மனுசனோட
நோய், எதிரி, கடன் பிரச்சினைகளை
தீர்க்கறதுக்கு மட்டும்தான்
வாஸ்து சாஸ்திரமா?
வாஸ்து என்னை கோடீஸ்வரனாக்குமா?
இப்படி அதிரடி கேள்விகள்
அத்தனைக்கும் பதில் சொல்றேன்
அமைதியா கேளுப்பா...
வீட்டிற்கும் ஆத்மா இருக்கிறது
குடியிருப்பவர்கüன் எண்ணங்கள்
செயல்கள் என அத்தனையும்
கவனித்துக்கொண்டே இருக்கும்..
குடியிருக்கும் வீட்டை நேசிப்பவனுக்கு
கோடி கோடியாய் சந்தோஷங்களை
கொட்டிக் கொடுக்கும்..
வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்
வர்ணம் பூசி அழகாக வைத்துக்கொள்ள வேண்டும்
சந்தோஷமான வார்த்தைகளை பேசவேண்டும்
வீட்டில் இருப்பவர்களுக்குள் வன்மம்,
கெட்ட எண்ணங்கள் இருக்கக்கூடாது
பிறரை கெடுக்கும் செயல்கள் கூடாது..
வீட்டிற்கும் உள்ளம் இருக்கிறது
வீட்டை நேசிப்பவர்களுக்கு
வீடு கேட்டதெல்லாம் கொடுக்கும்...
வீட்டின் நான்கு திக்குகளில்
கிழக்கே இந்திரனும் மேற்கே வருணனும்
வடக்கே குபேரனும் தெற்கே எமனும்
இருக்கிறார்கள்..
வடகிழக்கு மூலை ஈசான்யம்
தென்மேற்கு மூலை கன்னி
தென்கிழக்
மனுசனோட
நோய், எதிரி, கடன் பிரச்சினைகளை
தீர்க்கறதுக்கு மட்டும்தான்
வாஸ்து சாஸ்திரமா?
வாஸ்து என்னை கோடீஸ்வரனாக்குமா?
இப்படி அதிரடி கேள்விகள்
அத்தனைக்கும் பதில் சொல்றேன்
அமைதியா கேளுப்பா...
வீட்டிற்கும் ஆத்மா இருக்கிறது
குடியிருப்பவர்கüன் எண்ணங்கள்
செயல்கள் என அத்தனையும்
கவனித்துக்கொண்டே இருக்கும்..
குடியிருக்கும் வீட்டை நேசிப்பவனுக்கு
கோடி கோடியாய் சந்தோஷங்களை
கொட்டிக் கொடுக்கும்..
வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்
வர்ணம் பூசி அழகாக வைத்துக்கொள்ள வேண்டும்
சந்தோஷமான வார்த்தைகளை பேசவேண்டும்
வீட்டில் இருப்பவர்களுக்குள் வன்மம்,
கெட்ட எண்ணங்கள் இருக்கக்கூடாது
பிறரை கெடுக்கும் செயல்கள் கூடாது..
வீட்டிற்கும் உள்ளம் இருக்கிறது
வீட்டை நேசிப்பவர்களுக்கு
வீடு கேட்டதெல்லாம் கொடுக்கும்...
வீட்டின் நான்கு திக்குகளில்
கிழக்கே இந்திரனும் மேற்கே வருணனும்
வடக்கே குபேரனும் தெற்கே எமனும்
இருக்கிறார்கள்..
வடகிழக்கு மூலை ஈசான்யம்
தென்மேற்கு மூலை கன்னி
தென்கிழக்கு மூலை அக்னி
வடமேற்கு மூலை வாயு
வீட்டின் நடுப்பகுதி பிரம்மஸ்தானம்
இப்படித்தான் வீட்டில்
தெய்வம் காத்து நிற்கிறது..
கோவிலைப் போன்று
வீட்டை கவனித்து வந்தால்
ஜென்மம் முழுவதும் யோகமே..
மனமே கோவில்
குடியிருக்கும் வீடே சொர்க்கம்...
ஈசான மூலை கெட்டுப் போயிருந்தால்
வீட்டில் குடியிருக்கும் ஆணுக்கு ஆபத்து..
ஈசானிய அறைக்கான மேற்கு வாசல்படி
வீட்டில் ஆண் தங்க மாட்டான்..
தெற்கு வாசல்படி வைத்த ஈசானியா அறை
ஆணுக்கு வெற்றிமேல் வெற்றி கொடுக்கும்..
ஈசானியம் பள்ளமாயிருக்கும்
வீட்டில் ஆணுக்கு மரியாதை இருக்காது..
ஈசானிய இடம் குப்பை கூலமாக இருந்தால்
அவ்வாறே ஆணின் நிலை இருக்கும்..
ஈசானிய அறையில் சமையல் செய்தால்
ஆண் நெருப்பில் இருப்பதுபோல் வசிப்பான்
நெருப்பால் கண்டம் வரும்
ஆணுக்கு ஆகாதப்பா...
வீட்டின் வழகிழக்கு மூலையில்
அமர்ந்து படித்தால் கல்வி நிலை உயரும்...
அக்னி மூலையில் சமையல் செய்தால்
பல அற்புதங்கள் நடக்கும்..
"நோயற்ற வாழ்வே
குறைவற்ற செல்வம்'' என்பதை
அக்னி மூலையே முடிவு செய்யும்..
