சுமார் 65 வயதுடைய ஒருவர், நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமர வைத்து, "என்ன விஷயமாக பலன்கேட்க வந்தீர்கள்' என்றேன்.
"அரசு அலுவலகத்தில் பணிசெய்து ஓய்வுபெற்றுவிட்டேன். என் மனைவி நான்கு வருடங்களுக்குமுன்பு இறந்துவிட்டாள். எனக்கு மூன்று பெண் குழந்தைகள். அனைவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியே கணவன், குழந்தைகளுடன் குடும்பமாக வாழ்கின்றார்கள். பணி ஓய்வு பெறும்போது, என் பணிக்கொடை பணத்தை மொத்தமாகக் கொடுத்தார்கள். அந்தப் பணம் என் வசமே உள்ளது. நான் பணியில் இருக்கும்போதே, சென்னையில் சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டிக்கொண்டேன். வங்கியில் கடன் வாங்கி கட்டியதால், வீட்டுக்கடன் கொஞ்சம் உள்ளது.
அரசுப் பணியிலிருந்து நான் ஓய்வு பெற்றபின்பு கிடைத்த பணத்தை எனது மகள்கள் மூன்று பேரும், மருமகன்களும் எதையாவது கூறி என்னிடமுள்ள பணத்தை கைப்பற்றிக் கொள்வதிலேயே கவனமாக இருக்கின்றார் கள். அவர்கள் பலமுறைக் கேட்டும் நான் பணத்தைக் கொடுக்காததால், என்னிடம் பகையாகிவிட்டார்கள். இப்போது நான் யாருமில்லாத அனாதையைப்போல் இருக் கின்றேன். அவர்களை நம்பிப் பணத்தைக் கொடுத்தால், என் ஆயுள் இறுதிவரை என்னை நல்லமுறையில், கவனித்துக் காப்பாற்றுவார்களா அல்லது பணத்தை, சொத்தை வாங்கிக் கொண்டதும், என்னை கவனிக்காமல் கை விட்டு விடுவார்களா? என் இறுதிக்கால வாழ்க்கை நிலை என்ன என்ற குழப்பத்திலும், பயத்திலும் உள்ளேன். என் ஆயுள் இறுதிவரை நான் நிம்மதியாக வாழ என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்துகொள்ளவே வந்தேன்.
அகத்தியர்தான் எனக்கு வழி கூறவேண்டும்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றிப் பலன்கூறத் தொடங்கினார்.
"இந்த மகன் கூறுவது அனைத்தும் உண்மைதான். இந்தப் பணமும் சொத்தும், முன்னோர்களால் இவனுக்குக் கிடைத்தது அல்ல. இவனே சுயமாக சம்பாதித்தது. இந்த பிறவியில் இவனைப் பெற்றவர்களாலும், நன்மை இல்லை. ஆண் வாரிசு இல்லாததால் மகனாலும் நன்மை இல்லை. இந்த பிறவியில், இவனே உழைத்து சம்பாதித்த, பணம், சொத்துகளைக்கொண்டே வாழ்ந்து மறையவேண்டும் என்பது இவன் விதி.
மகள்கள் மூன்று பேரும், இவனிடமுள்ள பணத்தை அடைவதிலேயே குறியாக இருக்கின்றார்கள் என்று இவன் கூறுவது உண்மைதான். அவர்கள் காப்பாற்றுவார்கள் என்று நம்பி பணம், சொத்தைக் கொடுத்து விட்டால், இவன் இறுதிக்காலத்தில், மகள்கள் இவனை ஆதரித்து, உடன் வைத்துக் காப்பாற்றமட்டார்கள். பணமா? பாசமா? என்று மனப்போராட்டத்தில் இருக்கும் இவன், மகள்கள்மீது உள்ள பாசத்தை விட்டுவிட்டு, இவனிடமுள்ள பணத்தைக் காப்பாற்றிக்கொள்ளட்டும். பெற்ற பிள்ளைகளை நம்பினால், இவன் இறுதிக்காலத்தில் நடுத்தெருவில்தான் நிற்பான்.
