திருவாடானை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவுடன், தென்மாவட்டங்களில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் (சாதி ரீதியாக) இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்ததால் துப்பாக்கி ஏந்திய போலீசார் (பி.எஸ்.ஓ.) எனக்கு பாதுகாப்பு அளிக்க ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்பிறகு தொகுதிக்குச் செல்லும்போது ஒரு ஜீப்பில் உதவி ஆய்வாளர் தலைமையில், துப்பாக்கி ஏந்திய 5 போலீசார் அம்மா உத்தரவின் பேரில் எனக்கு பாதுகாப்பு அளித்தனர். இதனை அச்சமயம்
திருவாடானை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவுடன், தென்மாவட்டங்களில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் (சாதி ரீதியாக) இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்ததால் துப்பாக்கி ஏந்திய போலீசார் (பி.எஸ்.ஓ.) எனக்கு பாதுகாப்பு அளிக்க ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்பிறகு தொகுதிக்குச் செல்லும்போது ஒரு ஜீப்பில் உதவி ஆய்வாளர் தலைமையில், துப்பாக்கி ஏந்திய 5 போலீசார் அம்மா உத்தரவின் பேரில் எனக்கு பாதுகாப்பு அளித்தனர். இதனை அச்சமயம் மாவட்ட காவல் கண்காணிப்பாள ராக இருந்த உயர்திரு. மணிவண்ணன் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வந்தார். அவர் மாறுதலுக்குப்பிறகு அமைச்சர் மணிகண்டன் சிபாரிசில் வந்த ஓம் பிரகாஷ் மீனா, எனக்கு பாதுகாப்பு அளிக்க மறுத்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நடராஜன், உளவுத்துறை ஆய்வாளர் மாரியப்பன், தனிப்பிரிவு ஆய்வாளர் ஜான்பிரிட்டோ (எஸ்.பி. இன்ஸ்பெக்டர்) ஆகியோரிடம் பலமுறை வாய்மொழி மற்றும் எழுத்துமூலமாக முறையிட்டுள்ளோம்.
ஆனாலும் இவர் பதவி யேற்றபிறகு கடந்த ஓராண்டாக (தேவர் ஜெயந்தி உட்பட) நான் மாவட்டத்திற்கு வருகை தந்தபோது என்னிடம் கடிதம் வாங்கிக்கொண்டு ஒரே ஒருமுறையும், கடைசியாக 23-4-2018 அன்று எனது தொகுதி குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க கொரிய நாட்டு அறிஞர்களை அழைத்துவந்ததால்- வெளி நாட்டவர் வரும் சூழலிலில் ஏதேனும் அசம்பாவிதம் நடை பெறக் கூடாது என்பதால் பாதுகாப்பிற்காக ஒரு போலீஸ் வாகனத்தில் ஐந்து பேரையும் அனுப்பிவைத்தனர். இதற்குமுன்பாக தொகுதிக்கு நான் வந்தபோது, பாதுகாப்பு கேட்டு ஆய்வாளர் (தனிப்பிரிவு) ஜான்பிரிட்டோவிடம் பேசிய போது, "வந்தால் வரட்டும்' என மிகச் சாதாரணமாகக் கூறினார்.
திருவாடானையில் எனக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து பாட்டில் கல்வீச்சு நடத்தினர். இதுதொடர்பாக திருவாடானை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரவில், எனக்கு சிலர் கொலைமிரட்டல் விடுத்த தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொகுதி மக்கள், எனது உறவினர்களின் சுக, துக்க நிகழ்வுகளில் கலந்துகொள்ள பலமுறை வந்துள்ளேன்.
அச்சமயங்களில்கூட எனக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கவில்லை. எனது உயிர்ப் பாதுகாப்பிற்கு புலிலிப்படை நிர்வாகிகள், தொண்டர்கள் போதும். ஆனால் என்னால் சட்டம் ஒழுங்கு பாதிக்கக்கூடாது என்பதால் நான் போலீஸ் பாதுகாப்பு தேவை என்பதை வலிலியுறுத்துகிறேன்.''
இப்படியெல்லாம் கதறுபவர் நடிகரும் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தான்.
ப்