை இருக்கும். பெரும்பான்மையாக பிறக்கும் குழந்தை தாய்- தந்தை அல்லது தாய்- தந்தைவழி தாத்தா- பாட்டி சித்தப்பா- பெரியப்பா, மாமா- அத்தை, பெரியம்மா- சித்தி போன்றவர்களில் யாராவது ஒருவரின் உருவ அமைப்பு இருக்கும். நானும் எனது மாமா மகளும் இரட்டைப் பிறவிபோல் இருப்போம். எனது கணவரும் அவருக்கு அடுத்ததாக பிறந்த அவரின் தம்பிக்கும் உருவ ஒற்றுமை அதிகமுண்டு. எனது மாமனார் இரட்டைப் பிறவி. இரட்டை ஆண்கள். அவர்களிடம் எந்த உருவ ஒற்றுமையும் கிடையாது. நிறம், குணம், பழக்கவழக்கம் அனைத் திலும் மாறுதல் இருக்கும். எனது மாமனாரிடம் அவரின் தந்தையின் உருவ ஒற்றுமை உண்டு. மாமனாரின் தம்பி அவரின் தாயை லங்ழ்ர்ஷ் எடுத்ததுபோல் இருப்பார். ஒருவரின் மரபணுவில் குடும்ப உறுப்பினர்களில் யாருடைய உசஆ அதிகமுள்ளதோ அவரின் உருவ அமைப்பு, அவரின் கர்மா, நோய் தாக்கம் அப்படியே இருக்கும். இது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். இன்றும் பல குடும்பங்களில் உருவ ஒற்றுமை, பெயர் ஒற்றுமை என எதாவது ஒரு ஒற்றுமை நிச்சயம் பார்க்கமுடியும். முன்ஜென்மம், நிகழ் ஜென்மத்திற்குமுள்ள உருவ ஒற்றுமை, பெயர் ஒற்றுமை ஆகியவற்றை உறுதிப் படுத்தும்விதமாக பல திரைப்படங்கள் வந்துகொண்டிருப்பதே இதற்கு சாட்சி. பல குடும்பங்களில் நடக்கும் சம்பவங் களே திரைப்படங்களாக சித்தரிக்கப் படுகின்றன.

பிறந்த நேரத்தைவிட கரு உருவாகும் நேரமே ஜாதகரின் விதியை நிர்ணயம் செய்கிறது. தம்பதிகள் சுப விசேஷங்களுக்கு சென்று வந்தபிறகு கூடிமகிழ்ந்து கரு உருவாகினால் குழந்தை பிறந்தபிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதி ஆரோக்கியம், ஐஸ்வர்யம் நிலைத்து இருக்கும். தம்பதிகள் குடும்ப சண்டையில் ஒருவரை ஒருவர் சமாதானம் செய்யகூடினால் பிறக்கும் குழந்தை ஆக்ரோஷமாக, கோபமாக எதற்கும் விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாதவனாக இருப்பான். தன் கோபம் உணர்வால் வாழ்க்கையில் முன்னேற்ற குறைவை சந்திப்பான். தம்பதிகள் விருப்ப மில்லாமல் வாழ்க்கைத் துணையின் ஆசைக் காக கட்டாயப்படுத்தப்பட்டு கரு உருவானால் பிறக்கும் குழந்தை தாய் அல்லது தந்தையே பிரிந்து வாழும். அல்லது ஆயுள் ஆரோக்கிய குறைபாடு அதிகமாக இருக்கும். தனிமை விரும்பியாக இருப்பான். அல்லது குழந்தை பிறந்தபிறகு குடும்பம் சிதறும். ஒரு துக்க நிகழ்விற்கு சென்றுவந்த அன்று தம்பதிகள் பழகி கரு உருவானால் கருச்சிதைவு நடக்கும் அல்லது அற்ப ஆயுளுள்ள குழந்தை பிறக் கும்.

எவ்வளவு புத்திர தோஷம் இருந்தாலும் 30 வயதில் கோட்சார சனி பிறந்தகால சனியை கடக்கும் காலங்களில் புத்திர பிரார்த்தம் பலருக்கு உண்டாகி இருக்கிறது. இனி அடுத்த வாரம் நட்சத்திர பட்சியின் தொழில் காலத்தில் உருவாகும் ஜனனம் பற்றி பார்க்கலாம்.

bala270625
இதையும் படியுங்கள்
Subscribe