இவனிடமுள்ள அசையா சொத்து, இவன் கடன் வாங்கிக் கட்டிய வீடு ஒன்றுதான். அந்த வீடு இன்றையநாளில் ஒரு பெருந்தொகை மதிப்புள்ளது. இந்த வீட்டைமட்டும், மூன்று மகள்களுக்கும் சொந்தமாக எழுதிக்கொடுத்துவிட்டு, கடனையும் கட்டிவிடச் சொல்லட்டும். கையிலுள்ள அனைத்து, ரொக்கப்பணத்தையும், இவன் வருங்கால வாழ்க்கைக்கு பாதுகாப்பாக வைத்துக்கொண்டு நிம்மதியாக வாழச் சொல்.
இவனுக்கு இதுதான் கடைசிப் பிறவி. ஆண் குழந்தை இல்லை. இவனின் விந்து இரத்தம், தன் வாரிசு, மகன்மூலம் இனி இந்தப் பூமியில் பிறக்க வழியில்லாமல் போனது. இவன் மோட்சப் பிறவி என்பதால், புத்திரத்தடை உண்டாகி, புத்திரன் பிறக் காமல் போனது.
இவன் இந்த பிறவியில் அனுபவிக்கப் பிறந்த வன் இல்லை. தனது முற்பிறவி கர்மவினைகளை அனுபவித்து வாழ்ந்து, தீர்த்து, இனி இந்த பூமியில் பிறவி இல்லையென்ற விதி அமைப்புடன் பிறந்தவன். இவன் இந்த பிறவி வாழ்வில், தன் மனைவி, குழந்தை களுக்கு செய்யவேண்டிய அனைத்து கடமை களையும் செய்து முடித்துவிட்டான்.
ஆனால் இந்த பிறவியில் இவன் ஒரு பெண்ணிற்கு செய்த நம்பிக்கைத் துரோகம், பாவக்கடன் ஒன்று மீதி உள்ளது.
அதனையும் தீர்த்துவிடச் சொல். அதற்கு வழி கூறுகின்றேன்.
இவன் தன் குடும்பத்தைவிட்டு, வேறு ஊரில் பணி செய்யும்போது, அந்த அலுவலகத் திலேயே ஒரு இளம் விதவைப்பெண், அலுவலக உதவியாளராகப் பணி செய்து வந்தாள். அவளுடன் உறவு உண்டானது.
அவள் இவனை முழுமையாக நம்பி, கணவ னாக நினைத்துப் பழகி, ஏற்றுக்கொண்டாள். கணவன்- மனைவிபோல் வாழ்ந்தார்கள். ஆனால் இவன், அந்த ஊரைவிட்டு மாற்றலாகி வந்தபின்பு அவளை மறந்துவிட்டான். தொடர்பைத் துண்டித்துக் கொண்டான். அந்தப்பெண் இன்னும் இவனை நினைத்தே வாழ்ந்துகொண்டு இருக்கின்றாள். இவன் கையிலுள்ள பணத்துடன், அவளைத் தேடிச் சென்று, அவளுடன் சேர்ந்து, அவளைக் காப்பாற்றி வாழச்சொல். இவன் இறுதிக் கால வாழ்க்கை அவளுடன்தான் வாழ்ந்து மறையவேண்டும் என்பது இவன் விதி. "இந்த பூமியில் யாரும் அனாதை இல்லை. தனக்கென்று ஒரு தொழிலும், தன் கையில் பணமும் இல்லாதவன் மட்டுமே அனாதை'' என்று கூறிவிட்டு அகத்தியர் ஓலையிலிருந்து மறைந்தார்.
"ஓலையில் அகத்தியர் கூறிய அனைத் தையும் கேட்டுக்கொண்ட அவர், அனைத் தும் உண்மைதான். அகத்தியர் கூறியபடியே வீட்டை மகள்களுக்குக் கொடுத்துவிட்டு, அந்தப் பெண்ணைக் காப்பாற்றி அவளுக்குச் செய்த பாவத்தைத் தீர்த்துக்கொள்கின்றேன். என் மனக்குழப்பம் தீர்ந்தது. என் வருங்கால வாழ்க்கைப் பற்றிய பயமும் போய், தெளிவு கிடைத்தது'' என்று கூறி என்னிடம் விடை பெற்றுச் சென்றார்.
செல்: 99441 13267