ஆரோக்கியம் பெற
அக்னி அறையில் வடக்கும் கிழக்கும்
ஜன்னல் வேண்டும்..
தென்கிழக்கு மூலையில்
படுக்கை அறை இருந்தால்
கணவன்- மனைவிக்குள்
உறவை பாதிக்கப்படும்..
ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு
பிரிவு ஏற்படும்...
கன்னி மூலையில்
ஜன்னல்கள் வைக்கக்கூடாது..
அது தெய்வ வழிபாட்டிற்கு உகந்த இடம்.
படுக்கையறை இருந்து
அதில் குழந்தை பிறந்தால் குழந்தையின்
திருமண வாழ்க்கை பாதிப்படையும்..
கஜானா வைக்க சிறந்த இடம்
வீட்டின் பத்திரம், பணம் வைக்க உகந்த இடம்..
சிறிய அறையாக இருந்தால்
சீரும் சிறப்புமான வாழ்க்கை உண்டு...
கல்வி கற்கவும்
மந்திரங்கள் உச்சரிக்கவும் உகந்த இடம்...
வாயு மூலையில்
படுக்கையறை இருந்தால்
கணவன்- மனைவிக்கு ஆகாது..
இளம் பெண் தங்கினால்
நல்ல திருமண வாழ்க்கை உண்டாகும்..
வயதானவர்கள் படுத்தால்
ஆயுள் காலம் கூடும்...
விருந்தினர் வந்தால் தங்க வைக்கலாம்..
சமையல் செய்தால்
சகல நஷ்டமும் உண்டாகும்...
குளியலறையும், கழிவறையும்
அமைத்துக்கொள்வது நல்லது...
வீட்டின் பிரம்மஸ்தானத்தை
சுத்தமாக வைத்திருக்கவேண்டும்..
வெட்ட வெளிச்சமாக இருந்தால்
தலைமுறை தழைக்கும்..
படுக்கையறையாக பயன்படுத்தினால்
கணவன்- மனைவிக்கு நோய் வரும்..
உறவினர்கள்- விருந்தினர்கள்
படுத்துக்கொள்ளலாம்..
புது விஷயங்களை பேசுவதற்கு
விசேஷங்கள் செய்வதற்கு உகந்த இடம்..
இங்கிருந்து கொடுத்த பணம்
பெருகி கோடிக்கணக்கில் திரும்ப வரும்...
வீட்டின் கிழக்குத் திக்கில்
இந்திரன் வசிக்கிறான்..
கிழக்கு அறையில் கணவன்- மனைவி
இல்லறம் கூடாது...
சந்தேக புத்தியால் பிரச்சினை வரும்..
கிழக்குத் திக்கை சுத்தமாக வைக்கவேண்டும்
இல்லையென்றால் வீட்டில்
இருப்பவர்களுக்கு அவஸ்தை நேரும்...
மேற்கு திக்கில்வருணன் வசிக்கிறான்
கணவன்- மனைவி குடும்பம் நடத்த
சிறந்த இடம்
இங்கே பிறக்கும் பிள்ளைகள்
நாட்டை ஆள்வர்...
வடக்கு திக்கில் குபேரன் வசிக்கிறான்
கணவன்- மனைவி இல்லறம்
நடத்த சிறந்த இடம்..
பெற்றோருக்கு பிடித்த பிள்ளைகள் பிறப்பார்கள்..
செல்வம் செல்வாக்கு
புகழ் அந்தஸ்து அத்தனையும் தரும்
அதிர்ஷ்டமான அறை..
தங்கம் வெள்ளி பணம் பத்திரம்
சேமித்து வைக்க சிறந்த இடம்..
குபேர அறையை
வாசனை நிறைந்ததாக வைத்தால்
வாழ்க்கை சுபிட்சம் பெரும்...
மேற்குத்திக்கில் எமன் வசிக்கிறான்
படுக்கையறைக்கு உகந்ததல்ல
இங்கே பிறக்கும் குழந்தைகள்
குடும்பத்திற்கும் நாட்டுக்கும் தீங்கு செய்யும்..
கணவன்- மனைவிக்குள் துரோகம் செய்வர்..
உணவு அருந்த சிறந்த இடம்
உணவுப் பொருட்களை சேமிக்கும் இடம்
தேவையற்ற பொருட்களை வைக்கும் இடம்
தெற்கு ஜன்னல் வைத்தல் நல்லது..
வீட்டிற்கு வெளியே தெற்கு மேற்கும்
கா-யிடம் குறைவாக இருக்கவேண்டும்
வடக்கும் கிழக்கும்
விசாலமாக இருக்கவேண்டும்..
இப்படி வாஸ்துக்கென்று
இலக்கணம் உண்டு
வாஸ்து பாகவான்
வடகிழக்கில் தலை வைத்து
தென்மேற்கில் கால் வைத்து
வடமேற்கு தென்கிழக்கில்
இரு கைகளை விரித்து
சுகமாக உறங்குவார்..
எந்த இடத்தில் தவறு நடக்கிறதோ
அந்த ஸ்தானம் கெட்டுப்போகும்..
கவனமாக வீட்டை வடிவமைத்தால்
வாஸ்து பகவான் உங்களை
வசதியாய் வாழவைப்பார்..
-செல்: 96003 53748